Post by varagoorannarayanan on Sept 23, 2022 17:28:12 GMT 5.5
பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடைக் கட்டிக்கொண்டு--பார்த்த ஏழு வயது பாலகன்
உண்மை என்று சொன்ன பெரியவா-அது குபேரனுக்கு மட்டும்தான் தெரியுமாம்.
பார்த்த சிறுவன் குபேரன் ஆன சம்பவம்.
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகாபெரியவா, சில நேரங்களில் தனது உண்மையான உருவம் இதுதான் என்று, உலகோருக்குச் சில சம்பவங்கள் மூலம் துல்லியமாகத் தெரியப்படுத்தி உள்ளார்.
செட்டி நாட்டுப் பகுதியில் வசிப்பவர்கள் நகரத்தார் எனப்படுவர். அவர்களில் ஒருவர், மகாபெரியவாளிடம் ஒப்பற்ற பக்தி கொண்டிருந்தார்.சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர் நேரில் வந்து, மகானின் அருளாசியைப் பெறத் தவறியதே இல்லை. ஒரு தடவை மகானின் தரிசனத்திற்கு அவர் வந்தபோது தன்னுடன் தனது ஏழு வயது மகனையும் அழைத்து வந்தார். மகானின் ஆசியைப் பெற, இருவரும் தரிசித்து விட்டு மகானின் அருளாசியைப் பெற்றுக்கொண்டு புறப்படவிருந்தனர்.
அந்தச் சமயம் சிறுவன், தனது தந்தையின் காதில் ஏதோ சொல்ல, அதைச் சொக்கநாதரான மகான் கவனித்து விட்டு, "குழந்தை என்ன உங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறான்?" என்று கேட்டார்கள். முதலில் அதைச் சொல்ல செட்டியார் தயங்கினார். சற்றைக்குப் பின் சமாளித்துக் கொண்டதும், தன் மகன் கண்ட அதிசயத்தை மகானிடம் சொன்னார்.
"பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம். அது யாருன்னு கேட்கிறான்" என்று செட்டியார், தனது நடுங்கும் குரலில் மெதுவாகச் சொன்னார்.
மகன் சொல்வது அவருக்கே புதிராக இருந்தது. நம்பவோ, நம்பாதிருக்கவோ முடியவில்லை.
மகான் என்ன சொல்லப் போகிறார்? செட்டியார் சில வினாடிகள் காத்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் அமைதியாகக் கழியவே, மகான் தனது அருள் வாக்கைச் சொன்னார்.
உங்கள் மகன் சொன்னது உண்மைதான்; ஸ்ரீமடத்தின் குரு பாரம்பரியத்திற்கு அப்படி ஒரு வரப்பிரசாதம் அப்படி ஒருஅருள் இருக்கிறது. மடியில் சாரதா தெய்வம் குடியிருப்பதாக ஓர் ஐதீகம். அது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. ஒரு குபேரனுக்குத் தான் தெரியும். உங்கள் மகன் கூடிய சீக்கிரம் குபேரனாவான்" என்று மகான் சொல்ல, எல்லோரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
தனது இப்போதைய குடும்ப நிலையை வைத்துப் பார்த்தார் செட்டியார். குபேர அந்தஸ்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில், இது எப்படிச் சாத்தியமாகும் என்று நினைத்தார்.
ஆனால் மனித தெய்வத்தின் வாக்கு, எப்போதாவது பொய்த்தது உண்டோ? இரண்டு வருடங்கள் கழிந்தன செட்டியாரின் பையனுக்கு வயது ஒன்பது. அப்போதுதான் அந்த வீட்டுக் கதவை, 'அதிர்ஷ்டம்' தட்டியது.
செட்டியாரின் தூரத்து உறவினர் அவரிடம் வந்தார். எதற்காக? மகானின் அருள்வாக்கை மெய்ப்பிக்க வந்திருந்தார். உறவுகளின் சுக துக்கங்கள், மனக்குறைகளின் பரிமாற்றம் எல்லாம் வேகமாக நடந்து முடிந்தன.
அச்சிறுவன் வேறு குடும்பத்திற்கு, கணக்கிட்டுச் சொல்ல முடியாத செல்வத்திற்கு ஒரே வாரிசாக ஸ்வீகாரம் போனான். மகானின் அருளாசி பலித்தது.
உண்மை என்று சொன்ன பெரியவா-அது குபேரனுக்கு மட்டும்தான் தெரியுமாம்.
பார்த்த சிறுவன் குபேரன் ஆன சம்பவம்.
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகாபெரியவா, சில நேரங்களில் தனது உண்மையான உருவம் இதுதான் என்று, உலகோருக்குச் சில சம்பவங்கள் மூலம் துல்லியமாகத் தெரியப்படுத்தி உள்ளார்.
செட்டி நாட்டுப் பகுதியில் வசிப்பவர்கள் நகரத்தார் எனப்படுவர். அவர்களில் ஒருவர், மகாபெரியவாளிடம் ஒப்பற்ற பக்தி கொண்டிருந்தார்.சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர் நேரில் வந்து, மகானின் அருளாசியைப் பெறத் தவறியதே இல்லை. ஒரு தடவை மகானின் தரிசனத்திற்கு அவர் வந்தபோது தன்னுடன் தனது ஏழு வயது மகனையும் அழைத்து வந்தார். மகானின் ஆசியைப் பெற, இருவரும் தரிசித்து விட்டு மகானின் அருளாசியைப் பெற்றுக்கொண்டு புறப்படவிருந்தனர்.
அந்தச் சமயம் சிறுவன், தனது தந்தையின் காதில் ஏதோ சொல்ல, அதைச் சொக்கநாதரான மகான் கவனித்து விட்டு, "குழந்தை என்ன உங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறான்?" என்று கேட்டார்கள். முதலில் அதைச் சொல்ல செட்டியார் தயங்கினார். சற்றைக்குப் பின் சமாளித்துக் கொண்டதும், தன் மகன் கண்ட அதிசயத்தை மகானிடம் சொன்னார்.
"பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம். அது யாருன்னு கேட்கிறான்" என்று செட்டியார், தனது நடுங்கும் குரலில் மெதுவாகச் சொன்னார்.
மகன் சொல்வது அவருக்கே புதிராக இருந்தது. நம்பவோ, நம்பாதிருக்கவோ முடியவில்லை.
மகான் என்ன சொல்லப் போகிறார்? செட்டியார் சில வினாடிகள் காத்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் அமைதியாகக் கழியவே, மகான் தனது அருள் வாக்கைச் சொன்னார்.
உங்கள் மகன் சொன்னது உண்மைதான்; ஸ்ரீமடத்தின் குரு பாரம்பரியத்திற்கு அப்படி ஒரு வரப்பிரசாதம் அப்படி ஒருஅருள் இருக்கிறது. மடியில் சாரதா தெய்வம் குடியிருப்பதாக ஓர் ஐதீகம். அது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. ஒரு குபேரனுக்குத் தான் தெரியும். உங்கள் மகன் கூடிய சீக்கிரம் குபேரனாவான்" என்று மகான் சொல்ல, எல்லோரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
தனது இப்போதைய குடும்ப நிலையை வைத்துப் பார்த்தார் செட்டியார். குபேர அந்தஸ்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில், இது எப்படிச் சாத்தியமாகும் என்று நினைத்தார்.
ஆனால் மனித தெய்வத்தின் வாக்கு, எப்போதாவது பொய்த்தது உண்டோ? இரண்டு வருடங்கள் கழிந்தன செட்டியாரின் பையனுக்கு வயது ஒன்பது. அப்போதுதான் அந்த வீட்டுக் கதவை, 'அதிர்ஷ்டம்' தட்டியது.
செட்டியாரின் தூரத்து உறவினர் அவரிடம் வந்தார். எதற்காக? மகானின் அருள்வாக்கை மெய்ப்பிக்க வந்திருந்தார். உறவுகளின் சுக துக்கங்கள், மனக்குறைகளின் பரிமாற்றம் எல்லாம் வேகமாக நடந்து முடிந்தன.
அச்சிறுவன் வேறு குடும்பத்திற்கு, கணக்கிட்டுச் சொல்ல முடியாத செல்வத்திற்கு ஒரே வாரிசாக ஸ்வீகாரம் போனான். மகானின் அருளாசி பலித்தது.