Post by Sumi on Sept 5, 2012 8:32:02 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
இங்கு மட்டும் இருப்பானேன்
Part 3 or 6
மற்ற தேசங்களில் அந்தந்த மதங்கள் போட்டுத் தந்த சமூக வாழ்க்கை முறையில் இப்படி ஸ்திரத் தன்மையை உண்டாக்கிக்கூடியதாக எந்த அமைப்பும் இல்லை. சமூக வாழ்வு அடிப்படை (Sociological foundation) என்பதையேகூட அவை பெரும்பாலும் கவனிக்கவில்லை என்று சொல்லி விடலாம். ஏதோ பொதுவாக திருடாதே, பொய் சொல்லாதே, விபசாரம் பண்ணாதே, சத்தியமாய் இரு, தியாகமாயிரு, அஹிம்சையாய் இரு என்கிற மாதிரி சொல்வதற்கு அதிகமாக, அவை சமூக வாழ்வை ஒழுங்குபட்டுத்தி அமைத்துக் கொடுப்பதில் ரூல்கள் செய்யவில்லை. மதத்தையே வாழ்வாக்கிக் கொண்ட பிக்ஷ§க்கள், பாதிரிமார்கள் மாதிரி இருக்கப்பட்டவர்கலுக்கு விதிகள் வகுத்துக் கொடுத்து சங்கமாக ஸ்தாபன ரீதியில் ஒழுங்கு செய்தனவே தவிர, சமுதாயம் முழுவதும் இணைந்து அதில் உள்ள எல்லோரும் ஒருத்தனையருத்தர் தாங்கி நிற்கிற மாதிரி எந்த ஏற்பாட்டையும் செய்வதில் அவை விசேஷமாக கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.
இதனால் என்ன ஆயிற்று. சாஸ்திர வளர்ச்சி, தேச ரக்ஷணம், வியாபாரம், விவசாயம், சரீர உழைப்பு எல்லா அம்சங்களும் மற்ற தேசங்களிலும் இருந்தாலும்கூட, எல்லாவற்றிலுமே எப்போது பார்த்தாலும் போட்டியும்கூடவே இருந்திருக்கிறது. நமக்கென்றே இந்தத் தொழிலும் ஏற்பட்டது என்றில்லாமல், எல்லோருக்கும் எல்லாவற்றிலும் போய் விழுந்திருக்கிறார்கள். முதலில் நம் தேசத்தில் இருந்த மாதிரி நம்முடைய ஜீவனோபாயத்துக்குக் கவலையில்லை. நிச்சயமாக இதோ இந்தத் தொழில் நமக்கு இருக்கிறது. வழி வழியாகச் செய்துவந்தால் நமக்கு ஸ்வபாவமாக, சுலபமாகக் கைவருகிற தொழிலாக ஒன்று இருக்கிறது. எந்த ஸ்திரத் தன்மை, நிச்சிந்தயான நிலைமை இல்லை. இது இருந்து விட்டால் அப்புறம் சமூக ஸெளஜன்யத்துக்கும் சாந்தத்துக்கும் கேட்கவே வேண்டாம். அப்படியிருந்தால்தான் நம் தேசத்தில் இப்படி உத்தமப் பண்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை வாழ்க்கையில் நடத்திக் காட்டிய உத்தம புருஷர்கள் கணக்கு வழக்கில்லாமல் தோன்றியிருக்கிறார்கள். மற்ற தேசங்களில் இந்த நிச்சயத்தன்மை இல்லாததால் ஒருத்தருக்கொருத்தர் போட்டியும் பூசலுமாக இருந்திருக்கின்றனர்.
சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறப்படி பார்த்தால், பெரும்பான்மையான ஜனங்கள் அடக்கி வைக்கப்பட்டதாக அவர்கள் நினைக்கிற வர்ண தர்மத்தைக் கொண்ட நம் தேசத்தில்தான் சமூகப் புரட்சிகள் ( Social Revolution s) நிறையத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், இந்த வார்த்தையே நமக்குப் புதிசானது, பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, ருஷ்யப் புரட்சி என்றெல்லாம் சரித்திர புஸ்தகத்தில் படித்த பிறகுதான் நமக்கு பெரிய ஜனசமூகமே புரட்சி என்று ஒன்றில் குதிக்கக்கூட அவசியம் ஏற்படலாம் போலிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. மற்ற தேசத்துச் சரித்திரங்களைப் பார்த்தால் புரட்சிக்குமேல் புரட்சி என்று பொது ஜனங்களே செய்வதைப் பார்க்கிறோம். அதைவிட முக்கியமாக ஒரு புரட்சியும் சாசுவதமாக எதையும் சாதித்துப் புரட்டிவிடவில்லை என்று பார்க்கிறோம். ஒரு புரட்சி வந்து ஒரு ஜம்பதி நூறு வருஷமானால் இன்னொரு புரட்சி வந்துதான் இருக்கிறது. அதைவது ஜனங்களுக்கு அதிருப்திதான் இருந்திருக்கிறது. இன்றைய நிலைமையோ கேட்கவே வேண்டாம். அத்தனை தேசங்களிலும் ஒழுங்கீனம், மிருகப் பிராயமான வெறிக் கூத்துகள், கிளர்ச்சிகள், ஸ்டிரைக்குகள், தினமும் ஒரு ராஜாங்கம் முழுகுவதும் இன்னொன்று வருவதுமாக லோகம் முழுக்கத் தத்தளிப்பில் இருக்கிறது. ராஜாங்கத்தாரே சர்வாதிகாரம் நடத்தி, தலையைத் தூக்கினால் மண்டையில் போட்டுவிடுவேன் என்று சொல்கிற ருஷியா மாதிரி தேசங்களில்தான் புரட்சியில்லாமலிருக்கிறது.
(to be continued...)
வைதிக மதம்
இங்கு மட்டும் இருப்பானேன்
Part 3 or 6
மற்ற தேசங்களில் அந்தந்த மதங்கள் போட்டுத் தந்த சமூக வாழ்க்கை முறையில் இப்படி ஸ்திரத் தன்மையை உண்டாக்கிக்கூடியதாக எந்த அமைப்பும் இல்லை. சமூக வாழ்வு அடிப்படை (Sociological foundation) என்பதையேகூட அவை பெரும்பாலும் கவனிக்கவில்லை என்று சொல்லி விடலாம். ஏதோ பொதுவாக திருடாதே, பொய் சொல்லாதே, விபசாரம் பண்ணாதே, சத்தியமாய் இரு, தியாகமாயிரு, அஹிம்சையாய் இரு என்கிற மாதிரி சொல்வதற்கு அதிகமாக, அவை சமூக வாழ்வை ஒழுங்குபட்டுத்தி அமைத்துக் கொடுப்பதில் ரூல்கள் செய்யவில்லை. மதத்தையே வாழ்வாக்கிக் கொண்ட பிக்ஷ§க்கள், பாதிரிமார்கள் மாதிரி இருக்கப்பட்டவர்கலுக்கு விதிகள் வகுத்துக் கொடுத்து சங்கமாக ஸ்தாபன ரீதியில் ஒழுங்கு செய்தனவே தவிர, சமுதாயம் முழுவதும் இணைந்து அதில் உள்ள எல்லோரும் ஒருத்தனையருத்தர் தாங்கி நிற்கிற மாதிரி எந்த ஏற்பாட்டையும் செய்வதில் அவை விசேஷமாக கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.
இதனால் என்ன ஆயிற்று. சாஸ்திர வளர்ச்சி, தேச ரக்ஷணம், வியாபாரம், விவசாயம், சரீர உழைப்பு எல்லா அம்சங்களும் மற்ற தேசங்களிலும் இருந்தாலும்கூட, எல்லாவற்றிலுமே எப்போது பார்த்தாலும் போட்டியும்கூடவே இருந்திருக்கிறது. நமக்கென்றே இந்தத் தொழிலும் ஏற்பட்டது என்றில்லாமல், எல்லோருக்கும் எல்லாவற்றிலும் போய் விழுந்திருக்கிறார்கள். முதலில் நம் தேசத்தில் இருந்த மாதிரி நம்முடைய ஜீவனோபாயத்துக்குக் கவலையில்லை. நிச்சயமாக இதோ இந்தத் தொழில் நமக்கு இருக்கிறது. வழி வழியாகச் செய்துவந்தால் நமக்கு ஸ்வபாவமாக, சுலபமாகக் கைவருகிற தொழிலாக ஒன்று இருக்கிறது. எந்த ஸ்திரத் தன்மை, நிச்சிந்தயான நிலைமை இல்லை. இது இருந்து விட்டால் அப்புறம் சமூக ஸெளஜன்யத்துக்கும் சாந்தத்துக்கும் கேட்கவே வேண்டாம். அப்படியிருந்தால்தான் நம் தேசத்தில் இப்படி உத்தமப் பண்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை வாழ்க்கையில் நடத்திக் காட்டிய உத்தம புருஷர்கள் கணக்கு வழக்கில்லாமல் தோன்றியிருக்கிறார்கள். மற்ற தேசங்களில் இந்த நிச்சயத்தன்மை இல்லாததால் ஒருத்தருக்கொருத்தர் போட்டியும் பூசலுமாக இருந்திருக்கின்றனர்.
சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறப்படி பார்த்தால், பெரும்பான்மையான ஜனங்கள் அடக்கி வைக்கப்பட்டதாக அவர்கள் நினைக்கிற வர்ண தர்மத்தைக் கொண்ட நம் தேசத்தில்தான் சமூகப் புரட்சிகள் ( Social Revolution s) நிறையத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், இந்த வார்த்தையே நமக்குப் புதிசானது, பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, ருஷ்யப் புரட்சி என்றெல்லாம் சரித்திர புஸ்தகத்தில் படித்த பிறகுதான் நமக்கு பெரிய ஜனசமூகமே புரட்சி என்று ஒன்றில் குதிக்கக்கூட அவசியம் ஏற்படலாம் போலிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. மற்ற தேசத்துச் சரித்திரங்களைப் பார்த்தால் புரட்சிக்குமேல் புரட்சி என்று பொது ஜனங்களே செய்வதைப் பார்க்கிறோம். அதைவிட முக்கியமாக ஒரு புரட்சியும் சாசுவதமாக எதையும் சாதித்துப் புரட்டிவிடவில்லை என்று பார்க்கிறோம். ஒரு புரட்சி வந்து ஒரு ஜம்பதி நூறு வருஷமானால் இன்னொரு புரட்சி வந்துதான் இருக்கிறது. அதைவது ஜனங்களுக்கு அதிருப்திதான் இருந்திருக்கிறது. இன்றைய நிலைமையோ கேட்கவே வேண்டாம். அத்தனை தேசங்களிலும் ஒழுங்கீனம், மிருகப் பிராயமான வெறிக் கூத்துகள், கிளர்ச்சிகள், ஸ்டிரைக்குகள், தினமும் ஒரு ராஜாங்கம் முழுகுவதும் இன்னொன்று வருவதுமாக லோகம் முழுக்கத் தத்தளிப்பில் இருக்கிறது. ராஜாங்கத்தாரே சர்வாதிகாரம் நடத்தி, தலையைத் தூக்கினால் மண்டையில் போட்டுவிடுவேன் என்று சொல்கிற ருஷியா மாதிரி தேசங்களில்தான் புரட்சியில்லாமலிருக்கிறது.
(to be continued...)