Post by Kanchi Periva on Aug 25, 2012 9:46:18 GMT 5.5
Email message forwarded by Smt Prema Subramaniam
--------------------------------------------------------------------------
சாதம்னா....அப்டியே வெள்ளைவெளே..ர்னு ஹிமய மலை மாதிரி குவிச்சிருக்கும்! சாம்பார் அண்டால யானையே மூழ்கி போனாக்கூட தெரியாது! ஹிமாச்சல சிவன் மதுரை மீனாக்ஷி கல்யாணத்ல குண்டோதரனுக்காக அன்னக்குழி ஸ்ருஷ்டிச்சார்...ன்னு சொல்லுவாளே! அதையே இந்த ஏழை ப்ராம்மண சிவன் பண்ணாரோ?...ன்னு
ப்ரமிக்கும்படியா அவர் பண்ணிண்டிருந்தார் "....என்று "அன்னதான சிவன்" பண்ணிய அன்னதானம் பற்றி பெரியவா ஆரம்பித்தார்.
1897 ல் பெரியவா மூன்று வயஸ் குழந்தையாக இருக்கும்போதே ஸ்ரீ சிவனின் மாமாங்க அன்னதானம் பெரியவாளின் பரமகுருவின் ஆசியுடன் ஸ்ரீமடத்தில் ஆரம்பித்தது. பெரியவா பட்டத்துக்கு வந்தபின்னும் அது தொடர்ந்தது.
".....ஒருதடவை த்ளாயிரத்து முப்பத்தி மூணாம் வர்ஷ மாமாங்கத்துலதான், வெறகே நூறு வண்டி வந்துது! ஊறுகாய்க்காக நெல்லிக்கா மட்டும் பத்து வண்டி வந்துது! ஆவி வர்ற வாசனைலேர்ந்தே இன்ன இன்ன பண்டம் இன்னும் எவ்வளவு
சேக்கணும்ன்னு கரெக்டா சொல்லிடுவார். அப்டி....கொதிச்சிண்டு இருக்கற ரஸத்தோட வாசனைலேர்ந்தே அதுக்கு இன்னும் எவ்வளவு கொத்தமல்லி அரச்சு விடணு ..ம்பார்! அது எவ்ளோவ்..ன்னு தெரியுமோல்லியோ? ஒரு பிடி கொத்தமல்லி, ஒரு
கத்தையோ இல்லே! ஒரு மொறம் அரச்சு விடுடா...ன்னு அதட்டல் போட்டாராம்! ஏற்கனவே அரச்சு விட்டதுக்கு மேலே ஒரு மொறம் கொத்தமல்லி சேக்கணும்ன்னா.....எவ்வளவு ரஸம் வெச்சிருப்பா, எவ்வளவு பேர் சாப்டிருப்பான்னு நீங்களே கணக்கு பாத்துக்கோங்கோ! சாப்டற எடத்தை சுத்தி பண்ணறதுக்காக தொடப்பக்கட்டையே ரெண்டு வண்டி வந்துதுன்னா.....பாத்துக்கோங்கோ!......
.....எத்தனை அண்டா வெச்சாலும்,எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும் சாதம் வடிச்சு மாளாது...ன்னு அவர் என்ன பண்ணுவாராம்னா, பத்து இருபது மூட்டை வடிச்சு, அதை அப்டியே நீள நீளப் பாய்ல பரத்திக்கொட்டி, கொதிக்க
கொதிக்க இருக்கற அந்த அன்னப் பாவாடை மேலேயே மெலிசா ஒரு துணியைப் போட்டு மூடி,கிடுகிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து, இருவது மூட்டை ஈரப் பச்சரிசியை, ஆமா! பச்சையா இருக்கற அரிசியாவேதான்! பரத்திக் கொட்டிட்டு,
அதுக்கு மேலே கெட்டி கோணியாப்போட்டு, நன்னா அடிப்பாய்க்கு அடிவரைல அதை ஓரளவு இறுக்க சொருகி மூடிப்...டுவாராம்! காமணியோ, அரைமணியோ கழிச்சு கோணியை எடுத்தா.......அத்தனை அரிசியும் புஷ்பமாட்டம் சாதமாயிருக்குமாம்!
அதாவுது சாதம் வடிக்கற கார்யத்ல பாதி மிஞ்சும்படி இப்டி யுக்தி பண்ணிண்டிருந்திருக்கார்!
இத்தனை ஆயிரம், பதினாயிரம் பேருக்கு நன்னா, கெட்டியா நெறைய மோர் விடணும்னா, அத்தனை பாலுக்கு எங்க போறது? இதுக்கும் அவர் புது மாதிரி refrigerator வெச்சிருந்தார்.....அந்தக்காலத்ல ஏது இதெல்லாம்? என்ன பண்ணுவார்னா, உத்ஸவத்துக்கு பல மாசம் முந்தியே தயிர் சேகரம் பண்ண ஆரம்பிச்சிடுவார்! சேர சேர, பெரிய பெரிய பீப்பாய்கள்ல அந்த தயிரை எல்லாம் விட்டு, ஒவ்வொண்ணும் ரொம்பினதும், வாயை மொழுகால அடைச்சு, அப்டியே....ஆழமா இருக்கற கொளங்களுக்கு அடீ....ல தள்ளிப்பிடுவார்...அப்றமா எப்போ வேண்டியிருக்கோ, அப்போ தொறந்தா....மொத நா ராத்ரிதான் தோச்சா மாதிரி தயிர் சுத்தமா,துளிகூட புளிக்காத, அவ்ளோவ் சுத்தமா இருக்கும்! கொளத்தோட குளிர்ச்சி மட்டுந்தான் காரணம்...ன்னு சொல்லறதுக்கில்லே......அவரோட மனஸ் விசேஷமும் சேந்துதான் அப்டி இருந்திருக்கணும்.." என்றார்.
ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவம்.......
அன்னதான சிவனின் அன்னதானங்களில் ஒரு விசேஷம்....முதல் நாள் மாலை வரையில், "இங்குதான் பல்லாயிரக்கணக்கான ஜனங்களுக்கு சாப்பாடு தயாராகப் போகிறது" என்பதற்கான அறிகுறி துளிகூட இருக்காது! இரவிலிருந்துதான் வண்டிவண்டியாக
சாமான்கள் வரத் தொடங்கும். 1933 மாமாங்கத்தில் நள்ளிரவான பின்னும் கூட, ஒரு சாமான் வண்டி கூட வந்து சேரவில்லை! இப்போதுமாதிரி செல்போனா இருந்தது?
நிலைகுலையாத சிவனே கலங்கிவிட்டார். "சாமான்களை எறக்கி பிரிச்சு வெக்கவே நாழியாகுமே! அப்புறம் எப்போ சமைச்சு, எப்போ பரிமாறறது?..." அன்னதான சிவன், ஸதாசிவனை சரணடைந்தார். பெரியவா இருந்த முகாமுக்கு எப்படியோ
விண்ணப்பம் பறந்தது! அந்தர்யாமி அறியாததா! அதிசயம்! அடுத்த க்ஷணம் ஒவ்வொரு வண்டியாக வர ஆரம்பித்துவிட்டது! நாழியானதிற்கு என்ன காரணம்?
சாதாரணமாக போக்குவரத்து கட்டுப்பாட்டிற்கு அன்னதான சிவனுடைய வண்டிகளுக்கு விலக்கு உண்டு. அதுவும் மஹாமஹத்துக்கு பல ஊர்களிலிருந்து வண்டிகட்டிக் கொண்டும், பஸ்சிலும் ரயிலிலும் வரும் கூட்டம் அநேகம்! அந்த வர்ஷம் போலீஸில் பணிபுரிந்தவர்களுக்கு சிவனுடைய வண்டிகளை பற்றி தெரியாததால், எல்லா வண்டிகளைப்போல அந்த வண்டிகளையும் ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டார்கள். பெரியவாளின் திருச்செவியில் அன்னதான சிவனின்
ப்ரார்த்தனை விழுந்த அடுத்த க்ஷணம் [பின்னிரவு ஒண்ணரை மணி] திடுமென்று அந்த இன்ஸ்பெக்டருக்கு பொறி தட்டியது!
சிவன் ஸமாராதனை வண்டிகளுக்கு விலக்கு உண்டே! அப்புறம் என்ன? உடனே "நிப்பாட்டியிருந்த" சிவனின்
நூற்றுக்கணக்கான வண்டிகள் கிடுகிடுவென்று அசுர வேகத்தில், இல்லை,இல்லை, அனுக்ரக வேகத்தில் ஊருக்குள் வந்து, சாமான்கள் இறக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, காலை ஐந்து மணிக்கே கோட்டையடுப்புகளை மூட்டி, காலம் தப்பாமல் லக்ஷம் ஜனங்களுக்கு அறுசுவை அன்னம் பரிமாறப்பட்டது !
1923 ல் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி தாடங்கப்ரதிஷ்டை, 1916 ல் கும்பகோணம் மடத்தில் பெரியவா நடத்திய நவராத்திரி வைபவத்தில் அன்னதான சிவனும், நடமாடும் சிவனும் ஒன்று சேர்ந்து ரெண்டுலக்ஷம் பேருக்கு அமோகமாக
அன்னதானம் பண்ணியது இன்றளவும் ப்ரமிக்கவைக்கும் விஷயமாக உள்ளது! இதில் இன்னொரு முக்யமான விஷயம் என்னவென்றால், இந்த மகத்தான சமாராதனையில் இரண்டு சிவனுமே ஒரு பருக்கை கூட ருஸி பார்க்கவில்லை! பெரியவாளுடைய சாப்பாடோ எல்லாரும் அறிந்ததே! அன்னதான சிவனோ, எவரேனும் ஒரு அன்பரின் வீட்டுக்கு
சென்று நாலு கவளம் மோர்சாதம், பழையதானாலும் சரி, வாங்கி தன்னுடைய இஷ்டதெய்வமான தக்ஷிணாமூர்த்திக்கு மானசீகமாக நைவேத்யம் பண்ணிவிட்டு உண்பார்!.
--------------------------------------------------------------------------
சாதம்னா....அப்டியே வெள்ளைவெளே..ர்னு ஹிமய மலை மாதிரி குவிச்சிருக்கும்! சாம்பார் அண்டால யானையே மூழ்கி போனாக்கூட தெரியாது! ஹிமாச்சல சிவன் மதுரை மீனாக்ஷி கல்யாணத்ல குண்டோதரனுக்காக அன்னக்குழி ஸ்ருஷ்டிச்சார்...ன்னு சொல்லுவாளே! அதையே இந்த ஏழை ப்ராம்மண சிவன் பண்ணாரோ?...ன்னு
ப்ரமிக்கும்படியா அவர் பண்ணிண்டிருந்தார் "....என்று "அன்னதான சிவன்" பண்ணிய அன்னதானம் பற்றி பெரியவா ஆரம்பித்தார்.
1897 ல் பெரியவா மூன்று வயஸ் குழந்தையாக இருக்கும்போதே ஸ்ரீ சிவனின் மாமாங்க அன்னதானம் பெரியவாளின் பரமகுருவின் ஆசியுடன் ஸ்ரீமடத்தில் ஆரம்பித்தது. பெரியவா பட்டத்துக்கு வந்தபின்னும் அது தொடர்ந்தது.
".....ஒருதடவை த்ளாயிரத்து முப்பத்தி மூணாம் வர்ஷ மாமாங்கத்துலதான், வெறகே நூறு வண்டி வந்துது! ஊறுகாய்க்காக நெல்லிக்கா மட்டும் பத்து வண்டி வந்துது! ஆவி வர்ற வாசனைலேர்ந்தே இன்ன இன்ன பண்டம் இன்னும் எவ்வளவு
சேக்கணும்ன்னு கரெக்டா சொல்லிடுவார். அப்டி....கொதிச்சிண்டு இருக்கற ரஸத்தோட வாசனைலேர்ந்தே அதுக்கு இன்னும் எவ்வளவு கொத்தமல்லி அரச்சு விடணு ..ம்பார்! அது எவ்ளோவ்..ன்னு தெரியுமோல்லியோ? ஒரு பிடி கொத்தமல்லி, ஒரு
கத்தையோ இல்லே! ஒரு மொறம் அரச்சு விடுடா...ன்னு அதட்டல் போட்டாராம்! ஏற்கனவே அரச்சு விட்டதுக்கு மேலே ஒரு மொறம் கொத்தமல்லி சேக்கணும்ன்னா.....எவ்வளவு ரஸம் வெச்சிருப்பா, எவ்வளவு பேர் சாப்டிருப்பான்னு நீங்களே கணக்கு பாத்துக்கோங்கோ! சாப்டற எடத்தை சுத்தி பண்ணறதுக்காக தொடப்பக்கட்டையே ரெண்டு வண்டி வந்துதுன்னா.....பாத்துக்கோங்கோ!......
.....எத்தனை அண்டா வெச்சாலும்,எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும் சாதம் வடிச்சு மாளாது...ன்னு அவர் என்ன பண்ணுவாராம்னா, பத்து இருபது மூட்டை வடிச்சு, அதை அப்டியே நீள நீளப் பாய்ல பரத்திக்கொட்டி, கொதிக்க
கொதிக்க இருக்கற அந்த அன்னப் பாவாடை மேலேயே மெலிசா ஒரு துணியைப் போட்டு மூடி,கிடுகிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து, இருவது மூட்டை ஈரப் பச்சரிசியை, ஆமா! பச்சையா இருக்கற அரிசியாவேதான்! பரத்திக் கொட்டிட்டு,
அதுக்கு மேலே கெட்டி கோணியாப்போட்டு, நன்னா அடிப்பாய்க்கு அடிவரைல அதை ஓரளவு இறுக்க சொருகி மூடிப்...டுவாராம்! காமணியோ, அரைமணியோ கழிச்சு கோணியை எடுத்தா.......அத்தனை அரிசியும் புஷ்பமாட்டம் சாதமாயிருக்குமாம்!
அதாவுது சாதம் வடிக்கற கார்யத்ல பாதி மிஞ்சும்படி இப்டி யுக்தி பண்ணிண்டிருந்திருக்கார்!
இத்தனை ஆயிரம், பதினாயிரம் பேருக்கு நன்னா, கெட்டியா நெறைய மோர் விடணும்னா, அத்தனை பாலுக்கு எங்க போறது? இதுக்கும் அவர் புது மாதிரி refrigerator வெச்சிருந்தார்.....அந்தக்காலத்ல ஏது இதெல்லாம்? என்ன பண்ணுவார்னா, உத்ஸவத்துக்கு பல மாசம் முந்தியே தயிர் சேகரம் பண்ண ஆரம்பிச்சிடுவார்! சேர சேர, பெரிய பெரிய பீப்பாய்கள்ல அந்த தயிரை எல்லாம் விட்டு, ஒவ்வொண்ணும் ரொம்பினதும், வாயை மொழுகால அடைச்சு, அப்டியே....ஆழமா இருக்கற கொளங்களுக்கு அடீ....ல தள்ளிப்பிடுவார்...அப்றமா எப்போ வேண்டியிருக்கோ, அப்போ தொறந்தா....மொத நா ராத்ரிதான் தோச்சா மாதிரி தயிர் சுத்தமா,துளிகூட புளிக்காத, அவ்ளோவ் சுத்தமா இருக்கும்! கொளத்தோட குளிர்ச்சி மட்டுந்தான் காரணம்...ன்னு சொல்லறதுக்கில்லே......அவரோட மனஸ் விசேஷமும் சேந்துதான் அப்டி இருந்திருக்கணும்.." என்றார்.
ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவம்.......
அன்னதான சிவனின் அன்னதானங்களில் ஒரு விசேஷம்....முதல் நாள் மாலை வரையில், "இங்குதான் பல்லாயிரக்கணக்கான ஜனங்களுக்கு சாப்பாடு தயாராகப் போகிறது" என்பதற்கான அறிகுறி துளிகூட இருக்காது! இரவிலிருந்துதான் வண்டிவண்டியாக
சாமான்கள் வரத் தொடங்கும். 1933 மாமாங்கத்தில் நள்ளிரவான பின்னும் கூட, ஒரு சாமான் வண்டி கூட வந்து சேரவில்லை! இப்போதுமாதிரி செல்போனா இருந்தது?
நிலைகுலையாத சிவனே கலங்கிவிட்டார். "சாமான்களை எறக்கி பிரிச்சு வெக்கவே நாழியாகுமே! அப்புறம் எப்போ சமைச்சு, எப்போ பரிமாறறது?..." அன்னதான சிவன், ஸதாசிவனை சரணடைந்தார். பெரியவா இருந்த முகாமுக்கு எப்படியோ
விண்ணப்பம் பறந்தது! அந்தர்யாமி அறியாததா! அதிசயம்! அடுத்த க்ஷணம் ஒவ்வொரு வண்டியாக வர ஆரம்பித்துவிட்டது! நாழியானதிற்கு என்ன காரணம்?
சாதாரணமாக போக்குவரத்து கட்டுப்பாட்டிற்கு அன்னதான சிவனுடைய வண்டிகளுக்கு விலக்கு உண்டு. அதுவும் மஹாமஹத்துக்கு பல ஊர்களிலிருந்து வண்டிகட்டிக் கொண்டும், பஸ்சிலும் ரயிலிலும் வரும் கூட்டம் அநேகம்! அந்த வர்ஷம் போலீஸில் பணிபுரிந்தவர்களுக்கு சிவனுடைய வண்டிகளை பற்றி தெரியாததால், எல்லா வண்டிகளைப்போல அந்த வண்டிகளையும் ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டார்கள். பெரியவாளின் திருச்செவியில் அன்னதான சிவனின்
ப்ரார்த்தனை விழுந்த அடுத்த க்ஷணம் [பின்னிரவு ஒண்ணரை மணி] திடுமென்று அந்த இன்ஸ்பெக்டருக்கு பொறி தட்டியது!
சிவன் ஸமாராதனை வண்டிகளுக்கு விலக்கு உண்டே! அப்புறம் என்ன? உடனே "நிப்பாட்டியிருந்த" சிவனின்
நூற்றுக்கணக்கான வண்டிகள் கிடுகிடுவென்று அசுர வேகத்தில், இல்லை,இல்லை, அனுக்ரக வேகத்தில் ஊருக்குள் வந்து, சாமான்கள் இறக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, காலை ஐந்து மணிக்கே கோட்டையடுப்புகளை மூட்டி, காலம் தப்பாமல் லக்ஷம் ஜனங்களுக்கு அறுசுவை அன்னம் பரிமாறப்பட்டது !
1923 ல் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி தாடங்கப்ரதிஷ்டை, 1916 ல் கும்பகோணம் மடத்தில் பெரியவா நடத்திய நவராத்திரி வைபவத்தில் அன்னதான சிவனும், நடமாடும் சிவனும் ஒன்று சேர்ந்து ரெண்டுலக்ஷம் பேருக்கு அமோகமாக
அன்னதானம் பண்ணியது இன்றளவும் ப்ரமிக்கவைக்கும் விஷயமாக உள்ளது! இதில் இன்னொரு முக்யமான விஷயம் என்னவென்றால், இந்த மகத்தான சமாராதனையில் இரண்டு சிவனுமே ஒரு பருக்கை கூட ருஸி பார்க்கவில்லை! பெரியவாளுடைய சாப்பாடோ எல்லாரும் அறிந்ததே! அன்னதான சிவனோ, எவரேனும் ஒரு அன்பரின் வீட்டுக்கு
சென்று நாலு கவளம் மோர்சாதம், பழையதானாலும் சரி, வாங்கி தன்னுடைய இஷ்டதெய்வமான தக்ஷிணாமூர்த்திக்கு மானசீகமாக நைவேத்யம் பண்ணிவிட்டு உண்பார்!.