|
Post by radha on Jan 5, 2021 1:37:11 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA m.youtube.com/watch?v=SXkA63zISeQ&noapp=1ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே, போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். (21) SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
|
|
sudhan
Junior Member
அறம் செய விரும்பு
Posts: 98
|
Post by sudhan on Jan 5, 2021 6:11:38 GMT 5.5
கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களின் பால்வளத்தால் பல்வளமும் பெற்றுச் செல்வத்தின் நாயகனான நந்தகோபனின் மகனே! நீ துயிலுணர்ந்து எழுவாயாக. வேதங்களால் போற்றப்படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! இவ்வுலகில் அவதாரம் செய்த ஒளிவடிவானவனே துயிலெழுவாயாக. உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம் எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.
|
|