|
Post by varagoorannarayanan on Dec 27, 2020 14:13:27 GMT 5.5
"நேற்று ராத்திரி என்ன ஆகாரம்?"
(பெரியவாளுக்குத் தெரியாமல் உப்புமா சாப்பிட்ட கதை)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு உணவு (சிற்றுண்டி) அருந்தக் கூடாது என்று அந்த முகாமில் உத்தரவிட்டிருந்தார்கள் பெரியவாள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, இரவு பன்னிரண்டு மணி, வேதபுரி சாஸ்திரிகள் என்ற சமையல் பொறுப்புத் தொண்டரை மட்டும் எழுப்பித் தனியே அழைத்துச் சென்றார்கள், பெரியவா.
அவருடைய குடும்பம் எசையனூரில் இருந்தது. அவர் குடும்பச் சூழ்நிலை, மாடு - கன்று, கோயில் பூஜை, வாய்க்காலில் தண்ணீர் வரத்து, வீட்டுத் தோட்டத்தில் செம்பருத்திப் பூச்செடி -இப்படியெல்லாம் விசாரித்து விட்டு,
"நேற்று ராத்திரி என்ன ஆகாரம் பண்ணினீர்கள்?" என்று கேட்டார்கள்.
"ரவா உப்புமா..."
"யாரார் சாப்பிட்டா?"
வரிசையாகச் சொன்னார் வேதபுரி சாஸ்திரிகள்.
"சரி, போ..."
மறுநாள் திங்கட்கிழமை காலை, கண்ணன் என்ற தொண்டர் வந்து முதலில் வந்தனம் பண்ணினார்.
அவருடன் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசியபடியே,
"நேற்று ராத்திரி என்ன ஆகாரம்?" என்று கேட்டார்கள்.
"ஞாயிற்றுக்கிழமையாச்சே, ராத்திரி ஒண்ணும் சாப்பிடலே..." என்றார், குழறியபடியே.
"ஏன் பொய் சொல்கிறாய்? ரவா உப்புமா கிளறிக் கொடுத்ததாக வேதபுரி சொன்னானே" என்று பெரியவா சொல்லவில்லை.(கேட்கவில்லை)
அத்துடன் அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.
'பேசுவது பொய்' என்று நிச்சயமாகத் தெரிந்தாலும் அதைச் சுட்டிக்காட்டமாட்டார்கள் பெரியவா. அப்பாவித்தனமாக அதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், ரவா உப்புமா விவகாரத்தை மறுநாளே தொண்டர்களிடம் சொல்லி, எல்லோர் வயிற்றிலும் புளியைக் கரைத்து விட்டார் வேதபுரி.
|
|
|
Post by padhu on Dec 27, 2020 20:39:58 GMT 5.5
Evvalavu arumaiyaka kaiyalukirar Mahaperiyava.
|
|