Post by varagoorannarayanan on Feb 7, 2021 14:37:19 GMT 5.5
"குமரேசா, அந்த மணியை வேகமாக அடி.."
(படிப்பறியாத பாமர மக்கள் முகத்தில் பக்திப் பரவசம்.! அவர்களை அழைப்பதற்காக)
(பெரியவாள் கையாண்ட யுக்தி)
சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
ஆந்திர நாட்டில் பயணம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் சில பேர்கள் மட்டும் உடன் செல்வார்கள். வேறு எவ்விதமான படாடோபமும்,பிருதாவளிகளும் இல்லை. பின்தங்கிய பகுதியிலுள்ள மக்களுக்கு பெரியவாளைப் பற்றி தெரிந்தே இருக்காது! முன்னதாகவே சென்று,பெரியவாள் தங்குவதற்கான இடம் தேர்ந்தெடுப்பது, உடன் செல்வோர் தங்குவதற்கான வசதிகள் - என்று எந்தத் திட்டமும் கிடையாது. "இங்கே தங்கலாம்" என்று பெரியவாள் சொன்னால், மரத்தடியே ஆனாலும் அங்கேயே தங்கி விடுவோம்.
ஒரு கிராமம். அங்கு ஒரு சிறு சிவன் கோவில். பெரியவாள் அங்கு தங்கி சிரம பரிகாரம் செய்து கொண்டபோது, ஊர் மக்கள் வந்து தரிசனம் செய்து கொண்டார்கள்.
பின்னர்,செய்தி பக்கத்துக் கிராமங்களுக்குப் பரவியது.
கோவிலில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் பிக்ஷை செய்துவிட்டு, பெரியவாள் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.
தொண்டர்களுக்கும் களைப்பு, ஆங்காங்கே படுத்துக் கொண்டார்கள்.
உச்சிகால பூஜை முடிந்தது. சிவாசாரியாருக்கு வீட்டுக்குப் போவதிலேயே குறி போலும்! வழக்கம்போல், வெளிக்கதவை பூட்டிக்கொண்டு போய்விட்டார்.- (பி.கு.)ஸ்வாமிகள் உள்ளே)
சுற்றுப்புற மக்கள் அப்போது தான் கோவிலுக்கு வந்தார்கள். கதவு பூட்டியிருந்தது.
'சுவாமிகள் புறப்பட்டுப் போய்விட்டார்களா? இந்த வெய்யிலில் எங்கே போயிருக்க முடியும்! பெரியவாளைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்காமற் போய்விட்டதே?'
என்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத் திரும்பிப் போகிற வேளையில்,பெரியவாள் விழித்துக்கொண்டார்கள்.
"கோவில் கதவு சார்த்திப் பூட்டியிருக்கிறது" என்று குறை சொன்னார், ஒரு தொண்டர்.
"அடடா...ஜனங்கள் வந்து ஏமாந்திருப்பார்களே? எல்லாரையும் எப்படி அழைப்பது?"
கோவில் பிராகாரத்தில்,உயரத்தில் ஒரு பெரிய மணி கட்டியிருந்தது."குமரேசா, அதை வேகமாக அடி.."
எதிர்பாராமல் கோவில் மணியோசை கேட்டதும் ஜனங்களுக்குப் பிரக்ஞை வந்தது. கோவிலுக்கு ஓடோடிவந்தார்கள்.கோவில் காவற்காரர் திகைத்துப் போய் கதவைத் திறந்தார்.
படிப்பறியாத பாமர மக்கள் முகத்தில் பக்திப் பரவசம்.! அவர்களை அழைப்பதற்காகப் பெரியவாள் கையாண்ட யுக்தியைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போனார்கள்.
"எதுவும் தெரியாத எங்களையும் பொருட்படுத்தினார்களே! என்று நெஞ்சாரப் போற்றினார்கள்.
பெரியவாள் பார்வை சமதர்மப் பார்வை; மனித ஜீவன் என்ற ஒரே பார்வை
(படிப்பறியாத பாமர மக்கள் முகத்தில் பக்திப் பரவசம்.! அவர்களை அழைப்பதற்காக)
(பெரியவாள் கையாண்ட யுக்தி)
சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
ஆந்திர நாட்டில் பயணம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் சில பேர்கள் மட்டும் உடன் செல்வார்கள். வேறு எவ்விதமான படாடோபமும்,பிருதாவளிகளும் இல்லை. பின்தங்கிய பகுதியிலுள்ள மக்களுக்கு பெரியவாளைப் பற்றி தெரிந்தே இருக்காது! முன்னதாகவே சென்று,பெரியவாள் தங்குவதற்கான இடம் தேர்ந்தெடுப்பது, உடன் செல்வோர் தங்குவதற்கான வசதிகள் - என்று எந்தத் திட்டமும் கிடையாது. "இங்கே தங்கலாம்" என்று பெரியவாள் சொன்னால், மரத்தடியே ஆனாலும் அங்கேயே தங்கி விடுவோம்.
ஒரு கிராமம். அங்கு ஒரு சிறு சிவன் கோவில். பெரியவாள் அங்கு தங்கி சிரம பரிகாரம் செய்து கொண்டபோது, ஊர் மக்கள் வந்து தரிசனம் செய்து கொண்டார்கள்.
பின்னர்,செய்தி பக்கத்துக் கிராமங்களுக்குப் பரவியது.
கோவிலில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் பிக்ஷை செய்துவிட்டு, பெரியவாள் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.
தொண்டர்களுக்கும் களைப்பு, ஆங்காங்கே படுத்துக் கொண்டார்கள்.
உச்சிகால பூஜை முடிந்தது. சிவாசாரியாருக்கு வீட்டுக்குப் போவதிலேயே குறி போலும்! வழக்கம்போல், வெளிக்கதவை பூட்டிக்கொண்டு போய்விட்டார்.- (பி.கு.)ஸ்வாமிகள் உள்ளே)
சுற்றுப்புற மக்கள் அப்போது தான் கோவிலுக்கு வந்தார்கள். கதவு பூட்டியிருந்தது.
'சுவாமிகள் புறப்பட்டுப் போய்விட்டார்களா? இந்த வெய்யிலில் எங்கே போயிருக்க முடியும்! பெரியவாளைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்காமற் போய்விட்டதே?'
என்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத் திரும்பிப் போகிற வேளையில்,பெரியவாள் விழித்துக்கொண்டார்கள்.
"கோவில் கதவு சார்த்திப் பூட்டியிருக்கிறது" என்று குறை சொன்னார், ஒரு தொண்டர்.
"அடடா...ஜனங்கள் வந்து ஏமாந்திருப்பார்களே? எல்லாரையும் எப்படி அழைப்பது?"
கோவில் பிராகாரத்தில்,உயரத்தில் ஒரு பெரிய மணி கட்டியிருந்தது."குமரேசா, அதை வேகமாக அடி.."
எதிர்பாராமல் கோவில் மணியோசை கேட்டதும் ஜனங்களுக்குப் பிரக்ஞை வந்தது. கோவிலுக்கு ஓடோடிவந்தார்கள்.கோவில் காவற்காரர் திகைத்துப் போய் கதவைத் திறந்தார்.
படிப்பறியாத பாமர மக்கள் முகத்தில் பக்திப் பரவசம்.! அவர்களை அழைப்பதற்காகப் பெரியவாள் கையாண்ட யுக்தியைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போனார்கள்.
"எதுவும் தெரியாத எங்களையும் பொருட்படுத்தினார்களே! என்று நெஞ்சாரப் போற்றினார்கள்.
பெரியவாள் பார்வை சமதர்மப் பார்வை; மனித ஜீவன் என்ற ஒரே பார்வை