Post by radha on Jul 5, 2020 11:04:33 GMT 5.5
OMSRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
#சிவசிவ
நமசிவாய வாழ்க
எந்தன் அய்யனின் பொன்
போன்ற சிவந்த திருவடி வாழ்க..
பயம் இல்லாத வாழ்க்கை
யாருக்கேனும் உண்டா.?
நிச்சயமாக இருக்காது..
இந்த வாழ்வில் ஒவ்வொரு நாளும்
நாம் ஏதாவது ஒரு பயத்துடன் தான் வாழ்கிறோம்..
பிள்ளைகளை பெற்றுவிட்டோம்..
அவர்களை வளர்த்து ஆளாக்குவது
எப்படி.?அவர்களை எப்படி படிக்க வைப்பது.? என்ன வேலை வாங்கி கொடுப்பது என்று ஒரு பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்..
பெண் பிள்ளைகளாக இருந்தால்
காதல் கீதல் என்று எதையாவது செய்து விடுமோ.? அவளை யாராவது ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு மணம் முடித்து தர வேண்டுமே..! என்று மன பதற்றத்துடனே இப்படி ஒரு பயம் சிலருக்கு..
இத்துடன் நாம் பார்க்கும் வேலை நமக்கு நிரந்தரமாக நிலைக்குமா.? அல்லது செய்து வரும் வியாபாரம் நல்லபடியாக தொடருமா.?
என்று ஒரு பயம்..
இத்துடன் நமது நெருங்கியவர்களின்
நமது உடனிருப்பவர்களின் தாய், தந்தையின் உடல் நிலை குறித்து ஒரு பயம்..
இதையெல்லாம் விடுத்து அளவுக்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு வருமான வரி குறித்து ஒரு பயம்...
இப்படி நம் வாழ்வில் பயத்தை அடுக்கிக்கொண்டே போகலாம்..
ஆக.. பயம் இல்லாத வாழ்க்கை
இருக்க முடியுமா என்ன?
சரி.. எதைப் பற்றியும் பயமே இல்லை
என வைத்துக்கொள்வோம்.. அப்படி இருந்தால் எப்படி இருக்கும்?
அச்சம் இல்லை, அச்சம் இல்லை
அச்சம் என்பது இல்லையே என்று
மார்தட்டிய பாரதியும் பயந்து போய்
ஒருநாள் புதுச்சேரி சென்றார்.
பிணி, மூப்பு, மரணம் என்ற மூன்று
பயமும் மனிதனை விடாது துரத்திக் கொண்டிருக்கிறது.
திருநாவுக்கரசர் சொல்லுகிறார்...
"அஞ்சுவது யாதொன்றும் இல்லை"
"அஞ்ச வருவதும் இல்லை"
அப்படியென்றால் பயப்படுவதற்கு
ஒன்றும் இல்லை. இப்போது மட்டும்
இல்லை, இனிமேல் நாம் பயப்படுத்துவதற்கு எப்போதும் ஒன்றுமே வராது என்று சொல்கிறார்.
இதை சொல்வது யார் தெரியுமா?
ஏதோ பெரிய பணக்காரர், சக்கரவர்த்தி அல்ல.. படை பலம் உள்ளவர், செல்வாக்கு உள்ளவர் என அந்த மாதிரி ஏதாவது ஒருவர் என நினைக்கிறீர்களா.? இல்லை... இதெல்லாம் எதுவுமே இல்லாதவர்..
இளமையில் தாய் தந்தையை இழந்தவர்.
தன் அக்காவின் வளர்ப்பில் வளர்ந்தவர்.
அக்காவும், கணவனை இழந்த கைம்பெண்.
இதை இவர் சொன்னது
எப்போது தெரியுமா ?
அவர் இருந்த நாட்டின் அரசனின் கோபத்திற்கு உள்ளாகி, அந்த அரசன் யானையைக் கொண்டு அவரின் தலையை மிதிக்கச் சொன்ன நேரத்தில்...
மதம் கொண்ட யானை வருகிறது... நாவுக்கரசரின் தலையை மிதிக்க..
அப்போது சொல்லுகிறார்..
அஞ்சுவது யாதொன்றும் இல்லை
அஞ்ச வருவதும் இல்லை.
எங்கிருந்து இந்த தைரியம் வந்தது?
மேலே பூசிய திரு வெண்ணீறும்,
சுடர் விடும் சந்திரனைப் போன்ற சூடாமணியும், புலித்தோல் உடையும்,
சிவந்த நிறமும், காளை வாகனமும்,
பாம்பும், கெடில நதி நீரும், கொண்ட அவர் இருக்கும் போது நாம் அஞ்சுவதும் இல்லை நமக்கு அஞ்ச வருவதும் இல்லை..
அஞ்சுவது யாதொன்றும் இல்லை
அஞ்ச வருவதும் இல்லை... அப்படியென்றால் நாம் அஞ்சும்படி
வருவதும் ஒன்றும் இல்லை என்கிறார்..
எவ்ளோ ஆழ்ந்த திடமான பக்தியை பாருங்கள்.. அசைக்க முடியாத நம்பிக்கையை பாருங்கள்..
நீங்களும் சொல்லிப் பாருங்கள் -
உங்களுக்கும் உள்ளுக்குள் ஒரு
தைரியம் வரும்.
அஞ்சுவது யாதொன்றும் இல்லை..
அஞ்ச வருவதும் இல்லை...
#ஓம் #நமசிவாய
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL. CHARAN
#சிவசிவ
நமசிவாய வாழ்க
எந்தன் அய்யனின் பொன்
போன்ற சிவந்த திருவடி வாழ்க..
பயம் இல்லாத வாழ்க்கை
யாருக்கேனும் உண்டா.?
நிச்சயமாக இருக்காது..
இந்த வாழ்வில் ஒவ்வொரு நாளும்
நாம் ஏதாவது ஒரு பயத்துடன் தான் வாழ்கிறோம்..
பிள்ளைகளை பெற்றுவிட்டோம்..
அவர்களை வளர்த்து ஆளாக்குவது
எப்படி.?அவர்களை எப்படி படிக்க வைப்பது.? என்ன வேலை வாங்கி கொடுப்பது என்று ஒரு பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்..
பெண் பிள்ளைகளாக இருந்தால்
காதல் கீதல் என்று எதையாவது செய்து விடுமோ.? அவளை யாராவது ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு மணம் முடித்து தர வேண்டுமே..! என்று மன பதற்றத்துடனே இப்படி ஒரு பயம் சிலருக்கு..
இத்துடன் நாம் பார்க்கும் வேலை நமக்கு நிரந்தரமாக நிலைக்குமா.? அல்லது செய்து வரும் வியாபாரம் நல்லபடியாக தொடருமா.?
என்று ஒரு பயம்..
இத்துடன் நமது நெருங்கியவர்களின்
நமது உடனிருப்பவர்களின் தாய், தந்தையின் உடல் நிலை குறித்து ஒரு பயம்..
இதையெல்லாம் விடுத்து அளவுக்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு வருமான வரி குறித்து ஒரு பயம்...
இப்படி நம் வாழ்வில் பயத்தை அடுக்கிக்கொண்டே போகலாம்..
ஆக.. பயம் இல்லாத வாழ்க்கை
இருக்க முடியுமா என்ன?
சரி.. எதைப் பற்றியும் பயமே இல்லை
என வைத்துக்கொள்வோம்.. அப்படி இருந்தால் எப்படி இருக்கும்?
அச்சம் இல்லை, அச்சம் இல்லை
அச்சம் என்பது இல்லையே என்று
மார்தட்டிய பாரதியும் பயந்து போய்
ஒருநாள் புதுச்சேரி சென்றார்.
பிணி, மூப்பு, மரணம் என்ற மூன்று
பயமும் மனிதனை விடாது துரத்திக் கொண்டிருக்கிறது.
திருநாவுக்கரசர் சொல்லுகிறார்...
"அஞ்சுவது யாதொன்றும் இல்லை"
"அஞ்ச வருவதும் இல்லை"
அப்படியென்றால் பயப்படுவதற்கு
ஒன்றும் இல்லை. இப்போது மட்டும்
இல்லை, இனிமேல் நாம் பயப்படுத்துவதற்கு எப்போதும் ஒன்றுமே வராது என்று சொல்கிறார்.
இதை சொல்வது யார் தெரியுமா?
ஏதோ பெரிய பணக்காரர், சக்கரவர்த்தி அல்ல.. படை பலம் உள்ளவர், செல்வாக்கு உள்ளவர் என அந்த மாதிரி ஏதாவது ஒருவர் என நினைக்கிறீர்களா.? இல்லை... இதெல்லாம் எதுவுமே இல்லாதவர்..
இளமையில் தாய் தந்தையை இழந்தவர்.
தன் அக்காவின் வளர்ப்பில் வளர்ந்தவர்.
அக்காவும், கணவனை இழந்த கைம்பெண்.
இதை இவர் சொன்னது
எப்போது தெரியுமா ?
அவர் இருந்த நாட்டின் அரசனின் கோபத்திற்கு உள்ளாகி, அந்த அரசன் யானையைக் கொண்டு அவரின் தலையை மிதிக்கச் சொன்ன நேரத்தில்...
மதம் கொண்ட யானை வருகிறது... நாவுக்கரசரின் தலையை மிதிக்க..
அப்போது சொல்லுகிறார்..
அஞ்சுவது யாதொன்றும் இல்லை
அஞ்ச வருவதும் இல்லை.
எங்கிருந்து இந்த தைரியம் வந்தது?
மேலே பூசிய திரு வெண்ணீறும்,
சுடர் விடும் சந்திரனைப் போன்ற சூடாமணியும், புலித்தோல் உடையும்,
சிவந்த நிறமும், காளை வாகனமும்,
பாம்பும், கெடில நதி நீரும், கொண்ட அவர் இருக்கும் போது நாம் அஞ்சுவதும் இல்லை நமக்கு அஞ்ச வருவதும் இல்லை..
அஞ்சுவது யாதொன்றும் இல்லை
அஞ்ச வருவதும் இல்லை... அப்படியென்றால் நாம் அஞ்சும்படி
வருவதும் ஒன்றும் இல்லை என்கிறார்..
எவ்ளோ ஆழ்ந்த திடமான பக்தியை பாருங்கள்.. அசைக்க முடியாத நம்பிக்கையை பாருங்கள்..
நீங்களும் சொல்லிப் பாருங்கள் -
உங்களுக்கும் உள்ளுக்குள் ஒரு
தைரியம் வரும்.
அஞ்சுவது யாதொன்றும் இல்லை..
அஞ்ச வருவதும் இல்லை...
#ஓம் #நமசிவாய
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL. CHARAN