Post by varagoorannarayanan on Dec 16, 2021 12:13:13 GMT 5.5
"போதும் போதும்! காமாட்சி நிறுத்திவிடு;நிறுத்திவிடு!"
(இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி)
(சஹஸ்ராரத்தில் ஜோதி தரிசனம் பெரியவாளின் அருளால் காணப்பெற்றபோது அலறிய பெண்மணி)
சொன்னவர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பெரியவா திருவிசைநல்லூர் என்ற இடத்தில் இருந்தபோது, இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி ஒருவர் வந்தார். அது தெரிந்தபெரியவா தன்னிடம் கைங்கரியம் செய்து வந்தகண்ணனை அழைத்து,அவருக்குத் தங்க இடம்முதலிய ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொன்னார்.
மேலும்,அவர் மிகுந்த ஆசாரமுடையவர் ஆதலால்,"நீயே ஒரு பலகாரம் செய்து கொடுத்துவிடு"என்றும் கூறினார்."நானாகவே அவர் இருக்குமிடம் சென்றுதரிசனம் தருகிறேன்.கண் தெரியாமல் அவர் என்னைத்தேடி வர வேண்டாம்"என்றும் தெரிவிக்கச் சொன்னார் கண்ணன் அவ்வாறே செய்தார்.சிறிது உப்புமாவைக் கிண்டி அவளெதிரே வைத்து "சாப்பிடுங்கள்" என்றுஉபசரித்த கண்ணனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது. அதை நைவேத்தியம் செய்வது போல் சுற்றிவிட்டு அந்தஅம்மாள் தன் மார்பிலே கையை வைத்தார்.உடனே அவள்கையில் ஒரு ஸ்ரீசக்கரம் வந்து சேர்ந்தது. மறுபடியும் ஏதோசெய்தார்.அது மறைந்துவிட்டது.அதைப் பார்த்த கண்ணன்,பெரியவாளை அவர் தரிசனம் செய்யும்போது தானும் கூடஇருப்பதென்று முடிவு செய்தார்.'இவர் என்ன மாய
மந்திரங்கள் செய்யப் போகிறாரோ! இவருக்கு சுவாமிகளிடமிருந்து என்ன கிடைக்கப் போகிறதோ?' என்ற கேள்விக்குறிகளால் ஆவலுடன் காத்திருந்தார்.
பெரியவாளிடம் போய் அவர் தரிசனத்துக்குக் காத்துக் கொண்டிருபதாகச் சொல்லி,தான் எதிர்பார்க்கும்சந்தர்ப்பம் சீக்கிரம் வராதா என்று ஏங்கினார்.
"ராத்திரி வரேன்னு சொல்லிவிடு" என்று பெரியவா அவரை அனுப்ப,கண்ணனுக்கு ஒவ்வொரு விநாடியும் யுகமாகக் கழிந்தது.எதிர்பார்த்திருந்த நேரமும் வந்தது.இரவு எலெக்ட்ரிக் விளக்குகள் இல்லாத காலம்.அங்கொன்றும் இங்கொன்றும் முணுக்முணுக் என்று எரியும் கை விளக்குகள் ஒளியில் பெரியவா நடந்து வந்து அந்த அம்மாவின் எதிரில் அமருகிறார்.
"நான் வந்துவிட்டேன்!" என்று குரல் கொடுக்கிறார். அவளும் நமஸ்கரித்து விட்டு உட்காருகிறாள்
"எதற்கு வந்திருக்கிறாய்?" என்று வினவுகிறார் எல்லாம் தெரிந்த சுவாமிகள்.
"உங்களுக்குத் தெரியாததா சுவாமி! எனக்கு இன்னும் சஹஸ்ரகாரத்தில் ஜோதி தரிசனம் கிடைக்கவில்லையே!எனக்கு அதுதான் வேணும்; அதற்குத்தான் வந்தேன்!"என்கிறாள் அவள்...என்ன நடக்கப் போகிறதோ? என்று கண்ணன் ஆவலுடன் காத்திருக்க - பரமாச்சார்யாளோ நிதானமாக,"அப்படியே! நீ சிறிது நேரம் தியானம் பண்ணு" என்றார்.-பெண்மணியிடம்
கண்ணனிடம், " நான் ஜாடை காட்டுவேன்.அப்போதுஎல்லா விளக்குகளையும் அணைத்துவிடு" என்றுகட்டளை இடுகிறார். காலை முதல் அந்த நொடிக்குகாத்திருந்த கண்ணனுக்குப் பெருத்த ஏமாற்றம்.
கும்மிருட்டில் நடப்பது ஒன்றுமே தெரியாதே..என்ன செய்வது? என்று ஏக்கம். எதுவுமே செய்ய முடியாதே!
பெரியவா சொன்னவுடன் விளக்குகள் அணைக்கப்பட்டனஅடுத்த இரண்டாவது நிமிடம் அம்மையாரிடமிருந்துபெரிய கூக்குரல் எழுந்தது." நான் ஜோதி தரிசனம் கண்டேன்;கண்டேன்!" என்று கூத்தாடினார்."போதும் போதும்! காமாட்சி நிறுத்திவிடு;நிறுத்திவிடு!" என்று அலறினாள்.உடனே பெரியவா விளக்கையெல்லாம் ஏத்தச் சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்துமறைந்துவிட்டார்.போவதற்கு முன் கண்ணனிடம் ""அந்த அம்மாவை ஊருக்கு அனுப்பி விடு!" என்று சொன்னார்.
அம்மையார் கிளம்புமுன், கண்ணன் அவரிடம்,என்ன நடந்தது? ஏன் கத்தினீர்கள்? நீங்களாவது சொல்லிவிட்டுப்போவீர்களா!" என்று கெஞ்சினார்.
அவரும்,"நான் கேட்ட ஜோதி தரிசனம் சஹஸ்ராரத்தில்கிடைத்துவிட்டது. அதை இரண்டு நிமிடத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச் சொல்லி அலறினேன் என்றார்.
எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவராக இருந்தால் இத்தனை எளிதில் ஒருவருக்கு ஜோதி தரிசனம் காணும்படிச் செய்ய முடியும்? பெரியவா இறைவன்தான் என்றுஎன்று நினைத்தாலே மட்டுமே புரியும்! தவிர மனிதர்களால் இப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியாது.
எத்தனை பாடுபட்டாலும் பெற முடியாத ஒரு தரிசனத்தைஒரு ரயிலில் வந்து பார்த்துவிட்டு,அடுத்த ரயிலில் ஊருக்குப் புறப்படுகிறார் ஒரு பெண். அந்த அதிசயத்துக்குவேறு எப்படி விளக்கம் தரமுடியும்?.
(இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி)
(சஹஸ்ராரத்தில் ஜோதி தரிசனம் பெரியவாளின் அருளால் காணப்பெற்றபோது அலறிய பெண்மணி)
சொன்னவர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பெரியவா திருவிசைநல்லூர் என்ற இடத்தில் இருந்தபோது, இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி ஒருவர் வந்தார். அது தெரிந்தபெரியவா தன்னிடம் கைங்கரியம் செய்து வந்தகண்ணனை அழைத்து,அவருக்குத் தங்க இடம்முதலிய ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொன்னார்.
மேலும்,அவர் மிகுந்த ஆசாரமுடையவர் ஆதலால்,"நீயே ஒரு பலகாரம் செய்து கொடுத்துவிடு"என்றும் கூறினார்."நானாகவே அவர் இருக்குமிடம் சென்றுதரிசனம் தருகிறேன்.கண் தெரியாமல் அவர் என்னைத்தேடி வர வேண்டாம்"என்றும் தெரிவிக்கச் சொன்னார் கண்ணன் அவ்வாறே செய்தார்.சிறிது உப்புமாவைக் கிண்டி அவளெதிரே வைத்து "சாப்பிடுங்கள்" என்றுஉபசரித்த கண்ணனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது. அதை நைவேத்தியம் செய்வது போல் சுற்றிவிட்டு அந்தஅம்மாள் தன் மார்பிலே கையை வைத்தார்.உடனே அவள்கையில் ஒரு ஸ்ரீசக்கரம் வந்து சேர்ந்தது. மறுபடியும் ஏதோசெய்தார்.அது மறைந்துவிட்டது.அதைப் பார்த்த கண்ணன்,பெரியவாளை அவர் தரிசனம் செய்யும்போது தானும் கூடஇருப்பதென்று முடிவு செய்தார்.'இவர் என்ன மாய
மந்திரங்கள் செய்யப் போகிறாரோ! இவருக்கு சுவாமிகளிடமிருந்து என்ன கிடைக்கப் போகிறதோ?' என்ற கேள்விக்குறிகளால் ஆவலுடன் காத்திருந்தார்.
பெரியவாளிடம் போய் அவர் தரிசனத்துக்குக் காத்துக் கொண்டிருபதாகச் சொல்லி,தான் எதிர்பார்க்கும்சந்தர்ப்பம் சீக்கிரம் வராதா என்று ஏங்கினார்.
"ராத்திரி வரேன்னு சொல்லிவிடு" என்று பெரியவா அவரை அனுப்ப,கண்ணனுக்கு ஒவ்வொரு விநாடியும் யுகமாகக் கழிந்தது.எதிர்பார்த்திருந்த நேரமும் வந்தது.இரவு எலெக்ட்ரிக் விளக்குகள் இல்லாத காலம்.அங்கொன்றும் இங்கொன்றும் முணுக்முணுக் என்று எரியும் கை விளக்குகள் ஒளியில் பெரியவா நடந்து வந்து அந்த அம்மாவின் எதிரில் அமருகிறார்.
"நான் வந்துவிட்டேன்!" என்று குரல் கொடுக்கிறார். அவளும் நமஸ்கரித்து விட்டு உட்காருகிறாள்
"எதற்கு வந்திருக்கிறாய்?" என்று வினவுகிறார் எல்லாம் தெரிந்த சுவாமிகள்.
"உங்களுக்குத் தெரியாததா சுவாமி! எனக்கு இன்னும் சஹஸ்ரகாரத்தில் ஜோதி தரிசனம் கிடைக்கவில்லையே!எனக்கு அதுதான் வேணும்; அதற்குத்தான் வந்தேன்!"என்கிறாள் அவள்...என்ன நடக்கப் போகிறதோ? என்று கண்ணன் ஆவலுடன் காத்திருக்க - பரமாச்சார்யாளோ நிதானமாக,"அப்படியே! நீ சிறிது நேரம் தியானம் பண்ணு" என்றார்.-பெண்மணியிடம்
கண்ணனிடம், " நான் ஜாடை காட்டுவேன்.அப்போதுஎல்லா விளக்குகளையும் அணைத்துவிடு" என்றுகட்டளை இடுகிறார். காலை முதல் அந்த நொடிக்குகாத்திருந்த கண்ணனுக்குப் பெருத்த ஏமாற்றம்.
கும்மிருட்டில் நடப்பது ஒன்றுமே தெரியாதே..என்ன செய்வது? என்று ஏக்கம். எதுவுமே செய்ய முடியாதே!
பெரியவா சொன்னவுடன் விளக்குகள் அணைக்கப்பட்டனஅடுத்த இரண்டாவது நிமிடம் அம்மையாரிடமிருந்துபெரிய கூக்குரல் எழுந்தது." நான் ஜோதி தரிசனம் கண்டேன்;கண்டேன்!" என்று கூத்தாடினார்."போதும் போதும்! காமாட்சி நிறுத்திவிடு;நிறுத்திவிடு!" என்று அலறினாள்.உடனே பெரியவா விளக்கையெல்லாம் ஏத்தச் சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்துமறைந்துவிட்டார்.போவதற்கு முன் கண்ணனிடம் ""அந்த அம்மாவை ஊருக்கு அனுப்பி விடு!" என்று சொன்னார்.
அம்மையார் கிளம்புமுன், கண்ணன் அவரிடம்,என்ன நடந்தது? ஏன் கத்தினீர்கள்? நீங்களாவது சொல்லிவிட்டுப்போவீர்களா!" என்று கெஞ்சினார்.
அவரும்,"நான் கேட்ட ஜோதி தரிசனம் சஹஸ்ராரத்தில்கிடைத்துவிட்டது. அதை இரண்டு நிமிடத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச் சொல்லி அலறினேன் என்றார்.
எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவராக இருந்தால் இத்தனை எளிதில் ஒருவருக்கு ஜோதி தரிசனம் காணும்படிச் செய்ய முடியும்? பெரியவா இறைவன்தான் என்றுஎன்று நினைத்தாலே மட்டுமே புரியும்! தவிர மனிதர்களால் இப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியாது.
எத்தனை பாடுபட்டாலும் பெற முடியாத ஒரு தரிசனத்தைஒரு ரயிலில் வந்து பார்த்துவிட்டு,அடுத்த ரயிலில் ஊருக்குப் புறப்படுகிறார் ஒரு பெண். அந்த அதிசயத்துக்குவேறு எப்படி விளக்கம் தரமுடியும்?.