Post by radha on Oct 10, 2021 10:40:20 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA respectful PRANAMS to SRI KANCHI MAHA PERIVA
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA>
1. ஓம் பூரணனே பதினாறுதிங்கள் சேறும் பொருந்தியே யருக்கன் பதினெட்டுஞ் சேரும், காரணனே கருமுகில் பொன்மேனிசேருங் கருணைபெறு மஷ்டாட்சரங் கலந்து வாழும், வாரணனே லட்சுமியோடெட்டுஞ்சேரும், மதிமுகம்போல் நின்றிலங்கு மாயாநேயா ஆரணனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே.
2. மந்திரமோ அஷ்டதித்து மெட்டுஞ் சேரும், வாழ்கிரக மொன்பதுமே வந்து சேரும், கந்திருவர் கணநாத ராசிவர்க்கம் கலைக்கியான நால்வேதங் கலந்து வாழும், நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித் துன் பாதம் நாளும் போற்ற, அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனேயேறி வந்தருள் செய்வாயே.
3. மூலமுதலோரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுந்து மொழியலாமோ, சீலமுதல் ஓம் - அங் - உங்-மங்-றிங் கென்றே சிவனுடைய திருநாமம் நீர்தானாகும், காலமுதல் ஓம்-அங்-உங்-மங்- றிங் கென்றே கருணைபெரு மிவ்வெழுத்து நீர்தானாகும். ஆலவிஷங்கை யேந்துங் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
4. நவ்வென்றும் கிலியென்றும் ஓம்சிவாயமென்றும் நமநம சிவசிவ ராராவென்றும், சவ்வென்றும் ஓங்கார ரீங்காரமாகித் தவமுடைய விவ்வெழுத்தும் நீர் தானாகும். ஒவ்வொன்றும் ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித் துகந்து போற்ற, அவ்வென்று ரகுராமா கெருடன்மீதில் அன்புடனே யேறி வந்தருள் செய்வாயே.
5. உதிக்கின்ற சிவசொரூப முனக்கே யாகும் ஓம் - அவ்வும் - உவ்வுங்கிலியு மென்றே, பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில்விட்டே பச்சை முகில்மேனியனே பணிந்தே னுன்னை, விதிக்கிசைந்த மெய்பொருளே அரி கோவிந்தா, விளக்கொளி போல் மெய்த்தவமே விரும்பித்தாதா, அதற்கிசைந்த நடம்புரியும் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
6. வேதமுதலா யிருந்த சிங்கரூபம் விளங்குகின்ற விரணியனை வதையேசெய்தாய் பூதமுதலாம் பிறவும் புண்ணியநேயா புகழ்ந்தவர்க்குத் துணைவருவா யசோதைபுத்ரா, நாதமுதல் விந்துவா யுயிருக்கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வாத பிரமயாதவன் போல் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
7. முக்கோண நாற்கோண மொழிந்தைங் கோணமுச்சுடரே யறுகோண மெண்கோணமாகும். சட்கோண நாற்பத்து மூன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகலசித்தும், இக்கோணமிது முதலாய் வகாரமட்டும் இறையவனாய்த் தானிருந்து ரட்சித்தருளும், அக்கோணமீதிருந்து கெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
8. பச்சை முகில் மேனியனே யுனக்கே யிந்தப் பார்தனிலே பத்தவதாரமுண்டு, மச்சமென்றும் கூர்மமென்றும் வராக மென்றும், வாமனென்றும் ராமனென்றும் பவுத்தனென்றும், துஷ்டரையடக்க மோகினி வேடங்கொண்டவராய்த் தோன்றினாயுன்சொரூப மெல்லாம் அறிவாருண்டோ, அச்சந்தீர்த் தெனையாளக் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
9. வேதியனாய்த் தோன்றிவந்தாய் மாயலிக்கு விண்ணவர்க்காய், நரசிங்கரூபமாய்ச், சாதியிலே ராகவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து த்வந்திருந்தாய் தரணி வாழ்க, சோதனைகள் பார்த்திடுவோர் துதிப்போர் தம்மை துஷ்டரையும் வதை செய்துலோகமாள்வாய், ஆதிமுதலோரெழுத்தே நீகெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
10. மாயவனே ரகுராமா அருகேவாவா வஞ்சனைகள் பறந்தோட நெஞ்சில் வாவா, காயாம்பூ நிறமுடனே கனவில்வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா, நாயகனே யென்னாவிலிருக்க வாவா நாள்தோறும் முன்பாதந் துதிக்க வாவா ஆயர்குலத்துதித்தவனே கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
11. முப்புரத்தை யெரித்தவனே யிப்போ வாவா முகில் நிறத்தவனே ஜகநாதா முன்னே வா வா எப்பொழுதுந் துதிப்பவர் பங்கில் வாவா ஏழைப் பங்கிலிருப்பவனே யிறங்கி வாவா, ஒப்பிலா மணிவிளக்கே யொளிபோல் வாவா, ஓம் நமோ நாராயணா வுகந்து வாவா, அப்பனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
12. துளபமணிமார் பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்பொருளே வரத்தைத்தாதா களபகஸ்தூரியனே கடாட்சந் தாதா, கம்சனை வென்றவனே கருணை தாதா, பழம் பொருளே சிவ சோதி பாக்கியந்தாதா பத்தி முத்தி சித்தி செய்யவுன் பாதந்தாதா, அளவில்லா மெய்ப்பொருளே கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
கருடப் பத்து முற்றிற்று.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Date 10-10-21
READING/ RECIETING THIS SOND IN THE TAMIL MONTH OF PURATTASI is beneficial
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA>
1. ஓம் பூரணனே பதினாறுதிங்கள் சேறும் பொருந்தியே யருக்கன் பதினெட்டுஞ் சேரும், காரணனே கருமுகில் பொன்மேனிசேருங் கருணைபெறு மஷ்டாட்சரங் கலந்து வாழும், வாரணனே லட்சுமியோடெட்டுஞ்சேரும், மதிமுகம்போல் நின்றிலங்கு மாயாநேயா ஆரணனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே.
2. மந்திரமோ அஷ்டதித்து மெட்டுஞ் சேரும், வாழ்கிரக மொன்பதுமே வந்து சேரும், கந்திருவர் கணநாத ராசிவர்க்கம் கலைக்கியான நால்வேதங் கலந்து வாழும், நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித் துன் பாதம் நாளும் போற்ற, அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனேயேறி வந்தருள் செய்வாயே.
3. மூலமுதலோரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுந்து மொழியலாமோ, சீலமுதல் ஓம் - அங் - உங்-மங்-றிங் கென்றே சிவனுடைய திருநாமம் நீர்தானாகும், காலமுதல் ஓம்-அங்-உங்-மங்- றிங் கென்றே கருணைபெரு மிவ்வெழுத்து நீர்தானாகும். ஆலவிஷங்கை யேந்துங் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
4. நவ்வென்றும் கிலியென்றும் ஓம்சிவாயமென்றும் நமநம சிவசிவ ராராவென்றும், சவ்வென்றும் ஓங்கார ரீங்காரமாகித் தவமுடைய விவ்வெழுத்தும் நீர் தானாகும். ஒவ்வொன்றும் ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித் துகந்து போற்ற, அவ்வென்று ரகுராமா கெருடன்மீதில் அன்புடனே யேறி வந்தருள் செய்வாயே.
5. உதிக்கின்ற சிவசொரூப முனக்கே யாகும் ஓம் - அவ்வும் - உவ்வுங்கிலியு மென்றே, பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில்விட்டே பச்சை முகில்மேனியனே பணிந்தே னுன்னை, விதிக்கிசைந்த மெய்பொருளே அரி கோவிந்தா, விளக்கொளி போல் மெய்த்தவமே விரும்பித்தாதா, அதற்கிசைந்த நடம்புரியும் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
6. வேதமுதலா யிருந்த சிங்கரூபம் விளங்குகின்ற விரணியனை வதையேசெய்தாய் பூதமுதலாம் பிறவும் புண்ணியநேயா புகழ்ந்தவர்க்குத் துணைவருவா யசோதைபுத்ரா, நாதமுதல் விந்துவா யுயிருக்கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வாத பிரமயாதவன் போல் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
7. முக்கோண நாற்கோண மொழிந்தைங் கோணமுச்சுடரே யறுகோண மெண்கோணமாகும். சட்கோண நாற்பத்து மூன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகலசித்தும், இக்கோணமிது முதலாய் வகாரமட்டும் இறையவனாய்த் தானிருந்து ரட்சித்தருளும், அக்கோணமீதிருந்து கெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
8. பச்சை முகில் மேனியனே யுனக்கே யிந்தப் பார்தனிலே பத்தவதாரமுண்டு, மச்சமென்றும் கூர்மமென்றும் வராக மென்றும், வாமனென்றும் ராமனென்றும் பவுத்தனென்றும், துஷ்டரையடக்க மோகினி வேடங்கொண்டவராய்த் தோன்றினாயுன்சொரூப மெல்லாம் அறிவாருண்டோ, அச்சந்தீர்த் தெனையாளக் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
9. வேதியனாய்த் தோன்றிவந்தாய் மாயலிக்கு விண்ணவர்க்காய், நரசிங்கரூபமாய்ச், சாதியிலே ராகவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து த்வந்திருந்தாய் தரணி வாழ்க, சோதனைகள் பார்த்திடுவோர் துதிப்போர் தம்மை துஷ்டரையும் வதை செய்துலோகமாள்வாய், ஆதிமுதலோரெழுத்தே நீகெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
10. மாயவனே ரகுராமா அருகேவாவா வஞ்சனைகள் பறந்தோட நெஞ்சில் வாவா, காயாம்பூ நிறமுடனே கனவில்வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா, நாயகனே யென்னாவிலிருக்க வாவா நாள்தோறும் முன்பாதந் துதிக்க வாவா ஆயர்குலத்துதித்தவனே கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
11. முப்புரத்தை யெரித்தவனே யிப்போ வாவா முகில் நிறத்தவனே ஜகநாதா முன்னே வா வா எப்பொழுதுந் துதிப்பவர் பங்கில் வாவா ஏழைப் பங்கிலிருப்பவனே யிறங்கி வாவா, ஒப்பிலா மணிவிளக்கே யொளிபோல் வாவா, ஓம் நமோ நாராயணா வுகந்து வாவா, அப்பனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
12. துளபமணிமார் பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்பொருளே வரத்தைத்தாதா களபகஸ்தூரியனே கடாட்சந் தாதா, கம்சனை வென்றவனே கருணை தாதா, பழம் பொருளே சிவ சோதி பாக்கியந்தாதா பத்தி முத்தி சித்தி செய்யவுன் பாதந்தாதா, அளவில்லா மெய்ப்பொருளே கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
கருடப் பத்து முற்றிற்று.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Date 10-10-21
READING/ RECIETING THIS SOND IN THE TAMIL MONTH OF PURATTASI is beneficial