Post by radha on Sept 19, 2020 5:38:42 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
பெரியவா சரணம்.
#நடைராசப்பத்து
“நடராசப் பத்து” எனும் துதியானது கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகட்கு முன்பாக சிறுமணவை என தற்போது பெயரிடப்பட்டுள்ள அக்காலத்திய சிறுமணவூரில் வாழ்ந்த முனுசாமி முதலியார் எனும் சிவனடியாரால் தில்லையம்பலத்து ஆடலரசனாம் நடராசத் தெய்வத்தினைப் போற்றிப் புகழ்ந்து பாடப் பெற்றது.
விருத்த வகையைச் சேர்ந்த அந்த அற்புதமான துதிப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் அடியேனின் மனதுள்ளாக நம் கச்சியம்பலத்து நடைராசனாம் ஸ்ரீமஹாபெரியவாளுக்கு அறிந்ததோர் வகையிலே “நடைராசப் பத்து” எழுதிட வேண்டும் என்ற அவா மேலிடும்.
அவ்வகையிலாக, அவர் அருளால் அவர் தாள் வணங்கிட அடியேனின் கனவு நனவானதாம். சில.மாதங்கட்கு முன்னதாக கிட்டிய பஅக்கியத்தினை இன்று மீள் பதிவாகப் பகிர்கின்றேன்.
இசையும் பக்தியும் இசைவும் ஒரு சேர உள்ள எவரேனும் இதனை இசைப் பகிர்வாக அமைக்க முன் வருவார்களேயானால் அது நம் அனைவருக்கும் ஒரு மஹாபாக்கியமே!
அதீத அன்போடும் பக்தியோடும் ஆவல் கொள்வது நாம்; அதனை நடத்திக் கொடுப்பவர் அவர்.
இந்த எனது பிரார்த்தனைக்கு பலம் சேர்க்க உங்கள் ப்ரார்த்தனையின் துணை கிட்டுமா?
சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.
நடைராசப் பத்து:
மண்ணாளும் மனமாளும் வேதமறை நாதன்நீ
மதியோரும் போற்றும் குருநீ
மிகிரன்நீ மகிரன்நீ மகரிநீ மகலிநீ
மண்டல மிரண்டேழும் நீ
பரமன்நீ பவதிநீ பரமாத்ம ரூபம்நீ
பரவுயிர்க் குயிரும் நீயே
பாதாதிகேசன்நீ பரம குருதேவன்நீ
பெற்றவரும் உற்றவரும்நீ
பொலிவும்நீ ஒளியும்நீ யிருளும்நீ பகலும்நீ
பரம தயவாளன் நீயே
புவனங்கள் பதினான்கும் போற்றும் குருபீடத்தின்
திறமாளும் பரமேசன் நீ
எண்ணறிய தருமங்கள் நியாயங்கள் நிறைந்தோங்க
கருணையுரு கொண்டவனும் நீ
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (1)
வானாட வளியாட வழியாட விதிமாட
வனிதை காமாக்ஷியாட,
நாளாட, நூலாட, நதியாட, திரையாட
நிறைவோடு மறையுமாட,
கோனாட, குலமாட, கலியோட, குறைஓட
குமரிவரை குழவியாட,
தண்டமொடு கமண்டலம், துறவுரியில் மண்டலம்
வளமோடு திரையுமாட,
ஒளியாட, ஒலியோடு மதியாட, மாமுனியின்
தலமோடு நிறையுமாட,
வினையோட, வாழ்வோங்க, வழியோங்க, வரமீய்ந்து
வளமோடு மகிழ்வுமோங்க,
நினைவோங்க நின்னருளில், உனைப் பாட, இதுவேளை
நடமாடு தேவனுருவே
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (2)
படகென்ற வாழ்வினில் துடுப்பின்றி யல்லலுறு
சேராத கரையை எண்ணி
கடமுள்ளி லுறைஆவி கரைகின்ற நிலைதேடி
கட்டுண்டு நித்த நித்தம்
உடலுக்கு முயிராசை உள்ளத்தி லுளவாசை
ஓயாம லிரைச்சல் எனவும்
தடமின்றி தடுமாறு நிலைதன்னி லுழலூடி
வினையாலும் வலிகூடவே
தாயென்று சேயென்று உறவென்று புறம்நிற்கு
மிகையான பதம்யாவிலும்
நானின்று கதிதேடி யலையாத படியாக
நானுளேன் என்று காக்கும்
இதமாக பதமாக சந்ததந் தந்தருளும்
தயவான குருபரனுமாய்
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (3)
வினையள்ள வகையல்ல, விடமுள்ள அரவல்ல,
வித்தையுங் கூட்டவல்ல,
கனையல்ல, கனலல்ல, குறையுள்ள கனவல்ல,
மனதூறு மயக்கமகல,
சூதல்ல, வசியல்ல, மதியின்றி உழலல்ல,
இடருமோர் துயரமல்ல,
நானல்ல, தானல்ல, நயம்பிடும் நிலையல்ல,
நாணிகோ ணுதலுமல்ல
கொங்கணர் முதலாகு சித்தர்கள் ஓருருவில்
வாய்த்தநல் குருவுருவிலே
நானுண்டு குறையகல வேயென்ற பதமோடு
நீயுண்டு வாழ்வு விளங்க
என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
ஏதுளது புகலவருவாய்
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (4)
நொந்துவந் தேநின்று துயரமுஞ் சொல்முன்
னுகந்துநல் லாசிநல்கி
சந்ததமுந் தந்துயெமக் கருளாசி புரியவு
மவதாரம் புரிந்தகுருவாய்
பெற்றவர் உற்றவர் இகழாத நிலைகாண
தருமநெறி ஒழுகுவழியை
கற்றவர் மற்றவர் அறியுவகை மறைவிளங்க
வகையதனுந் தந்தகுருவாய்
தந்திமுகச் சோதரன் அழகுமுக குமரனின்
அவதாரம் நீயல்லவோ!
செந்தூர மணியுமுக மலைவாழு வனிதையவ
ளருளாலன் நீயல்லவோ!
கற்றவன் நானல்ல, கொற்றவன் நீகுரு
பெற்றவ ருற்றவர் நீயே!
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (5)
நற்றுணை நீயென்று நம்பியே நாடிவர
வரமதைப் பெற்ற வகையால்
கொற்றவன் நின்பதம் சரணேகு மடியவர்க்
கினியேதும் குறையுமுண்டோ!
வேதமுஞ் சாத்திரமுந் தோத்திரமு மறியாத
படியுந்தன் தாளதனிலே
பேதமுஞ் சாபமும் வேண்டாத நிலைவேண்டி
வந்தனையு மறிகிலேனே!
குருவுண்டு பயமில்லை குறையேது மினியில்லை
உனைகண்டு அடிபோற்றவே
நிறைவுண்டு குறையில்லை அருளுண்டு இருளில்லை
எனவொன்றி புகழ்பாடவே
வரமுண்டு வலியில்லை கனிவுண்டு துயரில்லை
எனவோடி அருள வருவாய்
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (6)
முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுமுன்ன
மெய்பொருளு மறியச் செய்வாய்!
முன்னிலென் வினைவந்து மூண்டிடும் முன்பாக
மோடோடி காத்தருளுவாய்!
தன்னைநொந் தழியாமல் தான்தேடி யலையாமல்
தவிப்பதும் இனியேகுமோ!
அன்னை காமாக்ஷியின் அருளாலன் சன்னதி
நாடிநல் லருள் பெறுவனோ!
தானென்று கர்வத்தில் தருமநெறி பிழறாமல்
தளிர்வாழ்வு தடமோடிட
தான்நின்று நாணாமல் கோணாமல் வாழ்ந்திடவு
மாகேசன் பதம் நாடிட
இன்னுமென பிறவிவரு மென்றழுது நின்சரணம்
தஞ்சமென நாடிவந்தேன்
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (7)
வஞ்சமது நெஞ்சமதில் வாயுரையி லஞ்சுகமு
மாகவுள சுற்றமிதிலே
கஞ்சமட மனதோடு குறையான வினையுடனு
மாகவுள வீதியிதனில்
தறிகெட்டு தடந்தேடி யலைவதென விதியாகி
மாற்றுவழி தேடாமலே
நெறியின்றி தருமவழி சிந்தாம லொழுகாமல்
காலமதும் வீண்போனதோ!
வந்தவழி தெரியாமல் போகுவழி புரியாமல்
நெஞ்சமுறு துயரங்களாய்
உந்துவழி தான்நொந்து சோகமதி லேயலயு
மடியார்க்கு கதியும் நீயே!
மேகமும் மாரிவள மீய்ந்தருள விளங்குநிலம்
போலருளும் செகத்குரு நீ
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (8)
மனதார பொய்யாது தருமவழி பிழறாமல்
உளமார வொழுகி நாளும்
குணமோடு பண்புநிறை வழியேநல் வினைபுரிய
மகிழோடு வாழ்வமையவே
தந்தது எந்தன்னை கொண்டது முந்தன்னை
பகருமொரு பத்தியாளன்
தந்தது நல்பத்தி வழியாடி தடமோடி
கண்டநின் திருத்தாளிலே
மனதார நாளுமினி சரணேகு வழிநல்கி
மனமிதனில் நிறையுமுருவே
வனமாலி வல்லொளிய னுருகூடி வாய்த்தவொரு
குருபாத அருளும்பெறவே
பண்ணுகிற வினையெதிலு மாதியன் நின்னருளும்
பணியுவகை செய்தருளுமே
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (9)
கண்மூன் றுடையானின் கனியுவுரு கொண்டோனே
நிலையாமை தாம்போக்குவாய்!
வண்ணாளு வளமாக வனிதையென வுருவான
காமாக்ஷி கருணைபுரிவாய்!
என்னாளு மினியுந்தன் னடிபோற்றி வாழ்ந்திடவும்
வகையான அருள்புரியுவாய்!
என்னிலே நீக்கமற நிறைகின்ற சோதியே
எம்பெரும சசிசேகரா!
விண்ணாளு வேதமறை யொலியாகி தரணியிதை
என்னாளும் காத்தருளுவாய்!
மண்ணாளு மதியோனே! மங்கலமு மருள்வாயே
மதிகூட்டும் கலைவானியே!
நடைராசப் பத்திதனை மனதார ஒலிப்போர்க்கு
மகிழ்வான வாழ்வருளுவாய்!
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (10)
உலகெங்கும் இருக்கிற மகா பெரியவரின் பக்தர்கள் தற்போது வேத பாராயணம், சிறப்பு ஹோமங்கள், தேவார - திருவாசகம் பாடுதல், சிறப்பு அபிஷேகம், திருவீதி உலா, அன்னதானம் என்று பிரதி மாதமும் நம் காஞ்சித் தேவனாம் வேதமுனி ஸ்ரீமஹாபெரியவாள் அவதரித்த அனுஷ நட்சத்திரத்தன்று உள்ளார்ந்த பக்தியோடு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.
சமஸ்கிருதம் தேவமொழி எனப் போற்றப்பட்டு வந்தாலும், தமிழ் மட்டுமே அறிந்த பக்தர்களும் நம் கலியுகத் தெய்வத்தைப் போற்றிட உதவும்படியாக கடந்த சில வருடங்களாக அடியேன் அறிந்த வகையிலே எழுதி வரக்கூடிய பாக்கியத்தை அம்மையப்பன் நல்கியிருப்பது அவருடைய அவ்யாஜ கருணை தாமே!
எத்துனை எழுதினாலும் இந்த நடைராசப் பத்தினை எழுதி முடிக்கையிலே மனதிலே ஒரு அசாத்திய மகிழ்வு… அமைதி… ஆனந்தம்…. படிக்கும் உங்களுக்கும் அப்படித்தானே இருந்தது?
குருவின் திருவடியிலே சரணடைந்தோர்க்கு காலபயம் நெருங்காது. முன் வினை தருகின்ற பிராரப்த கர்ம வினையினால் ஏற்படுகின்ற எவ்வித கஷ்ட நிலைகளையும் குருவருளாலே நாம் வெகு சுலபமாக கடந்து வந்து விட முடியும். குருவருள் குறைகளை நீக்கி நிறைவான வாழ்வைத் தரவல்லது. குருவடி பணிவோம்! குறையின்றி வாழ்வோம்! செகத்குரு செகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானவரே என்பதாலே செகத்குருவிடம் செகத்திலுள்ள அத்துனை ஜீவராசிகளுக்காகவும் ப்ரார்த்திப்போம். அவைகளுள் நாமும் ஒருவர் தாமே!
எங்கும் குருமயம் எதிலும் குருமயம்
எல்லாம் குருமயமே!
இல்லை இனிபயம் எதிலும் வரும் லயம்
சங்கரன் தரும் வரமே!
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
பெரியவா சரணம்.
#நடைராசப்பத்து
“நடராசப் பத்து” எனும் துதியானது கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகட்கு முன்பாக சிறுமணவை என தற்போது பெயரிடப்பட்டுள்ள அக்காலத்திய சிறுமணவூரில் வாழ்ந்த முனுசாமி முதலியார் எனும் சிவனடியாரால் தில்லையம்பலத்து ஆடலரசனாம் நடராசத் தெய்வத்தினைப் போற்றிப் புகழ்ந்து பாடப் பெற்றது.
விருத்த வகையைச் சேர்ந்த அந்த அற்புதமான துதிப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் அடியேனின் மனதுள்ளாக நம் கச்சியம்பலத்து நடைராசனாம் ஸ்ரீமஹாபெரியவாளுக்கு அறிந்ததோர் வகையிலே “நடைராசப் பத்து” எழுதிட வேண்டும் என்ற அவா மேலிடும்.
அவ்வகையிலாக, அவர் அருளால் அவர் தாள் வணங்கிட அடியேனின் கனவு நனவானதாம். சில.மாதங்கட்கு முன்னதாக கிட்டிய பஅக்கியத்தினை இன்று மீள் பதிவாகப் பகிர்கின்றேன்.
இசையும் பக்தியும் இசைவும் ஒரு சேர உள்ள எவரேனும் இதனை இசைப் பகிர்வாக அமைக்க முன் வருவார்களேயானால் அது நம் அனைவருக்கும் ஒரு மஹாபாக்கியமே!
அதீத அன்போடும் பக்தியோடும் ஆவல் கொள்வது நாம்; அதனை நடத்திக் கொடுப்பவர் அவர்.
இந்த எனது பிரார்த்தனைக்கு பலம் சேர்க்க உங்கள் ப்ரார்த்தனையின் துணை கிட்டுமா?
சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.
நடைராசப் பத்து:
மண்ணாளும் மனமாளும் வேதமறை நாதன்நீ
மதியோரும் போற்றும் குருநீ
மிகிரன்நீ மகிரன்நீ மகரிநீ மகலிநீ
மண்டல மிரண்டேழும் நீ
பரமன்நீ பவதிநீ பரமாத்ம ரூபம்நீ
பரவுயிர்க் குயிரும் நீயே
பாதாதிகேசன்நீ பரம குருதேவன்நீ
பெற்றவரும் உற்றவரும்நீ
பொலிவும்நீ ஒளியும்நீ யிருளும்நீ பகலும்நீ
பரம தயவாளன் நீயே
புவனங்கள் பதினான்கும் போற்றும் குருபீடத்தின்
திறமாளும் பரமேசன் நீ
எண்ணறிய தருமங்கள் நியாயங்கள் நிறைந்தோங்க
கருணையுரு கொண்டவனும் நீ
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (1)
வானாட வளியாட வழியாட விதிமாட
வனிதை காமாக்ஷியாட,
நாளாட, நூலாட, நதியாட, திரையாட
நிறைவோடு மறையுமாட,
கோனாட, குலமாட, கலியோட, குறைஓட
குமரிவரை குழவியாட,
தண்டமொடு கமண்டலம், துறவுரியில் மண்டலம்
வளமோடு திரையுமாட,
ஒளியாட, ஒலியோடு மதியாட, மாமுனியின்
தலமோடு நிறையுமாட,
வினையோட, வாழ்வோங்க, வழியோங்க, வரமீய்ந்து
வளமோடு மகிழ்வுமோங்க,
நினைவோங்க நின்னருளில், உனைப் பாட, இதுவேளை
நடமாடு தேவனுருவே
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (2)
படகென்ற வாழ்வினில் துடுப்பின்றி யல்லலுறு
சேராத கரையை எண்ணி
கடமுள்ளி லுறைஆவி கரைகின்ற நிலைதேடி
கட்டுண்டு நித்த நித்தம்
உடலுக்கு முயிராசை உள்ளத்தி லுளவாசை
ஓயாம லிரைச்சல் எனவும்
தடமின்றி தடுமாறு நிலைதன்னி லுழலூடி
வினையாலும் வலிகூடவே
தாயென்று சேயென்று உறவென்று புறம்நிற்கு
மிகையான பதம்யாவிலும்
நானின்று கதிதேடி யலையாத படியாக
நானுளேன் என்று காக்கும்
இதமாக பதமாக சந்ததந் தந்தருளும்
தயவான குருபரனுமாய்
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (3)
வினையள்ள வகையல்ல, விடமுள்ள அரவல்ல,
வித்தையுங் கூட்டவல்ல,
கனையல்ல, கனலல்ல, குறையுள்ள கனவல்ல,
மனதூறு மயக்கமகல,
சூதல்ல, வசியல்ல, மதியின்றி உழலல்ல,
இடருமோர் துயரமல்ல,
நானல்ல, தானல்ல, நயம்பிடும் நிலையல்ல,
நாணிகோ ணுதலுமல்ல
கொங்கணர் முதலாகு சித்தர்கள் ஓருருவில்
வாய்த்தநல் குருவுருவிலே
நானுண்டு குறையகல வேயென்ற பதமோடு
நீயுண்டு வாழ்வு விளங்க
என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
ஏதுளது புகலவருவாய்
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (4)
நொந்துவந் தேநின்று துயரமுஞ் சொல்முன்
னுகந்துநல் லாசிநல்கி
சந்ததமுந் தந்துயெமக் கருளாசி புரியவு
மவதாரம் புரிந்தகுருவாய்
பெற்றவர் உற்றவர் இகழாத நிலைகாண
தருமநெறி ஒழுகுவழியை
கற்றவர் மற்றவர் அறியுவகை மறைவிளங்க
வகையதனுந் தந்தகுருவாய்
தந்திமுகச் சோதரன் அழகுமுக குமரனின்
அவதாரம் நீயல்லவோ!
செந்தூர மணியுமுக மலைவாழு வனிதையவ
ளருளாலன் நீயல்லவோ!
கற்றவன் நானல்ல, கொற்றவன் நீகுரு
பெற்றவ ருற்றவர் நீயே!
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (5)
நற்றுணை நீயென்று நம்பியே நாடிவர
வரமதைப் பெற்ற வகையால்
கொற்றவன் நின்பதம் சரணேகு மடியவர்க்
கினியேதும் குறையுமுண்டோ!
வேதமுஞ் சாத்திரமுந் தோத்திரமு மறியாத
படியுந்தன் தாளதனிலே
பேதமுஞ் சாபமும் வேண்டாத நிலைவேண்டி
வந்தனையு மறிகிலேனே!
குருவுண்டு பயமில்லை குறையேது மினியில்லை
உனைகண்டு அடிபோற்றவே
நிறைவுண்டு குறையில்லை அருளுண்டு இருளில்லை
எனவொன்றி புகழ்பாடவே
வரமுண்டு வலியில்லை கனிவுண்டு துயரில்லை
எனவோடி அருள வருவாய்
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (6)
முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுமுன்ன
மெய்பொருளு மறியச் செய்வாய்!
முன்னிலென் வினைவந்து மூண்டிடும் முன்பாக
மோடோடி காத்தருளுவாய்!
தன்னைநொந் தழியாமல் தான்தேடி யலையாமல்
தவிப்பதும் இனியேகுமோ!
அன்னை காமாக்ஷியின் அருளாலன் சன்னதி
நாடிநல் லருள் பெறுவனோ!
தானென்று கர்வத்தில் தருமநெறி பிழறாமல்
தளிர்வாழ்வு தடமோடிட
தான்நின்று நாணாமல் கோணாமல் வாழ்ந்திடவு
மாகேசன் பதம் நாடிட
இன்னுமென பிறவிவரு மென்றழுது நின்சரணம்
தஞ்சமென நாடிவந்தேன்
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (7)
வஞ்சமது நெஞ்சமதில் வாயுரையி லஞ்சுகமு
மாகவுள சுற்றமிதிலே
கஞ்சமட மனதோடு குறையான வினையுடனு
மாகவுள வீதியிதனில்
தறிகெட்டு தடந்தேடி யலைவதென விதியாகி
மாற்றுவழி தேடாமலே
நெறியின்றி தருமவழி சிந்தாம லொழுகாமல்
காலமதும் வீண்போனதோ!
வந்தவழி தெரியாமல் போகுவழி புரியாமல்
நெஞ்சமுறு துயரங்களாய்
உந்துவழி தான்நொந்து சோகமதி லேயலயு
மடியார்க்கு கதியும் நீயே!
மேகமும் மாரிவள மீய்ந்தருள விளங்குநிலம்
போலருளும் செகத்குரு நீ
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (8)
மனதார பொய்யாது தருமவழி பிழறாமல்
உளமார வொழுகி நாளும்
குணமோடு பண்புநிறை வழியேநல் வினைபுரிய
மகிழோடு வாழ்வமையவே
தந்தது எந்தன்னை கொண்டது முந்தன்னை
பகருமொரு பத்தியாளன்
தந்தது நல்பத்தி வழியாடி தடமோடி
கண்டநின் திருத்தாளிலே
மனதார நாளுமினி சரணேகு வழிநல்கி
மனமிதனில் நிறையுமுருவே
வனமாலி வல்லொளிய னுருகூடி வாய்த்தவொரு
குருபாத அருளும்பெறவே
பண்ணுகிற வினையெதிலு மாதியன் நின்னருளும்
பணியுவகை செய்தருளுமே
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (9)
கண்மூன் றுடையானின் கனியுவுரு கொண்டோனே
நிலையாமை தாம்போக்குவாய்!
வண்ணாளு வளமாக வனிதையென வுருவான
காமாக்ஷி கருணைபுரிவாய்!
என்னாளு மினியுந்தன் னடிபோற்றி வாழ்ந்திடவும்
வகையான அருள்புரியுவாய்!
என்னிலே நீக்கமற நிறைகின்ற சோதியே
எம்பெரும சசிசேகரா!
விண்ணாளு வேதமறை யொலியாகி தரணியிதை
என்னாளும் காத்தருளுவாய்!
மண்ணாளு மதியோனே! மங்கலமு மருள்வாயே
மதிகூட்டும் கலைவானியே!
நடைராசப் பத்திதனை மனதார ஒலிப்போர்க்கு
மகிழ்வான வாழ்வருளுவாய்!
ஏகனே எமையாளும் பெருமானே மல்லபுர
காஞ்சிவாழ் நடைராசனே! (10)
உலகெங்கும் இருக்கிற மகா பெரியவரின் பக்தர்கள் தற்போது வேத பாராயணம், சிறப்பு ஹோமங்கள், தேவார - திருவாசகம் பாடுதல், சிறப்பு அபிஷேகம், திருவீதி உலா, அன்னதானம் என்று பிரதி மாதமும் நம் காஞ்சித் தேவனாம் வேதமுனி ஸ்ரீமஹாபெரியவாள் அவதரித்த அனுஷ நட்சத்திரத்தன்று உள்ளார்ந்த பக்தியோடு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.
சமஸ்கிருதம் தேவமொழி எனப் போற்றப்பட்டு வந்தாலும், தமிழ் மட்டுமே அறிந்த பக்தர்களும் நம் கலியுகத் தெய்வத்தைப் போற்றிட உதவும்படியாக கடந்த சில வருடங்களாக அடியேன் அறிந்த வகையிலே எழுதி வரக்கூடிய பாக்கியத்தை அம்மையப்பன் நல்கியிருப்பது அவருடைய அவ்யாஜ கருணை தாமே!
எத்துனை எழுதினாலும் இந்த நடைராசப் பத்தினை எழுதி முடிக்கையிலே மனதிலே ஒரு அசாத்திய மகிழ்வு… அமைதி… ஆனந்தம்…. படிக்கும் உங்களுக்கும் அப்படித்தானே இருந்தது?
குருவின் திருவடியிலே சரணடைந்தோர்க்கு காலபயம் நெருங்காது. முன் வினை தருகின்ற பிராரப்த கர்ம வினையினால் ஏற்படுகின்ற எவ்வித கஷ்ட நிலைகளையும் குருவருளாலே நாம் வெகு சுலபமாக கடந்து வந்து விட முடியும். குருவருள் குறைகளை நீக்கி நிறைவான வாழ்வைத் தரவல்லது. குருவடி பணிவோம்! குறையின்றி வாழ்வோம்! செகத்குரு செகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானவரே என்பதாலே செகத்குருவிடம் செகத்திலுள்ள அத்துனை ஜீவராசிகளுக்காகவும் ப்ரார்த்திப்போம். அவைகளுள் நாமும் ஒருவர் தாமே!
எங்கும் குருமயம் எதிலும் குருமயம்
எல்லாம் குருமயமே!
இல்லை இனிபயம் எதிலும் வரும் லயம்
சங்கரன் தரும் வரமே!
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM