Post by radha on Feb 24, 2021 1:59:48 GMT 5.5
OMSRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
ஞான பிரசுனாம்பிகை
ஊரின் பெயர் திருக்காளத்தி, ஸ்ரீகாளஹஸ்தி, காளாஸ்திரி எனப் பல பெயர்கள். சிலந்தி, பாம்பு, யானை மூன்றும் வழிபட்ட தலம். இங்கு ஓடும் ஆறு பொன்முகலி. அதன் இன்னொரு பெயர் சுவர்ணமுகி.
வழியெங்கும் சீராக இல்லாத சாலைகளில் அதிகாலையிலேயே ஆடு, மாடுகளை மேய்க்கும் கிராமத்து எளியவர்கள் செல்கிறார்கள். அந்த வெள்ளந்தி மனிதர்களுக்கு கால்நடைகளே தெய்வம். மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லுதலே அவர்களுக்கான பூஜை.
இந்த நிலையில் தான் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த வேடன் கண்ணப்பன் இருந்திருக்கக் கூடும். கடவுள், பக்தி, பூஜை, பரிகாரம், அனுஷ்டானம் ஏதும் அறியாத களங்கமற்ற வேடன் அவன். அந்த எளியவனை ஏற்று சமநீதியும், சமூகநீதியும் சொன்ன இடம் காளஹஸ்தி.
தனக்குத் தோன்றியதைச் செய்வதே பூஜை என்பதும், தன் மனம் விரும்பிய முறையே வழிபாடு என்பதும் இயற்கையோடு இயைந்த வாழ்வு. இந்த திருத்தலத்தில் பாறைகளாலான சுற்றுப்பாதைகள், மேட்டுப் பாதைகள், பக்கச்சுவராக உடன் வரும் மலைப்பாறைகள் என ஒரு காலத்தில் இப்பகுதி பெருங்காடாக இருந்ததன் சாட்சியாக இருக்கின்றன.
கோயிலின் பெரும் பரப்பு பிரமிப்பைத் தருகிறது. ராஜேந்திரச் சோழனும், கிருஷ்ண தேவராயரும் மற்ற மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள். கோயிலின் மூலவர் ஞானபிரசுனாம்பிகை அல்லது ஞானப்பூங்கோதை. இத்தனை அழகியல் சார்ந்த தமிழ்ப்பெயர்கள் இப்போது அருகி வரும் சூழலில் அம்மையின் பெயரைக் கேட்டதும் புல்லரிக்கிறது. அம்மையின் கம்பீரமோ வியப்பைத் தருகிறது. நிமிர்ந்து ஒளிரும் தீப்பிழம்பாக இருக்கும் அம்மையின் கோலம் கண்ணுக்குள் ஊடுருவி, நெஞ்சுக்குள், குருதிக்குள், உயிருக்குள், உணர்வுக்குள், உயிர் மூலத்திற்குள் ஊடுருவுகிறது.
எத்தனை நேர்த்தியும், கம்பீரமும், ஆளுமையும் ஆனவள் அம்மை. அவளின் விஸ்வரூபத்தை முற்றிலும் மறைத்துக் கொண்டு, லிங்கேஸ்வரருக்கே அனைத்துப் பெருமைகளையும் அளிப்பது பெண்மைக்கு மட்டுமே சாத்தியம். அதை விடவும் சீ- காளம்- அத்தி என்று தங்களை வழிபட்ட சிலந்தி, பாம்பு, யானையின் பெயர்களால் ஊரின் பெயரையும் அழைக்க வைத்த பெருந்தன்மையும் பெண்மைக்கு மட்டுமே சாத்தியம்.
அம்மையைப் பார்த்தேன். கண் கொட்டாமல் பார்த்தேன். உயிர் மலரப் பார்த்தேன். கருவறையின் குளிர்ச்சியும், அம்மை தரும் நெகிழ்ச்சியும் அலாதியானவை. கருவறையின் வெப்பமும், அம்மை தரும் தட்பமும் அலாதியானவை. கருவறை வாசமும், அம்மை தரும் நேசமும் அலாதி யானவை.
'சடங்குகளே இல்லாத வழிபாட்டை கண்ணப்பர் தர, லிங்கேஸ்வரர் ஏற்றுக் கொண்டது தானே ஆத்மார்த்தமான பக்தி? மீண்டும் மீண்டும் சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லுவது பொருத்தமா தாயே....'
'யார் சொன்னது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று... நானா...' அம்மை கேட்டாள். வாயடைத்துப் போனேன். ஒற்றைக் கேள்வியை கேட்டு விட்டு சிரித்தாள் அம்மை. செம்பட்டுச் சேலை உடுத்தி, திருத்தமான மலர் மாலைகளும், ஆபரணங்களுமாக ஒரு மாயப் புன்னகையுடன் ஞானப்பிரசுனாம்பிகை கேட்டது எல்லோருக்குமான கேள்வி தான்.
'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பது தானே ஆன்மிகத் தேடலின் மூலாதாரம்.
'இன்னுமொரு கேள்வி தாயே...'
சிரித்தாள் அம்மை. என் மவுன உரையாடல். அவளன்றி வேறு யாரால் அவதானிக்க முடியும்?
'நகர்ந்து வா... நகர்ந்து வா...' காவலர்கள் மாறி மாறிச் சொல்ல, கூட்டம் அம்மை தரிசனத்திற்காக நகர்ந்தது. மந்திரங்கள், மவுனங்களால் ததும்ப வேண்டிய கருவறை இப்போது 'நகரு...நகரு...நகரு...' என்னும் ஒற்றை விரட்டல் குரலால் நிறைகிறது. ஆத்மார்த்தமான பக்தி, ஒரு நிமிடமானாலும் கூட ஆன்மாவைத் தீண்டும் நிறைவு இப்படி வாய்க்கப் பெறாமல் நடக்கும் விரட்டல்களை அம்மையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். ஓரமாய் ஒதுங்கி நின்று கண் கொட்டாமல் பார்த்தேன் அம்மையை.
'ஈக்கும், எறும்புக்கும், குழந்தைக்கும், மனிதருக்கும், விலங்குக்கும், பறவைக்கும் என ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொன்று ஆதார சுருதியாக இருக்கும் தாயே... அந்த ஆதாரத்தையே பறித்து விட்டு, இல்லாமல் ஆக்கி விட்டு, எங்களைப் பரிதவிக்க விடுவது தான் கருணையா தாயே... அதுவும் தவிர, எந்தப் பிரார்த்தனைக்கும் செவி சாய்க்காமல், எங்களுக்கு வலியும், வேதனையும் மிச்சமாக்குவது நியாயமா தாயே.. இத்தனை வேதனையான வாழ்க்கையைத் தந்து மனதை மரத்துப் போக விடுவது நியாயமா தாயே...''
''ஆஹா... நீதி கேட்டு நெடும் பயணம் வந்திருக்கிறாயா...'' கேட்டாள் அம்மை.
''நல்லவர்களுக்குத் தொல்லைகள் பெறுதலே வாழ்க்கையாகிறது. கெட்டவர்களுக்கு தொல்லைகள் தருதலே வாழ்க்கையாகிறது. நல்லவர்கள் வலி பெறுகிறார்கள். கெட்டவர்கள் வலி தருகிறார்கள். ஆனால் எங்கும் கெட்டவர்கள் ஜெயிப்பதை காண்கிறோமே... நல்லவர்களைத் தண்டிப்பதும், கெட்டவர்களை தண்டிக்காமல் இருப்பதும் அநீதி இல்லையா தாயே...'
சன்னதி ஓரமாக கண்ணீர் வழிய நின்றேன்.
'ஒரு வெள்ளந்தியான வேடனுக்கு காட்டிய கருணையும், அன்பும் அவரை கண்ணப்ப நாயனார் என்ற நிலைக்கு உயர்த்தியது. பூஜையும், புனஸ்காரமும், சடங்கும், சம்பிரதாயமும் பொங்கும் வழிபாட்டு முறைகள் மேலோங்கி நிற்க, ஆத்மார்த்தம் காணாமல் போயிருக்கிறதா தாயே...'
கேள்வியை அம்மையின் காலடியில் சமர்ப்பித்தேன். எப்போதுமே எனது பூமாலைகளைச் சுமப்பது கேள்விகளாலான பாமாலை தான்... எனது நம்பிக்கையாகச் சுமப்பது கேள்விகளைத் தான் என்கிற நினைப்பில் மெதுவாக நடந்தேன். நுாற்றாண்டுகள் கழிந்தும், பூரிப்பும், கருணையும், புதுப்பொலிவும் கொஞ்சமும் குறையாத திருக்கோயில் சித்துார் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்.
ஞானப்பூங்கோதை என்று அம்மை சொல்லும் ஞானம் என்ன? மவுனமே பெருங்கருணை என்பதா... வலிகளே வழிகள் என்பதா... குருதிப்புண்ணே வாழ்வின் அடையாளம் என்பதா... துரோகம் என்னும் முட்களும் சேர்ந்தது தான் விடியல் என்னும் பூக்கூட்டம் என்பதா...
கெட்டவர்களே ஜெயித்துக் கொண்டிருந்தால் கெட்டவர்களே மகிழ்ந்து கொண்டிருந்தால், நல்லவர்களாக இருக்க வேண்டாமே... கெட்டவர்களாகவே இருந்து விடலாமே.. சாக்கடையே கங்கையாகலாமா? துன்முகலி பொன்முகலி ஆறு ஆகலாமா?
நீக்கமற நிறைந்திருக்கும் அம்மையை காளஹஸ்தீஸ்வரர் தலத்தில் உணர்ந்தேன்.
'இப்ப வாச்சும் தப்பு தண்டா செய்யாம விட்டியேய்யா நீ... ஒவ்வொரு தடவை நீ அரெஸ்ட் ஆகறப்ப அம்மா கிட்ட தான் ஓடி வந்து அழுவேன். எம் புருஷனுக்கு நல்ல புத்தி குடுன்னு... இனிமேயாச்சும் திருந்துய்யா... வயசாச்சு... மிச்ச காலத்த நிம்மதியா இருந்துட்டுப் போகணும்'
முதுமை வயதை அடைந்த ஆணும், பெண்ணுமாக ஒரு தம்பதி பேசிக் கொண்டே சென்றார்கள். அம்மை சொல்லும் பதில் இதுதானா... புதிருக்கான விடை இதுதானா...
மாயங்களின் நீட்சியாகவே அம்மை... மயக்கங்களின் நீட்சியாகவே நாமெல்லாம்...
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
ஞான பிரசுனாம்பிகை
ஊரின் பெயர் திருக்காளத்தி, ஸ்ரீகாளஹஸ்தி, காளாஸ்திரி எனப் பல பெயர்கள். சிலந்தி, பாம்பு, யானை மூன்றும் வழிபட்ட தலம். இங்கு ஓடும் ஆறு பொன்முகலி. அதன் இன்னொரு பெயர் சுவர்ணமுகி.
வழியெங்கும் சீராக இல்லாத சாலைகளில் அதிகாலையிலேயே ஆடு, மாடுகளை மேய்க்கும் கிராமத்து எளியவர்கள் செல்கிறார்கள். அந்த வெள்ளந்தி மனிதர்களுக்கு கால்நடைகளே தெய்வம். மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லுதலே அவர்களுக்கான பூஜை.
இந்த நிலையில் தான் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த வேடன் கண்ணப்பன் இருந்திருக்கக் கூடும். கடவுள், பக்தி, பூஜை, பரிகாரம், அனுஷ்டானம் ஏதும் அறியாத களங்கமற்ற வேடன் அவன். அந்த எளியவனை ஏற்று சமநீதியும், சமூகநீதியும் சொன்ன இடம் காளஹஸ்தி.
தனக்குத் தோன்றியதைச் செய்வதே பூஜை என்பதும், தன் மனம் விரும்பிய முறையே வழிபாடு என்பதும் இயற்கையோடு இயைந்த வாழ்வு. இந்த திருத்தலத்தில் பாறைகளாலான சுற்றுப்பாதைகள், மேட்டுப் பாதைகள், பக்கச்சுவராக உடன் வரும் மலைப்பாறைகள் என ஒரு காலத்தில் இப்பகுதி பெருங்காடாக இருந்ததன் சாட்சியாக இருக்கின்றன.
கோயிலின் பெரும் பரப்பு பிரமிப்பைத் தருகிறது. ராஜேந்திரச் சோழனும், கிருஷ்ண தேவராயரும் மற்ற மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள். கோயிலின் மூலவர் ஞானபிரசுனாம்பிகை அல்லது ஞானப்பூங்கோதை. இத்தனை அழகியல் சார்ந்த தமிழ்ப்பெயர்கள் இப்போது அருகி வரும் சூழலில் அம்மையின் பெயரைக் கேட்டதும் புல்லரிக்கிறது. அம்மையின் கம்பீரமோ வியப்பைத் தருகிறது. நிமிர்ந்து ஒளிரும் தீப்பிழம்பாக இருக்கும் அம்மையின் கோலம் கண்ணுக்குள் ஊடுருவி, நெஞ்சுக்குள், குருதிக்குள், உயிருக்குள், உணர்வுக்குள், உயிர் மூலத்திற்குள் ஊடுருவுகிறது.
எத்தனை நேர்த்தியும், கம்பீரமும், ஆளுமையும் ஆனவள் அம்மை. அவளின் விஸ்வரூபத்தை முற்றிலும் மறைத்துக் கொண்டு, லிங்கேஸ்வரருக்கே அனைத்துப் பெருமைகளையும் அளிப்பது பெண்மைக்கு மட்டுமே சாத்தியம். அதை விடவும் சீ- காளம்- அத்தி என்று தங்களை வழிபட்ட சிலந்தி, பாம்பு, யானையின் பெயர்களால் ஊரின் பெயரையும் அழைக்க வைத்த பெருந்தன்மையும் பெண்மைக்கு மட்டுமே சாத்தியம்.
அம்மையைப் பார்த்தேன். கண் கொட்டாமல் பார்த்தேன். உயிர் மலரப் பார்த்தேன். கருவறையின் குளிர்ச்சியும், அம்மை தரும் நெகிழ்ச்சியும் அலாதியானவை. கருவறையின் வெப்பமும், அம்மை தரும் தட்பமும் அலாதியானவை. கருவறை வாசமும், அம்மை தரும் நேசமும் அலாதி யானவை.
'சடங்குகளே இல்லாத வழிபாட்டை கண்ணப்பர் தர, லிங்கேஸ்வரர் ஏற்றுக் கொண்டது தானே ஆத்மார்த்தமான பக்தி? மீண்டும் மீண்டும் சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லுவது பொருத்தமா தாயே....'
'யார் சொன்னது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று... நானா...' அம்மை கேட்டாள். வாயடைத்துப் போனேன். ஒற்றைக் கேள்வியை கேட்டு விட்டு சிரித்தாள் அம்மை. செம்பட்டுச் சேலை உடுத்தி, திருத்தமான மலர் மாலைகளும், ஆபரணங்களுமாக ஒரு மாயப் புன்னகையுடன் ஞானப்பிரசுனாம்பிகை கேட்டது எல்லோருக்குமான கேள்வி தான்.
'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பது தானே ஆன்மிகத் தேடலின் மூலாதாரம்.
'இன்னுமொரு கேள்வி தாயே...'
சிரித்தாள் அம்மை. என் மவுன உரையாடல். அவளன்றி வேறு யாரால் அவதானிக்க முடியும்?
'நகர்ந்து வா... நகர்ந்து வா...' காவலர்கள் மாறி மாறிச் சொல்ல, கூட்டம் அம்மை தரிசனத்திற்காக நகர்ந்தது. மந்திரங்கள், மவுனங்களால் ததும்ப வேண்டிய கருவறை இப்போது 'நகரு...நகரு...நகரு...' என்னும் ஒற்றை விரட்டல் குரலால் நிறைகிறது. ஆத்மார்த்தமான பக்தி, ஒரு நிமிடமானாலும் கூட ஆன்மாவைத் தீண்டும் நிறைவு இப்படி வாய்க்கப் பெறாமல் நடக்கும் விரட்டல்களை அம்மையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். ஓரமாய் ஒதுங்கி நின்று கண் கொட்டாமல் பார்த்தேன் அம்மையை.
'ஈக்கும், எறும்புக்கும், குழந்தைக்கும், மனிதருக்கும், விலங்குக்கும், பறவைக்கும் என ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொன்று ஆதார சுருதியாக இருக்கும் தாயே... அந்த ஆதாரத்தையே பறித்து விட்டு, இல்லாமல் ஆக்கி விட்டு, எங்களைப் பரிதவிக்க விடுவது தான் கருணையா தாயே... அதுவும் தவிர, எந்தப் பிரார்த்தனைக்கும் செவி சாய்க்காமல், எங்களுக்கு வலியும், வேதனையும் மிச்சமாக்குவது நியாயமா தாயே.. இத்தனை வேதனையான வாழ்க்கையைத் தந்து மனதை மரத்துப் போக விடுவது நியாயமா தாயே...''
''ஆஹா... நீதி கேட்டு நெடும் பயணம் வந்திருக்கிறாயா...'' கேட்டாள் அம்மை.
''நல்லவர்களுக்குத் தொல்லைகள் பெறுதலே வாழ்க்கையாகிறது. கெட்டவர்களுக்கு தொல்லைகள் தருதலே வாழ்க்கையாகிறது. நல்லவர்கள் வலி பெறுகிறார்கள். கெட்டவர்கள் வலி தருகிறார்கள். ஆனால் எங்கும் கெட்டவர்கள் ஜெயிப்பதை காண்கிறோமே... நல்லவர்களைத் தண்டிப்பதும், கெட்டவர்களை தண்டிக்காமல் இருப்பதும் அநீதி இல்லையா தாயே...'
சன்னதி ஓரமாக கண்ணீர் வழிய நின்றேன்.
'ஒரு வெள்ளந்தியான வேடனுக்கு காட்டிய கருணையும், அன்பும் அவரை கண்ணப்ப நாயனார் என்ற நிலைக்கு உயர்த்தியது. பூஜையும், புனஸ்காரமும், சடங்கும், சம்பிரதாயமும் பொங்கும் வழிபாட்டு முறைகள் மேலோங்கி நிற்க, ஆத்மார்த்தம் காணாமல் போயிருக்கிறதா தாயே...'
கேள்வியை அம்மையின் காலடியில் சமர்ப்பித்தேன். எப்போதுமே எனது பூமாலைகளைச் சுமப்பது கேள்விகளாலான பாமாலை தான்... எனது நம்பிக்கையாகச் சுமப்பது கேள்விகளைத் தான் என்கிற நினைப்பில் மெதுவாக நடந்தேன். நுாற்றாண்டுகள் கழிந்தும், பூரிப்பும், கருணையும், புதுப்பொலிவும் கொஞ்சமும் குறையாத திருக்கோயில் சித்துார் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்.
ஞானப்பூங்கோதை என்று அம்மை சொல்லும் ஞானம் என்ன? மவுனமே பெருங்கருணை என்பதா... வலிகளே வழிகள் என்பதா... குருதிப்புண்ணே வாழ்வின் அடையாளம் என்பதா... துரோகம் என்னும் முட்களும் சேர்ந்தது தான் விடியல் என்னும் பூக்கூட்டம் என்பதா...
கெட்டவர்களே ஜெயித்துக் கொண்டிருந்தால் கெட்டவர்களே மகிழ்ந்து கொண்டிருந்தால், நல்லவர்களாக இருக்க வேண்டாமே... கெட்டவர்களாகவே இருந்து விடலாமே.. சாக்கடையே கங்கையாகலாமா? துன்முகலி பொன்முகலி ஆறு ஆகலாமா?
நீக்கமற நிறைந்திருக்கும் அம்மையை காளஹஸ்தீஸ்வரர் தலத்தில் உணர்ந்தேன்.
'இப்ப வாச்சும் தப்பு தண்டா செய்யாம விட்டியேய்யா நீ... ஒவ்வொரு தடவை நீ அரெஸ்ட் ஆகறப்ப அம்மா கிட்ட தான் ஓடி வந்து அழுவேன். எம் புருஷனுக்கு நல்ல புத்தி குடுன்னு... இனிமேயாச்சும் திருந்துய்யா... வயசாச்சு... மிச்ச காலத்த நிம்மதியா இருந்துட்டுப் போகணும்'
முதுமை வயதை அடைந்த ஆணும், பெண்ணுமாக ஒரு தம்பதி பேசிக் கொண்டே சென்றார்கள். அம்மை சொல்லும் பதில் இதுதானா... புதிருக்கான விடை இதுதானா...
மாயங்களின் நீட்சியாகவே அம்மை... மயக்கங்களின் நீட்சியாகவே நாமெல்லாம்...
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM