Post by radha on Sept 4, 2020 20:37:03 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Radha Krishnan
7நி ·
Venkat Radhakrishnan
சிவ பித்தன் பெறுநர் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
1h
"நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் காஞ்சி மகா பெரியவா சரணம் ஹர ஹர சங்கரா "குதிரை வண்டிக்காரரை அழைத்துவரச் சொன்ன மகாபெரியவா!""
தயாசாகரனே உன்பெருமை என்றும் பேசுவதற்கே
கஞ்சி மாமுனியே வெண்மை என்பது உன் மனமே.
சிவஸ்வரூபமே உண்மை என்பது உன் முகம்.
தேடிவந்து, துன்பங்களை துடைத்திடும் தெய்வம்நீ நன்மை என்பது உன் அரணே நாளும் தொழுவது உன் சரணே!
மகாபெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்ட பக்தர் ஒருவர், அடிக்கடி காஞ்சிபுரம் வந்து பெரியவரை தரிசித்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
பணக்காரரான அவர், தாம் எந்தச் செயலைச் செய்யத் தொடங்கினாலும் அதனை மகாபெரியவரிடம் சொல்லி, அவரது ஆசி பெற்ற பிறகே தொடங்குவார். குடும்பத்தில் எந்த சுப நிகழ்ச்சியையும் மகானின் ஆசி பெற்றே நடத்துவார்.
அந்தப் பணக்காரர் ஒரு முறை தன் குடும்பத்தாருடன் தான் வாங்கிய புதுக்காரில் மடத்துக்கு வந்தார். கார் வாங்கியிருக்கும் விஷயத்தை மகானிடம் சொல்லி, காரின் சாவியை அவரிடம் தந்து ஆசிபெற வேண்டும் என்பது அவரது எண்ணம்.
அவர் ஸ்ரீமடத்துக்கு வந்த நேரம், மகான், மடத்தில் இல்லை. பக்கத்தில் உள்ள 'கலவை' என்கிற கிராமத்துக்குச் சென்றிருந்தார். மடத்தில் இருந்த சிப்பந்திகள் மூலம் விஷயத்தை அறிந்து கொண்ட பணக்காரர், காரில் ஏறி அங்கு சென்றார்.
பெரியவரை தரிசனம் செய்த பக்தர், கையோடு கொண்டுவந்திருந்த பழங்கள், பூக்களை ஒரு மூங்கில் தட்டில் வைத்து, அதன் மேலாக கார் சாவியை வைத்து பெரியவா முன் வைத்தார். "பெரியவா, புதுக்கார் வாங்கியிருக்கிறேன். நீங்கள் சாவியைத் தொட்டு எடுத்துத் தந்து ஆசிர்வதிக்க வேண்டும்!" பவ்யமாகச் சொன்னார்.
"ஓ புதுசா கார் வாங்கியிருக்கியா? நல்லது...!" சொன்ன பெரியவர் அவரே தொடர்ந்தார். "முதல்ல, இந்த சாவியை எடுத்துக்கோ, காரை எடுத்துக்கொண்டு நான் சொல்லும் இடத்துக்குப் போ...அங்கே உள்ள பெரிய மரத்தடியில் ஒரு பெரியவர் படுத்துக் கொண்டிருப்பார். நான் சொன்னேன் என்று அவரைக் கூப்பிடு. வழியில் நல்ல ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவு வாங்கி கொடுத்து பிறகு இங்கே அழைத்துக் கொண்டு வா!" சொன்னார்.
மகான் சொன்ன இடத்துக்குச் சென்றார் பக்தர். அங்கே கொஞ்சம் அழுக்கான உடையோடு தாடியும் மீசையுமாக ஒரு முதியவர் படுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று மகான் சொன்னதைச் சொன்னார். உடனே அந்த முதியவரின் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு தன்னிடம் இருந்த சுமாரான வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்தார்.
மகாபெரியவர் சொன்னபடியே வழியில் அவருக்கு உணவு வாங்கித் தந்து, மகான் முன் அழைத்துவந்தார் பணக்காரர்.
வந்த முதியவர் மகான் முன் பவ்யமாக கைகட்டி நிற்க, "எனக்கு முன்னால் நீங்கள் அப்படி நிற்க வேண்டாம். நீங்கள் என்னைவிட பெரியவர்!" மகாபெரியவர் சொல்ல, எல்லோரிடமும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. யார் இவர்? யார் இவர்? எல்லோரும் யோசிக்கத் தொடங்கினார்கள்.
பெரியவர் பணக்கார பக்தரைப் பார்த்தார். "இவரை யார் என்று உனக்கு மட்டுமல்ல. இங்கே இருப்பவர்களிலேயே பலருக்குத் தெரியாது. நான் ஏன் இவரை அழைத்து வரச்சொன்னேன் என்றும் தெரியாது." கொஞ்சம் நிறுத்திவிட்டு எல்லோரையும் ஒருமுறை உற்றுப் பார்த்தார் குரு.
"இவர்தான் எனக்கு சன்யாச ஆசிரமத்தின் முதல் குரு!" மீண்டும் மகான் நிறுத்த, எல்லோருக்குள்ளும் ஓர் ஆச்சரியம்.
"சன்யாசம் ஏற்பதாக பூர்வாசிரமத்தில் இருந்து கலவைக்கு வந்தபோது, அங்கிருந்து என்னை ஜட்காவில் (குதிரைவண்டி) அழைத்து வந்தவர் இவர்தான்! வரும் வழியில் ஸ்ரீமடம் குறித்தும் அங்குள்ள நடைமுறைகள் குறித்தும் தனக்குத் தெரிந்த மொழியில் தான் அறிந்த விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொண்டே வந்தார். இவர் மூலம் பல விஷயங்களை நான் அறிந்து கொண்டேன். இங்கே வருவதற்கு முன்பே, இங்கே உள்ள நடைமுறைகளை எனக்கு சொல்லித் தந்ததால் இவரும் என்னுடைய குருமார்களில் ஒருவர் என்கிற ஸ்தானத்துக்கும் உரியவராகிறார். அதனால்தான், என்னைவிட பெரியவர் என்று சொன்னேன்.
அதுமட்டுமல்ல, மிகவும் ராசியானவர். கார் வாங்கினாலும் அதில் உள்ள மோட்டாரை ஹார்ஸ்பவர் என்றுதானே சொல்வார்கள். இவரிடம் சொந்தமாகவே இரண்டு 'ஹார்ஸ்' இருக்கிறது. இவரே ஹார்ஸ் கண்ட்ரோலராகவும் இருக்கிறார். அதைவிட இவர் ரொம்ப ராசியான கைக்காரர். இவரிடம் ஒரு பொருளைக் கொடுத்து வாங்கினால், அது மேலும் மேலும் வளரும். பார்த்தசாரதி மாதிரி கையில் சாட்டைவேறு இவரிடம் உண்டு!"சொல்லிவிட்டு மென்மையாக சிரித்த பெரியவர்,
"நீ உன் கார் சாவியை தட்சணையோடு இவரிடம் கொடுத்து, இவர் கையால் வாங்கி கொள்...உனக்கு மேலும் மேலும் வளர்ச்சி உண்டாகும்...!" மகான் சொன்னபடியே செய்தார் பணக்காரர்.
பணக்காரர் தட்சணையாகத் தந்த பணத்தோடு, ஸ்ரீமடத்தின் சார்பில் குதிரை வண்டிக்காரருக்கு சால்வை தந்து, பழங்கள், பிரசாதங்களோடு அனுப்பிவைத்தார் மகாபெரியவர்.
எங்கோ ஒரு கிராமத்தில் மரத்தடியில் பசியோடு படுத்துக்கொண்டு, மகானை ஸ்ரீமடத்துக்கு தான் அழைத்துவந்ததை மனதுக்குள் அசைபோட்டுக்கொண்டிருந்த குதிரை வண்டிக்காரருக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, மகான் அதைத் தமது ஞானதிருஷ்டியால் உணர்ந்து கொண்டதோ அதற்காகவே பணக்காரரை அனுப்பி அவரை அழைத்துவந்து அனுகிரஹம் செய்ததோ தெரியவே தெரியாத தேவ ரகசியம் என்பதுதான் நிஜம்.
உன் பாதமே என் உறைவிடம்.. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Radha Krishnan
7நி ·
Venkat Radhakrishnan
சிவ பித்தன் பெறுநர் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
1h
"நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் காஞ்சி மகா பெரியவா சரணம் ஹர ஹர சங்கரா "குதிரை வண்டிக்காரரை அழைத்துவரச் சொன்ன மகாபெரியவா!""
தயாசாகரனே உன்பெருமை என்றும் பேசுவதற்கே
கஞ்சி மாமுனியே வெண்மை என்பது உன் மனமே.
சிவஸ்வரூபமே உண்மை என்பது உன் முகம்.
தேடிவந்து, துன்பங்களை துடைத்திடும் தெய்வம்நீ நன்மை என்பது உன் அரணே நாளும் தொழுவது உன் சரணே!
மகாபெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்ட பக்தர் ஒருவர், அடிக்கடி காஞ்சிபுரம் வந்து பெரியவரை தரிசித்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
பணக்காரரான அவர், தாம் எந்தச் செயலைச் செய்யத் தொடங்கினாலும் அதனை மகாபெரியவரிடம் சொல்லி, அவரது ஆசி பெற்ற பிறகே தொடங்குவார். குடும்பத்தில் எந்த சுப நிகழ்ச்சியையும் மகானின் ஆசி பெற்றே நடத்துவார்.
அந்தப் பணக்காரர் ஒரு முறை தன் குடும்பத்தாருடன் தான் வாங்கிய புதுக்காரில் மடத்துக்கு வந்தார். கார் வாங்கியிருக்கும் விஷயத்தை மகானிடம் சொல்லி, காரின் சாவியை அவரிடம் தந்து ஆசிபெற வேண்டும் என்பது அவரது எண்ணம்.
அவர் ஸ்ரீமடத்துக்கு வந்த நேரம், மகான், மடத்தில் இல்லை. பக்கத்தில் உள்ள 'கலவை' என்கிற கிராமத்துக்குச் சென்றிருந்தார். மடத்தில் இருந்த சிப்பந்திகள் மூலம் விஷயத்தை அறிந்து கொண்ட பணக்காரர், காரில் ஏறி அங்கு சென்றார்.
பெரியவரை தரிசனம் செய்த பக்தர், கையோடு கொண்டுவந்திருந்த பழங்கள், பூக்களை ஒரு மூங்கில் தட்டில் வைத்து, அதன் மேலாக கார் சாவியை வைத்து பெரியவா முன் வைத்தார். "பெரியவா, புதுக்கார் வாங்கியிருக்கிறேன். நீங்கள் சாவியைத் தொட்டு எடுத்துத் தந்து ஆசிர்வதிக்க வேண்டும்!" பவ்யமாகச் சொன்னார்.
"ஓ புதுசா கார் வாங்கியிருக்கியா? நல்லது...!" சொன்ன பெரியவர் அவரே தொடர்ந்தார். "முதல்ல, இந்த சாவியை எடுத்துக்கோ, காரை எடுத்துக்கொண்டு நான் சொல்லும் இடத்துக்குப் போ...அங்கே உள்ள பெரிய மரத்தடியில் ஒரு பெரியவர் படுத்துக் கொண்டிருப்பார். நான் சொன்னேன் என்று அவரைக் கூப்பிடு. வழியில் நல்ல ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவு வாங்கி கொடுத்து பிறகு இங்கே அழைத்துக் கொண்டு வா!" சொன்னார்.
மகான் சொன்ன இடத்துக்குச் சென்றார் பக்தர். அங்கே கொஞ்சம் அழுக்கான உடையோடு தாடியும் மீசையுமாக ஒரு முதியவர் படுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று மகான் சொன்னதைச் சொன்னார். உடனே அந்த முதியவரின் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு தன்னிடம் இருந்த சுமாரான வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்தார்.
மகாபெரியவர் சொன்னபடியே வழியில் அவருக்கு உணவு வாங்கித் தந்து, மகான் முன் அழைத்துவந்தார் பணக்காரர்.
வந்த முதியவர் மகான் முன் பவ்யமாக கைகட்டி நிற்க, "எனக்கு முன்னால் நீங்கள் அப்படி நிற்க வேண்டாம். நீங்கள் என்னைவிட பெரியவர்!" மகாபெரியவர் சொல்ல, எல்லோரிடமும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. யார் இவர்? யார் இவர்? எல்லோரும் யோசிக்கத் தொடங்கினார்கள்.
பெரியவர் பணக்கார பக்தரைப் பார்த்தார். "இவரை யார் என்று உனக்கு மட்டுமல்ல. இங்கே இருப்பவர்களிலேயே பலருக்குத் தெரியாது. நான் ஏன் இவரை அழைத்து வரச்சொன்னேன் என்றும் தெரியாது." கொஞ்சம் நிறுத்திவிட்டு எல்லோரையும் ஒருமுறை உற்றுப் பார்த்தார் குரு.
"இவர்தான் எனக்கு சன்யாச ஆசிரமத்தின் முதல் குரு!" மீண்டும் மகான் நிறுத்த, எல்லோருக்குள்ளும் ஓர் ஆச்சரியம்.
"சன்யாசம் ஏற்பதாக பூர்வாசிரமத்தில் இருந்து கலவைக்கு வந்தபோது, அங்கிருந்து என்னை ஜட்காவில் (குதிரைவண்டி) அழைத்து வந்தவர் இவர்தான்! வரும் வழியில் ஸ்ரீமடம் குறித்தும் அங்குள்ள நடைமுறைகள் குறித்தும் தனக்குத் தெரிந்த மொழியில் தான் அறிந்த விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொண்டே வந்தார். இவர் மூலம் பல விஷயங்களை நான் அறிந்து கொண்டேன். இங்கே வருவதற்கு முன்பே, இங்கே உள்ள நடைமுறைகளை எனக்கு சொல்லித் தந்ததால் இவரும் என்னுடைய குருமார்களில் ஒருவர் என்கிற ஸ்தானத்துக்கும் உரியவராகிறார். அதனால்தான், என்னைவிட பெரியவர் என்று சொன்னேன்.
அதுமட்டுமல்ல, மிகவும் ராசியானவர். கார் வாங்கினாலும் அதில் உள்ள மோட்டாரை ஹார்ஸ்பவர் என்றுதானே சொல்வார்கள். இவரிடம் சொந்தமாகவே இரண்டு 'ஹார்ஸ்' இருக்கிறது. இவரே ஹார்ஸ் கண்ட்ரோலராகவும் இருக்கிறார். அதைவிட இவர் ரொம்ப ராசியான கைக்காரர். இவரிடம் ஒரு பொருளைக் கொடுத்து வாங்கினால், அது மேலும் மேலும் வளரும். பார்த்தசாரதி மாதிரி கையில் சாட்டைவேறு இவரிடம் உண்டு!"சொல்லிவிட்டு மென்மையாக சிரித்த பெரியவர்,
"நீ உன் கார் சாவியை தட்சணையோடு இவரிடம் கொடுத்து, இவர் கையால் வாங்கி கொள்...உனக்கு மேலும் மேலும் வளர்ச்சி உண்டாகும்...!" மகான் சொன்னபடியே செய்தார் பணக்காரர்.
பணக்காரர் தட்சணையாகத் தந்த பணத்தோடு, ஸ்ரீமடத்தின் சார்பில் குதிரை வண்டிக்காரருக்கு சால்வை தந்து, பழங்கள், பிரசாதங்களோடு அனுப்பிவைத்தார் மகாபெரியவர்.
எங்கோ ஒரு கிராமத்தில் மரத்தடியில் பசியோடு படுத்துக்கொண்டு, மகானை ஸ்ரீமடத்துக்கு தான் அழைத்துவந்ததை மனதுக்குள் அசைபோட்டுக்கொண்டிருந்த குதிரை வண்டிக்காரருக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, மகான் அதைத் தமது ஞானதிருஷ்டியால் உணர்ந்து கொண்டதோ அதற்காகவே பணக்காரரை அனுப்பி அவரை அழைத்துவந்து அனுகிரஹம் செய்ததோ தெரியவே தெரியாத தேவ ரகசியம் என்பதுதான் நிஜம்.
உன் பாதமே என் உறைவிடம்.. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM