Post by radha on Jul 14, 2020 20:32:19 GMT 5.5
OM Sri GURUPYO NAMAHA respectful PRANAMS to Sri KANCHI MAHA PERIVA
மதுரம் மதுரம்… கிருஷ்ணன் மதுரம்!:
காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் விளக்கம் - மாயனை, மன்னு வடமதுரை மைந்தனை
“அவனைப் பத்தின அத்…தனையுமே மதுரந்தான்!”
“அவன் பொறந்ததே மதுரைல. நம்ம பாண்டிய தேசத்து மதுரை இல்லே. இங்கேயும் மதுர மயமாத்தான் அம்பாள் இருக்கா. அவகிட்டேயிருந்துதான் ஸங்கீதம் பொறந்தது…ஆமாம், மாதங்கின்னும் ச்யாமளான்னும் சொல்ற ஸங்கீத தேவதைதான் மீனாக்ஷி. ஸங்கீதம்னாலே மதுரந்தானே? இது தென் மதுரை.
“நான் சொன்னது வட மதுரைன்னு யு.பி.&ல யமுனா தீரத்துல இருக்கறது. எதனாலயோ, அவா “மஞீடதரா’ன்னு சொல்லாம, “மtடதரா’ங்கிறா.
ஆண்டாள் ரஹஸ்ய அழகோட, சொல்லாம சொல்ற பாணியில, “மாயனை”ன்னு ஆரம்பிச்ச, தொடர்ந்தாப்பல “வட மதுரை மைந்தனை”ன்னு சொல்லியிருக்கா; “மாயனை, மன்னு வடமதுரை மைந்தனை”ன்னு! அதென்ன, “மன்னு’ன்னா, அதுக்கு “பஹு (வெகு) காலமா நெலச்சுப் புகழ் பெத்த’ன்னு அர்த்தம்,
“மன்னு புகழ் கோஸலைதன் மணிவயிறு வாய்த்தவனே!”ன்னு கூடப் பாசுரம் இருக்கு. அது ராமசந்த்ர மூர்த்தியைப் பத்திக் குலசேகரப் பெருமாள் பாடினது.
“தேவகிக்குப் பிள்ளையாய்ப் பொறந்தவனை அவளோட மைந்தன்னு சொல்லாம “வட மதுரை மைந்த’ன்னு சொல்லி ஜன்ம க்ஷேத்ரத்தைப் பெருமைப்படுத்தியிருக்கு.
ஜன்மாவைத் தந்த அம்மாவும், ஜன்மபூமியும் ஸ்வர்க்கத்துக்கும் மேலானவைன்னு சொல்றது:
“ஜனனீ, ஜன்ம பூமிச்ச ஸ்வர்காதபி கரீயஸீ”.
இங்கே மொதல்ல தாயைச் சொல்லிட்டு அப்புறம் தாய்நாட்டை & பொறந்த ஊர்னும் வெச்சுக்கலாம் & சொல்லியிருக்கு. ஆண்டாளோ ஊரைச் சொல்லிட்டு அப்பறம் “தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை’ன்னு அம்மாவைச் சொல்றா!
ஏன்னா, அந்த மதுரைக்கு அப்படியொரு மஹிமை!
என்ன மஹிமை&னா, ஜன்மா இல்லாத ஸ்வாமி ஜன்மிச்ச அந்த க்ஷேத்ரம்தான் “புனரபி ஜனனீ ஜடரே சயனம்’னு திரும்பத் திரும்ப தாய் வயத்துல பொறந்திண்டிருக்கற நமக்கெல்லாம் ஜன்ம விமோசனம் தருகிற மோக்ஷபுரியாயிருக்கு.
ஸப்த மோக்ஷபுரின்னு ஏழு இருக்கறதுல மொதல்ல ராமன் பொறந்த அயோத்தி. ரெண்டாவது க்ருஷ்ணன் பொறந்த இந்த வடமதுரை.
“அதோட முக்ய காரணமா எனக்கு என்ன தோண்றதுன்னா, அந்த ஊரோட பேரே அங்கே அவதாரம் பண்ணின ஸ்வாமிக்கு ஸ்வபாவமாயிருந்ததுதான்! க்ருஷ்ணன்னா என்ன? மதுரந்தான்! தித்திப்புன்னா தித்திப்பு, அப்படியொரு தித்திப்பு அவன்!”
“அந்த மாதுர்யத்துல என்ன விசேஷம்னா, மதுரமா இல்லாத விஷயங்களாவே அவன் வெளிப்பார்வைக்கு அநேகம் பண்ணினாலும் அதுகளும் பக்த ஹ்ருதயத்துக்குள்ளே மதுரமாவே ஊறரது (ஊறுவது)தான்! ஆண்டாள் மாதிரி, சுகர், லீலா சுகர், மீரா மாதிரி மஹா பக்தாள்தான்னு இல்லே! நம்ம மாதிரி ஏதோ கொஞ்சம் பக்தின்னு இருக்கறவாளுக்குக் கூட அந்த க்ருஷ்ணன் மட்டும் என்ன பண்ணட்டும், அது மதுரமாத்தான் இருக்கு!
“அந்த மாதுர்யம் தனக்கு இருக்காக்கும்; ஆகையினால, என்ன அடாவடி, கபடம், திருட்டு&புரட்டு, பொய் வேணாலும் பண்ணுவேன்’னு அவன் நடத்திக் காட்டற மாதிரியே தன்னோட வாழ்க்கை பூராவுலேயும் பண்ணிண்டு போயிருக்கான்.
“என்னமா அவன் ஸம்பந்தப்பட்டா அமதுரங்கூட மதுரமாச்சுன்னா: சக்கரையிலே பல தினுஸு பொம்மை பண்ணியிருக்குன்னு வெச்சுக்கோங்கோ, மொளகா, பாகக்கா, உப்புக்கட்டி மாதிரில்லாம் கூட அந்தந்தக் கலர் குடுத்துத் தத்ரூபமாப் பண்ணியிருக்குன்னு வெச்சுக்கோங்கோ.
அப்ப அந்த மொளகாயும், பாகக்காயும், உப்புக்கட்டியுங்கூட தித்திக்கத்தானே செய்யும்? ஏன்னா மொளகாயும் பாகலும் வெளிவேஷந்தானே? உள்ளுக்குள்ளே அதெல்லாமும் மதுரமயமான சக்கரைதானே? அப்படித்தான் இதுவும்.
“இனிமை’ & அதுதான் “மதுர’த்துக்குத் தமிழ். “தித்திப்பு’ன்னு பேச்சு மொழியில சொல்றோம். இலக்கிய மொழி “இனிமை’. செல (சில) வார்த்தைகள் தமிழ்ல அலாதி அழகு; அர்த்தத்துக்குப் பொருத்தமான சப்தமா அந்த வார்த்தைகள்ல அமைஞ்சிருக்கு. அப்படி ஒண்ணு “இனிமை’. அதுல வர மூணு எழுத்துல எதுவுமே கடுமையா இல்லாம மெத்துனு இருக்கு.
“இங்கிலீஷ்ல மதுரத்தை “ஸ்வீட்’ங்கிறா. “ஸ்வீன்னு இழுத்து சொல்றப்ப மதுரமாயிருந்தாலும் அப்பறம் முடிக்கறச்சே “ட்’னு ஒரு டகாரம் மொரட்டு சப்தமா ஒக்காந்திருக்கு! ஒத்தர் வேடிக்கையாச் சொன்னாப்பல, “குழலினிது யாழினிது’ன்னு, சொல்றச்சயே மழ மழன்னு இனிமையா இருக்கறதை “ட்ரான்ஸ்லேட்’ பண்ணி, “ஊடூதtஞு ண்தீஞுஞுt, டூதtஞு ண்தீஞுஞுt’ன்னு லொட்டு லொட்டுனு சொன்னா…”
“ஸம்ஸ்க்ருதத்துல “மதுரம்’னு சொல்றச்சே கூட அந்த “ஞீடத’ கொஞ்சம் கடும் சப்தமாத்தான் இருக்கு. அதைவிட நைஸா “ஸ்வாது’ன்னும் இன்னொரு வார்த்தை இருக்கு. இங்கே வர “து’ மதுரத்துல வர கெட்டி “து’ இல்லே; லேசு”து’…”
“இத்தனைதான்னு இல்லாம அவன் போட்ட வேஷத்திலே ஒண்ணா எப்பவாவது அவன் “அபாலஜெடிக்’ வேஷம் போட்டிருந்தா அதுவுங்கூட மதுரமாத்தான் இருக்கும்!
“இதை நெனச்சுத்தான் பரம பக்தர் ஒத்தர், “மதுராதிபதேரகிலம் மதுரம்” & “மதுராதிபதே: அகிலம் மதுரம்” பாடி வெச்சுட்டுப் போய்ட்டார்.
“மதுராஷ்டகம்’னே எட்டு ச்லோகம் கொண்ட ஸ்தோத்ரம் அது. அதுல ஒவ்வொரு ச்லோகத்துக்கும் ஈற்றடி
“மதுராதிபதேரகிலம் மதுரம்’. பாக்கி மூணடியில ஒவ்வொண்ணிலேயும் ஸ்வாமியோட குணம், ரூபம், கார்யம், அல்லது அவன் ஸம்பந்தப்பட்ட விஷயம்னு ரெண்டு ரெண்டு ஸமாசாரம் சொல்லியிருக்கும். ஒவ்வொண்ணையும் மதுரம்&னு சொல்லியிருக்கும்.
“எக்ஸாம்பிளுக்கு மொத ச்லோகம் சொல்றேன். அதுல மொதல் அடி. “அதரம் மதுரம், வதனம் மதுரம்”, “ஸ்வாமியோட ஒதடு மதுரமாயிருக்கு; முகம் மதுரமாயிருக்கு’ன்னு ரெண்டு விஷயம். ரெண்டு மதுரம் சொல்லியிருக்கு.
“ஒதட்டை ஏன் எடுத்தவொடனே சொன்னார்னா மதுரம்னா முக்யமா ஸங்கீதத்தைத் தானே சொல்றது? மதுர கானம், மதுர கண்டம், இனிய குரல், (ண்தீஞுஞுt திணிடிஞிஞு) னு எந்த பாஷையானாலும் அப்படிச் சொல்றது. முன்னாலே சொன்னேனே, தென் மதுரை மீனாக்ஷிகூட ஸங்கீதத்தின் அதிதேவதைதான்னு!
வட மதுரையில் இருக்கற அவளோட ஒடப்பொறந்தானும் கானலோலன்தான். அவவீணா கான ப்ரியை&னா அவன் வேணுகானலோலன்! குழல், யாழ்ங்கிற மாதிரி, வேணு&வீணாங்கிற வார்த்தைகளே மதுரமா ஒலிக்கிறது.
மத்த ஸ்வாமி கையிலேல்லாம் ஆயுதம் இருக்கும். கருணாமூர்த்தியான ராமசந்தர மூர்த்தி கையிலகூட தநுஸுதான். க்ருஷ்ணன்தான் பிள்ளாங்குழல் வெச்சுண்டிருக்கறவன். வேணுகோபாலன், முரளீதரன்&னே அவனுக்குப் பேர்.
அந்த வேணுவை அவன் “ஒதட்டுல வெச்சுத்தானே ஊதரான்? அவனோட திவ்ய சரீரத்துக்குள்ளேயிருந்து வர பவித்ரமான காத்தை அவன் அந்தப் பிள்ளாங்குழல் வழியா வடிக்கறதுனாலதானே அந்த வேணுகானம் அப்படியொரு மதுரமா, கேக்கறவாளையெல்லாம் பித்துப் பிடிச்சவாளாட்டம் மயக்கித்து?
“பரம ப்ரியத்தைக் காட்ட முத்தம் குடுக்கறது. ஸ்வாமி எப்பவும் பிள்ளாங்குழலை ஒதாட்டல ஸ்பரிச்சிச்சுண்டு முத்தந்தான் குடுக்கறான்னு அதுகிட்ட கோபிகா ஸ்த்ரீகள்லாம் பொறாமை கூடப் படுவாளாம்!
“பிள்ளாங்குழல் வாசிச்சாதானா? அவன் பேசினாலே ஸங்கீதமாத்தான் பரம மதுரமாயிருக்கும். இன்னொரு ச்லோகத்துல அதையும் “வசனம் மதுரம்’னு சொல்லியிருக்கு.
“ஸாதாரணமா ஞானோபதேசம்னா ஒரே போரா இருக்கும்! ஆனா, க்ருஷ்ணன் பண்றச்சே மட்டும் அதுவுங்கூட மதுர கீதமாகத்தான் இருக்கும்! ஆமாம், “கீதை’ன்னே அதுக்குப் பேர் சொல்றோமே! கொழந்தையா பிள்ளாங்குழல் வாசிச்சுண்டு கானம் பண்ணினவன் நன்னா வயஸேறினவிட்டு ஞானம் சொன்னப்ப, அதுவும் கீதமாத்தான் திதிச்சுது!
“இதெல்லாம் ஒதட்டு ஸம்பந்தத்துல வந்ததுதானே? அதனாலதான் “அதரம் மதுரம்’னு மொதலிடம் குடுத்துச் சொன்னார்.
“இப்படி வரிக்கு ரெண்டு மதுரமா ஒவ்வொரு ச்லோகத்துலயும் ஈற்றடி நீங்கலா மத்த மூணுவரியிலே மொத்தம் ஆறு மதுரம். எட்டு ச்லோகத்திலயும் சேத்து ஆறெட்டு நாப்பத்தெட்டு மதுரத்தைச் சொல்லி அத்புதமா அஷ்டகம் பாடியிருக்கார்.
“பண்ணினவர் வல்லபாச்சார்யார்&ங்கிறவர். பால க்ருஷ்ணனையே முழு முதல் தெய்வமா வெச்சு “சுத்தாத்வைதம்’னு “ஃபிலாஸஃபி’ பண்ணினவர். அதை “ஃபாலோ’ பண்றவா இருக்கா. எல்லாரும் ஸந்தோஷப்பட அவர் “மதுராஷ்டகம்’ பாடியிருக்கார்.
“பகவானோட “அதரம்’, “வதனம்’, “நயனம்’, “ஹஸிதம்’ அதாவது சிரிப்பு, அவனோட “ஹ்ருதயம்’, “கமனம்’ & அதாவது நடை. அவனோட வசனம், சரிதம், வஸனம் & அதுதான் அவன் போட்டுண்டிருக்கற பீதாம்பரம்; அல்லது “வஸனம்’னா அவர் வாஸம் பண்ற கோகுலம்னும் சொல்லலாம்; இப்படி அடுக்கிண்டே போய் அது ஒண்ணொன்னும் மதுரம்கிறார்.
இதெல்லாம் மதுரமாயிருக்கிறது விசேஷமில்லை. ஸாதாரணமா மதுர லிஸ்டில் வரதுக்கில்லாத சிலதுகூட க்ருஷ்ண ஸம்பந்தத்தாலே மதுரமாயிட்டதையும் அவர் சொல்றதுதான் விசேஷம்.
இப்படி “வலிதம்’, “ஹரணம்’, “வயிதம்’ங்கற மாதிரி சிலது சொல்றார். “வலிதம்’னா வளைச்சுண்டு கோணலா நிக்கறது. அது ஸாதாரணமா மதுரமாயிருக்காது.
ஆனா பகவான் பிள்ளாங்குழல் வாசிக்கறதுல இடது பக்கம் சாஞ்ச முகமாவும், கழுத்துக்குக் கீழே இடுப்பு வரைக்கும் வலது பக்கமா ஒடிச்சுண்டும், இடுப்புலேந்து கீழே மறுபடி இடது பக்கம் ஒடிச்சுண்டு வலது பாதத்தை இடது பாதத்துக்கு க்ராஸா வெச்சுண்டும் மூணு கோணலா நிக்கறதையே த்ரிபங்கம், த்ரிபங்கம்னு லோகமெல்லாம் பேரழகா மதிச்சுக் கொண்டாடறது.”
“கோணை பெரிதுடைத்தே”ன்னு ஆழ்வார்கூட சொல்லியிருக்கார். அதுவும் அவன்கிட்ட அழகுதான். அதாவது மதுரந்தான்.
“மதுரம்னா வேறே என்ன? அழகு, நல்லதுன்னுதான் அர்த்தம். நல்லது மதுரம். பகவான்கிட்ட எல்லாமே நல்லதுதான். “அனந்த கல்யாண குணம்’ங்கிறது. அதனால அத்தனையும் மதுரம்’.
“ஹரணம் மதுரம்&ங்கிறார். ஹரணம்னா அபஹரணம்தான்; ப்ளெய்னா சொன்னா, “திருட்டு’. கிருஷ்ணனுடைய திருட்டு வெண்ணெய்த் திருட்டு, “உள்ளம் கவர் கள்வ’னா அவன் பண்ற திருட்டு ரெண்டுமே எத்தனை மதுரம்?
“வமிதம் மதுரம்’ங்கறாரே, அது என்ன? “வமிதம்’ தான் ஙணிட்டிtனு ஆனது. “சமனம்’ பண்றது “சாந்தி’&ங்கிற மாதிரி, “வமனம்’ பண்றதுதான் “வாந்தி’. ஸாதாரணமா வாந்தி பண்றதைப் பார்த்தாலே, நெனச்சாலே நமக்கும் ஓக்காளிக்கும்! ஆனா க்ருஷ்ணன் பண்ணினா? அதுவுங் கூட மதுரந்தான். அதை (நி)ரூபிக்கிறதுக்காவே அவன் அப்படியும் பண்ணுவான் போலேயிருக்கு!
இல்லாட்டா, “வமிதம்’னா “கொப்புளிக்கறது’ங்கிற அர்த்தமும் எடுத்துக்கலாம். அவன் திருட்டுத்தனமா வாய் நெறய யமுனா தீர்த்தத்தை அடக்கிண்டு எவளோ ஒரு கோபிகா ஸ்த்ரீ மூஞ்சில அதைப் பொக்குனு பீச்சிக் கொப்புளிச்சானானா, அதுதான் அவளுக்கு எத்தனை மதுரமாயிருந்திருக்கும்? அவன் பண்ணின இந்த மாதிரி விஷமமெல்லாம் இன்னிக்கும் படிக்கறச்சே, கேக்கறச்சேயே எப்படித் தேனாத் திதிக்கிறது?…
“புக்தம் மதுரம்’னு ரெண்டு எடத்துல வரது. அதுக்கு எடத்தைப் பொறுத்து வெவ்வேறே அர்த்தம் பண்ணிக்கணும். மொதல்ல “பீதம் மதுரம், புக்தம் மதுரம்’னு வரது. “பீதம்’னா பானம் பண்றது; குடிக்கிறது. பாலக்ருஷ்ணன் பாலை ருசிச்..சு., சீ..ப்பிக் குடிக்கறது மதுரமான காட்சியாதான் இருக்கும். அதோட சேத்து “புக்தம்’னு போட்டிருக்கறதாலே “அன்ன&பானம்’ என்கிறபடி இங்கே “புக்தம்’கிறது சாப்பிடறதைக் குறிக்கும்.
ஸமஸ்த ஜீவராசிகளுக்கும் சாப்பாடு போடற தாதா, தானே சாப்பிடறது ரொம்ப மதுரந்தான்! ரெண்டாவதா “யுக்தம் மதுரம், புக்தம் மதுரம்’னு வரது. போகம்&போகம்னு ரெண்டு. போகம், இஹலோக இன்பம், யோகம், ஆத்மலோக இன்பம். “புக்தம்’னா போகம் பண்றது; “யுக்தம்’னா யோகம் பண்றது.
இங்கே அப்படிதான் அர்த்தம் பண்ணிக்கணும். மஹா மாயாவி, பரம ஞானி ரெண்டுமா இருந்த ஸ்வாமி அந்த க்ருஷ்ணாவதார வாழ்க்கை பூராவும் ரெண்டையுமேதான் “ஸைமல்டேனிய’ ஸாப் பண்ணிக்கிண்டிருந்தான்! ஆமாம், அப்படித்தான் பண்ணிக்கிண்டிருந்தான்!”
“இப்படி அநேக மதுரங்கள் சொல்லிண்டு போய் “தலிதம் மதுரம், பலிதம் மதுரம்’னு அஷ்டகத்தை முடிச்சிருக்கார். “தவிதம்’னா “பொளக்கறது’, “பொளந்து தள்ளிட்டான்!’னு சொல்கிறோமே, அப்படிச் சொல்லும்படியா, தான் பண்ணின ஒவ்வொண்ணையும் எக்ஸ்பெர்டாப் பண்ணினவன் அவன்!
நிஜமாவே பால்யத்துல அஸுராளைப் பொளந்தும் தள்ளினான்! பிற்காலத்துல தன் ஸங்கல்ப சக்திக்குக் கருவி மாத்ரமா இருந்துண்டு அர்ஜுனாதிகள் சத்ரு ஸைன்யங்களைப் பொளந்து தள்ளும்படியும் பண்ணினான். “காலோஸ்மி’ “நான் காலனாக்கும்’னு சொல்லி அந்த அர்ஜுனனையே நடுங்கப் பண்ணினவனாச்சே!
அந்த நடுக்கத்துக்குள்ளேயுங்கூட ஒரு மதுரத்தையும் ஒளிச்சுக் குடுத்திருப்பான்! அவன் காலனா ஸம்ஹாரம் பண்றதும் மதுரம்! ஸம்ஹரிக்கப்படுகிறவனுக்கே, மதுரம்! ஏன்னா அவன் கையால செத்தா மோக்ஷந்தானே!
காலனுக்குப் பெண்பால் “காலி’, “காளி’ங்கறது அதுதான். “மதுரகாளி’ன்னே திருவாச்சூர்லே இருக்கா!
“ஒடம்பைப் பொளக்காம, மனஸைப் பொளக்கறது&ன்னும் அர்த்தம் பண்ணிக்கலாம். விரஹ தாபத்துல அப்படித்தான் கோபிகா ஸ்த்ரீகளோட மனஸைப் பொளந்தான்.
கோபிகா ஸ்த்ரீன்னா யாரு? உள்ளன்பு & உள்ளம் பூரா அப்படியே ப்ரேமை ரொம்…பிக் கிடக்கற உள்ளன்பு இருக்கற அத்தனை பக்தாளுந்தான்! அவாளுக்கு அப்படிப் பொளக்கப்படறதுலேயே & “தலிதம்’னா பொளக்கப்படுவது’தான்;
அப்படி ஆவதிலேயே & உள்ளூர ஒரு மாதுர்யமும் தெரியும்! ஏன்னா, சேந்து இருக்கறதை விடப் பிரிவுலதான் ஒத்தரைப் பத்தின நெனவு ஆழமாயிருக்கும்! க்ருஷ்ணன் நெனவு மதுரந்தானே?
“தலிதத்துக்கு அப்பறம் அதுக்கு நேர் “ஆப்போஸிட்’டா “பலிதம்’. இஷ்டப்பட்ட பலனைப் பெறரது (பெறுவது) “பலிதம்’. அதாவது மனோரதப் பூர்த்தி. பழுத்த பழமான ஸ்வாமிதானே ஸமஸ்த ஜீவராசிகளோட ஸகல கர்மாக்களுக்கும் பலதாதா?
“குறிப்பா, இங்கே தலிதம்&பலிதம்னு வரதை விரஹம்னும், அப்பறம் விரஹத்துல பொளந்து போன பக்தாள் ஆசை பலிச்சு அவனோட சேர்கிறதுன்னும் வெச்சுக்கணும்.
“அவனோட சேர்க்கிறதுதான் மதுரம்&ங்கிற தத்வம் பழமாகப் பழுத்துவிட்ட பூர்த்தி ஸ்தானம்!
“விருந்து முடிவுல பழம் குடுக்கற மாதிரி, இந்த அஷ்டக விருந்தை இப்படிப் பழம் குடுத்துப் பரம மங்களமா, மதுரமா முடிச்சிருக்கார்.”
“கடைசிக்கு முந்தி, “யஷ்டிர் மதுரா, ஸ்ருஷ்டிர் மதுரா’ன்னு சொல்லியிருக்கார். “யஷ்டி’ன்னா கழி, குச்சி. “ஹேய் ஹேய்!’னு மாடு&கன்னு ஒட்டிக்கிண்டு போறச்சே ஸ்வாமி எல்லா இடைப் பிள்ளைகளையும் போலக் கையில குச்சி வெச்சுண்டிருப்பார். ஸாக்ஷாத் ஸ்ரீ வைகுண்டாதிபதி இப்படி வந்தது எத்தனை எளிமை! எத்தனை ஸௌலப்யம்! த்ரிலோக தர்பார் நடத்தறதுக்குச் செங்கோல் பிடிக்கறவனே மாடு&கன்னுக்குத் தார்க்குச்சி பிடிக்கறான்னா, அந்த எளிமை எவ்வளவு மதுரமா இருக்கு?
“யஷ்டியைச் சொன்ன கையோட “ஸ்ருஷ்டி’யைச் சொல்றார். எடப் பிள்ளையா எளிமை வேஷம் போட்ட பாலக்ருஷ்ணனே ஒரு ஸந்தர்ப்பத்துல ஸ்ருஷ்டியும் பண்ணினார்னு பாகவதத்துல இருக்கு. அவதார ரஹஸ்யத்தைப் புரிஞ்சுக்காம ஒரு ஸமயம் ப்ரம்மா க்ருஷ்ணரோட மாடு மேச்சுண்டிருந்த மத்த எல்லா எடப் பசங்களையும், அந்த மாடுகளையும் மாயமாத் தூக்கிண்டு போய்ட்டார்.
“அப்படியா ஸமா சாரம்?’னு அப்ப ஸ்வாமி ஒரு கார்யம் பண்ணினார். அவர் மாத்திரம் நெனச்சிருந்தா ப்ரம்மா மாயமாத் தூக்கிண்டு போனாப்பலவே அவரும் அவாளை மறுபடி சொடக்கு போடற நாழில பூலோகத்துக்கு திரும்பக் கொண்டு வந்திருக்கலாம். மாயைக்கு மூலஸ்தானமே அவர்தானே? “மாயனை’ன்னு ஆண்டாளும் ஆரம்பிச்சிருக்காளே!
ஆனா அவர் பிள்ளை தன் கிட்டேந்து கத்துண்ட துளிப்போர மாயையையே தாமும் காப்பியடிச்சா கௌரதைக் கொறைச்சல்னு வேறே ஒரு மாயை பண்ணினார். ப்ரம்மா தூக்கிண்டு போன அத்தனை எடப் பசங்களுக்கும், மாடு கன்னுகளுக்கும் அச்சா டூப்ளிகேட் காப்பி ஸ்ருஷ்டி பண்ணிட்டார்! இங்கேதான் அவதார க்ருஷ்ணன் ஸ்ருஷ்டியும் பண்ணினது!
இந்த ஸ்ருஷ்டி ப்ரம்மா பண்ணினதில்லையே! மதுரமே ஒரு ஸ்வரூபமான பகவானே பண்ணினதுன்னா? அந்த மதுரந்தான் வாத்ஸல்யம்கிற மதுரத்தைப் பெருக்கெடுக்க வெச்சது. “ஸ்ருஷ்டிர் மதுரா’ன்னது அதுதான்.
“அதுக்கு முந்தினதா “யஷ்டி’யைச் சொன்னதுல ஒரு உள்ளர்த்தம் தோண்றது. மாய மந்த்ரம் பண்றவா மந்த்ரக்கோல்னு ஒரு யஷ்டிதான் வெச்சுண்டிருப்பா. “சூ மந்தரகாளி!’ன்னு மாயாஜாலம் பண்றவன் அந்தக் கோலை ஒரு ஆட்டு ஆட்டினா ஒடனே ஜாலவித்தை நடந்துடும்! Mச்ஞ்டிஞி தீச்ணஞீனு வெள்ளைக்காராளும் சொல்றா.
“க்ருஷ்ணனோட தார்க்குச்சியையே அப்படி அவன் ஒரு சொழட்டுச் சொழட்டித்தான் டூப்ளிகேட் ஸ்ருஷ்டி பண்ணினான்னு காட்டறாப்பல பதப்ரயோகம் விழுந்திருக்கு! ஸ்வாமிக்கு ஸங்கல்பமே போறும்.
ஆனா எதுக்கும் ஒரு கருவியை லீலையாக் காட்டறதுதான் பகவான் வழக்கம். தன்னோட லீலையைத் தன்னுதா காட்டாம கருவியால நடந்த மாதிரிக் காட்டறதும் அவனோட லீலா விநோதங்களில் ஒண்ணு! அப்படிக் காட்டறப்போ இப்படிப் பண்ணியிருக்கலாம்.
“மொத்தத்துல அந்தப் பெரியவர் சொன்னாப்பல “மதுராதிபதேரகிலம் மதுரம்’தான்! ஆண்டாள் “மதுரை மைந்தன்’னா; இவர் மதுரைக்கு அதிபதிங்கறார். கம்ஸனை வதம் பண்ணின பிற்பாடு இந்த டைட்டில் பகவானுக்கு வந்தது. வாஸ்தவத்துல க்ருஷ்ணர் மதுரைல ராஜாவா ஆதிபத்யம் வஹிக்காம, கம்ஸனோட பிதா உக்ரஸேனர் கிட்டயேதான் அந்தப் பொறுப்புக் குடுத்தார்.
கொஞ்சம் பிற்காலத்துல தாமே நிர்மாணம் பண்ணிண்ட த்வாரகையிலே கூட அவர் தமையனார் பலராமரோட சேந்தும், அவர் பேரிலேயும்தான் ராயபாரம் பண்ணினார்.
“ச்ருங்கார சேஷ்டிதங்கள் உள்பட ஸகல லீலா விநோதக் கூத்தும் அடிச்ச ஸ்வாமிக்கு உள்ளூர அப்படியொரு ஸந்யாஸ மனஸு! வைராக்ய மதுரம்! “யுக்தம் மதுரம்’னு சொன்ன யோகியோட மதுரம்!
“மதுராதிபதிங்கறது இன்னொரு அர்த்தத்துல ரொம்பவுமே பொருந்துந்தான். மதுரம் என்கிற தத்வத்துக்கே அவன்தானே அதிபதி? அதனால மதுராதிபதி.
“அவனுடைய அந்த மதுரம் லோகமெல்…லாம் பரவணும், நமக்குள்ளேயும் துளிக்கணும்.”
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM. SRI MAHA PERIVA NAME,BEHAVIOUR,KNOWLEGE,HUMILITY, SAINTLY APPEARANCE ETC -ALL MADHURAM
மதுரம் மதுரம்… கிருஷ்ணன் மதுரம்!:
காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் விளக்கம் - மாயனை, மன்னு வடமதுரை மைந்தனை
“அவனைப் பத்தின அத்…தனையுமே மதுரந்தான்!”
“அவன் பொறந்ததே மதுரைல. நம்ம பாண்டிய தேசத்து மதுரை இல்லே. இங்கேயும் மதுர மயமாத்தான் அம்பாள் இருக்கா. அவகிட்டேயிருந்துதான் ஸங்கீதம் பொறந்தது…ஆமாம், மாதங்கின்னும் ச்யாமளான்னும் சொல்ற ஸங்கீத தேவதைதான் மீனாக்ஷி. ஸங்கீதம்னாலே மதுரந்தானே? இது தென் மதுரை.
“நான் சொன்னது வட மதுரைன்னு யு.பி.&ல யமுனா தீரத்துல இருக்கறது. எதனாலயோ, அவா “மஞீடதரா’ன்னு சொல்லாம, “மtடதரா’ங்கிறா.
ஆண்டாள் ரஹஸ்ய அழகோட, சொல்லாம சொல்ற பாணியில, “மாயனை”ன்னு ஆரம்பிச்ச, தொடர்ந்தாப்பல “வட மதுரை மைந்தனை”ன்னு சொல்லியிருக்கா; “மாயனை, மன்னு வடமதுரை மைந்தனை”ன்னு! அதென்ன, “மன்னு’ன்னா, அதுக்கு “பஹு (வெகு) காலமா நெலச்சுப் புகழ் பெத்த’ன்னு அர்த்தம்,
“மன்னு புகழ் கோஸலைதன் மணிவயிறு வாய்த்தவனே!”ன்னு கூடப் பாசுரம் இருக்கு. அது ராமசந்த்ர மூர்த்தியைப் பத்திக் குலசேகரப் பெருமாள் பாடினது.
“தேவகிக்குப் பிள்ளையாய்ப் பொறந்தவனை அவளோட மைந்தன்னு சொல்லாம “வட மதுரை மைந்த’ன்னு சொல்லி ஜன்ம க்ஷேத்ரத்தைப் பெருமைப்படுத்தியிருக்கு.
ஜன்மாவைத் தந்த அம்மாவும், ஜன்மபூமியும் ஸ்வர்க்கத்துக்கும் மேலானவைன்னு சொல்றது:
“ஜனனீ, ஜன்ம பூமிச்ச ஸ்வர்காதபி கரீயஸீ”.
இங்கே மொதல்ல தாயைச் சொல்லிட்டு அப்புறம் தாய்நாட்டை & பொறந்த ஊர்னும் வெச்சுக்கலாம் & சொல்லியிருக்கு. ஆண்டாளோ ஊரைச் சொல்லிட்டு அப்பறம் “தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை’ன்னு அம்மாவைச் சொல்றா!
ஏன்னா, அந்த மதுரைக்கு அப்படியொரு மஹிமை!
என்ன மஹிமை&னா, ஜன்மா இல்லாத ஸ்வாமி ஜன்மிச்ச அந்த க்ஷேத்ரம்தான் “புனரபி ஜனனீ ஜடரே சயனம்’னு திரும்பத் திரும்ப தாய் வயத்துல பொறந்திண்டிருக்கற நமக்கெல்லாம் ஜன்ம விமோசனம் தருகிற மோக்ஷபுரியாயிருக்கு.
ஸப்த மோக்ஷபுரின்னு ஏழு இருக்கறதுல மொதல்ல ராமன் பொறந்த அயோத்தி. ரெண்டாவது க்ருஷ்ணன் பொறந்த இந்த வடமதுரை.
“அதோட முக்ய காரணமா எனக்கு என்ன தோண்றதுன்னா, அந்த ஊரோட பேரே அங்கே அவதாரம் பண்ணின ஸ்வாமிக்கு ஸ்வபாவமாயிருந்ததுதான்! க்ருஷ்ணன்னா என்ன? மதுரந்தான்! தித்திப்புன்னா தித்திப்பு, அப்படியொரு தித்திப்பு அவன்!”
“அந்த மாதுர்யத்துல என்ன விசேஷம்னா, மதுரமா இல்லாத விஷயங்களாவே அவன் வெளிப்பார்வைக்கு அநேகம் பண்ணினாலும் அதுகளும் பக்த ஹ்ருதயத்துக்குள்ளே மதுரமாவே ஊறரது (ஊறுவது)தான்! ஆண்டாள் மாதிரி, சுகர், லீலா சுகர், மீரா மாதிரி மஹா பக்தாள்தான்னு இல்லே! நம்ம மாதிரி ஏதோ கொஞ்சம் பக்தின்னு இருக்கறவாளுக்குக் கூட அந்த க்ருஷ்ணன் மட்டும் என்ன பண்ணட்டும், அது மதுரமாத்தான் இருக்கு!
“அந்த மாதுர்யம் தனக்கு இருக்காக்கும்; ஆகையினால, என்ன அடாவடி, கபடம், திருட்டு&புரட்டு, பொய் வேணாலும் பண்ணுவேன்’னு அவன் நடத்திக் காட்டற மாதிரியே தன்னோட வாழ்க்கை பூராவுலேயும் பண்ணிண்டு போயிருக்கான்.
“என்னமா அவன் ஸம்பந்தப்பட்டா அமதுரங்கூட மதுரமாச்சுன்னா: சக்கரையிலே பல தினுஸு பொம்மை பண்ணியிருக்குன்னு வெச்சுக்கோங்கோ, மொளகா, பாகக்கா, உப்புக்கட்டி மாதிரில்லாம் கூட அந்தந்தக் கலர் குடுத்துத் தத்ரூபமாப் பண்ணியிருக்குன்னு வெச்சுக்கோங்கோ.
அப்ப அந்த மொளகாயும், பாகக்காயும், உப்புக்கட்டியுங்கூட தித்திக்கத்தானே செய்யும்? ஏன்னா மொளகாயும் பாகலும் வெளிவேஷந்தானே? உள்ளுக்குள்ளே அதெல்லாமும் மதுரமயமான சக்கரைதானே? அப்படித்தான் இதுவும்.
“இனிமை’ & அதுதான் “மதுர’த்துக்குத் தமிழ். “தித்திப்பு’ன்னு பேச்சு மொழியில சொல்றோம். இலக்கிய மொழி “இனிமை’. செல (சில) வார்த்தைகள் தமிழ்ல அலாதி அழகு; அர்த்தத்துக்குப் பொருத்தமான சப்தமா அந்த வார்த்தைகள்ல அமைஞ்சிருக்கு. அப்படி ஒண்ணு “இனிமை’. அதுல வர மூணு எழுத்துல எதுவுமே கடுமையா இல்லாம மெத்துனு இருக்கு.
“இங்கிலீஷ்ல மதுரத்தை “ஸ்வீட்’ங்கிறா. “ஸ்வீன்னு இழுத்து சொல்றப்ப மதுரமாயிருந்தாலும் அப்பறம் முடிக்கறச்சே “ட்’னு ஒரு டகாரம் மொரட்டு சப்தமா ஒக்காந்திருக்கு! ஒத்தர் வேடிக்கையாச் சொன்னாப்பல, “குழலினிது யாழினிது’ன்னு, சொல்றச்சயே மழ மழன்னு இனிமையா இருக்கறதை “ட்ரான்ஸ்லேட்’ பண்ணி, “ஊடூதtஞு ண்தீஞுஞுt, டூதtஞு ண்தீஞுஞுt’ன்னு லொட்டு லொட்டுனு சொன்னா…”
“ஸம்ஸ்க்ருதத்துல “மதுரம்’னு சொல்றச்சே கூட அந்த “ஞீடத’ கொஞ்சம் கடும் சப்தமாத்தான் இருக்கு. அதைவிட நைஸா “ஸ்வாது’ன்னும் இன்னொரு வார்த்தை இருக்கு. இங்கே வர “து’ மதுரத்துல வர கெட்டி “து’ இல்லே; லேசு”து’…”
“இத்தனைதான்னு இல்லாம அவன் போட்ட வேஷத்திலே ஒண்ணா எப்பவாவது அவன் “அபாலஜெடிக்’ வேஷம் போட்டிருந்தா அதுவுங்கூட மதுரமாத்தான் இருக்கும்!
“இதை நெனச்சுத்தான் பரம பக்தர் ஒத்தர், “மதுராதிபதேரகிலம் மதுரம்” & “மதுராதிபதே: அகிலம் மதுரம்” பாடி வெச்சுட்டுப் போய்ட்டார்.
“மதுராஷ்டகம்’னே எட்டு ச்லோகம் கொண்ட ஸ்தோத்ரம் அது. அதுல ஒவ்வொரு ச்லோகத்துக்கும் ஈற்றடி
“மதுராதிபதேரகிலம் மதுரம்’. பாக்கி மூணடியில ஒவ்வொண்ணிலேயும் ஸ்வாமியோட குணம், ரூபம், கார்யம், அல்லது அவன் ஸம்பந்தப்பட்ட விஷயம்னு ரெண்டு ரெண்டு ஸமாசாரம் சொல்லியிருக்கும். ஒவ்வொண்ணையும் மதுரம்&னு சொல்லியிருக்கும்.
“எக்ஸாம்பிளுக்கு மொத ச்லோகம் சொல்றேன். அதுல மொதல் அடி. “அதரம் மதுரம், வதனம் மதுரம்”, “ஸ்வாமியோட ஒதடு மதுரமாயிருக்கு; முகம் மதுரமாயிருக்கு’ன்னு ரெண்டு விஷயம். ரெண்டு மதுரம் சொல்லியிருக்கு.
“ஒதட்டை ஏன் எடுத்தவொடனே சொன்னார்னா மதுரம்னா முக்யமா ஸங்கீதத்தைத் தானே சொல்றது? மதுர கானம், மதுர கண்டம், இனிய குரல், (ண்தீஞுஞுt திணிடிஞிஞு) னு எந்த பாஷையானாலும் அப்படிச் சொல்றது. முன்னாலே சொன்னேனே, தென் மதுரை மீனாக்ஷிகூட ஸங்கீதத்தின் அதிதேவதைதான்னு!
வட மதுரையில் இருக்கற அவளோட ஒடப்பொறந்தானும் கானலோலன்தான். அவவீணா கான ப்ரியை&னா அவன் வேணுகானலோலன்! குழல், யாழ்ங்கிற மாதிரி, வேணு&வீணாங்கிற வார்த்தைகளே மதுரமா ஒலிக்கிறது.
மத்த ஸ்வாமி கையிலேல்லாம் ஆயுதம் இருக்கும். கருணாமூர்த்தியான ராமசந்தர மூர்த்தி கையிலகூட தநுஸுதான். க்ருஷ்ணன்தான் பிள்ளாங்குழல் வெச்சுண்டிருக்கறவன். வேணுகோபாலன், முரளீதரன்&னே அவனுக்குப் பேர்.
அந்த வேணுவை அவன் “ஒதட்டுல வெச்சுத்தானே ஊதரான்? அவனோட திவ்ய சரீரத்துக்குள்ளேயிருந்து வர பவித்ரமான காத்தை அவன் அந்தப் பிள்ளாங்குழல் வழியா வடிக்கறதுனாலதானே அந்த வேணுகானம் அப்படியொரு மதுரமா, கேக்கறவாளையெல்லாம் பித்துப் பிடிச்சவாளாட்டம் மயக்கித்து?
“பரம ப்ரியத்தைக் காட்ட முத்தம் குடுக்கறது. ஸ்வாமி எப்பவும் பிள்ளாங்குழலை ஒதாட்டல ஸ்பரிச்சிச்சுண்டு முத்தந்தான் குடுக்கறான்னு அதுகிட்ட கோபிகா ஸ்த்ரீகள்லாம் பொறாமை கூடப் படுவாளாம்!
“பிள்ளாங்குழல் வாசிச்சாதானா? அவன் பேசினாலே ஸங்கீதமாத்தான் பரம மதுரமாயிருக்கும். இன்னொரு ச்லோகத்துல அதையும் “வசனம் மதுரம்’னு சொல்லியிருக்கு.
“ஸாதாரணமா ஞானோபதேசம்னா ஒரே போரா இருக்கும்! ஆனா, க்ருஷ்ணன் பண்றச்சே மட்டும் அதுவுங்கூட மதுர கீதமாகத்தான் இருக்கும்! ஆமாம், “கீதை’ன்னே அதுக்குப் பேர் சொல்றோமே! கொழந்தையா பிள்ளாங்குழல் வாசிச்சுண்டு கானம் பண்ணினவன் நன்னா வயஸேறினவிட்டு ஞானம் சொன்னப்ப, அதுவும் கீதமாத்தான் திதிச்சுது!
“இதெல்லாம் ஒதட்டு ஸம்பந்தத்துல வந்ததுதானே? அதனாலதான் “அதரம் மதுரம்’னு மொதலிடம் குடுத்துச் சொன்னார்.
“இப்படி வரிக்கு ரெண்டு மதுரமா ஒவ்வொரு ச்லோகத்துலயும் ஈற்றடி நீங்கலா மத்த மூணுவரியிலே மொத்தம் ஆறு மதுரம். எட்டு ச்லோகத்திலயும் சேத்து ஆறெட்டு நாப்பத்தெட்டு மதுரத்தைச் சொல்லி அத்புதமா அஷ்டகம் பாடியிருக்கார்.
“பண்ணினவர் வல்லபாச்சார்யார்&ங்கிறவர். பால க்ருஷ்ணனையே முழு முதல் தெய்வமா வெச்சு “சுத்தாத்வைதம்’னு “ஃபிலாஸஃபி’ பண்ணினவர். அதை “ஃபாலோ’ பண்றவா இருக்கா. எல்லாரும் ஸந்தோஷப்பட அவர் “மதுராஷ்டகம்’ பாடியிருக்கார்.
“பகவானோட “அதரம்’, “வதனம்’, “நயனம்’, “ஹஸிதம்’ அதாவது சிரிப்பு, அவனோட “ஹ்ருதயம்’, “கமனம்’ & அதாவது நடை. அவனோட வசனம், சரிதம், வஸனம் & அதுதான் அவன் போட்டுண்டிருக்கற பீதாம்பரம்; அல்லது “வஸனம்’னா அவர் வாஸம் பண்ற கோகுலம்னும் சொல்லலாம்; இப்படி அடுக்கிண்டே போய் அது ஒண்ணொன்னும் மதுரம்கிறார்.
இதெல்லாம் மதுரமாயிருக்கிறது விசேஷமில்லை. ஸாதாரணமா மதுர லிஸ்டில் வரதுக்கில்லாத சிலதுகூட க்ருஷ்ண ஸம்பந்தத்தாலே மதுரமாயிட்டதையும் அவர் சொல்றதுதான் விசேஷம்.
இப்படி “வலிதம்’, “ஹரணம்’, “வயிதம்’ங்கற மாதிரி சிலது சொல்றார். “வலிதம்’னா வளைச்சுண்டு கோணலா நிக்கறது. அது ஸாதாரணமா மதுரமாயிருக்காது.
ஆனா பகவான் பிள்ளாங்குழல் வாசிக்கறதுல இடது பக்கம் சாஞ்ச முகமாவும், கழுத்துக்குக் கீழே இடுப்பு வரைக்கும் வலது பக்கமா ஒடிச்சுண்டும், இடுப்புலேந்து கீழே மறுபடி இடது பக்கம் ஒடிச்சுண்டு வலது பாதத்தை இடது பாதத்துக்கு க்ராஸா வெச்சுண்டும் மூணு கோணலா நிக்கறதையே த்ரிபங்கம், த்ரிபங்கம்னு லோகமெல்லாம் பேரழகா மதிச்சுக் கொண்டாடறது.”
“கோணை பெரிதுடைத்தே”ன்னு ஆழ்வார்கூட சொல்லியிருக்கார். அதுவும் அவன்கிட்ட அழகுதான். அதாவது மதுரந்தான்.
“மதுரம்னா வேறே என்ன? அழகு, நல்லதுன்னுதான் அர்த்தம். நல்லது மதுரம். பகவான்கிட்ட எல்லாமே நல்லதுதான். “அனந்த கல்யாண குணம்’ங்கிறது. அதனால அத்தனையும் மதுரம்’.
“ஹரணம் மதுரம்&ங்கிறார். ஹரணம்னா அபஹரணம்தான்; ப்ளெய்னா சொன்னா, “திருட்டு’. கிருஷ்ணனுடைய திருட்டு வெண்ணெய்த் திருட்டு, “உள்ளம் கவர் கள்வ’னா அவன் பண்ற திருட்டு ரெண்டுமே எத்தனை மதுரம்?
“வமிதம் மதுரம்’ங்கறாரே, அது என்ன? “வமிதம்’ தான் ஙணிட்டிtனு ஆனது. “சமனம்’ பண்றது “சாந்தி’&ங்கிற மாதிரி, “வமனம்’ பண்றதுதான் “வாந்தி’. ஸாதாரணமா வாந்தி பண்றதைப் பார்த்தாலே, நெனச்சாலே நமக்கும் ஓக்காளிக்கும்! ஆனா க்ருஷ்ணன் பண்ணினா? அதுவுங் கூட மதுரந்தான். அதை (நி)ரூபிக்கிறதுக்காவே அவன் அப்படியும் பண்ணுவான் போலேயிருக்கு!
இல்லாட்டா, “வமிதம்’னா “கொப்புளிக்கறது’ங்கிற அர்த்தமும் எடுத்துக்கலாம். அவன் திருட்டுத்தனமா வாய் நெறய யமுனா தீர்த்தத்தை அடக்கிண்டு எவளோ ஒரு கோபிகா ஸ்த்ரீ மூஞ்சில அதைப் பொக்குனு பீச்சிக் கொப்புளிச்சானானா, அதுதான் அவளுக்கு எத்தனை மதுரமாயிருந்திருக்கும்? அவன் பண்ணின இந்த மாதிரி விஷமமெல்லாம் இன்னிக்கும் படிக்கறச்சே, கேக்கறச்சேயே எப்படித் தேனாத் திதிக்கிறது?…
“புக்தம் மதுரம்’னு ரெண்டு எடத்துல வரது. அதுக்கு எடத்தைப் பொறுத்து வெவ்வேறே அர்த்தம் பண்ணிக்கணும். மொதல்ல “பீதம் மதுரம், புக்தம் மதுரம்’னு வரது. “பீதம்’னா பானம் பண்றது; குடிக்கிறது. பாலக்ருஷ்ணன் பாலை ருசிச்..சு., சீ..ப்பிக் குடிக்கறது மதுரமான காட்சியாதான் இருக்கும். அதோட சேத்து “புக்தம்’னு போட்டிருக்கறதாலே “அன்ன&பானம்’ என்கிறபடி இங்கே “புக்தம்’கிறது சாப்பிடறதைக் குறிக்கும்.
ஸமஸ்த ஜீவராசிகளுக்கும் சாப்பாடு போடற தாதா, தானே சாப்பிடறது ரொம்ப மதுரந்தான்! ரெண்டாவதா “யுக்தம் மதுரம், புக்தம் மதுரம்’னு வரது. போகம்&போகம்னு ரெண்டு. போகம், இஹலோக இன்பம், யோகம், ஆத்மலோக இன்பம். “புக்தம்’னா போகம் பண்றது; “யுக்தம்’னா யோகம் பண்றது.
இங்கே அப்படிதான் அர்த்தம் பண்ணிக்கணும். மஹா மாயாவி, பரம ஞானி ரெண்டுமா இருந்த ஸ்வாமி அந்த க்ருஷ்ணாவதார வாழ்க்கை பூராவும் ரெண்டையுமேதான் “ஸைமல்டேனிய’ ஸாப் பண்ணிக்கிண்டிருந்தான்! ஆமாம், அப்படித்தான் பண்ணிக்கிண்டிருந்தான்!”
“இப்படி அநேக மதுரங்கள் சொல்லிண்டு போய் “தலிதம் மதுரம், பலிதம் மதுரம்’னு அஷ்டகத்தை முடிச்சிருக்கார். “தவிதம்’னா “பொளக்கறது’, “பொளந்து தள்ளிட்டான்!’னு சொல்கிறோமே, அப்படிச் சொல்லும்படியா, தான் பண்ணின ஒவ்வொண்ணையும் எக்ஸ்பெர்டாப் பண்ணினவன் அவன்!
நிஜமாவே பால்யத்துல அஸுராளைப் பொளந்தும் தள்ளினான்! பிற்காலத்துல தன் ஸங்கல்ப சக்திக்குக் கருவி மாத்ரமா இருந்துண்டு அர்ஜுனாதிகள் சத்ரு ஸைன்யங்களைப் பொளந்து தள்ளும்படியும் பண்ணினான். “காலோஸ்மி’ “நான் காலனாக்கும்’னு சொல்லி அந்த அர்ஜுனனையே நடுங்கப் பண்ணினவனாச்சே!
அந்த நடுக்கத்துக்குள்ளேயுங்கூட ஒரு மதுரத்தையும் ஒளிச்சுக் குடுத்திருப்பான்! அவன் காலனா ஸம்ஹாரம் பண்றதும் மதுரம்! ஸம்ஹரிக்கப்படுகிறவனுக்கே, மதுரம்! ஏன்னா அவன் கையால செத்தா மோக்ஷந்தானே!
காலனுக்குப் பெண்பால் “காலி’, “காளி’ங்கறது அதுதான். “மதுரகாளி’ன்னே திருவாச்சூர்லே இருக்கா!
“ஒடம்பைப் பொளக்காம, மனஸைப் பொளக்கறது&ன்னும் அர்த்தம் பண்ணிக்கலாம். விரஹ தாபத்துல அப்படித்தான் கோபிகா ஸ்த்ரீகளோட மனஸைப் பொளந்தான்.
கோபிகா ஸ்த்ரீன்னா யாரு? உள்ளன்பு & உள்ளம் பூரா அப்படியே ப்ரேமை ரொம்…பிக் கிடக்கற உள்ளன்பு இருக்கற அத்தனை பக்தாளுந்தான்! அவாளுக்கு அப்படிப் பொளக்கப்படறதுலேயே & “தலிதம்’னா பொளக்கப்படுவது’தான்;
அப்படி ஆவதிலேயே & உள்ளூர ஒரு மாதுர்யமும் தெரியும்! ஏன்னா, சேந்து இருக்கறதை விடப் பிரிவுலதான் ஒத்தரைப் பத்தின நெனவு ஆழமாயிருக்கும்! க்ருஷ்ணன் நெனவு மதுரந்தானே?
“தலிதத்துக்கு அப்பறம் அதுக்கு நேர் “ஆப்போஸிட்’டா “பலிதம்’. இஷ்டப்பட்ட பலனைப் பெறரது (பெறுவது) “பலிதம்’. அதாவது மனோரதப் பூர்த்தி. பழுத்த பழமான ஸ்வாமிதானே ஸமஸ்த ஜீவராசிகளோட ஸகல கர்மாக்களுக்கும் பலதாதா?
“குறிப்பா, இங்கே தலிதம்&பலிதம்னு வரதை விரஹம்னும், அப்பறம் விரஹத்துல பொளந்து போன பக்தாள் ஆசை பலிச்சு அவனோட சேர்கிறதுன்னும் வெச்சுக்கணும்.
“அவனோட சேர்க்கிறதுதான் மதுரம்&ங்கிற தத்வம் பழமாகப் பழுத்துவிட்ட பூர்த்தி ஸ்தானம்!
“விருந்து முடிவுல பழம் குடுக்கற மாதிரி, இந்த அஷ்டக விருந்தை இப்படிப் பழம் குடுத்துப் பரம மங்களமா, மதுரமா முடிச்சிருக்கார்.”
“கடைசிக்கு முந்தி, “யஷ்டிர் மதுரா, ஸ்ருஷ்டிர் மதுரா’ன்னு சொல்லியிருக்கார். “யஷ்டி’ன்னா கழி, குச்சி. “ஹேய் ஹேய்!’னு மாடு&கன்னு ஒட்டிக்கிண்டு போறச்சே ஸ்வாமி எல்லா இடைப் பிள்ளைகளையும் போலக் கையில குச்சி வெச்சுண்டிருப்பார். ஸாக்ஷாத் ஸ்ரீ வைகுண்டாதிபதி இப்படி வந்தது எத்தனை எளிமை! எத்தனை ஸௌலப்யம்! த்ரிலோக தர்பார் நடத்தறதுக்குச் செங்கோல் பிடிக்கறவனே மாடு&கன்னுக்குத் தார்க்குச்சி பிடிக்கறான்னா, அந்த எளிமை எவ்வளவு மதுரமா இருக்கு?
“யஷ்டியைச் சொன்ன கையோட “ஸ்ருஷ்டி’யைச் சொல்றார். எடப் பிள்ளையா எளிமை வேஷம் போட்ட பாலக்ருஷ்ணனே ஒரு ஸந்தர்ப்பத்துல ஸ்ருஷ்டியும் பண்ணினார்னு பாகவதத்துல இருக்கு. அவதார ரஹஸ்யத்தைப் புரிஞ்சுக்காம ஒரு ஸமயம் ப்ரம்மா க்ருஷ்ணரோட மாடு மேச்சுண்டிருந்த மத்த எல்லா எடப் பசங்களையும், அந்த மாடுகளையும் மாயமாத் தூக்கிண்டு போய்ட்டார்.
“அப்படியா ஸமா சாரம்?’னு அப்ப ஸ்வாமி ஒரு கார்யம் பண்ணினார். அவர் மாத்திரம் நெனச்சிருந்தா ப்ரம்மா மாயமாத் தூக்கிண்டு போனாப்பலவே அவரும் அவாளை மறுபடி சொடக்கு போடற நாழில பூலோகத்துக்கு திரும்பக் கொண்டு வந்திருக்கலாம். மாயைக்கு மூலஸ்தானமே அவர்தானே? “மாயனை’ன்னு ஆண்டாளும் ஆரம்பிச்சிருக்காளே!
ஆனா அவர் பிள்ளை தன் கிட்டேந்து கத்துண்ட துளிப்போர மாயையையே தாமும் காப்பியடிச்சா கௌரதைக் கொறைச்சல்னு வேறே ஒரு மாயை பண்ணினார். ப்ரம்மா தூக்கிண்டு போன அத்தனை எடப் பசங்களுக்கும், மாடு கன்னுகளுக்கும் அச்சா டூப்ளிகேட் காப்பி ஸ்ருஷ்டி பண்ணிட்டார்! இங்கேதான் அவதார க்ருஷ்ணன் ஸ்ருஷ்டியும் பண்ணினது!
இந்த ஸ்ருஷ்டி ப்ரம்மா பண்ணினதில்லையே! மதுரமே ஒரு ஸ்வரூபமான பகவானே பண்ணினதுன்னா? அந்த மதுரந்தான் வாத்ஸல்யம்கிற மதுரத்தைப் பெருக்கெடுக்க வெச்சது. “ஸ்ருஷ்டிர் மதுரா’ன்னது அதுதான்.
“அதுக்கு முந்தினதா “யஷ்டி’யைச் சொன்னதுல ஒரு உள்ளர்த்தம் தோண்றது. மாய மந்த்ரம் பண்றவா மந்த்ரக்கோல்னு ஒரு யஷ்டிதான் வெச்சுண்டிருப்பா. “சூ மந்தரகாளி!’ன்னு மாயாஜாலம் பண்றவன் அந்தக் கோலை ஒரு ஆட்டு ஆட்டினா ஒடனே ஜாலவித்தை நடந்துடும்! Mச்ஞ்டிஞி தீச்ணஞீனு வெள்ளைக்காராளும் சொல்றா.
“க்ருஷ்ணனோட தார்க்குச்சியையே அப்படி அவன் ஒரு சொழட்டுச் சொழட்டித்தான் டூப்ளிகேட் ஸ்ருஷ்டி பண்ணினான்னு காட்டறாப்பல பதப்ரயோகம் விழுந்திருக்கு! ஸ்வாமிக்கு ஸங்கல்பமே போறும்.
ஆனா எதுக்கும் ஒரு கருவியை லீலையாக் காட்டறதுதான் பகவான் வழக்கம். தன்னோட லீலையைத் தன்னுதா காட்டாம கருவியால நடந்த மாதிரிக் காட்டறதும் அவனோட லீலா விநோதங்களில் ஒண்ணு! அப்படிக் காட்டறப்போ இப்படிப் பண்ணியிருக்கலாம்.
“மொத்தத்துல அந்தப் பெரியவர் சொன்னாப்பல “மதுராதிபதேரகிலம் மதுரம்’தான்! ஆண்டாள் “மதுரை மைந்தன்’னா; இவர் மதுரைக்கு அதிபதிங்கறார். கம்ஸனை வதம் பண்ணின பிற்பாடு இந்த டைட்டில் பகவானுக்கு வந்தது. வாஸ்தவத்துல க்ருஷ்ணர் மதுரைல ராஜாவா ஆதிபத்யம் வஹிக்காம, கம்ஸனோட பிதா உக்ரஸேனர் கிட்டயேதான் அந்தப் பொறுப்புக் குடுத்தார்.
கொஞ்சம் பிற்காலத்துல தாமே நிர்மாணம் பண்ணிண்ட த்வாரகையிலே கூட அவர் தமையனார் பலராமரோட சேந்தும், அவர் பேரிலேயும்தான் ராயபாரம் பண்ணினார்.
“ச்ருங்கார சேஷ்டிதங்கள் உள்பட ஸகல லீலா விநோதக் கூத்தும் அடிச்ச ஸ்வாமிக்கு உள்ளூர அப்படியொரு ஸந்யாஸ மனஸு! வைராக்ய மதுரம்! “யுக்தம் மதுரம்’னு சொன்ன யோகியோட மதுரம்!
“மதுராதிபதிங்கறது இன்னொரு அர்த்தத்துல ரொம்பவுமே பொருந்துந்தான். மதுரம் என்கிற தத்வத்துக்கே அவன்தானே அதிபதி? அதனால மதுராதிபதி.
“அவனுடைய அந்த மதுரம் லோகமெல்…லாம் பரவணும், நமக்குள்ளேயும் துளிக்கணும்.”
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM. SRI MAHA PERIVA NAME,BEHAVIOUR,KNOWLEGE,HUMILITY, SAINTLY APPEARANCE ETC -ALL MADHURAM