Post by radha on Oct 18, 2020 18:30:35 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
நைமிசாரண்யம்னு ஒரு க்ஷேத்திரம் இருக்கு தெரியுமா?
.
(கண்ணும்,காதும் சரியாக இயங்காத பக்தருக்கு,புராணங்கள் படித்துக் கரையேற ஆசை.--அவருக்கு பெரியவா சொன்ன வழிமுறை)
.
நைமிசாரண்யம் போகிற அன்பர்கள்,அங்குள்ள வியாஸகத்தியைக் கண்டுபிடித்து நூறு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரலாம் இல்லையா?
.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.
.
ஒரு பக்தருக்கு விந்தையான குறைபாடுகள்!. காது கேட்காது,புத்தகம் படிக்கும்படியான பார்வையில்லை. எதிரில் வரும் மனிதர்கள் நிழலுருவங்களாகத் தெரிவார்கள்.
.
வயதான காலத்தில், அவருக்கு ஒரு தீவிரமான ஆசை ஏற்பட்டது. இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம்பகவத்கீதை, புராணங்கள் படித்துக் கரையேற வேண்டும், என்று ஒரு வெறியே வந்துவிட்டது. ஆனால், புத்தகத்தைப் படிக்க முடியவில்லையே?
.
பெரியவாளிடம், விண்ணப்பித்துக் கொண்டார் பக்தர்.
.
அந்தச் சமயத்தில், சில பண்டிதர்களும் அங்கே இருந்தார்கள். பெரியவா அவர்களைப் பார்த்து, "இவரோபுராணங்கள் படிக்கணும்ணு ரொம்ப ஆசைப்படறார். கண் பார்வை சரியில்லே.என்ன பண்ணலாம்?" என்று கேட்டார்கள். ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை யாராலும் சொல்ல முடியவில்லை.
.
"நைமிசாரண்யம்னு ஒரு க்ஷேத்திரம் இருக்கு தெரியுமா?"----பெரியவா.
.
"தெரியும்."---பக்தர்.
.
"அங்கே என்ன விசேஷம்?"---பெரியவா.
.
"அந்த இடத்திலேதான், ரிஷிகள் எல்லாரும், புராணங்களைக் கேட்டார்கள்.---பக்தர்.
.
"புராணங்கள் எழுதியது யாரு?"--பெரியவா.
.
"வ்யாஸர்"----பக்தர்.
.
"அவர், புராணங்களை எழுதின இடம்னு ஒரு ஸ்தலம் இருக்கு.'வ்யாஸகத்தி'ன்னு பேர் சொல்லுவா.."
.
பண்டிதர்கள், ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நைமிசாரண்யம் போய் வந்தவர்களுக்குக் கூடஅந்த இடம் பற்றி ஞாபகமில்லை. இந்த மாதிரி சின்ன - சின்ன ஆனால், ரொம்ப முக்கியமான சேதியெல்லாம் பெரியவாளுக்கு, எப்படி நினைவிருக்கிறது.?"
.
பெரியவாள், பக்தரை அருகில் அழைத்தார்கள்.
.
"குடும்பத்தோட நைமிசாரண்யம் போய், கொஞ்ச நாள் தங்கு. வியாஸர் புராணங்கள் எழுதின இடத்திலே, விழுந்து,விழுந்து நமஸ்காரம் பண்ணு. அப்புறம் உனக்கே எல்லாப் புராணங்களும் மனசிலே ஸ்புரிக்கும்"
.
இந்த மாதிரியெல்லாம் அனுபவ சாத்தியமான வழிகளைச் சொல்ல,பெரியவாளால் மட்டுமே முடியும்.
.
இனிமேல் நைமிசாரண்யம் போகிற அன்பர்கள், வியாஸகத்தியைக் கண்டுபிடித்து, நூறு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரலாம் இல்லையா?.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
நைமிசாரண்யம்னு ஒரு க்ஷேத்திரம் இருக்கு தெரியுமா?
.
(கண்ணும்,காதும் சரியாக இயங்காத பக்தருக்கு,புராணங்கள் படித்துக் கரையேற ஆசை.--அவருக்கு பெரியவா சொன்ன வழிமுறை)
.
நைமிசாரண்யம் போகிற அன்பர்கள்,அங்குள்ள வியாஸகத்தியைக் கண்டுபிடித்து நூறு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரலாம் இல்லையா?
.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.
.
ஒரு பக்தருக்கு விந்தையான குறைபாடுகள்!. காது கேட்காது,புத்தகம் படிக்கும்படியான பார்வையில்லை. எதிரில் வரும் மனிதர்கள் நிழலுருவங்களாகத் தெரிவார்கள்.
.
வயதான காலத்தில், அவருக்கு ஒரு தீவிரமான ஆசை ஏற்பட்டது. இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம்பகவத்கீதை, புராணங்கள் படித்துக் கரையேற வேண்டும், என்று ஒரு வெறியே வந்துவிட்டது. ஆனால், புத்தகத்தைப் படிக்க முடியவில்லையே?
.
பெரியவாளிடம், விண்ணப்பித்துக் கொண்டார் பக்தர்.
.
அந்தச் சமயத்தில், சில பண்டிதர்களும் அங்கே இருந்தார்கள். பெரியவா அவர்களைப் பார்த்து, "இவரோபுராணங்கள் படிக்கணும்ணு ரொம்ப ஆசைப்படறார். கண் பார்வை சரியில்லே.என்ன பண்ணலாம்?" என்று கேட்டார்கள். ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை யாராலும் சொல்ல முடியவில்லை.
.
"நைமிசாரண்யம்னு ஒரு க்ஷேத்திரம் இருக்கு தெரியுமா?"----பெரியவா.
.
"தெரியும்."---பக்தர்.
.
"அங்கே என்ன விசேஷம்?"---பெரியவா.
.
"அந்த இடத்திலேதான், ரிஷிகள் எல்லாரும், புராணங்களைக் கேட்டார்கள்.---பக்தர்.
.
"புராணங்கள் எழுதியது யாரு?"--பெரியவா.
.
"வ்யாஸர்"----பக்தர்.
.
"அவர், புராணங்களை எழுதின இடம்னு ஒரு ஸ்தலம் இருக்கு.'வ்யாஸகத்தி'ன்னு பேர் சொல்லுவா.."
.
பண்டிதர்கள், ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நைமிசாரண்யம் போய் வந்தவர்களுக்குக் கூடஅந்த இடம் பற்றி ஞாபகமில்லை. இந்த மாதிரி சின்ன - சின்ன ஆனால், ரொம்ப முக்கியமான சேதியெல்லாம் பெரியவாளுக்கு, எப்படி நினைவிருக்கிறது.?"
.
பெரியவாள், பக்தரை அருகில் அழைத்தார்கள்.
.
"குடும்பத்தோட நைமிசாரண்யம் போய், கொஞ்ச நாள் தங்கு. வியாஸர் புராணங்கள் எழுதின இடத்திலே, விழுந்து,விழுந்து நமஸ்காரம் பண்ணு. அப்புறம் உனக்கே எல்லாப் புராணங்களும் மனசிலே ஸ்புரிக்கும்"
.
இந்த மாதிரியெல்லாம் அனுபவ சாத்தியமான வழிகளைச் சொல்ல,பெரியவாளால் மட்டுமே முடியும்.
.
இனிமேல் நைமிசாரண்யம் போகிற அன்பர்கள், வியாஸகத்தியைக் கண்டுபிடித்து, நூறு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரலாம் இல்லையா?.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM