|
Post by Sumi on Aug 27, 2012 8:17:55 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம் காரியத்தில் பேதமும் மனோபேதமும்
Part 3 of 7
எல்லோருக்கும் ஒரே தர்மம் என்று வைத்துக் கொண்டதோடு நின்றுவிட்ட மதங்களில் எல்லாம், உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ வேறு தினுசான தர்மங்கள் வந்து தாக்கியபோது, அவை அடியோடு இற்று விழும்படியாயிற்று. இந்தியாவில் பல தினுசான தர்மங்களும் பொதுவான தர்மத்துக்குள் இருந்தால், வேறு தர்மங்கள் உள்ளேயே எழுந்தால் அல்லது வெளியிலிருந்து வந்து தாக்கினால், அவற்றையும் தள்ள வேண்டியதைத் தள்ளி கொள்ள வேண்டியதை கொள்வதற்காக இடம் கொடுக்க முடியாது. நம் நாட்டுக்குள்ளேயே புத்த, ஜீன
மதங்கள் வேதத்தின் ஒவ்வொரு அம்சத்தில் ( aspect ) எழுந்தன. அதனால் ஹிந்து மதமே இவற்றையும் தனக்குள் ஜெரித்துக் கொண்டுவிட்டது. பல பலவாக தர்மங்கள் விரித்து இருந்தால், இன்னும் புதிசான பலவற்றுக்கும் இடம் தந்து தனதாக்கிக் கொளள முடிந்தது.
அவற்றை எதிரியாக நினைத்துச் சண்டை போட்டுத் தோற்றுப் போக வேண்டியதில்லை. முஸ்லீம்கள் வந்தபின் அவர்களுடைய சில பழக்கங்கள் மட்டும் நம்மவருக்கு வந்தன. தத்துவம் என்று எதையும் அவர்களிடமிருந்து எடுத்து கொண்டதாகச் சொல்வதற்கில்லையானாலும், உடுப்பு போன்ற சில விஷயங்களில், சங்கீதம், சிற்பம், சித்திரம் போன்றவற்றில் அவர்களுடைய வழிகளை (Moghul culture) கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். அதுவும் நம்முடைய வைதிக கலாசார (Vedic culture) ப் பிரவாகத்தில் தனியாக நிற்காமல் கரைந்து போயிற்று. இதுகூட வடக்கேதான் ஜாஸ்தி நடந்தது. தென்னிந்தியா துருக்க இன்ஃப்ளூயென்ஸுக்கு ரொம்பவும் ஆளாகாமல் கூடியமட்டும் தன் பழைய வழியிலேயே இருந்தது.
|
|
|
Post by radha on Aug 27, 2012 8:30:35 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,Kanchi Maha Periva Thiruvadigal Saranam
What is in our Sacred Sanathana Dharamam can be found in the scriptures of other faiths and what IS NOT IN OUR Sanathana Dharma IS NOT IN ANY OF the scriptures of other faith. Ours is most comprehensive and all pervasive and it withstood all onslaughts of other faiths !We have saints like AdI Sankara and our Maha periva to protect and preserve our Dharma Shastras and it is our good fortune ! As long as Sun and Moon are there, as long as Holy rivers like Ganges,Cavery,Narmada,Krishna Godavari & brahmaputra are there Our Sanathana Dharma will be there to guide us ! Hara Hara Sankara, Siva Siva Sankara 1
|
|