Post by Sumi on Sept 6, 2012 8:13:35 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
இங்கு மட்டும் இருப்பானேன்
Part 4 or 6
அங்கேயும் எரிமலை மாதிரி எப்போது வெடித்துவிடுமோ என்கிற நிலையில் உள்ள குமுறல் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அவ்வப்போது ஒரு அறிஞர் அல்லது எழுத்தாளர் உயிர் போனாலும் போகட்டும் என்று அங்கிருந்து தப்பி ஒடிவந்து அங்கே நடக்கிற கொடுங்கேன்மையைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கேயும் ஜனங்கள் உள்ளூர நிறைந்து இருக்கவில்லை என்கிறார்கள். இந்தியாவில் இப்படி ராஜாங்க சர்வாதிகாரம் ஒரு நாளிலும் இருந்ததில்லை. அடிமை ஜனங்களிடமிருந்து இத்தனை கலைகள், சாஸ்திரங்கள் ஒருக்காலும் தோன்றியிருக்க முடியாது. எங்களை அடக்கி வைத்திருப்பதைப் பாருங்கள் என்று வெளி ஜனங்களிடம் நாம் அழுததும் இல்லை. சுதந்திரமான சூழ்நிலையில் மனசு மலர்ந்திருந்தாலொழிய இத்தனை அறிவு நூல்களும் கலைகளும், கோயில்களும் தோன்றியிருக்கவே முடியாது. பொது ஜனங்களும் எண்ணிக்கையில் ஜாஸ்தி இருந்தால்கூட மூடநம்பிக்கையால் (Superstition) புரோஹித ஜாதிக்கு (Priest - craft - என்று சொல்கிறார்கள்.) பயந்து ஏமாந்து கிடந்தார்கள் என்று சொல்வது கொஞ்சம்கூடப் பொருந்தாது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கக் காடுகள் மாதிரிக் கலாச்சாரம் வளராத தேச ஜனங்களைப்பற்றி அப்படிச் சொன்னால்தான் புரியும். அங்கேயெல்லாம் பூசாரி என்கிறவன்தான் ராஜா மாதிரி. பார்த்தாலே பயப்படுகிற மாதிரி இருப்பான். மந்திர வித்தை போட்டு ஜனங்களை என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும்போல் தர்பார் பண்ணுவான். அவனுக்கே நேராக சிக்ஷிக்கிற அதிகாரம் உண்டு. நம் தேசத்தில் அப்படியில்லை. எல்லா ஜாதியினரும் நல்ல அறிவும், பக்தியும், அத்யாத்ம விஷயங்களில் முன்னேற்றமும் பெற்றவர்கள். புராணங்கள், பெரிய புராணம் இவற்றில் பார்த்தால் எல்லா ஜாதியிலும் மகா பெரியவர்கள் வந்தது தெரியும். சந்திரகுப்தன், சிவாஜி மாதிரி இருக்கப்பட்ட சக்கரவர்த்திகளும், சேக்கீழார் மாதிரி மதி மந்திரிகளும் நாலாம் வர்ணத்திலிருந்தே வந்திருக்கிறார்கள். இங்கே ப்ரீஸ்ட்- க்ராஃப்ட்டுக்கு சிக்ஷிக்கிற சக்தியும் கிடையாது. அவன்தான் பரம சாதுவாக இருக்க வேண்டியவன்.
தப்பு நடந்தால்கூடத் தன்னையே சிஷித்துக் கொள்ள வேண்டியவன் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. வெள்ளைக்காரர்கள் நீக்ரோ மேலே பட்டால் நீக்ரோவை சிக்ஷிக்கிறார்கள். நம் தேசத்திலோ தீண்டக்கூடாகவர் என்பவர் ப்ரீஸ்ட் - க்ராஃபட் மேலே பட்டால் இந்த ப்ரீஸ்ட் - ஜாதிக்காரன்தான் ஸ்நானம், பிராயச்சித்தாதிகள் செய்ய வேண்டும் என்று வைத்திருக்கிறது. தீண்டாமைக் கொள்கையைப் பற்றிய அபிப்பிராயம் ஒரு பக்கம் இருக்கட்டும். பயமுறுத்தியோ, தண்டித்தோ, அடக்கி வைத்தோ இம்மாதிரி கொள்கைகளைக் காரியத்தில் நடத்தவில்லை என்று சொல்ல வந்தேன். லெகமெல்லாம் கொண்டாடுகிற பெரிய நாகரிக சமுதாயத்தை அடக்கியும் ஏமாற்றியும் வளர்ந்திருக்க முடியாது. வாஸ்தவமாகவே தர்ம சாஸ்திர ஏற்பாடுகளில் சகலருக்கும் அநுபவ பூர்வமாக அநுகூலம் இருந்தால்தான் அவர்கள் புரட்சி செய்யாமல் இருந்தார்கள்.
(to be continued...)
வைதிக மதம்
இங்கு மட்டும் இருப்பானேன்
Part 4 or 6
அங்கேயும் எரிமலை மாதிரி எப்போது வெடித்துவிடுமோ என்கிற நிலையில் உள்ள குமுறல் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அவ்வப்போது ஒரு அறிஞர் அல்லது எழுத்தாளர் உயிர் போனாலும் போகட்டும் என்று அங்கிருந்து தப்பி ஒடிவந்து அங்கே நடக்கிற கொடுங்கேன்மையைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கேயும் ஜனங்கள் உள்ளூர நிறைந்து இருக்கவில்லை என்கிறார்கள். இந்தியாவில் இப்படி ராஜாங்க சர்வாதிகாரம் ஒரு நாளிலும் இருந்ததில்லை. அடிமை ஜனங்களிடமிருந்து இத்தனை கலைகள், சாஸ்திரங்கள் ஒருக்காலும் தோன்றியிருக்க முடியாது. எங்களை அடக்கி வைத்திருப்பதைப் பாருங்கள் என்று வெளி ஜனங்களிடம் நாம் அழுததும் இல்லை. சுதந்திரமான சூழ்நிலையில் மனசு மலர்ந்திருந்தாலொழிய இத்தனை அறிவு நூல்களும் கலைகளும், கோயில்களும் தோன்றியிருக்கவே முடியாது. பொது ஜனங்களும் எண்ணிக்கையில் ஜாஸ்தி இருந்தால்கூட மூடநம்பிக்கையால் (Superstition) புரோஹித ஜாதிக்கு (Priest - craft - என்று சொல்கிறார்கள்.) பயந்து ஏமாந்து கிடந்தார்கள் என்று சொல்வது கொஞ்சம்கூடப் பொருந்தாது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கக் காடுகள் மாதிரிக் கலாச்சாரம் வளராத தேச ஜனங்களைப்பற்றி அப்படிச் சொன்னால்தான் புரியும். அங்கேயெல்லாம் பூசாரி என்கிறவன்தான் ராஜா மாதிரி. பார்த்தாலே பயப்படுகிற மாதிரி இருப்பான். மந்திர வித்தை போட்டு ஜனங்களை என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும்போல் தர்பார் பண்ணுவான். அவனுக்கே நேராக சிக்ஷிக்கிற அதிகாரம் உண்டு. நம் தேசத்தில் அப்படியில்லை. எல்லா ஜாதியினரும் நல்ல அறிவும், பக்தியும், அத்யாத்ம விஷயங்களில் முன்னேற்றமும் பெற்றவர்கள். புராணங்கள், பெரிய புராணம் இவற்றில் பார்த்தால் எல்லா ஜாதியிலும் மகா பெரியவர்கள் வந்தது தெரியும். சந்திரகுப்தன், சிவாஜி மாதிரி இருக்கப்பட்ட சக்கரவர்த்திகளும், சேக்கீழார் மாதிரி மதி மந்திரிகளும் நாலாம் வர்ணத்திலிருந்தே வந்திருக்கிறார்கள். இங்கே ப்ரீஸ்ட்- க்ராஃப்ட்டுக்கு சிக்ஷிக்கிற சக்தியும் கிடையாது. அவன்தான் பரம சாதுவாக இருக்க வேண்டியவன்.
தப்பு நடந்தால்கூடத் தன்னையே சிஷித்துக் கொள்ள வேண்டியவன் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. வெள்ளைக்காரர்கள் நீக்ரோ மேலே பட்டால் நீக்ரோவை சிக்ஷிக்கிறார்கள். நம் தேசத்திலோ தீண்டக்கூடாகவர் என்பவர் ப்ரீஸ்ட் - க்ராஃபட் மேலே பட்டால் இந்த ப்ரீஸ்ட் - ஜாதிக்காரன்தான் ஸ்நானம், பிராயச்சித்தாதிகள் செய்ய வேண்டும் என்று வைத்திருக்கிறது. தீண்டாமைக் கொள்கையைப் பற்றிய அபிப்பிராயம் ஒரு பக்கம் இருக்கட்டும். பயமுறுத்தியோ, தண்டித்தோ, அடக்கி வைத்தோ இம்மாதிரி கொள்கைகளைக் காரியத்தில் நடத்தவில்லை என்று சொல்ல வந்தேன். லெகமெல்லாம் கொண்டாடுகிற பெரிய நாகரிக சமுதாயத்தை அடக்கியும் ஏமாற்றியும் வளர்ந்திருக்க முடியாது. வாஸ்தவமாகவே தர்ம சாஸ்திர ஏற்பாடுகளில் சகலருக்கும் அநுபவ பூர்வமாக அநுகூலம் இருந்தால்தான் அவர்கள் புரட்சி செய்யாமல் இருந்தார்கள்.
(to be continued...)