Post by radha on Oct 8, 2012 7:05:52 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
நானிலமெங்கும் நவராத்திரி வழிபாடு
நவராத்திரி முதல் நாள் தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் அரிசிமாவினால் பொட்டுக்கோலம், கோதுமை மாவினால் கட்டக் கோலம், முத்தைக் கொண்டு மலர்க்கோலம், அட்சதையினால் படிக்கட்டுக் கோலம், கடலையினால் பறவைக்கோலம், பருப்பினால் தேவியின் நாம கோலம், பூக்களால் திட்டாணிக்கோலம், காசுகளினால் பத்ம கோலம், கற்பூரத்தினால் ஆயுதக் கோலம் என ஒன்பது வகையான கோலங்கள் அந்நாளில் தேவியின் முன் இடப்படுவது பண்டைய கால வழக்கம்.
நவராத்திரியின் முதல் நாள் வில்வதளங்களாலும், இரண்டாம் நாள் துளசி தளங்களாலும், மூன்றாம் நாள் மருக்கொழுந்து பூக்களாலும், நான்காம் நாள் கதிர்ப்பச்சையாலும், ஐந்தாம் நாள் விபூதிபச்சையாலும், ஆறாம் நாள் ஜாதிமல்லிகையாலும், ஏழாம் நாள் தும்பை இலையாலும், எட்டாம் நாள் பன்னீர் இலையாலும், ஒன்பதாம் நாள் மல்லிகை மலர்களாலும் தேவியை அர்ச்சிக்கும் சம்பிரதாயம் இருந்திருக்கிறது.
திருவாரூரில் உள்ள திருமியச்சூரில், மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகை ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கே விஜயதசமியன்று மூன்று மூட்டை அரிசியில் சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கலின் நடுவில் பள்ளம் அமைத்து இரண்டரை டின் நெய் ஊற்றப்படும். தேவிக்கு நன்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு திரை விலக்கப்படும் போது தேவியின் பிம்பம் சர்க்கரைப் பொங்கலில் உள்ள நெய்க்குளத்தில் தெரிவதைக் காண்பது பெரும் பாக்கியம்.
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள துர்க்கை மிகவும் வரப்ரசாதியாகத் திகழ்கிறாள். இத்தேவி ராஜேந்திர சோழனின் குலதெய்வமாகத் திகழ்ந்தவள். 9 வயது சிறுமியின் வடிவில் புன்முறுவல் தவழும் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்கள் கொண்டு மகிஷாசுரனை வதைத்த திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறாள். இத்திருக்கோலம் மங்களசண்டி என்று அழைக்கப்படுகிறது.
நவராத்திரி பூஜையின் கடைசி நாள் அம்பிகைக்கு சுத்தான்னம் (வெறும் சாதம்), இலை வடாம், வெண்ணைய், சுக்குவெந்நீர் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். இதனால் தேவியின் திருவருள் நமக்குக் கிட்டும் என தேவி பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு அருகில், கல்லிகுளங்கராவில் உள்ளது துர்க்கை பகவதியம்மன் திருக்கோயில். கருவறையில், இரு கைகளே அம்பாளாக வழிபடப்படுகிறது. அந்தக்
கைகளுக்கே பூஜைகள் நடைபெறுகிறது.
அம்பிகைக்கு லலிதா ஸஹஸ்ரநாமத்தில் விஜயா என்ற பெயரும் உண்டு. விஜயதசமியன்று மாலையில் நட்சத்திரங்கள் தோன்றும் நேரம் விஜயா நேரம் என அழைக்கப்படுகிறது. அந்த சுபவேளையில் தொடங்கப்படும் சுபகாரியங்கள் வெற்றி பெறும் என்று முகூர்த்த சிந்தாமணி நூல் கூறுகிறது. அந்த வேளையில்தான் ஆலயங்களில் அம்புபோடும் நிகழ்வும் நடத்தப்படுகிறது.
வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் 16 வகையான துர்க்கையின் திருக்கோலங்களையும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள துர்க்காம்பிகை ஆலயத்தில் தரிசிக்கலாம்.
மகாராஷ்டிராவில் நவராத்திரியின் ஆரம்ப நாளன்று நவதானியங்களை மண் கிண்ணங்களில் பயிரிட்டு முளைப்பாரியாக்குவர். பின் ஒன்பது நாட்களும் அதை வணங்குவர். அங்கே லட்சுமி தேவிக்கே நவராத்திரி நாட்களில் முக்கியத்துவம். விஜயதசமி தினத்தன்று அந்த முளைப்பாரியை நீர் நிலைகளில் கரைப்பர். இந்நிகழ்வை காகர் புங்னே என அழைக்கின்றனர்.
நவராத்திரி நாயகியாக விளங்கும்
மகிஷாசுரமர்த்தினி பல்வேறு இடங்களில் தரிசனமளிக்கிறாள்: வட இந்தியாவில் குப்தர் காலத்திய தேவி உதயகிரி எனும் இடத்தில் 12 கைகளோடு தரிசனமளிக்கிறாள்.
காசியிலும், நேபாளத்திலும் 10 கைகள் கொண்ட மகிஷாசுரமர்த்தினியை தரிசிக்கலாம். கங்கை கொண்டசோழபுரம், திருபுவனம், தாராசுரம் போன்ற தலங்களில் அந்த அன்னைக்கு 6 கரங்கள். மைசூர், மகாபலிபுரம், எல்லோரா, காஞ்சி கைலாசநாதர் ஆலயங்களில் 8 கைகளுடன் காட்சி தருகிறாள். திருவிடைமருதூரில் 16 கரங்கள் கொண்டிருக்கிறாள். பாட்னா, சாரநாத், நாலந்தா, பஞ்சாப், அரியானாவில் 32 கரங்களுடன் திகழ்கிறாள்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
நானிலமெங்கும் நவராத்திரி வழிபாடு
நவராத்திரி முதல் நாள் தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் அரிசிமாவினால் பொட்டுக்கோலம், கோதுமை மாவினால் கட்டக் கோலம், முத்தைக் கொண்டு மலர்க்கோலம், அட்சதையினால் படிக்கட்டுக் கோலம், கடலையினால் பறவைக்கோலம், பருப்பினால் தேவியின் நாம கோலம், பூக்களால் திட்டாணிக்கோலம், காசுகளினால் பத்ம கோலம், கற்பூரத்தினால் ஆயுதக் கோலம் என ஒன்பது வகையான கோலங்கள் அந்நாளில் தேவியின் முன் இடப்படுவது பண்டைய கால வழக்கம்.
நவராத்திரியின் முதல் நாள் வில்வதளங்களாலும், இரண்டாம் நாள் துளசி தளங்களாலும், மூன்றாம் நாள் மருக்கொழுந்து பூக்களாலும், நான்காம் நாள் கதிர்ப்பச்சையாலும், ஐந்தாம் நாள் விபூதிபச்சையாலும், ஆறாம் நாள் ஜாதிமல்லிகையாலும், ஏழாம் நாள் தும்பை இலையாலும், எட்டாம் நாள் பன்னீர் இலையாலும், ஒன்பதாம் நாள் மல்லிகை மலர்களாலும் தேவியை அர்ச்சிக்கும் சம்பிரதாயம் இருந்திருக்கிறது.
திருவாரூரில் உள்ள திருமியச்சூரில், மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகை ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கே விஜயதசமியன்று மூன்று மூட்டை அரிசியில் சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கலின் நடுவில் பள்ளம் அமைத்து இரண்டரை டின் நெய் ஊற்றப்படும். தேவிக்கு நன்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு திரை விலக்கப்படும் போது தேவியின் பிம்பம் சர்க்கரைப் பொங்கலில் உள்ள நெய்க்குளத்தில் தெரிவதைக் காண்பது பெரும் பாக்கியம்.
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள துர்க்கை மிகவும் வரப்ரசாதியாகத் திகழ்கிறாள். இத்தேவி ராஜேந்திர சோழனின் குலதெய்வமாகத் திகழ்ந்தவள். 9 வயது சிறுமியின் வடிவில் புன்முறுவல் தவழும் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்கள் கொண்டு மகிஷாசுரனை வதைத்த திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறாள். இத்திருக்கோலம் மங்களசண்டி என்று அழைக்கப்படுகிறது.
நவராத்திரி பூஜையின் கடைசி நாள் அம்பிகைக்கு சுத்தான்னம் (வெறும் சாதம்), இலை வடாம், வெண்ணைய், சுக்குவெந்நீர் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். இதனால் தேவியின் திருவருள் நமக்குக் கிட்டும் என தேவி பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு அருகில், கல்லிகுளங்கராவில் உள்ளது துர்க்கை பகவதியம்மன் திருக்கோயில். கருவறையில், இரு கைகளே அம்பாளாக வழிபடப்படுகிறது. அந்தக்
கைகளுக்கே பூஜைகள் நடைபெறுகிறது.
அம்பிகைக்கு லலிதா ஸஹஸ்ரநாமத்தில் விஜயா என்ற பெயரும் உண்டு. விஜயதசமியன்று மாலையில் நட்சத்திரங்கள் தோன்றும் நேரம் விஜயா நேரம் என அழைக்கப்படுகிறது. அந்த சுபவேளையில் தொடங்கப்படும் சுபகாரியங்கள் வெற்றி பெறும் என்று முகூர்த்த சிந்தாமணி நூல் கூறுகிறது. அந்த வேளையில்தான் ஆலயங்களில் அம்புபோடும் நிகழ்வும் நடத்தப்படுகிறது.
வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் 16 வகையான துர்க்கையின் திருக்கோலங்களையும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள துர்க்காம்பிகை ஆலயத்தில் தரிசிக்கலாம்.
மகாராஷ்டிராவில் நவராத்திரியின் ஆரம்ப நாளன்று நவதானியங்களை மண் கிண்ணங்களில் பயிரிட்டு முளைப்பாரியாக்குவர். பின் ஒன்பது நாட்களும் அதை வணங்குவர். அங்கே லட்சுமி தேவிக்கே நவராத்திரி நாட்களில் முக்கியத்துவம். விஜயதசமி தினத்தன்று அந்த முளைப்பாரியை நீர் நிலைகளில் கரைப்பர். இந்நிகழ்வை காகர் புங்னே என அழைக்கின்றனர்.
நவராத்திரி நாயகியாக விளங்கும்
மகிஷாசுரமர்த்தினி பல்வேறு இடங்களில் தரிசனமளிக்கிறாள்: வட இந்தியாவில் குப்தர் காலத்திய தேவி உதயகிரி எனும் இடத்தில் 12 கைகளோடு தரிசனமளிக்கிறாள்.
காசியிலும், நேபாளத்திலும் 10 கைகள் கொண்ட மகிஷாசுரமர்த்தினியை தரிசிக்கலாம். கங்கை கொண்டசோழபுரம், திருபுவனம், தாராசுரம் போன்ற தலங்களில் அந்த அன்னைக்கு 6 கரங்கள். மைசூர், மகாபலிபுரம், எல்லோரா, காஞ்சி கைலாசநாதர் ஆலயங்களில் 8 கைகளுடன் காட்சி தருகிறாள். திருவிடைமருதூரில் 16 கரங்கள் கொண்டிருக்கிறாள். பாட்னா, சாரநாத், நாலந்தா, பஞ்சாப், அரியானாவில் 32 கரங்களுடன் திகழ்கிறாள்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam