Post by radha on Jun 8, 2021 15:15:41 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
சாப்பாடு சொல்லும் சங்கதி
மே 15,2021,15:31 IST
ஒருமுறை சங்கர மடத்தில் காஞ்சிமகா பெரியவர் சாப்பாட்டு சம்பிரதாயம் பற்றி விளக்கம் அளித்தார்.
''கல்யாண வீட்டுக்கு போயிருப்பீர்கள். அங்கு பந்தியில் அமர்ந்ததும் என்ன செய்கிறார்கள். சாப்பாடுக்காக வாழை இலையை அனைவருக்கும் போடுவார்கள். அந்த இலை போல வாழ்க்கை முழுதும் பச்சைப் பசேல் என்று செழிப்பாக இருக்கும் எனக் கர்வப்படக் கூடாது. பின் இலையைத் துாய்மைப்படுத்த தண்ணீர் தெளிப்பார்கள். அந்த நீர்க்குமிழி போன்றது தான் நம் வாழ்க்கை என்பதை உணர வேண்டும். பின்னரே பதார்த்தங்கள் பரிமாறப்படும்.
முதலில் கொஞ்சம் பாயாசம். வாழ்க்கை இனிக்க வேண்டும் என்பது மட்டும் நோக்கம் அல்ல. பாயாசம் என்றதும் எந்தக் கடவுள் ஞாபகத்திற்கு வருவார். அயோத்தி மன்னர் தசரதர் நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தில் கிடைத்த பாயாசத்தை சாப்பிட்டதால் கவுசல்யாவின் வயிற்றில் ஸ்ரீராமபிரான் பிறந்தார். அவரது ஞாபகம் தான் நமக்கு வரும்... வர வேண்டும். 'ராம... ராம...' என அவரை மனதார நினைக்க வேண்டும். இந்தச் சாப்பாட்டின் மூலம் உடம்பை வளர்க்கிறேனே, இந்த உடம்பால் ஸ்ரீராமரைப் போல தர்மவழியில் வாழ வேண்டும் என மனதார எண்ண வேண்டும்.
பிறகு சாதத்தின் மீது குழம்பு விடுவார்கள். குழம்பில் காய்கறிகள் இருக்கும். காய்கறிகளை 'தான்' என்பார்கள். 'தான்' என்றால் அகங்காரம். மனதில் 'தான்' என்ற எண்ணம் இருக்கும் வரை தெளிவு ஏற்படாது.
அடுத்து வரும் ரசத்தில் தெளிவு இருக்கும். ஏன் என்றால் அதில் 'தான்' இல்லை. தான் என்னும் அகங்காரம் மறைந்தால் தெளிவு வந்து விடும். அப்போது வாழ்வு ரசமாக இருக்கும்.
ரசத்திற்குப் பின் பலகாரங்கள் பரிமாறுவர். கடைசியாக பாயாசம் வரும். பாயாசம் தான் பிரதானமான இனிப்பு. மற்றவை எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. சின்னச் சின்ன இனிப்புப் பலகாரங்களைச் சாப்பிட்ட பின்னர் பாயாசத்தைச் சாப்பிடுவது என்பது சிற்றின்பத்தில் இருந்து பேரின்பத்திற்கு வருவது போலத்தான்.
பின்னர் சாதத்திற்கு மோர் பரிமாறப்படும். மோர் வந்த கதை தெரிந்திருக்கும்....பாலைக் காய்ச்சி உறை சேர்த்து தயிராக்கி, அதைக் கடைந்து வெண்ணெய் எடுக்கப்படும். தண்ணீர் விட்டதும் தயிர் மோராகும். மோரிலிருந்து எதுவும் கிடைக்காது. கடைசியாக வருவது மோர். அதாவது மோருக்கு அடுத்த பிறவி கிடையாது. அதுவே கடைசி. எனவே தான் அதைக் கடைசியாகச் சாப்பிடுகிறோம்.
மனிதன் 'தான்' என்ற அகங்காரத்தை கைவிட்டால், வாழ்க்கை தெளிந்த ரசமாக மாறும். மனதில் தெளிவு ஏற்பட்டால் அனைவரிடமும் அன்பு காட்டி கடவுளைச் சென்றடைவோம். சாப்பாட்டில் கூடத் தத்துவ விளக்கம் கொண்டது தான் நம் பாரதப்பண்பாடு'' என்றார் மகாபெரியவர்.
காஞ்சி மகாபெரியவரின் உபதேசம்
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.
* சாப்பிடும் முன் பறவை, விலங்குகளுக்கு உணவிடுங்கள்.
* உறங்கும் முன், அன்றைய நாளில் செய்த நன்மை, தீமைகளை அலசி ஆராயுங்கள்.
* பட்டு ஆடை உடுத்துவதை தவிருங்கள்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
திருப்பூர் கிருஷ்ணன்
» தினமலர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
சாப்பாடு சொல்லும் சங்கதி
மே 15,2021,15:31 IST
ஒருமுறை சங்கர மடத்தில் காஞ்சிமகா பெரியவர் சாப்பாட்டு சம்பிரதாயம் பற்றி விளக்கம் அளித்தார்.
''கல்யாண வீட்டுக்கு போயிருப்பீர்கள். அங்கு பந்தியில் அமர்ந்ததும் என்ன செய்கிறார்கள். சாப்பாடுக்காக வாழை இலையை அனைவருக்கும் போடுவார்கள். அந்த இலை போல வாழ்க்கை முழுதும் பச்சைப் பசேல் என்று செழிப்பாக இருக்கும் எனக் கர்வப்படக் கூடாது. பின் இலையைத் துாய்மைப்படுத்த தண்ணீர் தெளிப்பார்கள். அந்த நீர்க்குமிழி போன்றது தான் நம் வாழ்க்கை என்பதை உணர வேண்டும். பின்னரே பதார்த்தங்கள் பரிமாறப்படும்.
முதலில் கொஞ்சம் பாயாசம். வாழ்க்கை இனிக்க வேண்டும் என்பது மட்டும் நோக்கம் அல்ல. பாயாசம் என்றதும் எந்தக் கடவுள் ஞாபகத்திற்கு வருவார். அயோத்தி மன்னர் தசரதர் நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தில் கிடைத்த பாயாசத்தை சாப்பிட்டதால் கவுசல்யாவின் வயிற்றில் ஸ்ரீராமபிரான் பிறந்தார். அவரது ஞாபகம் தான் நமக்கு வரும்... வர வேண்டும். 'ராம... ராம...' என அவரை மனதார நினைக்க வேண்டும். இந்தச் சாப்பாட்டின் மூலம் உடம்பை வளர்க்கிறேனே, இந்த உடம்பால் ஸ்ரீராமரைப் போல தர்மவழியில் வாழ வேண்டும் என மனதார எண்ண வேண்டும்.
பிறகு சாதத்தின் மீது குழம்பு விடுவார்கள். குழம்பில் காய்கறிகள் இருக்கும். காய்கறிகளை 'தான்' என்பார்கள். 'தான்' என்றால் அகங்காரம். மனதில் 'தான்' என்ற எண்ணம் இருக்கும் வரை தெளிவு ஏற்படாது.
அடுத்து வரும் ரசத்தில் தெளிவு இருக்கும். ஏன் என்றால் அதில் 'தான்' இல்லை. தான் என்னும் அகங்காரம் மறைந்தால் தெளிவு வந்து விடும். அப்போது வாழ்வு ரசமாக இருக்கும்.
ரசத்திற்குப் பின் பலகாரங்கள் பரிமாறுவர். கடைசியாக பாயாசம் வரும். பாயாசம் தான் பிரதானமான இனிப்பு. மற்றவை எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. சின்னச் சின்ன இனிப்புப் பலகாரங்களைச் சாப்பிட்ட பின்னர் பாயாசத்தைச் சாப்பிடுவது என்பது சிற்றின்பத்தில் இருந்து பேரின்பத்திற்கு வருவது போலத்தான்.
பின்னர் சாதத்திற்கு மோர் பரிமாறப்படும். மோர் வந்த கதை தெரிந்திருக்கும்....பாலைக் காய்ச்சி உறை சேர்த்து தயிராக்கி, அதைக் கடைந்து வெண்ணெய் எடுக்கப்படும். தண்ணீர் விட்டதும் தயிர் மோராகும். மோரிலிருந்து எதுவும் கிடைக்காது. கடைசியாக வருவது மோர். அதாவது மோருக்கு அடுத்த பிறவி கிடையாது. அதுவே கடைசி. எனவே தான் அதைக் கடைசியாகச் சாப்பிடுகிறோம்.
மனிதன் 'தான்' என்ற அகங்காரத்தை கைவிட்டால், வாழ்க்கை தெளிந்த ரசமாக மாறும். மனதில் தெளிவு ஏற்பட்டால் அனைவரிடமும் அன்பு காட்டி கடவுளைச் சென்றடைவோம். சாப்பாட்டில் கூடத் தத்துவ விளக்கம் கொண்டது தான் நம் பாரதப்பண்பாடு'' என்றார் மகாபெரியவர்.
காஞ்சி மகாபெரியவரின் உபதேசம்
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.
* சாப்பிடும் முன் பறவை, விலங்குகளுக்கு உணவிடுங்கள்.
* உறங்கும் முன், அன்றைய நாளில் செய்த நன்மை, தீமைகளை அலசி ஆராயுங்கள்.
* பட்டு ஆடை உடுத்துவதை தவிருங்கள்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
திருப்பூர் கிருஷ்ணன்
» தினமலர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM