Post by Sumi on Aug 28, 2012 8:30:01 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
காரியத்தில் பேதமும் மனோபேதமும்
Part 4 of 7
அப்புறம் வெள்ளைக்காரர்கள் வந்தபின் எல்லோருக்குமே - வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல் தேசம் முழுவதிலுமே - வைதிக நம்பிக்கை குறைந்து வந்திருக்கிறது. ஏன் நிலைமை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா மாறிற்று. ஏன் இப்போது அரசியல் தலைவர்களாக இருக்கப்பட்ட எல்லோரும் வர்ண தர்மத்தை காஸ்டிஸம் காஸ்டிஸம் என்று கரித்துக் கொட்டும்படியாயிருக்கிறது தேசத்தின் முன்னேற்றத்துக்காக ஜாதிதான் பெரிய தீமை செய்கிறது என்ற அபிப்பிராயம் பரவலக உண்டாக்கியிருப்பது ஏன். ஜாதி என்று சொன்னாலே ஜெயிலில் பிடித்துப்போட்டிவிட வேண்டும் என்ற நினைக்கிற அளவுக்கு ஆகியிருப்பது எதனால்.
இதற்கு எனக்கு தெரிந்த மட்டும் காரணங்களை, யார் பொறுப்பாளி என்பதை பின்னால் சொல்கிறேன். தற்போது வர்ண தர்மத்தை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்பவர்கள். எதனால் இப்படிச் சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்க்கலாம். அவர்களுக்கு வர்ண தர்மத்தில் ரொம்பவும் ஏற்றத்தாழ்வு இருப்பதுபோலத் தெரிகிறது. இப்படி இருக்கக்கூடாது. எல்லாரையும் ஒருமாதிரி ஆக்கி உயர்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஆனால், இகு காரிய சாத்தியம்தானா. இதைத் தெரிந்து கொள்வதற்கு ஜாதி முறை இல்லாத மற்ற தோசங்களைப் பார்த்தாலே போதும். எல்லாம் சமமாகி விடுவது ஒரு நாளும் நடக்காத காரியம் என்பதற்கு அந்தத் தேசங்கள் எல்லாம் பிரத்தியக்ஷ உதாரணங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் உயர்த்தி தாழ்த்தியில்லை என்றால் வர்க்கப் பூசல்கள் (clause conflicts) இருக்கக்கூடாதுதானே. ஆனால் யதார்த்தத்தில் இப்படியா இருக்கிறது. எங்கே பார்த்தாலும் சௌகர்யப்படாதவர்கள் என்ற பிரிவும், இவர்களுக்குள் சண்டையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் தர்மத்தை உள்ளபடி புரிந்து கொண்டால் ஜாதியால் பெரியவன் சின்னவன் என்று வாஸ்தவத்தில் இல்லவே இல்லை. ஆனால் எதனாலேயோ அப்படி ஒரு அபிப்ராயம் வந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இந்த எண்ணத்தைப் போக்கடிக்க வேண்டியதுதான் நம் கடமையே ஒழிய, அதற்காக அந்த முறையையே தொலைக்கக் கூடாது
(to be continued...)
வைதிக மதம்
காரியத்தில் பேதமும் மனோபேதமும்
Part 4 of 7
அப்புறம் வெள்ளைக்காரர்கள் வந்தபின் எல்லோருக்குமே - வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல் தேசம் முழுவதிலுமே - வைதிக நம்பிக்கை குறைந்து வந்திருக்கிறது. ஏன் நிலைமை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா மாறிற்று. ஏன் இப்போது அரசியல் தலைவர்களாக இருக்கப்பட்ட எல்லோரும் வர்ண தர்மத்தை காஸ்டிஸம் காஸ்டிஸம் என்று கரித்துக் கொட்டும்படியாயிருக்கிறது தேசத்தின் முன்னேற்றத்துக்காக ஜாதிதான் பெரிய தீமை செய்கிறது என்ற அபிப்பிராயம் பரவலக உண்டாக்கியிருப்பது ஏன். ஜாதி என்று சொன்னாலே ஜெயிலில் பிடித்துப்போட்டிவிட வேண்டும் என்ற நினைக்கிற அளவுக்கு ஆகியிருப்பது எதனால்.
இதற்கு எனக்கு தெரிந்த மட்டும் காரணங்களை, யார் பொறுப்பாளி என்பதை பின்னால் சொல்கிறேன். தற்போது வர்ண தர்மத்தை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்பவர்கள். எதனால் இப்படிச் சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்க்கலாம். அவர்களுக்கு வர்ண தர்மத்தில் ரொம்பவும் ஏற்றத்தாழ்வு இருப்பதுபோலத் தெரிகிறது. இப்படி இருக்கக்கூடாது. எல்லாரையும் ஒருமாதிரி ஆக்கி உயர்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஆனால், இகு காரிய சாத்தியம்தானா. இதைத் தெரிந்து கொள்வதற்கு ஜாதி முறை இல்லாத மற்ற தோசங்களைப் பார்த்தாலே போதும். எல்லாம் சமமாகி விடுவது ஒரு நாளும் நடக்காத காரியம் என்பதற்கு அந்தத் தேசங்கள் எல்லாம் பிரத்தியக்ஷ உதாரணங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் உயர்த்தி தாழ்த்தியில்லை என்றால் வர்க்கப் பூசல்கள் (clause conflicts) இருக்கக்கூடாதுதானே. ஆனால் யதார்த்தத்தில் இப்படியா இருக்கிறது. எங்கே பார்த்தாலும் சௌகர்யப்படாதவர்கள் என்ற பிரிவும், இவர்களுக்குள் சண்டையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் தர்மத்தை உள்ளபடி புரிந்து கொண்டால் ஜாதியால் பெரியவன் சின்னவன் என்று வாஸ்தவத்தில் இல்லவே இல்லை. ஆனால் எதனாலேயோ அப்படி ஒரு அபிப்ராயம் வந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இந்த எண்ணத்தைப் போக்கடிக்க வேண்டியதுதான் நம் கடமையே ஒழிய, அதற்காக அந்த முறையையே தொலைக்கக் கூடாது
(to be continued...)