Post by Sumi on Feb 8, 2012 8:50:47 GMT 5.5
ஆலயங்களில்… வசதி வாய்ப்புள்ள பலர், தங்க ஆபரணங்கள், வைர நகைகள் என்றெல்லாம் வாங்கி தெய்வத் திருமேனிகளுக்கு கொடுத்திருந்தாலும், அவை அத்தனையும் – எல்லா நேரங்களிலுமா அந்தத் தெய்வத் திருமேனிகளை அலங்கரிக்கின்றன? இல்லையே!விசேஷம், முக்கிய தினங்கள், விழாக் காலங்கள் என்று நாள்- நட்சத்திரம் பார்த்துதானே இந்த நகைகளை அணிவிக்கின்றனர்? ‘இன்று தங்க கவசம்’ – ‘இன்று வைர அங்கி சேவை’ என குறிப்பிட்ட நாளில் ஆலயத்தில் அறிவிப்பார்கள்.
இறைவனுக்கு தங்க ஆபரணங்களையும் வைர நகைகளையும் வாங்கிக் கொடுக்கும் வசதி, எல்லா பக்தர்களுக்கும் இருக்குமா என்ன? இதற்காகத்தான் சொன்னார்கள் – பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைக்க வேண்டும் என்று! ஆம்! பொன் வாங்கித் தர இயலாதவர்கள், தெய்வத் திருமேனியை அழகு செய்து பார்க்க பூ வாங்கித் தருவார்கள். இதுவும் ஓர் அழகுதான்.தெய்வத் திருமேனியில் சார்த்துவதற்கென்று- ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு முழம் பூவை உள்ளன்புடன் வாங்கிக் கொடுங்கள்… அது அன்று முழுதும், இறைவனின் திருமேனியை அலங்கரிக்கும்; சந்நிதியை நிறைக்கும். பூமாலையை விட பொன் ஆபரணங்கள் விலையில் பன்மடங்கு உயர்ந்திருந்தாலும், அதிக நேரம் தெய்வத் திருவுருவத்தைத் தழுவும் பாக்கியம், பூமாலைக்குத்தான் உண்டு. கிட்டத்தட்ட இதுபோன்ற காட்சியை, காஞ்சி மகா ஸ்வாமிகளிடம் கண்டனர் பக்தர்கள்.
அதாவது மகா பெரியவாளை தரிசித்து அவரின் அருள் பெறுவதற்காக ஏராளமானோர் பெருங்கூட்டமாக திரள்வர். பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். கத்தை கத்தையாக கரன்ஸிகளை அடுக்கிக் கொண்டும், மடிப்பு கலையாத சுத்தமான பட்டு வஸ்திரங்களை வைத்துக் கொண்டும், தங்க ஆபரணங்களை அட்டைப் பெட்டியில் அடைத்துக் கொண்டும், பழங்கள்- முந்திரிகள்- திராட்சைகள் என்று பழ வகைகளை உயர்தர ‘பேக்கிங்’கில் வாங்கிக் கொண்டு வந்து, தங்கச் சங்கிலி பளபளக்க… திறந்த மேனியுடன் – பெரியவாள் தரிசனத்துக்காக வரிசையில் காத்துக் கொண்டிருப்பார்கள். தங்கள் முறை வந்ததும், தாங்கள் கொண்டு வந்த பொருட்களை, பெரியவா காலடியில் சமர்ப்பிப்பார்கள்.
அதே நேரம், கூட்டத்தில் எங்கேனும் ஒரு மூலையில்… வரிசையில் நிற்கக்கூட தெம்பு இல்லாமல், வயதான ஒரு மூதாட்டி சிறிய கல்கண்டு பொட்டலத்தை வைத்துக் கொண்டு, ‘இதைப் பெரியவா கையில் எப்படியாவது சேர்க்க வேண்டுமே?’ என்று தவித்து மருகுவார். அந்த கல்கண்டு, தெருமுனையில் உள்ள செட்டியார் கடையில் அரையணா கொடுத்து வாங்கப்பட்டிருந்தாலும் மூதாட் டியின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் தூய பக்தி, விலைமதிப்பற்றது அல்லவா? பெரியவா இருக்கும் இடத்தின் அருகே அந்த மூதாட்டி நெருங்க முயன்றாலும், சிலரால் தடுக்கப்படுவார்.
உலகின் சகல இயக்கங்களையும் இருந்த இடத்தில் இருந்தே அறியும் ஆற்றல் பெற்ற காஞ்சி மகா ஸ்வாமிகள், இதை அறியாமல் இருப்பாரா?
மூதாட்டியின் தவிப்பை பெரியவா உணர்ந்து விடுவார். தன் உதவியாளர் ஒருவரிடம் அடையாளம் சொல்லி, அந்த மூதாட்டியைக் கைத் தாங்கலாகத் தன்னிடம் அழைத்து வருமாறு உத்தரவிடுவார். உதவியாளர் ஓடிச் சென்று, மூதாட்டியிடம் விவரம் சொல்லி, அவரது கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு, பெரியவாளை நோக்கி நடந்து வருவார். அந்த நிமிடத்தில் மூதாட்டியின் முகத்தில் மலரும் பரவசம் இருக்கிறதே… ஆஹா! இதுதானே ஆனந்தம்!
இதனால்தான் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொன்னார்: ‘பொன் பொருள்தான் என்றில்லை… தூய பக்தியுடன் ஏதேனும் ஓர் இலையை எனக்குச் சமர்ப்ப ணம் செய். அதுவும் இயலவில்லையா? கண்ணீர் மல்க நீ செய்யும் பிரார்த்தனை ஒன்றே போதும்!’
ஆம்! இறைவனின் அருளைப் பெற கள்ளமில்லா மனமும் தூய பக்தியும் போதும். மகா பெரியவாளிடமும் இப்படி பக்தி செலுத்தி அவரின் திருவருளைப் பெற்ற வர்கள் ஏராளம்!
ஒரு முறை காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில், மேடையில் அமர்ந்து பக்தர்களிடையே அருளுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் மகா ஸ்வாமிகள். அப்போது ஆடு ஒன்று, வாசலைக் கடந்து மடத்தின் உள்ளேயே வந்து விட்டது. பெரியவா அமர்ந்திருந்த மேடைக்கு அருகே வந்து நின்று, ஸ்வாமிகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தது. கூட்டத்தில் சிலர் எழுந்து, விறுவிறுவென சென்று ‘ச்சூ… ச்சூ!’ என்று அந்த ஆட்டை அங்கிருந்து விரட்ட முற்பட்டனர்.இதைக் கவனித்த ஸ்வாமிகள் உரையை சற்று நிறுத்தி விட்டு, ஆட்டை விரட்ட முயன்ற பக்தர்களைத் தடுத்தார். ”அதை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். அதுக்குப் பசிக்குது. ஏதாவது தேவையா இருக்கும்” என்றவர், தனக்கு முன்னால் பித்தளைத் தட்டில் இருந்த வாழைப்பழங்கள் சிலவற்றை எடுத்து, ஆட்டின் முன் நீட்டினார். அந்த ஆடு உற்சாகத்துடன் ஸ்வாமிகளுக்கு அருகே வந்து, ஒவ்வொரு பழமாக வாங்கிச் சாப்பிட்டது. சில விநாடிகளுக்குப் பிறகு, அங்கிருந்து வெளியேறியது.
பிறகு ஸ்வாமிகள், ”இப்ப ஆடு ரூபத்துல வந்துட்டுப் போனது தபோவனம் ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகள். தபோவனத்துல உட்கார்ந்துண்டிருக்கிற அவருக்கு என்னவோ ஒரு பசி… என்கிட்டேர்ந்து ஏதாவது வாங்கிச் சாப்பிடணும்னு தோணி இருக்கு. அதான் நேரா இங்கே வந்துட்டார். நான் வாழைப்பழங்களைக் கொடுத்ததும், அதைச் சாப்பிட்டுட்டு சாந்தமா புறப்பட்டுப் போயிட்டார்” என்று சொல்ல… பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்!
தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத அந்த காலகட்டத்தில்… பல மைல் தொலைவுக்கு அப்பால் இருந்தாலும்… நேருக்கு நேர் சந்திக்காமலேயே தங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் மகான்கள் பரிமாறிக் கொள்வர் என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம்
இறைவனுக்கு தங்க ஆபரணங்களையும் வைர நகைகளையும் வாங்கிக் கொடுக்கும் வசதி, எல்லா பக்தர்களுக்கும் இருக்குமா என்ன? இதற்காகத்தான் சொன்னார்கள் – பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைக்க வேண்டும் என்று! ஆம்! பொன் வாங்கித் தர இயலாதவர்கள், தெய்வத் திருமேனியை அழகு செய்து பார்க்க பூ வாங்கித் தருவார்கள். இதுவும் ஓர் அழகுதான்.தெய்வத் திருமேனியில் சார்த்துவதற்கென்று- ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு முழம் பூவை உள்ளன்புடன் வாங்கிக் கொடுங்கள்… அது அன்று முழுதும், இறைவனின் திருமேனியை அலங்கரிக்கும்; சந்நிதியை நிறைக்கும். பூமாலையை விட பொன் ஆபரணங்கள் விலையில் பன்மடங்கு உயர்ந்திருந்தாலும், அதிக நேரம் தெய்வத் திருவுருவத்தைத் தழுவும் பாக்கியம், பூமாலைக்குத்தான் உண்டு. கிட்டத்தட்ட இதுபோன்ற காட்சியை, காஞ்சி மகா ஸ்வாமிகளிடம் கண்டனர் பக்தர்கள்.
அதாவது மகா பெரியவாளை தரிசித்து அவரின் அருள் பெறுவதற்காக ஏராளமானோர் பெருங்கூட்டமாக திரள்வர். பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். கத்தை கத்தையாக கரன்ஸிகளை அடுக்கிக் கொண்டும், மடிப்பு கலையாத சுத்தமான பட்டு வஸ்திரங்களை வைத்துக் கொண்டும், தங்க ஆபரணங்களை அட்டைப் பெட்டியில் அடைத்துக் கொண்டும், பழங்கள்- முந்திரிகள்- திராட்சைகள் என்று பழ வகைகளை உயர்தர ‘பேக்கிங்’கில் வாங்கிக் கொண்டு வந்து, தங்கச் சங்கிலி பளபளக்க… திறந்த மேனியுடன் – பெரியவாள் தரிசனத்துக்காக வரிசையில் காத்துக் கொண்டிருப்பார்கள். தங்கள் முறை வந்ததும், தாங்கள் கொண்டு வந்த பொருட்களை, பெரியவா காலடியில் சமர்ப்பிப்பார்கள்.
அதே நேரம், கூட்டத்தில் எங்கேனும் ஒரு மூலையில்… வரிசையில் நிற்கக்கூட தெம்பு இல்லாமல், வயதான ஒரு மூதாட்டி சிறிய கல்கண்டு பொட்டலத்தை வைத்துக் கொண்டு, ‘இதைப் பெரியவா கையில் எப்படியாவது சேர்க்க வேண்டுமே?’ என்று தவித்து மருகுவார். அந்த கல்கண்டு, தெருமுனையில் உள்ள செட்டியார் கடையில் அரையணா கொடுத்து வாங்கப்பட்டிருந்தாலும் மூதாட் டியின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் தூய பக்தி, விலைமதிப்பற்றது அல்லவா? பெரியவா இருக்கும் இடத்தின் அருகே அந்த மூதாட்டி நெருங்க முயன்றாலும், சிலரால் தடுக்கப்படுவார்.
உலகின் சகல இயக்கங்களையும் இருந்த இடத்தில் இருந்தே அறியும் ஆற்றல் பெற்ற காஞ்சி மகா ஸ்வாமிகள், இதை அறியாமல் இருப்பாரா?
மூதாட்டியின் தவிப்பை பெரியவா உணர்ந்து விடுவார். தன் உதவியாளர் ஒருவரிடம் அடையாளம் சொல்லி, அந்த மூதாட்டியைக் கைத் தாங்கலாகத் தன்னிடம் அழைத்து வருமாறு உத்தரவிடுவார். உதவியாளர் ஓடிச் சென்று, மூதாட்டியிடம் விவரம் சொல்லி, அவரது கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு, பெரியவாளை நோக்கி நடந்து வருவார். அந்த நிமிடத்தில் மூதாட்டியின் முகத்தில் மலரும் பரவசம் இருக்கிறதே… ஆஹா! இதுதானே ஆனந்தம்!
இதனால்தான் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொன்னார்: ‘பொன் பொருள்தான் என்றில்லை… தூய பக்தியுடன் ஏதேனும் ஓர் இலையை எனக்குச் சமர்ப்ப ணம் செய். அதுவும் இயலவில்லையா? கண்ணீர் மல்க நீ செய்யும் பிரார்த்தனை ஒன்றே போதும்!’
ஆம்! இறைவனின் அருளைப் பெற கள்ளமில்லா மனமும் தூய பக்தியும் போதும். மகா பெரியவாளிடமும் இப்படி பக்தி செலுத்தி அவரின் திருவருளைப் பெற்ற வர்கள் ஏராளம்!
ஒரு முறை காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில், மேடையில் அமர்ந்து பக்தர்களிடையே அருளுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் மகா ஸ்வாமிகள். அப்போது ஆடு ஒன்று, வாசலைக் கடந்து மடத்தின் உள்ளேயே வந்து விட்டது. பெரியவா அமர்ந்திருந்த மேடைக்கு அருகே வந்து நின்று, ஸ்வாமிகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தது. கூட்டத்தில் சிலர் எழுந்து, விறுவிறுவென சென்று ‘ச்சூ… ச்சூ!’ என்று அந்த ஆட்டை அங்கிருந்து விரட்ட முற்பட்டனர்.இதைக் கவனித்த ஸ்வாமிகள் உரையை சற்று நிறுத்தி விட்டு, ஆட்டை விரட்ட முயன்ற பக்தர்களைத் தடுத்தார். ”அதை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். அதுக்குப் பசிக்குது. ஏதாவது தேவையா இருக்கும்” என்றவர், தனக்கு முன்னால் பித்தளைத் தட்டில் இருந்த வாழைப்பழங்கள் சிலவற்றை எடுத்து, ஆட்டின் முன் நீட்டினார். அந்த ஆடு உற்சாகத்துடன் ஸ்வாமிகளுக்கு அருகே வந்து, ஒவ்வொரு பழமாக வாங்கிச் சாப்பிட்டது. சில விநாடிகளுக்குப் பிறகு, அங்கிருந்து வெளியேறியது.
பிறகு ஸ்வாமிகள், ”இப்ப ஆடு ரூபத்துல வந்துட்டுப் போனது தபோவனம் ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகள். தபோவனத்துல உட்கார்ந்துண்டிருக்கிற அவருக்கு என்னவோ ஒரு பசி… என்கிட்டேர்ந்து ஏதாவது வாங்கிச் சாப்பிடணும்னு தோணி இருக்கு. அதான் நேரா இங்கே வந்துட்டார். நான் வாழைப்பழங்களைக் கொடுத்ததும், அதைச் சாப்பிட்டுட்டு சாந்தமா புறப்பட்டுப் போயிட்டார்” என்று சொல்ல… பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்!
தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத அந்த காலகட்டத்தில்… பல மைல் தொலைவுக்கு அப்பால் இருந்தாலும்… நேருக்கு நேர் சந்திக்காமலேயே தங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் மகான்கள் பரிமாறிக் கொள்வர் என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம்