Post by venkatswam on Nov 6, 2012 9:13:44 GMT 5.5
Courtesies: Smt Prema Subramaniam
பல வர்ஷங்களுக்கு முன்னால் பெரியவா மெட்ராஸில் லஸ் சர்ச் ரோடில்
பக்தர்கள் குழாமோடு நடந்து வந்து கொண்டிருந்தார். அதேசமயம் அதே இடத்தில்
பூர்ண கும்ப மரியாதைகளோடு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
எதிர்கொண்டழைக்கும் பெரியவாளை தாக்க த்ராவிட இயக்கத்தினர் கம்பு,
கட்டைகளோடு தயாராக இருந்தனர். இந்த செய்தி பெரியவாளுடைய பக்தர்களுக்கு
எட்டியதும், அதிர்ந்து போனார்கள்!
உடனேயே பெரியவாளிடம் சென்று " பெரியவா.......DK க்காரா அந்தப்பக்கம்
கம்பு கழியோட நின்னுண்டு இருக்காளாம்.....பெரியவாளுக்கு எதாவுது
அவமானம்னா எங்களால தாங்க முடியாது. பேசாம வேற பக்கமா போய்டுவோம்." என்று
கெஞ்சினார்கள். கூடவே போலீஸ் நடந்துவந்தாலும் அதையும் மீறி பெரியவாளை
தாக்கி விட்டால்?
பெரியவா சிரித்துக்கொண்டே "அவாளால என்னை ஒண்ணும் பண்ண முடியாது"
அழுத்தந்திருத்தமாக கூறிவிட்டு அருகில் இருந்த அம்பாள் கோவிலில் ஒரு
நிமிஷம் கண்ணை மூடி ப்ரார்த்தனை பண்ணிவிட்டு மேலே நடக்க ஆரம்பித்தார்.
"திக்,திக்" உள்ளத்தோடு TTK சதாஸிவம் முதலான பக்தர்கள் பெரியவாளை
அரவணைத்தாற்போல் நடந்து வந்தனர். இதோ! கம்பு கட்டை பிடித்தபடி நிற்கும்
கூட்டத்தை "லோக க்ஷேமத்துக்காக" தண்டம் ஏந்திய மஹா பெரியோன்
நெருங்கிவிட்டார்!
"எல்லாரும் கட்டையை எல்லாம் கீழ போட்டுட்டு,ஒதுங்கி நில்லுங்க! பெரியவங்க
வராங்க! பெரியவங்களை வழி மரிக்கறது, தாக்கறது அதெல்லாம் கூடாது! ஆமா,
சொல்லிட்டேன்! அவுங்க எங்க போகணுமோ அங்க பத்திரமா கூட்டிட்டு போயி
விடவேண்டியது ஒங்க பொறுப்பு!" என்ற "கணீர்" குரலுக்கு உரிய ஈ வே ரா
பெரியார் அங்கு வந்து கட்டளையிட்டார்.
"நான்தான் சொன்னேனே! பாத்தேளா! " என்பது போல் ஒரு புன்னகை பொதிந்த
பார்வையை தன்னை சுற்றி நின்றுகொண்டிருந்த அடியவர்கள் மேல் வீசினார்
பெரியவா. த்ராவிட கழக தொண்டர்கள், "தோடுடைய செவியன்" என்று பாடிய த்ரவிட
சிசுவுக்கு ஞானப்பால் ஊட்டிய அம்பாளை தன்னுள் அடக்கிய பெரியவாளை
பாதுகாப்பாக கொண்டுபோய் விட்டனர்.
பல வர்ஷங்களுக்கு முன்னால் பெரியவா மெட்ராஸில் லஸ் சர்ச் ரோடில்
பக்தர்கள் குழாமோடு நடந்து வந்து கொண்டிருந்தார். அதேசமயம் அதே இடத்தில்
பூர்ண கும்ப மரியாதைகளோடு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
எதிர்கொண்டழைக்கும் பெரியவாளை தாக்க த்ராவிட இயக்கத்தினர் கம்பு,
கட்டைகளோடு தயாராக இருந்தனர். இந்த செய்தி பெரியவாளுடைய பக்தர்களுக்கு
எட்டியதும், அதிர்ந்து போனார்கள்!
உடனேயே பெரியவாளிடம் சென்று " பெரியவா.......DK க்காரா அந்தப்பக்கம்
கம்பு கழியோட நின்னுண்டு இருக்காளாம்.....பெரியவாளுக்கு எதாவுது
அவமானம்னா எங்களால தாங்க முடியாது. பேசாம வேற பக்கமா போய்டுவோம்." என்று
கெஞ்சினார்கள். கூடவே போலீஸ் நடந்துவந்தாலும் அதையும் மீறி பெரியவாளை
தாக்கி விட்டால்?
பெரியவா சிரித்துக்கொண்டே "அவாளால என்னை ஒண்ணும் பண்ண முடியாது"
அழுத்தந்திருத்தமாக கூறிவிட்டு அருகில் இருந்த அம்பாள் கோவிலில் ஒரு
நிமிஷம் கண்ணை மூடி ப்ரார்த்தனை பண்ணிவிட்டு மேலே நடக்க ஆரம்பித்தார்.
"திக்,திக்" உள்ளத்தோடு TTK சதாஸிவம் முதலான பக்தர்கள் பெரியவாளை
அரவணைத்தாற்போல் நடந்து வந்தனர். இதோ! கம்பு கட்டை பிடித்தபடி நிற்கும்
கூட்டத்தை "லோக க்ஷேமத்துக்காக" தண்டம் ஏந்திய மஹா பெரியோன்
நெருங்கிவிட்டார்!
"எல்லாரும் கட்டையை எல்லாம் கீழ போட்டுட்டு,ஒதுங்கி நில்லுங்க! பெரியவங்க
வராங்க! பெரியவங்களை வழி மரிக்கறது, தாக்கறது அதெல்லாம் கூடாது! ஆமா,
சொல்லிட்டேன்! அவுங்க எங்க போகணுமோ அங்க பத்திரமா கூட்டிட்டு போயி
விடவேண்டியது ஒங்க பொறுப்பு!" என்ற "கணீர்" குரலுக்கு உரிய ஈ வே ரா
பெரியார் அங்கு வந்து கட்டளையிட்டார்.
"நான்தான் சொன்னேனே! பாத்தேளா! " என்பது போல் ஒரு புன்னகை பொதிந்த
பார்வையை தன்னை சுற்றி நின்றுகொண்டிருந்த அடியவர்கள் மேல் வீசினார்
பெரியவா. த்ராவிட கழக தொண்டர்கள், "தோடுடைய செவியன்" என்று பாடிய த்ரவிட
சிசுவுக்கு ஞானப்பால் ஊட்டிய அம்பாளை தன்னுள் அடக்கிய பெரியவாளை
பாதுகாப்பாக கொண்டுபோய் விட்டனர்.