Post by radha on Mar 11, 2012 7:32:58 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA :,RESPECTFUL NAMASKARAMS TO MAHA PERIVA
RESPECTS TO SRI SRIGERI SANKARACHARYA SWAMIGAL.
மனிதப்பிறவி எதற்காக?
உயிர் தங்குவதற்காக இறைவனால் உடல் தரப்பட்டுள்ளது. உயிர்களிலேயே மனிதஉயிரே மகத்தானது. உயர்ந்தது. மற்ற உயிர்கள் எல்லாம் பிறப்பது வெறும் கர்மவினைகளை மட்டும் அனுபவிப்பதற்கே. மனிதர்களுக்கு மட்டுமே புதிய வினைப்பயன்களைத் தேடிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாய்ப்பினால் நல்வினைகளையும் தேடலாம். தீவினைப்பயன்களையும் தேடலாம். இதுதான் மனிதனுக்கும், மற்ற உயிர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடாகும். மனித உடல் ஓடத்தைப் போன்றது. ஏராளமான புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே மனிதப்பிறவி எடுக்கமுடியும். பிறவி எனும் பெருங்கடலைக் கடப்பதற்காகவே இப்பிறவியைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த உடலாகிய ஓடம் நிலையானதல்ல. சீக்கிரமே உடைந்து விடும். பிறவிக்கடலைக் கடப்பது அவ்வளவு எளிதல்ல. இதற்கு முன்பு எத்தனை முறை உடல் எனும் ஓடத்தைப் பெற்றும் நம்மால் பிறவிக்கடலைக் கடக்க முடியாமல் தோற்றுப் போயிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. நாம் இப் பிறவியிலேயே இறைவனை முயன்று சேராது விட்டால் அடுத்து என்ன பிறவி வாய்க்குமோ தெரியாது. மீண்டும் புழு, பூச்சி, பறவை, விலங்கு என்று பல பிறவிகளை எடுக்க வேண்டி வரலாம். எனவே, இப்பிறவியிலேயே இறைவனை சரணாகதியாகப் பற்றுங்கள். பிறப்பில்லா நிலையை அடைவதே தம் தலையாய கடமையாகும்.
நாளை என்பது நமக்கில்லை
செப்டம்பர் 29,2009,
15:04 IST
நாம் செய்ய வேண்டிய செயல்களை தகுந்த சமயத்தில் செய்யாமல் தள்ளிப்போடுகிறோம். இல்லாவிட்டால் இன்று சிறிது செய்யலாம்; நாளை அதிகமாகச் செய்யலாம் என்று என்று நினைக்கிறோம். இதையே ஆன்மிகத்திலும் மனிதர்கள் செய்கிறார்கள். இளமையில் வேலை செய்து நிறைய பணம் சம்பாதிப்போம். வயதான பிறகு பகவானை நினைத்து வழிபட்டுக் கொள்ளலாம் என்று எண்ணுகிறோம். முதுமையில் நாம் சரியாக பார்க்கவே முடியாது. காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விடும். பகவானின் நாமங்களை சொல்ல விரும்பினாலும், ஜபிப்பதற்கு சக்தி இல்லாமல் போய் விடும்.
சில மாணவர்களும் இவ்வாறு தான் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் பாடத்தை விட்டுவிட்டு, பொழுதுபோக்குகளில் நேரத்தை கழிக்கிறார்கள். தேர்வு நேரத்தில் படித்தால் போதும் என எண்ணுகிறார்கள். காலத்தை வீணடித்து விட்டு, கடைசி நேரத்தில் படிப்பதால் குழப்பமே மிஞ்சும். தங்கள் சோம்பேறித்தனத்தால், தேர்வில் தோல்வி அடைகிறார்கள்.
மனப்பக்குவம் அடைய விரும்பும் ஒருவன் "நாளை' பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அதற்கான முயற்சிகளை "இன்றே' ஆரம்பிக்க வேண்டும்.
RESPECTS TO SRI SRIGERI SANKARACHARYA SWAMIGAL.
மனிதப்பிறவி எதற்காக?
உயிர் தங்குவதற்காக இறைவனால் உடல் தரப்பட்டுள்ளது. உயிர்களிலேயே மனிதஉயிரே மகத்தானது. உயர்ந்தது. மற்ற உயிர்கள் எல்லாம் பிறப்பது வெறும் கர்மவினைகளை மட்டும் அனுபவிப்பதற்கே. மனிதர்களுக்கு மட்டுமே புதிய வினைப்பயன்களைத் தேடிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாய்ப்பினால் நல்வினைகளையும் தேடலாம். தீவினைப்பயன்களையும் தேடலாம். இதுதான் மனிதனுக்கும், மற்ற உயிர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடாகும். மனித உடல் ஓடத்தைப் போன்றது. ஏராளமான புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே மனிதப்பிறவி எடுக்கமுடியும். பிறவி எனும் பெருங்கடலைக் கடப்பதற்காகவே இப்பிறவியைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த உடலாகிய ஓடம் நிலையானதல்ல. சீக்கிரமே உடைந்து விடும். பிறவிக்கடலைக் கடப்பது அவ்வளவு எளிதல்ல. இதற்கு முன்பு எத்தனை முறை உடல் எனும் ஓடத்தைப் பெற்றும் நம்மால் பிறவிக்கடலைக் கடக்க முடியாமல் தோற்றுப் போயிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. நாம் இப் பிறவியிலேயே இறைவனை முயன்று சேராது விட்டால் அடுத்து என்ன பிறவி வாய்க்குமோ தெரியாது. மீண்டும் புழு, பூச்சி, பறவை, விலங்கு என்று பல பிறவிகளை எடுக்க வேண்டி வரலாம். எனவே, இப்பிறவியிலேயே இறைவனை சரணாகதியாகப் பற்றுங்கள். பிறப்பில்லா நிலையை அடைவதே தம் தலையாய கடமையாகும்.
நாளை என்பது நமக்கில்லை
செப்டம்பர் 29,2009,
15:04 IST
நாம் செய்ய வேண்டிய செயல்களை தகுந்த சமயத்தில் செய்யாமல் தள்ளிப்போடுகிறோம். இல்லாவிட்டால் இன்று சிறிது செய்யலாம்; நாளை அதிகமாகச் செய்யலாம் என்று என்று நினைக்கிறோம். இதையே ஆன்மிகத்திலும் மனிதர்கள் செய்கிறார்கள். இளமையில் வேலை செய்து நிறைய பணம் சம்பாதிப்போம். வயதான பிறகு பகவானை நினைத்து வழிபட்டுக் கொள்ளலாம் என்று எண்ணுகிறோம். முதுமையில் நாம் சரியாக பார்க்கவே முடியாது. காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விடும். பகவானின் நாமங்களை சொல்ல விரும்பினாலும், ஜபிப்பதற்கு சக்தி இல்லாமல் போய் விடும்.
சில மாணவர்களும் இவ்வாறு தான் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் பாடத்தை விட்டுவிட்டு, பொழுதுபோக்குகளில் நேரத்தை கழிக்கிறார்கள். தேர்வு நேரத்தில் படித்தால் போதும் என எண்ணுகிறார்கள். காலத்தை வீணடித்து விட்டு, கடைசி நேரத்தில் படிப்பதால் குழப்பமே மிஞ்சும். தங்கள் சோம்பேறித்தனத்தால், தேர்வில் தோல்வி அடைகிறார்கள்.
மனப்பக்குவம் அடைய விரும்பும் ஒருவன் "நாளை' பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அதற்கான முயற்சிகளை "இன்றே' ஆரம்பிக்க வேண்டும்.