Post by Sumi on Sept 10, 2012 8:45:35 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
இங்கு மட்டும் இருப்பானேன்
Part 6 of 6
வர்ண தர்மம் இங்கு மட்டும் இருப்பானேன்?என்றால் இந்த தேசத்தில் மட்டுமாவது ஆத்ம சிந்தனைக்கும், தெய்வ அநுபவத்துக்கும், கலைகளுக்கும், உத்தமமான பண்புகளுக்கும் அநுகூலமான ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் என்று நமக்கு ஆசையிருந்தால், இவற்றுக்கான வர்ண தர்மமும் இருக்க வேண்டும். இங்கு மட்டும் இருப்பானேன்?. என்றால் இங்கு மட்டுமாவது இருந்தால்தான் உலகத்துக்கே ஒரு நல்ல உதாரணம் கிடைக்கும் என்பதற்காகவே இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் போட்டிதான் உடனே பொறாமைதான், அதிருப்திதான், சமூகச் சச்சரவுதான், சௌகரியமான படிப்பு, தொழில் இவற்றுக்குத்தான் எல்லாரும் வரப்பார்ப்பார்கள். ஆனால், அது எல்லாருக்கும் இடம்தர முடியாது. உடனே துவேஷம், பேதம், அசூயை தோன்ற வேண்டியதுதான். இப்போதே பாருங்கள். படித்தவர்களுக்கிடையிலேயும், வேலை இல்லாத் திண்டாட்டம் வந்தது என்றவுடன், காலேஜ் அட்மிஷனுக்குக் கட்டுப்பாடு போட வேண்டும் என்கிறார்கள். எஞ்ஜினியர்கள் ஜாஸ்தியாகி விட்டார்கள். என்ஜினியர் காலேஜ் சிலவற்றை மூடப்போகிறோம் என்கிறார்கள். அதாவது எல்லோருக்கும் எல்லாம் என்று வைக்க முடியாமல், இவர்களும் ஏதோ ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வரத்தான் வேண்டியிருக்கிறது. இதையே பாரம்பரியம் என்கிற கட்டுப்பாடாக ஆதியில் வைத்தார்கள். அப்போது தொழிலே ரத்தத்தில் ஊறி, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலே ஒரு பெருமையுடன் இது நம் அப்பன் பாட்டன் காலச்சொத்து. நம் குலத்தனம் என்கிற நிறைவு இருந்தது. அந்தந்தத் தொழிலைச் செய்வதிலும் அந்தரங்க விசுவாசம் இருந்தது. அதனால் நல்ல திறமையும் (Efficiency) இருந்தது. இன்றைக்கு ஒவ்வொருத்தனும் பணத்துக்காகவே என்று வந்துவிட்டால் தொழிலை ஒழுங்கில்லாமல் செய்கிறான். முன் காலத்தில் பணம் இரண்டாம்பட்சம். விசுவாசத்தோடு தன் தொழில் என்று திருப்தியோடு செய்தால், எல்லாக் காரியங்களும் ஒழுங்காய் நடந்தன. சமூகமே நன்றாக இருந்தது.
நிறைவு இல்லாமல் ஒரு நாகரீகமும் இல்லை. சமூகத்தில் அத்தனை பேருக்கும் இப்படிப்பட்ட நிறைவை ஏற்படுத்தித்தந்த வர்ண தர்மம் என்ற உத்தமமான ஏற்பாட்டைக் குற்றம் சொல்லவே கூடாது.
அந்த மாதிரியே மறுபடி செய்ய முடிகிறதோ, இல்லையோ?அப்படி முடியச் செய்கிறதுக்கு நம்மாலானதைச் செய்து தோற்றுப் போனாலும் சரி, அல்லது இந்தச் சாத்தியமில்லாத காரியத்தில் இறங்குவானேன்?என்று விட்டுவிட்டாலும் சரி - கடைசிப் பட்சமாக, அந்த ஏற்பாடுகள்தான் நம் மதத்தின் சகல ஜன சமூகங்களுக்கும், நம் தேசத்துக்கும், அதன் வழியே லோகம் முழுவதற்கும் ஆயிரம் பதினாராயிரம் வருஷங்களாகப் பரம சிரேயஸைத் தந்திருக்கிறது. அதைத் தோஷம் சொல்வது ரொம்பத் தப்பு,
வைதிக மதம்
இங்கு மட்டும் இருப்பானேன்
Part 6 of 6
வர்ண தர்மம் இங்கு மட்டும் இருப்பானேன்?என்றால் இந்த தேசத்தில் மட்டுமாவது ஆத்ம சிந்தனைக்கும், தெய்வ அநுபவத்துக்கும், கலைகளுக்கும், உத்தமமான பண்புகளுக்கும் அநுகூலமான ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் என்று நமக்கு ஆசையிருந்தால், இவற்றுக்கான வர்ண தர்மமும் இருக்க வேண்டும். இங்கு மட்டும் இருப்பானேன்?. என்றால் இங்கு மட்டுமாவது இருந்தால்தான் உலகத்துக்கே ஒரு நல்ல உதாரணம் கிடைக்கும் என்பதற்காகவே இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் போட்டிதான் உடனே பொறாமைதான், அதிருப்திதான், சமூகச் சச்சரவுதான், சௌகரியமான படிப்பு, தொழில் இவற்றுக்குத்தான் எல்லாரும் வரப்பார்ப்பார்கள். ஆனால், அது எல்லாருக்கும் இடம்தர முடியாது. உடனே துவேஷம், பேதம், அசூயை தோன்ற வேண்டியதுதான். இப்போதே பாருங்கள். படித்தவர்களுக்கிடையிலேயும், வேலை இல்லாத் திண்டாட்டம் வந்தது என்றவுடன், காலேஜ் அட்மிஷனுக்குக் கட்டுப்பாடு போட வேண்டும் என்கிறார்கள். எஞ்ஜினியர்கள் ஜாஸ்தியாகி விட்டார்கள். என்ஜினியர் காலேஜ் சிலவற்றை மூடப்போகிறோம் என்கிறார்கள். அதாவது எல்லோருக்கும் எல்லாம் என்று வைக்க முடியாமல், இவர்களும் ஏதோ ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வரத்தான் வேண்டியிருக்கிறது. இதையே பாரம்பரியம் என்கிற கட்டுப்பாடாக ஆதியில் வைத்தார்கள். அப்போது தொழிலே ரத்தத்தில் ஊறி, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலே ஒரு பெருமையுடன் இது நம் அப்பன் பாட்டன் காலச்சொத்து. நம் குலத்தனம் என்கிற நிறைவு இருந்தது. அந்தந்தத் தொழிலைச் செய்வதிலும் அந்தரங்க விசுவாசம் இருந்தது. அதனால் நல்ல திறமையும் (Efficiency) இருந்தது. இன்றைக்கு ஒவ்வொருத்தனும் பணத்துக்காகவே என்று வந்துவிட்டால் தொழிலை ஒழுங்கில்லாமல் செய்கிறான். முன் காலத்தில் பணம் இரண்டாம்பட்சம். விசுவாசத்தோடு தன் தொழில் என்று திருப்தியோடு செய்தால், எல்லாக் காரியங்களும் ஒழுங்காய் நடந்தன. சமூகமே நன்றாக இருந்தது.
நிறைவு இல்லாமல் ஒரு நாகரீகமும் இல்லை. சமூகத்தில் அத்தனை பேருக்கும் இப்படிப்பட்ட நிறைவை ஏற்படுத்தித்தந்த வர்ண தர்மம் என்ற உத்தமமான ஏற்பாட்டைக் குற்றம் சொல்லவே கூடாது.
அந்த மாதிரியே மறுபடி செய்ய முடிகிறதோ, இல்லையோ?அப்படி முடியச் செய்கிறதுக்கு நம்மாலானதைச் செய்து தோற்றுப் போனாலும் சரி, அல்லது இந்தச் சாத்தியமில்லாத காரியத்தில் இறங்குவானேன்?என்று விட்டுவிட்டாலும் சரி - கடைசிப் பட்சமாக, அந்த ஏற்பாடுகள்தான் நம் மதத்தின் சகல ஜன சமூகங்களுக்கும், நம் தேசத்துக்கும், அதன் வழியே லோகம் முழுவதற்கும் ஆயிரம் பதினாராயிரம் வருஷங்களாகப் பரம சிரேயஸைத் தந்திருக்கிறது. அதைத் தோஷம் சொல்வது ரொம்பத் தப்பு,