Post by radha on Jan 14, 2022 0:55:43 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
அம்பாள் அருளால் நன்மை பெருகட்டும்- காஞ்சி மஹாபெரியவர் வாழ்த்து
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு ஒருமுறை காஞ்சி மஹாபெரியவர் வந்தார். அப்போது பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அவர் வழிகாட்டியபடியே பொங்கலன்று பக்தர்கள் இன்றும் வழிபடுகின்றனர்.
மஹா பெரியவர் அப்போது அங்கிருந்த அர்ச்சகர்களிடம்,“பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள். இதை தரிசித்தால் பாவம் தீரும். உடல் நலம் பெறும். அம்பாளை மட்டுமின்றி கோயிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்” என்றார்.
“இதற்கு நிறைய காய்கறிகள் வேண்டுமே! ஒரேநாளில் அது சாத்தியமில்லையே!” என்று நினைத்த அர்ச்சகர்கள், அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே” என்றனர்.
பெரியவர், “விருப்பத்தைச் சொல்லிட்டேன். அம்பாள் பாத்துக்குவா” என்று சொல்லி புறப்பட்டார்.
அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் (கோயம்பேடு) இருந்து மூன்று லாரிகள் கோயிலின் முன் வந்து நின்றது. விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதியரின் ஏற்பாட்டில் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்குகள் வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே மஹாபெரியவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
பொங்கலன்று கோயிலுக்கு வந்த பெரியவர் எங்கும் காய்கறி, பழத்தோரணம் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அம்பிகையை சாகம்பரியாக தரிசித்த பெரியவர், “பொங்கலன்று சூரியனை வழிபட்டால் உடல் நலமாக இருக்கும்.
இந்நாளில் தர்ப்பணம் செய்வது அவசியம். அம்பாளை சாகம்பரியாக தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். கோபூஜையும் நடத்துங்கள்.
காணும் பொங்கலன்று உடன் பிறந்தவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சொல்லி ஆசியளித்தார். நடமாடும் தெய்வமான மஹாபெரியவர் காட்டிய வழியில் அம்பாளை சாகம்பரியாக
தியானித்து வழிபடுவோம்.
ஒற்றுமை ஓங்கட்டும்
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் பீடாதிபதி வராக மஹாதேசிகன் ஜீயர் ஆசியுரைதை முதல் நாளான மகர சங்கராந்தியான இன்று புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய நாராயணனுக்கு படையலிட்டு வழிபடுவர். இதனால் மாதம் மும்மாரி பெய்யும். ஆண்டாள் திருப்பாவையில் பாடியது போல உலகில் மக்கள் தீங்கின்றி நீங்காத செல்வம் பெற்று நிறைந்து வாழ்வார்கள். இந்த ஆண்டு தைப் பொங்கல் திருநாளான மகர சங்கராந்தி,
ஆயர்பாடியில் ஆயர் சிறுமியர்கள் யாரை நினைத்து மார்கழி நோன்பு நோற்றார்களோ அந்த கண்ணபிரான் அவதரித்த ரோகிணி நட்சத்திர நன்னாளாக அமைந்துள்ளது. இந்த நாளில் மக்கள் உறவினர், நண்பர்களுடன் ஒற்றுமையுடன் கூடி சூரியநாராயணனை வழிபட
எல்லாம் வல்ல கடவுளை வேண்டுகிறேன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
அம்பாள் அருளால் நன்மை பெருகட்டும்- காஞ்சி மஹாபெரியவர் வாழ்த்து
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு ஒருமுறை காஞ்சி மஹாபெரியவர் வந்தார். அப்போது பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அவர் வழிகாட்டியபடியே பொங்கலன்று பக்தர்கள் இன்றும் வழிபடுகின்றனர்.
மஹா பெரியவர் அப்போது அங்கிருந்த அர்ச்சகர்களிடம்,“பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள். இதை தரிசித்தால் பாவம் தீரும். உடல் நலம் பெறும். அம்பாளை மட்டுமின்றி கோயிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்” என்றார்.
“இதற்கு நிறைய காய்கறிகள் வேண்டுமே! ஒரேநாளில் அது சாத்தியமில்லையே!” என்று நினைத்த அர்ச்சகர்கள், அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே” என்றனர்.
பெரியவர், “விருப்பத்தைச் சொல்லிட்டேன். அம்பாள் பாத்துக்குவா” என்று சொல்லி புறப்பட்டார்.
அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் (கோயம்பேடு) இருந்து மூன்று லாரிகள் கோயிலின் முன் வந்து நின்றது. விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதியரின் ஏற்பாட்டில் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்குகள் வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே மஹாபெரியவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
பொங்கலன்று கோயிலுக்கு வந்த பெரியவர் எங்கும் காய்கறி, பழத்தோரணம் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அம்பிகையை சாகம்பரியாக தரிசித்த பெரியவர், “பொங்கலன்று சூரியனை வழிபட்டால் உடல் நலமாக இருக்கும்.
இந்நாளில் தர்ப்பணம் செய்வது அவசியம். அம்பாளை சாகம்பரியாக தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். கோபூஜையும் நடத்துங்கள்.
காணும் பொங்கலன்று உடன் பிறந்தவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சொல்லி ஆசியளித்தார். நடமாடும் தெய்வமான மஹாபெரியவர் காட்டிய வழியில் அம்பாளை சாகம்பரியாக
தியானித்து வழிபடுவோம்.
ஒற்றுமை ஓங்கட்டும்
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் பீடாதிபதி வராக மஹாதேசிகன் ஜீயர் ஆசியுரைதை முதல் நாளான மகர சங்கராந்தியான இன்று புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய நாராயணனுக்கு படையலிட்டு வழிபடுவர். இதனால் மாதம் மும்மாரி பெய்யும். ஆண்டாள் திருப்பாவையில் பாடியது போல உலகில் மக்கள் தீங்கின்றி நீங்காத செல்வம் பெற்று நிறைந்து வாழ்வார்கள். இந்த ஆண்டு தைப் பொங்கல் திருநாளான மகர சங்கராந்தி,
ஆயர்பாடியில் ஆயர் சிறுமியர்கள் யாரை நினைத்து மார்கழி நோன்பு நோற்றார்களோ அந்த கண்ணபிரான் அவதரித்த ரோகிணி நட்சத்திர நன்னாளாக அமைந்துள்ளது. இந்த நாளில் மக்கள் உறவினர், நண்பர்களுடன் ஒற்றுமையுடன் கூடி சூரியநாராயணனை வழிபட
எல்லாம் வல்ல கடவுளை வேண்டுகிறேன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM