Post by radha on Aug 31, 2020 7:27:58 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
{விமான விபத்தில் தப்பிய அல்லாடி கிருஷ்ணஸ்வாமி
ஐயரின் மகனும் மருமகளும்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-25-01-2018 தேதியிட்ட குமுதம் பக்தி.
ஞானிகள் முக்காலமும் உணர்ந்தவான்னு சொல்லுவா,
ஒருத்தரைப் பார்த்தாலே அவாளுக்கு வந்தது,
வந்திருக்கிறது,வரப்போறதுன்னு எல்லாத்தையும்
ஞானிகளால் தெரிஞ்சுக்க முடியும்.
அதேசமயம் இயற்கைக்கு மாறான எதையும் அவா
செய்ய மாட்டா. உதாரணமா ஒருத்தருக்கு ஏதோ ஒரு
சங்கடம் வரப்போறதுன்னா,அதை அப்படியே அவாகிட்டே
சொல்ல மாட்டா. அதற்கு மாறா,சங்கடம் எதனால
வரப்போறதோ அதைச் செய்ய வேண்டாம்னு சூசகமா
சொல்லுவா. மத்தபடி இதைச் செஞ்சா பாதிப்பு
வரும்னெல்லாம் எச்சரிக்க மாட்டா.
அவா சொல்றதைக் கேட்டுண்டு அதும்படி நடந்தா பிரச்னை
வராம தப்பிக்கலாம். ஒருவேளை வந்தாலும் அதுலேர்ந்து
தப்பிக்க மார்க்கம் இருக்கும். அதேசமயம் மீறி நடந்தா,
சங்கடத்துல சிக்கிண்டு சஞ்சலப்பட நேரிட்டுடலாம்.
மகாபெரியவா, முக்காலமும் உணர்ந்த ஞானிங்கறதை
நிரூபிக்கறப்புல எத்தனை எத்தனையோ சம்பவங்கள்
நடந்திருக்கு. அதுல ஒண்ணைத்தான் இப்போ
சொல்லப்போறேன்.
மகாபெரியவாளோட பரம பக்தர்கள்ல அல்லாடி
கிருஷ்ணசாமி ஐயரும் ஒருத்தர். அவர் மட்டுமல்லாம
அவரோட குடும்பமே பரம பக்தர்கள்தான்.
காஞ்சி மடத்துல மகாபெரியவா தங்கியிருந்த காலகட்டம்.
ஒருநாள், ஆசார்யாளை தரிசிக்க வந்த பக்தகோடிகள்ல
இளம் தம்பதிகளும் இருந்தா. வரிசையா தரிசனம்
பண்ணிண்டு இருந்தவாள்ல. அவாளோட முறை வந்ததும்
"அல்லாடி கிருஷ்ணஸ்வாமியோட புத்ரன் தானே நீ?
இவ உன்னோட பார்யாளா?அப்படின்னு கேட்டார்,பெரியவா.
வந்தவர்,"ஆமாம் பெரியவா.இவ என்னோட ஆத்துக்காரி.
ரெண்டு பேருமே டாக்டரா இருக்கோம். நாளன்னைக்கு
அமெரிக்கா பொறப்படறோம். அதான் பெரியவாகிட்டே
ஆசிர்வாதம் வாங்கிண்டு.."
"நீ நாளன்னிக்கு பொறப்பட வேண்டாம். ஒரு வாரத்துக்கு
பயணத்தை ஒத்திவைச்சுக்கோ!" வந்தவர் சொல்லி
முடிக்கறதுக்கு முன்னால குறுக்கிட்டுச் சொன்னார்,
மகாபெரியவா.
அதைக் கேட்டதுதான் தாமதம் வந்தவருக்கு தர்ம
சங்கடமாயிடுத்து. "இல்லை பெரியவா ஃப்ளைட்ல
டிக்கெட்டெல்லாம் கூட ரிசர்வ்.." என்று ஏதோ
தொடங்கினவர், பெரியவாளோட முகத்துல தெரிஞ்ச
கண்டிப்பைப் பார்த்ததும் சொல்லவந்ததை அப்படியே
நிறுத்திட்டு, " சரி பெரியவா நீங்க சொல்றாப்புலயே
செய்கிறேன். ஃப்ளைட் டிக்கெட்டை கேன்சல் செய்துட்டு
அடுத்த வாரத்துக்கு தள்ளிவைச்சுடறேன்!" பணிவாகச்
சொன்னார்.
"க்ஷேமமா இருங்கோ..!" சொன்ன மகாபெரியவா
கல்கண்டும் குங்குமமும் குடுத்து ஆசிர்வதித்தார்.
அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ரொம்ப பெரிய விஷயம்.
வந்தவர் அமெரிக்காவுக்குப் போறதுக்காக டிக்கெட் புக்
பண்ணியிருக்கறதா சொன்னாரே...அந்த ஃப்ளைட் என்ன
ஆச்சு தெரியுமா? பொறப்பட்ட கொஞ்ச நேரத்துலயே
ஏதோ இயந்திரக் கோளாறால அப்படியே வெடிச்சு
சிதறிடுத்து. அதுல பயணம் செஞ்சவா ஒருத்தர் கூட
தப்பிக்கலை.
இந்த நியூஸ் அதுக்கு அடுத்த நாள் பேப்பர்ல
வந்தப்போதான் எல்லாருக்கும் தெரிஞ்சது.அன்னிக்கு
சாயந்தரமே மறுபடியும் அவா ரெண்டுபேரும் வந்து
மகாபெரியவாளை தரிசிச்சு சாஷ்டாங்கமா நமஸ்காரம்
செஞ்சா.அப்போ அவா கண்ணுலேர்ந்து வழிஞ்ச நீர்,
மகா பெரியவாளுக்கு பாதாபிஷேகம் செய்யறாப்புல
பெருகி ஓடித்து.
அங்கே இருந்த எல்லாரும் ஒருசேர 'ஜயஜய சங்கர,
ஹரஹர சங்கர'ன்னு கோஷம் எழுப்பினா.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
{விமான விபத்தில் தப்பிய அல்லாடி கிருஷ்ணஸ்வாமி
ஐயரின் மகனும் மருமகளும்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-25-01-2018 தேதியிட்ட குமுதம் பக்தி.
ஞானிகள் முக்காலமும் உணர்ந்தவான்னு சொல்லுவா,
ஒருத்தரைப் பார்த்தாலே அவாளுக்கு வந்தது,
வந்திருக்கிறது,வரப்போறதுன்னு எல்லாத்தையும்
ஞானிகளால் தெரிஞ்சுக்க முடியும்.
அதேசமயம் இயற்கைக்கு மாறான எதையும் அவா
செய்ய மாட்டா. உதாரணமா ஒருத்தருக்கு ஏதோ ஒரு
சங்கடம் வரப்போறதுன்னா,அதை அப்படியே அவாகிட்டே
சொல்ல மாட்டா. அதற்கு மாறா,சங்கடம் எதனால
வரப்போறதோ அதைச் செய்ய வேண்டாம்னு சூசகமா
சொல்லுவா. மத்தபடி இதைச் செஞ்சா பாதிப்பு
வரும்னெல்லாம் எச்சரிக்க மாட்டா.
அவா சொல்றதைக் கேட்டுண்டு அதும்படி நடந்தா பிரச்னை
வராம தப்பிக்கலாம். ஒருவேளை வந்தாலும் அதுலேர்ந்து
தப்பிக்க மார்க்கம் இருக்கும். அதேசமயம் மீறி நடந்தா,
சங்கடத்துல சிக்கிண்டு சஞ்சலப்பட நேரிட்டுடலாம்.
மகாபெரியவா, முக்காலமும் உணர்ந்த ஞானிங்கறதை
நிரூபிக்கறப்புல எத்தனை எத்தனையோ சம்பவங்கள்
நடந்திருக்கு. அதுல ஒண்ணைத்தான் இப்போ
சொல்லப்போறேன்.
மகாபெரியவாளோட பரம பக்தர்கள்ல அல்லாடி
கிருஷ்ணசாமி ஐயரும் ஒருத்தர். அவர் மட்டுமல்லாம
அவரோட குடும்பமே பரம பக்தர்கள்தான்.
காஞ்சி மடத்துல மகாபெரியவா தங்கியிருந்த காலகட்டம்.
ஒருநாள், ஆசார்யாளை தரிசிக்க வந்த பக்தகோடிகள்ல
இளம் தம்பதிகளும் இருந்தா. வரிசையா தரிசனம்
பண்ணிண்டு இருந்தவாள்ல. அவாளோட முறை வந்ததும்
"அல்லாடி கிருஷ்ணஸ்வாமியோட புத்ரன் தானே நீ?
இவ உன்னோட பார்யாளா?அப்படின்னு கேட்டார்,பெரியவா.
வந்தவர்,"ஆமாம் பெரியவா.இவ என்னோட ஆத்துக்காரி.
ரெண்டு பேருமே டாக்டரா இருக்கோம். நாளன்னைக்கு
அமெரிக்கா பொறப்படறோம். அதான் பெரியவாகிட்டே
ஆசிர்வாதம் வாங்கிண்டு.."
"நீ நாளன்னிக்கு பொறப்பட வேண்டாம். ஒரு வாரத்துக்கு
பயணத்தை ஒத்திவைச்சுக்கோ!" வந்தவர் சொல்லி
முடிக்கறதுக்கு முன்னால குறுக்கிட்டுச் சொன்னார்,
மகாபெரியவா.
அதைக் கேட்டதுதான் தாமதம் வந்தவருக்கு தர்ம
சங்கடமாயிடுத்து. "இல்லை பெரியவா ஃப்ளைட்ல
டிக்கெட்டெல்லாம் கூட ரிசர்வ்.." என்று ஏதோ
தொடங்கினவர், பெரியவாளோட முகத்துல தெரிஞ்ச
கண்டிப்பைப் பார்த்ததும் சொல்லவந்ததை அப்படியே
நிறுத்திட்டு, " சரி பெரியவா நீங்க சொல்றாப்புலயே
செய்கிறேன். ஃப்ளைட் டிக்கெட்டை கேன்சல் செய்துட்டு
அடுத்த வாரத்துக்கு தள்ளிவைச்சுடறேன்!" பணிவாகச்
சொன்னார்.
"க்ஷேமமா இருங்கோ..!" சொன்ன மகாபெரியவா
கல்கண்டும் குங்குமமும் குடுத்து ஆசிர்வதித்தார்.
அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ரொம்ப பெரிய விஷயம்.
வந்தவர் அமெரிக்காவுக்குப் போறதுக்காக டிக்கெட் புக்
பண்ணியிருக்கறதா சொன்னாரே...அந்த ஃப்ளைட் என்ன
ஆச்சு தெரியுமா? பொறப்பட்ட கொஞ்ச நேரத்துலயே
ஏதோ இயந்திரக் கோளாறால அப்படியே வெடிச்சு
சிதறிடுத்து. அதுல பயணம் செஞ்சவா ஒருத்தர் கூட
தப்பிக்கலை.
இந்த நியூஸ் அதுக்கு அடுத்த நாள் பேப்பர்ல
வந்தப்போதான் எல்லாருக்கும் தெரிஞ்சது.அன்னிக்கு
சாயந்தரமே மறுபடியும் அவா ரெண்டுபேரும் வந்து
மகாபெரியவாளை தரிசிச்சு சாஷ்டாங்கமா நமஸ்காரம்
செஞ்சா.அப்போ அவா கண்ணுலேர்ந்து வழிஞ்ச நீர்,
மகா பெரியவாளுக்கு பாதாபிஷேகம் செய்யறாப்புல
பெருகி ஓடித்து.
அங்கே இருந்த எல்லாரும் ஒருசேர 'ஜயஜய சங்கர,
ஹரஹர சங்கர'ன்னு கோஷம் எழுப்பினா.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM