Post by jahnavi on Apr 6, 2021 17:33:12 GMT 5.5
🕉️
விநாயகர் திருவடிகளே போற்றி
எல்லா திருமுறையில் எடுக்கப்பட்ட முக்கிய பாடல்கள்
ஆலகாலமும் அமுதாகும் !
திருச்சிற்றம்பலம்
நால்வர் துதி
பூமியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத ஊரர் திருத்தாள் போற்றி.
திருப்பிரமபுரம் - நட்டபாடை
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
- திருஞானசம்பந்தர்
(1ஆம் திருமுறை)
திருஆலவாய் - காந்தாரம்
திருநீற்றுப்பதிகம்
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.
- திருஞானசம்பந்தர்
(2ஆம் திருமுறை)
திருஆலவாய்-புறநீர்மை
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன்,நால்வேதமும் பொருள்களும் அருளி
அம் கயல்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.
- திருஞானசம்பந்தர்
(3ஆம் திருமுறை)
திரு அதிகை வீரட்டானம்-கொல்லி
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
-திருநாவுக்கரசர்
(4 ஆம் திருமுறை)
பொது-தனி திருக்குறுந்தொகை
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே
-திருநாவுக்கரசர்
(5 ஆம் திருமுறை)
திரு ஆலவாய்-திருத்தாண்டகம்
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும்
சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
-திருநாவுக்கரசர்
(6 ஆம் திருமுறை)
திருவெண்ணெய்நல்லூர்-இந்தளம்
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தாஉனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே.
-சுந்தர மூர்த்தி நாயனார்
(7ஆம் திருமுறை)
திருப்பெருந்துறை-திருச்சதகம்
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்
விரையார் கழற்கு என்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றி என்னும்
கைதான் நெகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டுகொள்ளே.
-மாணிக்கவாசகர்
(8 ஆம் திருமுறை)
திருகோவையார்-பாங்கற் கூட்டம்
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்தும் என் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென் கொலாம் புகுந்து எய்தியதே
-மாணிக்கவாசகர்
(8 ஆம் திருமுறை)
தில்லை-பஞ்சமம்
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே!
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
-சேந்தனார்
(9ஆம் திருமுறை)
தில்லை-பஞ்சமம்
(திருப்பல்லாண்டு)
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகல
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
-சேந்தனார்
(9ஆம் திருமுறை)
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே
-திருமூலர்
(10 ஆம் திருமுறை)
அற்புத திருவந்தாதி
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும்நெறி பணியாரேனும் - சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மனார்க்கு
அன்பு அறாது என்நெஞ்சு அவர்க்கு
-காரைக்கால் அம்மையார்
(11 ஆம் திருமுறை)
திருத்தொண்டர் புராணம்-நடராஜர் துதி
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
-தெய்வச் சேக்கிழார்
(12 ஆம் திருமுறை)
திருச்சிற்றம்பலம்
வாழ்த்து
1. வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
2. வையம் நீடுக மாமழை மன்னுகமெய் விரும்பிய அன்பர் விளங்குகசைவ நன்னெறி தான்தழைத் தோங்குகதெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.
3. வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்
திருச்சிற்றம்பலம்
🔯சுபம்🔯
விநாயகர் திருவடிகளே போற்றி
எல்லா திருமுறையில் எடுக்கப்பட்ட முக்கிய பாடல்கள்
ஆலகாலமும் அமுதாகும் !
திருச்சிற்றம்பலம்
நால்வர் துதி
பூமியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத ஊரர் திருத்தாள் போற்றி.
திருப்பிரமபுரம் - நட்டபாடை
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
- திருஞானசம்பந்தர்
(1ஆம் திருமுறை)
திருஆலவாய் - காந்தாரம்
திருநீற்றுப்பதிகம்
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.
- திருஞானசம்பந்தர்
(2ஆம் திருமுறை)
திருஆலவாய்-புறநீர்மை
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன்,நால்வேதமும் பொருள்களும் அருளி
அம் கயல்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.
- திருஞானசம்பந்தர்
(3ஆம் திருமுறை)
திரு அதிகை வீரட்டானம்-கொல்லி
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
-திருநாவுக்கரசர்
(4 ஆம் திருமுறை)
பொது-தனி திருக்குறுந்தொகை
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே
-திருநாவுக்கரசர்
(5 ஆம் திருமுறை)
திரு ஆலவாய்-திருத்தாண்டகம்
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும்
சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
-திருநாவுக்கரசர்
(6 ஆம் திருமுறை)
திருவெண்ணெய்நல்லூர்-இந்தளம்
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தாஉனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே.
-சுந்தர மூர்த்தி நாயனார்
(7ஆம் திருமுறை)
திருப்பெருந்துறை-திருச்சதகம்
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்
விரையார் கழற்கு என்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றி என்னும்
கைதான் நெகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டுகொள்ளே.
-மாணிக்கவாசகர்
(8 ஆம் திருமுறை)
திருகோவையார்-பாங்கற் கூட்டம்
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்தும் என் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென் கொலாம் புகுந்து எய்தியதே
-மாணிக்கவாசகர்
(8 ஆம் திருமுறை)
தில்லை-பஞ்சமம்
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே!
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
-சேந்தனார்
(9ஆம் திருமுறை)
தில்லை-பஞ்சமம்
(திருப்பல்லாண்டு)
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகல
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
-சேந்தனார்
(9ஆம் திருமுறை)
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே
-திருமூலர்
(10 ஆம் திருமுறை)
அற்புத திருவந்தாதி
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும்நெறி பணியாரேனும் - சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மனார்க்கு
அன்பு அறாது என்நெஞ்சு அவர்க்கு
-காரைக்கால் அம்மையார்
(11 ஆம் திருமுறை)
திருத்தொண்டர் புராணம்-நடராஜர் துதி
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
-தெய்வச் சேக்கிழார்
(12 ஆம் திருமுறை)
திருச்சிற்றம்பலம்
வாழ்த்து
1. வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
2. வையம் நீடுக மாமழை மன்னுகமெய் விரும்பிய அன்பர் விளங்குகசைவ நன்னெறி தான்தழைத் தோங்குகதெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.
3. வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்
திருச்சிற்றம்பலம்
🔯சுபம்🔯