Post by radha on Sept 22, 2020 7:02:39 GMT 5.5
OM Sri GURUPYO NAMAHA respectful PRANAMS to Sri KANCHI MAHA PERIVA
KANCHI VASAYA VIDHMAHE SANTHA RUPAYA DHIMAHE I
THANOO CHANDRASEKHENDRAYA PRACHOTHAYATH II
Madambakkam Shankar
46நி ·
*"இங்கே பர்வதம் னு யார் இருக்கிறார்கள்? பர்வதம், பர்வதம்!"*
"காஞ்சி மஹா சுவாமிகள் சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரியில் முகாமிட்டிருக்கிறார்.. கன்னி பெண்களுக்கு நல்ல மணவாழ்வு அமைவதற்காக பவானியம்மன் படத்தை பக்தர்களுக்கு கொடுக்கப் போகிறார்" என்ற நல்ல சேதியை தோழியின் மூலம் கேள்விப்பட்டாள் பர்வதம்...
மஹா பெரியவா வை தரிசிக்க விரும்பிய பர்வதம் சகோதரனுடன் புறப்பட்டாள்..
அண்ணனின் வேகமான நடைக்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை.. வேகமாக நடந்த அவன் வரிசையில் போய் நிற்க, தாமதமாக வந்த பர்வதம் வரிசையின் பின்னாலே நிற்க நேர்ந்தது..
அண்ணன் முறை வந்து, அருகில் வந்ததும், மகான், "யாருக்காக வந்திருக்கிறாய்? உன்னுடன் சகோதரி வந்திருக்கிறாளா?" எனக் கேட்டார்..
"ஆமாம் சுவாமி! என் சகோதரி பின்னால் நிற்கிறாள்.. அவள் வரும் வரை இங்கு காத்திருக்கலாமா?" என்று கேட்டார்..
பெரியவா சிரித்தபடி, "உன் சகோதரி பெயர் என்ன?" என்றார்..
"பர்வதம்" என்றான்..
" இங்கே பர்வதம் னு யார் இருக்கிறார்கள்? பர்வதம், பர்வதம்!" என்று சுவாமிகள் உரத்த குரலில் இருமுறை அழைத்தார்..
பர்வதம் மெய்சிலிர்த்துப் போனாள்.. வரிசையை விட்டு விலகி, "நான்தான் சுவாமி பர்வதம்" என ஓடி வந்தாள்..
" உனக்காக முன் கூட்டி வந்து காத்திருக்கிறான் உன் அண்ணன்.. இந்தா... பவானி அம்மன் படம்.. வீட்டில் வைத்து பூஜை செய்... க்ஷேமமாக இரு!" என்று அம்மன் படத்தைக் கொடுத்து ஆசியளித்தார்..
அண்ணனும், தங்கையும் மஹா சுவாமிகளை வணங்கி விடைபெற்றுக் கொண்டனர்..
பர்வதத்திற்கு நல்ல இடத்தில் திருமணம் அமைந்தது.. வாழ்நாள் இனிதாக கழிந்தது...
இப்போது, எண்பது வயதாகி விட்டது.. நிம்மதி க்கு குறைவில்லை... 'பர்வதம் பர்வதம்..' என்று மஹா சுவாமிகள் உரத்துக் கூப்பிட்ட தருணத்தை அவள் இன்னும் மறக்க வில்லை..
முதுமை அடைந்தாலும், சுவாமிகளின் அருள் நம்முடன் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறாள்.. சுவாமிகளை குறித்த பாடல்களை எழுதிய படி, நிறைவான வாழ்வு வாழ்கிறார்...
மஹா பெரியவாவின் ஒரு நாள் தரிசனம், பர்வதம்மா அவர்களின் வாழ்வு முழுமைக்கும் நிம்மதி வழங்கி கொண்டிருக்கிறது என்றால், அது மிகையில்லை..
கருணா ஸாகரம் நம் பெரியவா!
KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
KANCHI VASAYA VIDHMAHE SANTHA RUPAYA DHIMAHE I
THANOO CHANDRASEKHENDRAYA PRACHOTHAYATH II
Madambakkam Shankar
46நி ·
*"இங்கே பர்வதம் னு யார் இருக்கிறார்கள்? பர்வதம், பர்வதம்!"*
"காஞ்சி மஹா சுவாமிகள் சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரியில் முகாமிட்டிருக்கிறார்.. கன்னி பெண்களுக்கு நல்ல மணவாழ்வு அமைவதற்காக பவானியம்மன் படத்தை பக்தர்களுக்கு கொடுக்கப் போகிறார்" என்ற நல்ல சேதியை தோழியின் மூலம் கேள்விப்பட்டாள் பர்வதம்...
மஹா பெரியவா வை தரிசிக்க விரும்பிய பர்வதம் சகோதரனுடன் புறப்பட்டாள்..
அண்ணனின் வேகமான நடைக்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை.. வேகமாக நடந்த அவன் வரிசையில் போய் நிற்க, தாமதமாக வந்த பர்வதம் வரிசையின் பின்னாலே நிற்க நேர்ந்தது..
அண்ணன் முறை வந்து, அருகில் வந்ததும், மகான், "யாருக்காக வந்திருக்கிறாய்? உன்னுடன் சகோதரி வந்திருக்கிறாளா?" எனக் கேட்டார்..
"ஆமாம் சுவாமி! என் சகோதரி பின்னால் நிற்கிறாள்.. அவள் வரும் வரை இங்கு காத்திருக்கலாமா?" என்று கேட்டார்..
பெரியவா சிரித்தபடி, "உன் சகோதரி பெயர் என்ன?" என்றார்..
"பர்வதம்" என்றான்..
" இங்கே பர்வதம் னு யார் இருக்கிறார்கள்? பர்வதம், பர்வதம்!" என்று சுவாமிகள் உரத்த குரலில் இருமுறை அழைத்தார்..
பர்வதம் மெய்சிலிர்த்துப் போனாள்.. வரிசையை விட்டு விலகி, "நான்தான் சுவாமி பர்வதம்" என ஓடி வந்தாள்..
" உனக்காக முன் கூட்டி வந்து காத்திருக்கிறான் உன் அண்ணன்.. இந்தா... பவானி அம்மன் படம்.. வீட்டில் வைத்து பூஜை செய்... க்ஷேமமாக இரு!" என்று அம்மன் படத்தைக் கொடுத்து ஆசியளித்தார்..
அண்ணனும், தங்கையும் மஹா சுவாமிகளை வணங்கி விடைபெற்றுக் கொண்டனர்..
பர்வதத்திற்கு நல்ல இடத்தில் திருமணம் அமைந்தது.. வாழ்நாள் இனிதாக கழிந்தது...
இப்போது, எண்பது வயதாகி விட்டது.. நிம்மதி க்கு குறைவில்லை... 'பர்வதம் பர்வதம்..' என்று மஹா சுவாமிகள் உரத்துக் கூப்பிட்ட தருணத்தை அவள் இன்னும் மறக்க வில்லை..
முதுமை அடைந்தாலும், சுவாமிகளின் அருள் நம்முடன் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறாள்.. சுவாமிகளை குறித்த பாடல்களை எழுதிய படி, நிறைவான வாழ்வு வாழ்கிறார்...
மஹா பெரியவாவின் ஒரு நாள் தரிசனம், பர்வதம்மா அவர்களின் வாழ்வு முழுமைக்கும் நிம்மதி வழங்கி கொண்டிருக்கிறது என்றால், அது மிகையில்லை..
கருணா ஸாகரம் நம் பெரியவா!
KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM