Post by radha on Aug 25, 2020 12:14:31 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
மாவடி தெய்வம் - மஹா பெரியவா.
கீழ்கண்ட நிகழ்ச்சியை புரொபஸர் கல்யாணராமன் என்பவர் அந்த டாக்டரிடமிருந்து கேட்டு விவரித்துள்ளார். மேலும் அதே டாக்டருடன் ஸ்ரீ பெரியவாள் தரிசனத்திற்கு மகாராஷ்டிராவில் ஒரு ஊருக்கு சென்றபோது நடந்த சம்பவத்தை கல்யாணராமன் சொல்லி வியக்கிறார்.
அந்த ஊருக்கு சென்றபோது ஸ்ரீ பெரியவர் மூன்று நாட்களுக்கு முன்பே அந்த ஊரை விட்டு கிளம்பி அருகில் ஒரு ஆற்றங்கரையோரம் அருளிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தே அங்கே விரைந்தனர்.
அங்கே சென்றடைந்தபோது ஸ்ரீ பெரியவா ஒரு மாந்தோட்டத்தில் தங்கியிருப்பது தெரிந்தது. ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்கு அங்கு வரும் எல்லா பக்தர்களுக்கும் அந்த மாந்தோட்டத்தில் எல்லா வசதியும் அந்த தோட்ட சொந்தக்காரர் செய்திருந்தது எல்லோருக்கும் திருப்தியளித்திருந்தது.
அந்த தோட்டத்து சொந்தக்காரர் பற்றிய ஒரு அதிசய தகவலை மடத்தில் சேவை செய்பவர்கள் கல்யாணராமன் அவர்களிடம் விவரித்தனர்.
ஸ்ரீ மஹா பெரியவா அதற்குமுன் அருள்பாலித்துக் கொண்டிருந்த ஊருக்கு ஒரு அன்பர் தினமும் வருவார் தினமும் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க வரும் அந்த முதியவர், ஸ்ரீ மகானின் அருகே வராமல் ஒரு ஓரமாக நிற்பார். ஒன்றும் பேசாமல் சென்றுவிடுவார்.
தினமும் இதை கவனித்துக் கொண்டிருந்த கருணாமூர்த்தியாம் ஸ்ரீ பெரியவா அந்த முதியவரை அருகே அழைத்தார். அந்த அன்பருக்கு என்ன வேண்டுமென்று ஸ்ரீ பெரியவா கேட்க அன்பர் பதிலளித்தார்.
“நான் இந்த பகுதிக்கு ஒரு தினக்கூலியாக வந்தேன். மெதுவா நான் மேஸ்திரியாகி, இரு சின்ன ஒப்பந்தக்காரர் என்று வளர்ந்தேன். ஸ்ரீ பெரியவாளை பிரார்தித்து வந்ததாலே நான் இப்போ பெரிய காண்டிராக்டராக உயர்ந்துட்டேன் எல்லாம் பெரியவாளின் கருணையாலேதான். இப்போ எனக்கு ஏராளமா சொத்து, ஊருக்கு வெளியே பல நிலபுலன்கள் இருக்கு. என்னோட பாக்யம் ஸ்ரீ பெரியவா இந்த ஊருக்கு வந்து அருளிட்டிருக்கிறதா தெரிஞ்சது. அதனால பெரியவாளை தரிசனம் செய்ய தினமும் வந்து கொண்டிருக்கேன். ஸ்ரீ பெரியவாளை என்னோட தோப்புக்கும், வீட்டிற்கும் அழைக்கலாம்னு ஆசைதான், ஆனா நான் கீழ் ஜாதியை சேர்ந்தவனானதாலே இதை எப்படி கேட்பதுன்னு பயம். ஸ்ரீ பெரியவா என்னோட இடத்துக்கு வரமாட்டார்னு எல்லோரும் சொன்னதாலே எனக்கு தயக்கமா இருந்தது. அதனாலே தினமும் வந்து கேட்க தைரியமில்லாம் நின்னுட்டு போயிடறேன்”.
என்று அந்த முதியவர் சொன்னவுடன் சாட்சாத் ஈஸ்வரராம் பரமதயாளர் ஸ்ரீ பெரியவா “நான் இந்த ஊருக்கு வந்த முக்கிய காரணமே உன்னை பார்கணும்னுதான். நான் உங்களோட வீட்டுக்கு வரதோடு மட்டுமில்லே, அங்கேயே தங்கறதாகவும் நினைச்சுண்டிருக்கேன்”.
இப்படி அனுக்ரஹித்து அந்த பக்தரை அனுப்பிவைத்தவர் தன் அடுத்த “கேம்ப்”பை சொன்னது போலவே அன்பரின் மாந்தோப்பிலேயே மாற்றி தற்போது பத்து நாட்களாக அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.
இதை கேட்ட கல்யாணராமன் அவர்களுக்கு ஸ்ரீ பெரியவாளின் மாமனதின் மேன்மையை நினைக்கையில் மெய்சிலிர்த்தது
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
மாவடி தெய்வம் - மஹா பெரியவா.
கீழ்கண்ட நிகழ்ச்சியை புரொபஸர் கல்யாணராமன் என்பவர் அந்த டாக்டரிடமிருந்து கேட்டு விவரித்துள்ளார். மேலும் அதே டாக்டருடன் ஸ்ரீ பெரியவாள் தரிசனத்திற்கு மகாராஷ்டிராவில் ஒரு ஊருக்கு சென்றபோது நடந்த சம்பவத்தை கல்யாணராமன் சொல்லி வியக்கிறார்.
அந்த ஊருக்கு சென்றபோது ஸ்ரீ பெரியவர் மூன்று நாட்களுக்கு முன்பே அந்த ஊரை விட்டு கிளம்பி அருகில் ஒரு ஆற்றங்கரையோரம் அருளிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தே அங்கே விரைந்தனர்.
அங்கே சென்றடைந்தபோது ஸ்ரீ பெரியவா ஒரு மாந்தோட்டத்தில் தங்கியிருப்பது தெரிந்தது. ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்கு அங்கு வரும் எல்லா பக்தர்களுக்கும் அந்த மாந்தோட்டத்தில் எல்லா வசதியும் அந்த தோட்ட சொந்தக்காரர் செய்திருந்தது எல்லோருக்கும் திருப்தியளித்திருந்தது.
அந்த தோட்டத்து சொந்தக்காரர் பற்றிய ஒரு அதிசய தகவலை மடத்தில் சேவை செய்பவர்கள் கல்யாணராமன் அவர்களிடம் விவரித்தனர்.
ஸ்ரீ மஹா பெரியவா அதற்குமுன் அருள்பாலித்துக் கொண்டிருந்த ஊருக்கு ஒரு அன்பர் தினமும் வருவார் தினமும் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க வரும் அந்த முதியவர், ஸ்ரீ மகானின் அருகே வராமல் ஒரு ஓரமாக நிற்பார். ஒன்றும் பேசாமல் சென்றுவிடுவார்.
தினமும் இதை கவனித்துக் கொண்டிருந்த கருணாமூர்த்தியாம் ஸ்ரீ பெரியவா அந்த முதியவரை அருகே அழைத்தார். அந்த அன்பருக்கு என்ன வேண்டுமென்று ஸ்ரீ பெரியவா கேட்க அன்பர் பதிலளித்தார்.
“நான் இந்த பகுதிக்கு ஒரு தினக்கூலியாக வந்தேன். மெதுவா நான் மேஸ்திரியாகி, இரு சின்ன ஒப்பந்தக்காரர் என்று வளர்ந்தேன். ஸ்ரீ பெரியவாளை பிரார்தித்து வந்ததாலே நான் இப்போ பெரிய காண்டிராக்டராக உயர்ந்துட்டேன் எல்லாம் பெரியவாளின் கருணையாலேதான். இப்போ எனக்கு ஏராளமா சொத்து, ஊருக்கு வெளியே பல நிலபுலன்கள் இருக்கு. என்னோட பாக்யம் ஸ்ரீ பெரியவா இந்த ஊருக்கு வந்து அருளிட்டிருக்கிறதா தெரிஞ்சது. அதனால பெரியவாளை தரிசனம் செய்ய தினமும் வந்து கொண்டிருக்கேன். ஸ்ரீ பெரியவாளை என்னோட தோப்புக்கும், வீட்டிற்கும் அழைக்கலாம்னு ஆசைதான், ஆனா நான் கீழ் ஜாதியை சேர்ந்தவனானதாலே இதை எப்படி கேட்பதுன்னு பயம். ஸ்ரீ பெரியவா என்னோட இடத்துக்கு வரமாட்டார்னு எல்லோரும் சொன்னதாலே எனக்கு தயக்கமா இருந்தது. அதனாலே தினமும் வந்து கேட்க தைரியமில்லாம் நின்னுட்டு போயிடறேன்”.
என்று அந்த முதியவர் சொன்னவுடன் சாட்சாத் ஈஸ்வரராம் பரமதயாளர் ஸ்ரீ பெரியவா “நான் இந்த ஊருக்கு வந்த முக்கிய காரணமே உன்னை பார்கணும்னுதான். நான் உங்களோட வீட்டுக்கு வரதோடு மட்டுமில்லே, அங்கேயே தங்கறதாகவும் நினைச்சுண்டிருக்கேன்”.
இப்படி அனுக்ரஹித்து அந்த பக்தரை அனுப்பிவைத்தவர் தன் அடுத்த “கேம்ப்”பை சொன்னது போலவே அன்பரின் மாந்தோப்பிலேயே மாற்றி தற்போது பத்து நாட்களாக அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.
இதை கேட்ட கல்யாணராமன் அவர்களுக்கு ஸ்ரீ பெரியவாளின் மாமனதின் மேன்மையை நினைக்கையில் மெய்சிலிர்த்தது
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM