Post by varagoorannarayanan on Jun 12, 2022 11:50:33 GMT 5.5
"சர்வேஸ்வர மகாப்ரபு... நீயே என்னைத் தேடி வந்துட்டியா!'' -பாட்டி"
பாட்டியிடம் பரிவு காட்டிய மகா பெரியவா"
டிசம்பர் 15,2015-,தினமலர்சி. வெங்கடேஸ்வரன்
காஞ்சிப்பெரியவர் அவதரித்தது வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில். இதனால், அவரது பக்தர்கள் ஒவ்வொரு மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரத்தையும் விசேஷமாகக் கொண்டாடுவார்கள். வீடுகளில் அவரை எண்ணி பூஜை செய்பவர்களும் உண்டு.
ஒருமுறை அனுஷத்திற்கு மறுநாள், நிறைய பக்தர்கள் பெரியவரைத் தரிசிக்க வந்தார்கள்.
ஒரு பாட்டியும் வந்தார். அந்தக்கால வழக்கப்படி, அவருக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி கணவரை இழந்து விட்டிருந்தாள். கணவர் வழியில் நிறைய சொத்து கிடைத்தது அவருக்கு. குழந்தை இல்லை...
சொத்து நிறைய இருந்தால் சொந்த பந்தங்கள் விடுவார்களா என்ன...! அவற்றை அடைய துடித்தார்கள். ஆனால், பாட்டி எப்படியோ அதைக் காப்பாற்றிக் கொண்டார். ஒருமுறை, மகாபெரியவரிடம் வந்து, ""இந்த சொத்து முழுக்க காமாட்சிக்கு தான். ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என வேண்டினார். பெரியவர் அதை வேண்டாம் என எவ்வளவோ மறுத்தார். ஆனால், பணத்துக்கு துளியும் முக்கியத்துவம் கொடுக்காத அவர், பெரியவரை வற்புறுத்தி சொத்துக்களை காமாட்சிக்கு என கொடுத்து விட்டார். இதனால், மடத்தின் சார்பில் அந்த மூதாட்டிக்கு ஒரு வீடு கொடுக்கப்பட்டது.
அன்றைக்கு பாட்டியிடம், "ஒன் உடம்பு எப்படி இருக்கு?'' என்று பெரியவர் கேட்டார்.
"ஏதோ இருக்கேன்...பெரியவா அனுக்ரஹம்... மழை பெஞ்சா ஆத்துலே (வீட்டில்) முழுக்க முழுக்க ஒரேயடியா ஒழுகறது... அதைக் கொஞ்சம் சரி பண்ணிக் கொடுத்தா தேவலை,'' என்றார் பாட்டி.
அப்போது, மடத்து நிர்வாகிகள் சிலர் காஞ்சி காமாட்சி பிரம்மோற்ஸவ பத்திரிகை கொண்டு வந்தனர். அதை கலெக்டருக்கும், மற்ற முக்கியஸ்தர்களுக்கும் கொடுத்த பிறகு, பெரியவருக்கு கொடுக்க வந்தது தெரிய வந்தது. பெரியவருக்கு கோபம்.. அதுபற்றி காரசாரமாக விவாதித்தார்.
பிறகு நிர்வாகி ஒருவரிடம்,""நீ எங்கே குடியிருக்கே?'' என்றார்.
"வடக்கு சன்னிதி பக்கம்...'' என்றார் அவர்.
"அங்கே இன்னும் ரெண்டு மூணு வீடு இருந்ததே...'' என்ற பெரியவரிடம், "அங்கே சுப்புராமன் இருக்கார்,'' என்றார் நிர்வாகி.
"சுப்புராமன் தான் மேலே போயிட்டாரே! அவரோட வாரிசுகள் மடத்துல வேலை செய்றாங்களா என்ன...?''
"இல்லை...''
"மடத்துலே வேலை செய்றவாளுக்கு தான் வீடு... நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது...நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு போயாகணும்...'' என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். அதன் படியே பாட்டியும் அங்கே குடிபோய் விட்டார்.
மூன்று மாதம் கழித்து, பெரியவர் சன்னிதி தெரு வழியாக சென்ற போது, ஒரு வீட்டின் முன் நின்றார்.
ஒரு சீடரிடம், "டேய்... அந்த பாட்டியை ரெண்டு மூணு நாளா காணலே.. உள்ளே போய் என்ன ஏதுன்னு பாரு...'' என்றார்.
சீடர் உள்ளே படுத்திருந்த பாட்டியை அழைத்து வந்தார்.
தன் வீட்டுக்கே வந்து விட்ட பெரியவரைப் பார்த்த பாட்டி, அதிர்ந்து போய், "சர்வேஸ்வர மகாப்ரபு.. நீயே என்னைத் தேடி வந்துட்டியா!'' என்று அவர் பாதத்தில் விழுந்து வணங்கினாள். மூன்று முறை அவரை வலம் வந்தாள்.
தினமும் பெரியவரைக் காண பலர் வந்தார்கள். ஆனால், அவரிடம் ஆத்மார்த்தமாக பக்தி கொண்டவர்கள் வராவிட்டால், அவரே அவர்களைத் தேடி வருவார். அன்று மட்டுமல்ல.. இன்றும் அப்படியே! வாழும் தெய்வமான அவரை, ஆத்மார்த்தமாக வணங்கினால், நம்மையும் தேடி வருவார்
பாட்டியிடம் பரிவு காட்டிய மகா பெரியவா"
டிசம்பர் 15,2015-,தினமலர்சி. வெங்கடேஸ்வரன்
காஞ்சிப்பெரியவர் அவதரித்தது வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில். இதனால், அவரது பக்தர்கள் ஒவ்வொரு மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரத்தையும் விசேஷமாகக் கொண்டாடுவார்கள். வீடுகளில் அவரை எண்ணி பூஜை செய்பவர்களும் உண்டு.
ஒருமுறை அனுஷத்திற்கு மறுநாள், நிறைய பக்தர்கள் பெரியவரைத் தரிசிக்க வந்தார்கள்.
ஒரு பாட்டியும் வந்தார். அந்தக்கால வழக்கப்படி, அவருக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி கணவரை இழந்து விட்டிருந்தாள். கணவர் வழியில் நிறைய சொத்து கிடைத்தது அவருக்கு. குழந்தை இல்லை...
சொத்து நிறைய இருந்தால் சொந்த பந்தங்கள் விடுவார்களா என்ன...! அவற்றை அடைய துடித்தார்கள். ஆனால், பாட்டி எப்படியோ அதைக் காப்பாற்றிக் கொண்டார். ஒருமுறை, மகாபெரியவரிடம் வந்து, ""இந்த சொத்து முழுக்க காமாட்சிக்கு தான். ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என வேண்டினார். பெரியவர் அதை வேண்டாம் என எவ்வளவோ மறுத்தார். ஆனால், பணத்துக்கு துளியும் முக்கியத்துவம் கொடுக்காத அவர், பெரியவரை வற்புறுத்தி சொத்துக்களை காமாட்சிக்கு என கொடுத்து விட்டார். இதனால், மடத்தின் சார்பில் அந்த மூதாட்டிக்கு ஒரு வீடு கொடுக்கப்பட்டது.
அன்றைக்கு பாட்டியிடம், "ஒன் உடம்பு எப்படி இருக்கு?'' என்று பெரியவர் கேட்டார்.
"ஏதோ இருக்கேன்...பெரியவா அனுக்ரஹம்... மழை பெஞ்சா ஆத்துலே (வீட்டில்) முழுக்க முழுக்க ஒரேயடியா ஒழுகறது... அதைக் கொஞ்சம் சரி பண்ணிக் கொடுத்தா தேவலை,'' என்றார் பாட்டி.
அப்போது, மடத்து நிர்வாகிகள் சிலர் காஞ்சி காமாட்சி பிரம்மோற்ஸவ பத்திரிகை கொண்டு வந்தனர். அதை கலெக்டருக்கும், மற்ற முக்கியஸ்தர்களுக்கும் கொடுத்த பிறகு, பெரியவருக்கு கொடுக்க வந்தது தெரிய வந்தது. பெரியவருக்கு கோபம்.. அதுபற்றி காரசாரமாக விவாதித்தார்.
பிறகு நிர்வாகி ஒருவரிடம்,""நீ எங்கே குடியிருக்கே?'' என்றார்.
"வடக்கு சன்னிதி பக்கம்...'' என்றார் அவர்.
"அங்கே இன்னும் ரெண்டு மூணு வீடு இருந்ததே...'' என்ற பெரியவரிடம், "அங்கே சுப்புராமன் இருக்கார்,'' என்றார் நிர்வாகி.
"சுப்புராமன் தான் மேலே போயிட்டாரே! அவரோட வாரிசுகள் மடத்துல வேலை செய்றாங்களா என்ன...?''
"இல்லை...''
"மடத்துலே வேலை செய்றவாளுக்கு தான் வீடு... நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது...நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு போயாகணும்...'' என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். அதன் படியே பாட்டியும் அங்கே குடிபோய் விட்டார்.
மூன்று மாதம் கழித்து, பெரியவர் சன்னிதி தெரு வழியாக சென்ற போது, ஒரு வீட்டின் முன் நின்றார்.
ஒரு சீடரிடம், "டேய்... அந்த பாட்டியை ரெண்டு மூணு நாளா காணலே.. உள்ளே போய் என்ன ஏதுன்னு பாரு...'' என்றார்.
சீடர் உள்ளே படுத்திருந்த பாட்டியை அழைத்து வந்தார்.
தன் வீட்டுக்கே வந்து விட்ட பெரியவரைப் பார்த்த பாட்டி, அதிர்ந்து போய், "சர்வேஸ்வர மகாப்ரபு.. நீயே என்னைத் தேடி வந்துட்டியா!'' என்று அவர் பாதத்தில் விழுந்து வணங்கினாள். மூன்று முறை அவரை வலம் வந்தாள்.
தினமும் பெரியவரைக் காண பலர் வந்தார்கள். ஆனால், அவரிடம் ஆத்மார்த்தமாக பக்தி கொண்டவர்கள் வராவிட்டால், அவரே அவர்களைத் தேடி வருவார். அன்று மட்டுமல்ல.. இன்றும் அப்படியே! வாழும் தெய்வமான அவரை, ஆத்மார்த்தமாக வணங்கினால், நம்மையும் தேடி வருவார்