|
Post by Sumi on Aug 14, 2012 8:55:25 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம் தர்மங்களின் பாகுபாடு
Part 2/4
எப்படிப் பங்கீடு செய்வது. அவரவர் தகுதியை வைத்து என்றால், எல்லோருமே தங்கள் தகுதியை அதிகமாகத்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவரவர் மனோபாவத்தை வைத்து என்றால் எல்லாரும் அந்தஸ்தான வேலைக்குத்தான் ஆசைப்படுவார்கள். அப்படியானால், மற்ற காரியங்கள் என்ன ஆவது. எல்லாக் காரியங்களிலும் ஜனங்களைச் சமூக வாழ்விற்கு இசைவாக நிரவி வைப்பது எப்படி. இப்போது நிரவி விட்டால் மட்டும் போதாது. தலைமுறைக்கு எப்படி நிரவுவது. தகுதி, மனோபாவம் இவற்றை வெளியிலிருந்து பரீக்ஷித்து முடிவு பண்ணுவது எப்படி முழுக்க சரியாக இருக்க முடியும். எல்லோரும் எல்லாவற்றுக்கும் போட்டி போடலாம் என்றால் இதெப்படி சாத்தியமாயிருக்கும். யார் நிரவுவது எப்படி நிரவுவது இதனால்தான் தொழில்களைப் பாரம்பரியமாக நிரவி வைத்து வர்ண தர்மம் என்று ஏற்படுத்தினார்கள்.
எந்தத் தொழிலானாலும் சரி. பாரம்பரியமாக வாய்ந்த அதைப் பரமேசுவரன் விதித்த ஆக்ஞையாக, லோக க்ஷேமார்த்தம் செய்கிறேன் என்று உணர்ந்து செய்தால், அதுவே ஒருத்தனுக்கு ஆத்ம க்ஷேமார்த்தமாகவும் ஆகிறது. ஒவ்வொரு
காரியத்தில் உள்ள ஜீவனும் கடைந்தேறுவதற்கு அநுகூலமாக வெவ்வேறு அநுஷ்டானங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. உடல் வருத்த உழைக்கிறவனை உபவாசம் இரு என்றால் அவனால் முடியுமா. புத்தியினால் காரியவங்களைச் செய்கிறவனுக்குச் சரீர போக்ஷணம் அவசியமில்லை. அவர்கள் சரீராபிமானம் நீங்கவே அதிக அநுஷ்டானங்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டால் சண்டைக்கு இடமே இல்லை.
(to be continued)
|
|
|
Post by krsiyer on Aug 14, 2012 20:47:26 GMT 5.5
excellent. thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara !
|
|