Post by radha on Aug 23, 2020 7:43:23 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
முன்னுரிமை எங்களுக்கே!
கடந்த, 1941ல் நாகப்பட்டினத்தில் காஞ்சிப் பெரியவர் இருந்த போது, அங்குள்ள விநாயகர் கோவிலில் பெரியவருடன் வந்த சிலர் சிதறுகாய் உடைக்க முன்வந்தனர். இதை கவனித்த சிறுவர்கள் சிலர் தேங்காயை எடுக்க விரைந்தனர். பெரியவர் மீது சிறுவர்கள் இடித்திடக் கூடாதே என்ற பயத்தில் அங்கிருந்த பக்தர்கள் சிறுவர்களை விரட்டினர்.
உடனே ஒரு சிறுவன் ஆவேசமாக, 'பிள்ளையாருக்கு உடைத்த சிதறுகாயை எடுக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதை எடுக்க வரத்தான் செய்வோம்' என்றான். சிறுவனின் பேச்சில் இருந்த நியாயத்தை பெரியவரும் ஏற்றுக் கொண்டார். விநாயகர் வழிபாட்டில் குழந்தைகளுக்கே முன்னுரிமை என்பதை அங்கிருந்தவர்கள் உணர்ந்தனர்.
இந்த பழக்கம் இங்கு மட்டுமே!
தேங்காயின் மீதுள்ள கனமாக ஓட்டை உடைத்தால் உள்ளே இனிய பருப்பும், இளநீரும் இருக்கும். அதுபோல, மனிதனும் அகங்கார எண்ணத்தை விட்டு விநாயகரைச் சரணடைந்தால் வாழ்வு இனிக்கும் என்பதே சிதறுகாய் உடைப்பதன் தத்துவம். இதற்கான புராண காரணமும் ஒன்றும் உண்டு.
ஒருமுறை சிவனிடம், 'உங்களின் சிரசையே எனக்கு பலியிட வேண்டும்' என கேட்டார் விநாயகர். தன்னைப் போல மூன்று கண்கள் கொண்ட தேங்காயை சிவன் படைத்து, அதை விநாயகருக்கு அர்ப்பணித்தார். இதன் அடிப்படையில் விநாயகர் வழிபாட்டில் சிதறுகாய் இடும் பழக்கம் ஏற்பட்டது. இது, தமிழகம் தவிர நாட்டின் மற்ற பகுதிகளில் இல்லை.
முதற்கடவுள் விநாயகரும், மங்கள மூர்த்தியான அனுமனும் இணைந்த திருக்கோலம் ஆதியந்த பிரபு. இவரை வழிபட்டால் சுப விஷயங்கள் இனிதே நிறைவேறும்.
முதல் பிள்ளை சிவனுக்கு மூத்த பிள்ளை
பார்வதி, பரமேஸ்வரனின் பிள்ளைகள் விநாயகர், முருகன் என்பது தெரியும். ஆனால் மூத்த பிள்ளை விநாயகரை மட்டும் 'பிள்ளையார்' என மதிப்புடன் அழைக்கிறோம். குடும்பத்தில் தந்தையை 'தந்தையார்' என்றும், தாயை 'தாயார்' என்றும், தமையனை 'தமையனார்' என்றும், அண்ணியை 'அண்ணியார்' என்றெல்லாம் மரியாதையுடன் அழைக்கலாம். ஆனால், நம் வீட்டுப் பிள்ளைகளை 'பிள்ளையார்' என்று அழைப்பதில்லை. அந்த மரியாதை விநாயகருக்கு மட்டுமே தரப்படுகிறது. இதற்கு காரணம் பார்வதி, பரமேஸ்வரன் என்ற பெரிய வீட்டுக்காரர்களின் பிள்ளை விநாயகர் என்பதோடு, கருணை, பலம், புத்திக்கூர்மை, அன்புமனம் கொண்டவர் என்பதால், 'பிள்ளையார்' என போற்றப்படுகிறார்.
விநாயகரை வழிபட பலன் உடனடியாகக் கிடைக்கும் என்பதால், 'கணபதி பூஜை கைமேல் பலன்' என்று பழமொழியாகச் சொல்வர்.
ஆக்கும் தந்தம்... அழிக்கவும் செய்யும்!
மயில் என்றால் தோகை, கவரிமான் என்றால் வால், சிங்கம் என்றால் பிடரி என்பது போல, யானை என்றாலே தந்தம் தான் அழகு. யானையும் தன் தந்தத்தை எப்போதும் அக்கறையோடு பாதுகாக்கும். ஆனால், விநாயகர் என்னும் யானை மட்டும் தனக்கு அழகும், கவுரவமும் தரும் தந்தத்தை தியாகம் செய்ய முன் வந்தது. மகாபாரதம் என்னும் காவியம் எழுத தன்
ஒற்றைக் கொம்பை எழுத்தாணியாக்கிய பெருமை விநாயகரைச் சேரும். இப்படி ஆக்கப்பணியில் ஈடுபட தந்தம் கொடுத்த விநாயகர், அசுர சக்தியை அழிக்கவும் பயன்படுத்தினார். கஜமுகாசுரனை வதம் செய்ய ஆயுதம் எதையும் பயன்படுத்தவில்லை; தந்தத்தாலேயே குத்திக் கொன்றார்.
வக்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், துாம்ரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்கள் விநாயகர் எடுத்ததாக விநாயகர்புராணம் கூறுகிறது.
விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஆவணி வளர்பிறை சதுர்த்தி முதல், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி வரை மேற்கொள்ள வேண்டும் என்று விநாயகர் புராணம் கூறுகிறது.
மனித முகத்தோடு இருக்கும் நரமுக கணபதி, திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள செதிலப்பதியில் கோவில் கொண்டிருக்கிறார்.
சதுர்த்தியன்று சுத்துங்க!
சிவபார்வதியை வலம் வந்து, மாம்பழம் வென்றவர் விநாயகர். இவர் தன்னைச் சுற்றி வருவோருக்கு தேகபலம், புத்திபலத்தை வழங்குகிறார். குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணமிடுதல், சிதறுகாய் போடுதல், கொழுக்கட்டை படைத்தல் என வழிபாட்டு முறைகள் பல இருந்தாலும் விசேஷ பிரார்த்தனை, 'பிரதட்சிணம்' என்னும் சுற்றி வருவதாகும். சாதாரணமாக இவரை மூன்று முறை வலம் வந்தாலும், நினைத்தது நிறைவேற சதுர்த்தி திதியன்று 21, 48, 108 முறை என சுற்றுவது சிறப்பு.
கடவுள் உயர்ந்தவராக இருந்தாலும் அவரைத் தாங்கும் சக்தி நம் மனதிற்கு உண்டு என்பதையே பெரிய உருவமுள்ள விநாயகருக்கு சிறிய மூஞ்சுறுவை வாகனமாக்கினர்.
நலம் தரும் நவக்கிரக விநாயகர்
குரு, சனி, போன்ற கிரகப்பெயர்ச்சி சாதகமாக இல்லாவிட்டால் அதிலிருந்து நம்மை விடுவித்து காப்பவர் நவக்கிரக விநாயகர். இவரது உடம்பில் நவக்கிரக நாயகர்கள் அடங்கியுள்ளனர். கிரகதோஷம் அகல இவரை விநாயகர் சதுர்த்தியன்று வழிபடுவது சிறப்பு. இவரது நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க்கையில் புதன், தலையில் குரு, இடது கீழ்க்கையில் சுக்கிரன், வலது மேல்கையில் சனி, இடது மேல்கையில் ராகு, இடது தொடையில் கேது வீற்றிருக்கின்றனர்.
சாணம், களிமண், மஞ்சள், வெல்லம், சந்தனம், அரிசி மாவு என எதில் பிடித்து வைத்தும் விநாயகரை வழிபடலாம். இதை 'பிடித்து வைத்தால் பிள்ளையார்'என்பர்.
கன்னி ராசி என் ராசி
பிறந்த நேரத்தை வைத்து நாம் ஜாதகம் கணிப்பது போல கடவுளுக்கும் ஜாதகம் உண்டு. விநாயகரின் நட்சத்திரம் அஸ்தம் என்பதால் கன்னி ராசிக்கு உரியவராகிறார். இவருடைய ஜாதகத்தில் கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும், கன்னியில் புதனும் உச்சபலத்துடன் உள்ளனர். சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். செவ்வாய்க்குரிய விருச்சிகமே இவரது லக்னம். விநாயகரின் ஜாதகத்தை பூஜித்தால் நல்ல புத்தி உண்டாகும். முயற்சியில் குறுக்கிடும் தடை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
வள்ளியை மணம்புரிய முருகனுக்கு துணைநின்றவர் விநாயகரே. இதை 'அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே' என்கிறது திருப்புகழ்.
ராஜயோகம் தரும் ராசி விநாயகர்
மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு இங்கு இடம் பெற்றுள்ளது -கே.பி. ஹரிபிரசாத் சர்மா
மேஷம்: செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென பட்டதை எவர் தடுத்தாலும் தைரியத்துடன் செயல்படுத்தும் நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.
ரிஷபம்: சுக்ரனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானவர்கள். ராசிகளில் சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது உங்களது ஜாதகத்தில் மட்டுமே. ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சம் கொண்ட ஸ்ரீவித்யா கணபதி.
மிதுனம்: திறமை பல கொண்ட நீங்கள் கண்திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்படலாம். உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர்களின் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம். எதிரிகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப் படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட, நீங்கள் வழிபட வேண்டியவர் கண் திருஷ்டி கணபதி.
கடகம் : வித்தகரான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானம், அசாத்திய ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் மற்றவரை வழி நடத்துவீர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள்வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.
சிம்மம் : தைரிய குணம்மிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித் திருமகள் துணையிருப்பாள். தலைமை பண்பு கொண்ட உங்களுக்கு என்றும் தன்னம்பிக்கை குறையாது. அசாத்தியமான மனவலிமையுடன் எப்போதும் வெற்றியை ருசிக்கும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி.
கன்னி : மென்மை குணம் கொண்ட நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது, உங்களை வெல்ல யாராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் உச்சிஷ்ட கணபதி.
துலாம் : அயராத உழைப்பைக் கொண்ட நீங்கள் கொண்ட லட்சியத்தை அடையும் வரை ஓயமாட்டீர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.
விருச்சிகம்: சுறுசுறுப்பான குணம் கொண்ட நீங்கள் ஓரிடத்தில் நில்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்பீர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைக்காமல் வேலையை உடனுக்குடன் முடிக்கும் எண்ணம் கொண்டவர்கள். பரபரப்புடன் இயங்கும் நீங்கள் வழிபட வேண்டியவர் நர்த்தன கணபதி.
தனுசு : குரு பகவான் ஆதிக்கம் பெற்ற நீங்கள் நேர்மை மிக்கவராக திகழ்வீர்கள். இக்கட்டான நிலையிலும் குறுக்கு வழியில் செல்லாத, அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் நீங்கள் வழிபாட வேண்டியவர் சங்கடஹர கணபதி.
மகரம் : சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் தியாகம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையால் இழப்பை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். மனதை அடக்க கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.
கும்பம்: அனுபவ அறிவால் அடக்கி ஆள நினைப்பவர்கள். அறிந்திராத விஷயத்தையும் கூட தெரியாது என சொல்லமாட்டீர்கள். அதே நேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.
மீனம்: கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணம் உடையவர்கள். எல்லாரும் நல்லவரே என பழகி வருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள் தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Source:-DINAMALAR
முன்னுரிமை எங்களுக்கே!
கடந்த, 1941ல் நாகப்பட்டினத்தில் காஞ்சிப் பெரியவர் இருந்த போது, அங்குள்ள விநாயகர் கோவிலில் பெரியவருடன் வந்த சிலர் சிதறுகாய் உடைக்க முன்வந்தனர். இதை கவனித்த சிறுவர்கள் சிலர் தேங்காயை எடுக்க விரைந்தனர். பெரியவர் மீது சிறுவர்கள் இடித்திடக் கூடாதே என்ற பயத்தில் அங்கிருந்த பக்தர்கள் சிறுவர்களை விரட்டினர்.
உடனே ஒரு சிறுவன் ஆவேசமாக, 'பிள்ளையாருக்கு உடைத்த சிதறுகாயை எடுக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதை எடுக்க வரத்தான் செய்வோம்' என்றான். சிறுவனின் பேச்சில் இருந்த நியாயத்தை பெரியவரும் ஏற்றுக் கொண்டார். விநாயகர் வழிபாட்டில் குழந்தைகளுக்கே முன்னுரிமை என்பதை அங்கிருந்தவர்கள் உணர்ந்தனர்.
இந்த பழக்கம் இங்கு மட்டுமே!
தேங்காயின் மீதுள்ள கனமாக ஓட்டை உடைத்தால் உள்ளே இனிய பருப்பும், இளநீரும் இருக்கும். அதுபோல, மனிதனும் அகங்கார எண்ணத்தை விட்டு விநாயகரைச் சரணடைந்தால் வாழ்வு இனிக்கும் என்பதே சிதறுகாய் உடைப்பதன் தத்துவம். இதற்கான புராண காரணமும் ஒன்றும் உண்டு.
ஒருமுறை சிவனிடம், 'உங்களின் சிரசையே எனக்கு பலியிட வேண்டும்' என கேட்டார் விநாயகர். தன்னைப் போல மூன்று கண்கள் கொண்ட தேங்காயை சிவன் படைத்து, அதை விநாயகருக்கு அர்ப்பணித்தார். இதன் அடிப்படையில் விநாயகர் வழிபாட்டில் சிதறுகாய் இடும் பழக்கம் ஏற்பட்டது. இது, தமிழகம் தவிர நாட்டின் மற்ற பகுதிகளில் இல்லை.
முதற்கடவுள் விநாயகரும், மங்கள மூர்த்தியான அனுமனும் இணைந்த திருக்கோலம் ஆதியந்த பிரபு. இவரை வழிபட்டால் சுப விஷயங்கள் இனிதே நிறைவேறும்.
முதல் பிள்ளை சிவனுக்கு மூத்த பிள்ளை
பார்வதி, பரமேஸ்வரனின் பிள்ளைகள் விநாயகர், முருகன் என்பது தெரியும். ஆனால் மூத்த பிள்ளை விநாயகரை மட்டும் 'பிள்ளையார்' என மதிப்புடன் அழைக்கிறோம். குடும்பத்தில் தந்தையை 'தந்தையார்' என்றும், தாயை 'தாயார்' என்றும், தமையனை 'தமையனார்' என்றும், அண்ணியை 'அண்ணியார்' என்றெல்லாம் மரியாதையுடன் அழைக்கலாம். ஆனால், நம் வீட்டுப் பிள்ளைகளை 'பிள்ளையார்' என்று அழைப்பதில்லை. அந்த மரியாதை விநாயகருக்கு மட்டுமே தரப்படுகிறது. இதற்கு காரணம் பார்வதி, பரமேஸ்வரன் என்ற பெரிய வீட்டுக்காரர்களின் பிள்ளை விநாயகர் என்பதோடு, கருணை, பலம், புத்திக்கூர்மை, அன்புமனம் கொண்டவர் என்பதால், 'பிள்ளையார்' என போற்றப்படுகிறார்.
விநாயகரை வழிபட பலன் உடனடியாகக் கிடைக்கும் என்பதால், 'கணபதி பூஜை கைமேல் பலன்' என்று பழமொழியாகச் சொல்வர்.
ஆக்கும் தந்தம்... அழிக்கவும் செய்யும்!
மயில் என்றால் தோகை, கவரிமான் என்றால் வால், சிங்கம் என்றால் பிடரி என்பது போல, யானை என்றாலே தந்தம் தான் அழகு. யானையும் தன் தந்தத்தை எப்போதும் அக்கறையோடு பாதுகாக்கும். ஆனால், விநாயகர் என்னும் யானை மட்டும் தனக்கு அழகும், கவுரவமும் தரும் தந்தத்தை தியாகம் செய்ய முன் வந்தது. மகாபாரதம் என்னும் காவியம் எழுத தன்
ஒற்றைக் கொம்பை எழுத்தாணியாக்கிய பெருமை விநாயகரைச் சேரும். இப்படி ஆக்கப்பணியில் ஈடுபட தந்தம் கொடுத்த விநாயகர், அசுர சக்தியை அழிக்கவும் பயன்படுத்தினார். கஜமுகாசுரனை வதம் செய்ய ஆயுதம் எதையும் பயன்படுத்தவில்லை; தந்தத்தாலேயே குத்திக் கொன்றார்.
வக்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், துாம்ரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்கள் விநாயகர் எடுத்ததாக விநாயகர்புராணம் கூறுகிறது.
விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஆவணி வளர்பிறை சதுர்த்தி முதல், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி வரை மேற்கொள்ள வேண்டும் என்று விநாயகர் புராணம் கூறுகிறது.
மனித முகத்தோடு இருக்கும் நரமுக கணபதி, திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள செதிலப்பதியில் கோவில் கொண்டிருக்கிறார்.
சதுர்த்தியன்று சுத்துங்க!
சிவபார்வதியை வலம் வந்து, மாம்பழம் வென்றவர் விநாயகர். இவர் தன்னைச் சுற்றி வருவோருக்கு தேகபலம், புத்திபலத்தை வழங்குகிறார். குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணமிடுதல், சிதறுகாய் போடுதல், கொழுக்கட்டை படைத்தல் என வழிபாட்டு முறைகள் பல இருந்தாலும் விசேஷ பிரார்த்தனை, 'பிரதட்சிணம்' என்னும் சுற்றி வருவதாகும். சாதாரணமாக இவரை மூன்று முறை வலம் வந்தாலும், நினைத்தது நிறைவேற சதுர்த்தி திதியன்று 21, 48, 108 முறை என சுற்றுவது சிறப்பு.
கடவுள் உயர்ந்தவராக இருந்தாலும் அவரைத் தாங்கும் சக்தி நம் மனதிற்கு உண்டு என்பதையே பெரிய உருவமுள்ள விநாயகருக்கு சிறிய மூஞ்சுறுவை வாகனமாக்கினர்.
நலம் தரும் நவக்கிரக விநாயகர்
குரு, சனி, போன்ற கிரகப்பெயர்ச்சி சாதகமாக இல்லாவிட்டால் அதிலிருந்து நம்மை விடுவித்து காப்பவர் நவக்கிரக விநாயகர். இவரது உடம்பில் நவக்கிரக நாயகர்கள் அடங்கியுள்ளனர். கிரகதோஷம் அகல இவரை விநாயகர் சதுர்த்தியன்று வழிபடுவது சிறப்பு. இவரது நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க்கையில் புதன், தலையில் குரு, இடது கீழ்க்கையில் சுக்கிரன், வலது மேல்கையில் சனி, இடது மேல்கையில் ராகு, இடது தொடையில் கேது வீற்றிருக்கின்றனர்.
சாணம், களிமண், மஞ்சள், வெல்லம், சந்தனம், அரிசி மாவு என எதில் பிடித்து வைத்தும் விநாயகரை வழிபடலாம். இதை 'பிடித்து வைத்தால் பிள்ளையார்'என்பர்.
கன்னி ராசி என் ராசி
பிறந்த நேரத்தை வைத்து நாம் ஜாதகம் கணிப்பது போல கடவுளுக்கும் ஜாதகம் உண்டு. விநாயகரின் நட்சத்திரம் அஸ்தம் என்பதால் கன்னி ராசிக்கு உரியவராகிறார். இவருடைய ஜாதகத்தில் கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும், கன்னியில் புதனும் உச்சபலத்துடன் உள்ளனர். சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். செவ்வாய்க்குரிய விருச்சிகமே இவரது லக்னம். விநாயகரின் ஜாதகத்தை பூஜித்தால் நல்ல புத்தி உண்டாகும். முயற்சியில் குறுக்கிடும் தடை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
வள்ளியை மணம்புரிய முருகனுக்கு துணைநின்றவர் விநாயகரே. இதை 'அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே' என்கிறது திருப்புகழ்.
ராஜயோகம் தரும் ராசி விநாயகர்
மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு இங்கு இடம் பெற்றுள்ளது -கே.பி. ஹரிபிரசாத் சர்மா
மேஷம்: செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென பட்டதை எவர் தடுத்தாலும் தைரியத்துடன் செயல்படுத்தும் நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.
ரிஷபம்: சுக்ரனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானவர்கள். ராசிகளில் சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது உங்களது ஜாதகத்தில் மட்டுமே. ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சம் கொண்ட ஸ்ரீவித்யா கணபதி.
மிதுனம்: திறமை பல கொண்ட நீங்கள் கண்திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்படலாம். உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர்களின் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம். எதிரிகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப் படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட, நீங்கள் வழிபட வேண்டியவர் கண் திருஷ்டி கணபதி.
கடகம் : வித்தகரான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானம், அசாத்திய ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் மற்றவரை வழி நடத்துவீர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள்வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.
சிம்மம் : தைரிய குணம்மிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித் திருமகள் துணையிருப்பாள். தலைமை பண்பு கொண்ட உங்களுக்கு என்றும் தன்னம்பிக்கை குறையாது. அசாத்தியமான மனவலிமையுடன் எப்போதும் வெற்றியை ருசிக்கும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி.
கன்னி : மென்மை குணம் கொண்ட நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது, உங்களை வெல்ல யாராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் உச்சிஷ்ட கணபதி.
துலாம் : அயராத உழைப்பைக் கொண்ட நீங்கள் கொண்ட லட்சியத்தை அடையும் வரை ஓயமாட்டீர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.
விருச்சிகம்: சுறுசுறுப்பான குணம் கொண்ட நீங்கள் ஓரிடத்தில் நில்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்பீர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைக்காமல் வேலையை உடனுக்குடன் முடிக்கும் எண்ணம் கொண்டவர்கள். பரபரப்புடன் இயங்கும் நீங்கள் வழிபட வேண்டியவர் நர்த்தன கணபதி.
தனுசு : குரு பகவான் ஆதிக்கம் பெற்ற நீங்கள் நேர்மை மிக்கவராக திகழ்வீர்கள். இக்கட்டான நிலையிலும் குறுக்கு வழியில் செல்லாத, அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் நீங்கள் வழிபாட வேண்டியவர் சங்கடஹர கணபதி.
மகரம் : சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் தியாகம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையால் இழப்பை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். மனதை அடக்க கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.
கும்பம்: அனுபவ அறிவால் அடக்கி ஆள நினைப்பவர்கள். அறிந்திராத விஷயத்தையும் கூட தெரியாது என சொல்லமாட்டீர்கள். அதே நேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.
மீனம்: கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணம் உடையவர்கள். எல்லாரும் நல்லவரே என பழகி வருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள் தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Source:-DINAMALAR