Post by radha on Jul 4, 2020 9:20:39 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
பக்த விஜயம்
எச்சில் மகிமை
நாமதேவரும் ஞானதேவரும் க்ஷேத்ராடனம் சென்றும் புண்ய நதிகளி ல் ஸ்நானம் செய்தும் கடைசியில் பண்டரி புரம் வந்து சேர்ந்தார்கள்.
விட்டலனே வழிமேல் விழி வைத்து அவர்களுக்காக காத்திருந்து சந்திரபாகா நதிக்கரையில் அவர்களைக் கட்டி தழுவி வரவேற்றான்.
"நீங்கள் இருவரும் க்ஷேத்ராடனம் செய்து வந்ததைத் தொடர்ந்து உடனே ஒரு சமாராதனை பூஜை அன்னதானம் நடத்த வேண்டும்.
பிராமண போஜனம் நடக்க வேண்டும்" என்று விட்டலன் அறிவித்தபடி சமாராதனை பூஜை நடந்தது. வித விதமான பக்ஷ்யங்கள் பாயசான்னங்கள், பழங்கள் எல்லாம் பரிமாறி போஜனம் நடந்தது.
நாமதேவர் முன்னின்று பரிமாறினார். ஞானதேவரும் உடனிருந்து உதவினார். வைஷ்ணவர்கள் சந்தோஷமாக பங்கு கொண்டனர். வந்தவர்களில் சில பெயர்கள் உங்களுக்கு தெரிந்ததே! நிவ்ரித்திநாத், ஞானதேவர், சோபன், கோரா கும்பர், ஸாவத மாலி , சோகா மேளர் சேநா நாவிதர் உத்தவர், அக்ருரர், நாரதர், தும்புரு மற்றும் எண்ணற்ற மகானுபாவர்கள்,
இவர்களோடு நாமதேவரும் வந்து அமர்ந்தார் அவர் அருகில் விட்டலனும் ஒரு பிராமணனாக வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தான்.
எல்லோரும் சுவைத்து ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அப்போது நாம தேவர் இலையிலிருந்து பாயசம் எல்லாம் வழிந்து விட்டலன் இலையில் கலந்தது. சந்தோஷமாக நாமதேவர் எச்சிலை விட்டலன் ரசித்து ருசித்து ருசித்து சாப்பிட்டான்.
இதைக்கவனித்த எதிரில் அமர்ந்து சாப்பிக்கொண்டிருந்த பிராமணர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். நாமதேவர் பிராமணர் அல்லவே. ஒரு துணி தைப்பவர் குடும்பத்தை சேர்ந்தவர் அவர் அளித்த சமாரதனையை சாப்பிட்டதே நமது தவறு. இப்படியிருக்கையில் ஒரு பிராமணர் நாமதேவர் எச்சிலையும் உண்டார் என்பது ஜீரணிக்க முடியாத அதிர்ச்சி அவர்களுக்கு . இதற்கு நாம் ஒரு பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும். சாஸ்த்ரங்களில் என்ன சொல்லியிருக்கு என்று ஆராய்ந்து உடனே தக்க பிராயச்சித்தம் செய்வோம் என்று நாம தேவர் வீட்டை விட்டு கிளம்பினர்.
ஒரு பிராமணனாக அமர்ந்து சாப்பிட்ட விட்டலன் அவர்களை வழி மறித்து
"என்ன பிராமணோத்தமர்களே வருத்தமாக இருக்கிறாப்போல இருக்கே நல்ல சுவையான சமாராதனை உண்டபின்னும் சந்தோஷத்தை முகத்தில் காணோமே, என்ன குறை உங்களுக்கு?" என்றான்.
இந்தாருங்கள் இதை நாமதேவர் கொடுக்க சொன்னார் என்று வெற்றிலை துளசி அவற்றோடு வெள்ளி சந்தன பேலா தங்க குங்குமச்சிமிழ், பொன் காசு ஆகியவையும் புக்த தக்ஷிணை" என்று அவர்களுக்கு தந்தான். நாமதேவரையும் அணை த்து, அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பண்ண சொன்னான் விட்டலன்.
"இதற்கு மேலும் உங்களுக்கு ஏதாவது குறையிருந்தால் சொல்லலாமே, என்னையே விட்டலன் என்று கருதி சொல்லுங்கள்" என்றான் "விட்டல" பிராமணன்.
"விட்டலா, நீ எவ்வாறு ஒரு தாழ்ந்த வகுப்பு நாமதேவர் வீட்டில் அவருடன் சரி சமமாக அமர்ந்து அவர் எச்சிலைச் சாப்பிட்டாய். இதை ஏற்க முடியவில்லை எங்களால் என்றார்கள் பிராமணர்கள். உனக்கு எதற்கு நாமதேவரிடம் தனி அபிமானம். தனி அன்பு,பாசம் எல்லாம்?.
நாமதேவருடன் நீ பழகும் ஒவ்வொரு சமயமும் எதையாவது புதிதாக செய்கிறாயே, இது ஏன்? ஜாதி வித்யாசமே பார்ப்பதில்லையே ஏன்? உனக்கு எல்லாரும் சமமா? கங்கையும் கால்வாய் நீரும் ஒன்றேயா? சிங்கமும் பன்றியும் ஒன்றுதானா? பிராமணனாக நீ உருவெடுத்து வந்தாய் என்றால் மற்ற பிராமனர்களது நம்பிக்கை, பழக்கம்,வழக்கம் எல்லாமும் இருக்க வேண்டாமா? நீ சகலமும் தெரிந்தவன் சாஸ்திரங்கள் வேதங்கள் எல்லாம் அறிவிப்பவன் இருந்தும் நாமதேவர் விஷயத்தில் இவ்வாறு பாரபக்ஷமாக நடந்து கொள்வது ஏன்? " கேள்விகள் சரமாரியாக வந்தது பிராமணர்களிடமிருந்து.
நான் நாமதேவரோடு சேர்ந்து சாப்பிட்டது பற்றி வருத்தமா? எனக்கு யாவரும் ஒன்றே. எனக்கு என்று விருப்போ வெறுப்போ, பிடித்தது பிடிக்காதது, உயர்ந்தவன் தாழ்ந்தவன், என்றும் ஒன்றுமில்லை எல்லோரும் எனக்கு ஒன்றே. நானும் எனது ஸ்ரிஷ்டிகளும் ஒன்றே. நாமதேவர் உடலால் துணி தைப்பவர் குடும்பத்தில் பிறந்தாலும் உள்ளத்தால் உங்கள் அனைவரிலும் உயர்ந்தவர்.
இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆன ஒரு கலவை, உங்களுக்கும் மற்றவர்க்கும் அது ஒன்றே என்று புரிந்துகொள்ளுங்கள். வித்யாசம் உங்கள் மனதில் உள்ளது. எனக்கு எதுவுமே இல்லை என்னை எதுவுமே அணுகாது. நீங்கள் வேதத்தை ஓதினாலும் அதன் உள்ளர்த்தம் நீங்கள் அறியவில்லை.
நாமதேவர் அனைத்து தேவதைகளையும் வணங்கி பணிந்து மனமார நெய்வேத்யம் அளித்ததை நீங்கள் மறுக்கவில்லை, நான் சாப்பிட்டது மட்டும் தவறாகி விட்டதா? நாமதேவரால் தான் நீங்கள் என்னை இன்று இங்கு இப்போது சந்தித்திருக்கிறீர்கள் என்பதே உங்களுக்கு மறந்து போய்விட்டதே!
எனக்கு என்று ஒரு கர்மாவும் இல்லை. இருந்தும் என்னை அனைத்து கர்மாவிலும் தேடுகிறீர்கள். அவற்றில் எதுவும் எனக்கு பங்கில்லை என்று படித்தும் ஓதியும் நீங்கள் புரிந்து கொள்வதில்லை.
நீங்கள் என் வழி வர எல்லா ஏற்பாடுகள் நான் செய்தும் நீங்கள் என்னை விட்டு விலகியே செல்கிறீர்கள் நானே உங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறேன். தாய் குழந்தைகளைக் கை விட்டதாக சரித்திரமே இல்லையே!
சரி, இந்த விளையாட்டைத் தொடர்வோம், உங்கள் நம்பிக்கை, சம்ப்ரதாயம் பிரகாரம் நான் நாமதேவரின் எச்சிலை உண்டதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யவேண்டும் சொல்லுங்களேன்? என்னை பொறுத்தவரை நாமதேவர் பாத தூளி என் மேல் பட்டாலோ அவர் பாத அபிஷேக ஜலத்தை ஒரு துளியாவது பிரசாத மாக ஏற்றாலோ எந்த பாவமும் தொலையும்! நீங்கள் என்ன சொல்லுவீர்களோ?
என் பக்தர்களே என்னைக் காட்டிலும் மேலானவர்கள். .அவர்கள் மனத்திலேயே நான் ஒரு இடம் பிடித்து அதில் சௌகர்யமாக வசிக்கிறேன் தெரியுமா?. என் பக்தர்களிலேயே சிகரமாக நான் நாமதேவரை புரிந்து கொண்டதாலேயே அவரது அடிமையாக நான் மாறி விட்டேனே அதுவாவது புரிகிறதா? அவர் எனக்கு துணி தைப்பவராக தெரியவில்லையே என்ன செய்வேன்?
அவர் மீது எனக்கு உள்ள பரிபூர்ண அன்புக்கு ஈடு அவருக்கு என்மேல் உள்ள அன்பு தான். எனவே தான் அவர் உண்ட எச்சில் எனக்கு என் உணவாகவே தோன்றுகிறது? இது இன்னும் உங்களுக்கு தவறாகவே தோன்றினால் நீங்கள் கட்டளையிடும் பிராயச்சித்தத்தை உங்களை மகிழ்விக்கவே நான் நிறைவேற்றுகிறேன் பிறகு
பாண்டுரங்கன் சந்திர பாகையிலே மூல்கி பிராயச்சித்தம் செய்து பிராமணர்களை மகிழ்வித்தான் ஞனேஸ்வரர் அப்பிராமணர்களுக்கு உபதேசம் செய்து திருத்தி வைத்தார் இதனால் ஞானம் அடைந்த ப்ராமணர்கள் இன்றுவரை அதை கடைபிடித்து வாழ்கின்றனர் அந்த பிராமண உத்தமர்கள் சாதி ஏற்ற தாழ்வு வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் அங்கே
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
பக்த விஜயம்
எச்சில் மகிமை
நாமதேவரும் ஞானதேவரும் க்ஷேத்ராடனம் சென்றும் புண்ய நதிகளி ல் ஸ்நானம் செய்தும் கடைசியில் பண்டரி புரம் வந்து சேர்ந்தார்கள்.
விட்டலனே வழிமேல் விழி வைத்து அவர்களுக்காக காத்திருந்து சந்திரபாகா நதிக்கரையில் அவர்களைக் கட்டி தழுவி வரவேற்றான்.
"நீங்கள் இருவரும் க்ஷேத்ராடனம் செய்து வந்ததைத் தொடர்ந்து உடனே ஒரு சமாராதனை பூஜை அன்னதானம் நடத்த வேண்டும்.
பிராமண போஜனம் நடக்க வேண்டும்" என்று விட்டலன் அறிவித்தபடி சமாராதனை பூஜை நடந்தது. வித விதமான பக்ஷ்யங்கள் பாயசான்னங்கள், பழங்கள் எல்லாம் பரிமாறி போஜனம் நடந்தது.
நாமதேவர் முன்னின்று பரிமாறினார். ஞானதேவரும் உடனிருந்து உதவினார். வைஷ்ணவர்கள் சந்தோஷமாக பங்கு கொண்டனர். வந்தவர்களில் சில பெயர்கள் உங்களுக்கு தெரிந்ததே! நிவ்ரித்திநாத், ஞானதேவர், சோபன், கோரா கும்பர், ஸாவத மாலி , சோகா மேளர் சேநா நாவிதர் உத்தவர், அக்ருரர், நாரதர், தும்புரு மற்றும் எண்ணற்ற மகானுபாவர்கள்,
இவர்களோடு நாமதேவரும் வந்து அமர்ந்தார் அவர் அருகில் விட்டலனும் ஒரு பிராமணனாக வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தான்.
எல்லோரும் சுவைத்து ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அப்போது நாம தேவர் இலையிலிருந்து பாயசம் எல்லாம் வழிந்து விட்டலன் இலையில் கலந்தது. சந்தோஷமாக நாமதேவர் எச்சிலை விட்டலன் ரசித்து ருசித்து ருசித்து சாப்பிட்டான்.
இதைக்கவனித்த எதிரில் அமர்ந்து சாப்பிக்கொண்டிருந்த பிராமணர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். நாமதேவர் பிராமணர் அல்லவே. ஒரு துணி தைப்பவர் குடும்பத்தை சேர்ந்தவர் அவர் அளித்த சமாரதனையை சாப்பிட்டதே நமது தவறு. இப்படியிருக்கையில் ஒரு பிராமணர் நாமதேவர் எச்சிலையும் உண்டார் என்பது ஜீரணிக்க முடியாத அதிர்ச்சி அவர்களுக்கு . இதற்கு நாம் ஒரு பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும். சாஸ்த்ரங்களில் என்ன சொல்லியிருக்கு என்று ஆராய்ந்து உடனே தக்க பிராயச்சித்தம் செய்வோம் என்று நாம தேவர் வீட்டை விட்டு கிளம்பினர்.
ஒரு பிராமணனாக அமர்ந்து சாப்பிட்ட விட்டலன் அவர்களை வழி மறித்து
"என்ன பிராமணோத்தமர்களே வருத்தமாக இருக்கிறாப்போல இருக்கே நல்ல சுவையான சமாராதனை உண்டபின்னும் சந்தோஷத்தை முகத்தில் காணோமே, என்ன குறை உங்களுக்கு?" என்றான்.
இந்தாருங்கள் இதை நாமதேவர் கொடுக்க சொன்னார் என்று வெற்றிலை துளசி அவற்றோடு வெள்ளி சந்தன பேலா தங்க குங்குமச்சிமிழ், பொன் காசு ஆகியவையும் புக்த தக்ஷிணை" என்று அவர்களுக்கு தந்தான். நாமதேவரையும் அணை த்து, அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பண்ண சொன்னான் விட்டலன்.
"இதற்கு மேலும் உங்களுக்கு ஏதாவது குறையிருந்தால் சொல்லலாமே, என்னையே விட்டலன் என்று கருதி சொல்லுங்கள்" என்றான் "விட்டல" பிராமணன்.
"விட்டலா, நீ எவ்வாறு ஒரு தாழ்ந்த வகுப்பு நாமதேவர் வீட்டில் அவருடன் சரி சமமாக அமர்ந்து அவர் எச்சிலைச் சாப்பிட்டாய். இதை ஏற்க முடியவில்லை எங்களால் என்றார்கள் பிராமணர்கள். உனக்கு எதற்கு நாமதேவரிடம் தனி அபிமானம். தனி அன்பு,பாசம் எல்லாம்?.
நாமதேவருடன் நீ பழகும் ஒவ்வொரு சமயமும் எதையாவது புதிதாக செய்கிறாயே, இது ஏன்? ஜாதி வித்யாசமே பார்ப்பதில்லையே ஏன்? உனக்கு எல்லாரும் சமமா? கங்கையும் கால்வாய் நீரும் ஒன்றேயா? சிங்கமும் பன்றியும் ஒன்றுதானா? பிராமணனாக நீ உருவெடுத்து வந்தாய் என்றால் மற்ற பிராமனர்களது நம்பிக்கை, பழக்கம்,வழக்கம் எல்லாமும் இருக்க வேண்டாமா? நீ சகலமும் தெரிந்தவன் சாஸ்திரங்கள் வேதங்கள் எல்லாம் அறிவிப்பவன் இருந்தும் நாமதேவர் விஷயத்தில் இவ்வாறு பாரபக்ஷமாக நடந்து கொள்வது ஏன்? " கேள்விகள் சரமாரியாக வந்தது பிராமணர்களிடமிருந்து.
நான் நாமதேவரோடு சேர்ந்து சாப்பிட்டது பற்றி வருத்தமா? எனக்கு யாவரும் ஒன்றே. எனக்கு என்று விருப்போ வெறுப்போ, பிடித்தது பிடிக்காதது, உயர்ந்தவன் தாழ்ந்தவன், என்றும் ஒன்றுமில்லை எல்லோரும் எனக்கு ஒன்றே. நானும் எனது ஸ்ரிஷ்டிகளும் ஒன்றே. நாமதேவர் உடலால் துணி தைப்பவர் குடும்பத்தில் பிறந்தாலும் உள்ளத்தால் உங்கள் அனைவரிலும் உயர்ந்தவர்.
இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆன ஒரு கலவை, உங்களுக்கும் மற்றவர்க்கும் அது ஒன்றே என்று புரிந்துகொள்ளுங்கள். வித்யாசம் உங்கள் மனதில் உள்ளது. எனக்கு எதுவுமே இல்லை என்னை எதுவுமே அணுகாது. நீங்கள் வேதத்தை ஓதினாலும் அதன் உள்ளர்த்தம் நீங்கள் அறியவில்லை.
நாமதேவர் அனைத்து தேவதைகளையும் வணங்கி பணிந்து மனமார நெய்வேத்யம் அளித்ததை நீங்கள் மறுக்கவில்லை, நான் சாப்பிட்டது மட்டும் தவறாகி விட்டதா? நாமதேவரால் தான் நீங்கள் என்னை இன்று இங்கு இப்போது சந்தித்திருக்கிறீர்கள் என்பதே உங்களுக்கு மறந்து போய்விட்டதே!
எனக்கு என்று ஒரு கர்மாவும் இல்லை. இருந்தும் என்னை அனைத்து கர்மாவிலும் தேடுகிறீர்கள். அவற்றில் எதுவும் எனக்கு பங்கில்லை என்று படித்தும் ஓதியும் நீங்கள் புரிந்து கொள்வதில்லை.
நீங்கள் என் வழி வர எல்லா ஏற்பாடுகள் நான் செய்தும் நீங்கள் என்னை விட்டு விலகியே செல்கிறீர்கள் நானே உங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறேன். தாய் குழந்தைகளைக் கை விட்டதாக சரித்திரமே இல்லையே!
சரி, இந்த விளையாட்டைத் தொடர்வோம், உங்கள் நம்பிக்கை, சம்ப்ரதாயம் பிரகாரம் நான் நாமதேவரின் எச்சிலை உண்டதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யவேண்டும் சொல்லுங்களேன்? என்னை பொறுத்தவரை நாமதேவர் பாத தூளி என் மேல் பட்டாலோ அவர் பாத அபிஷேக ஜலத்தை ஒரு துளியாவது பிரசாத மாக ஏற்றாலோ எந்த பாவமும் தொலையும்! நீங்கள் என்ன சொல்லுவீர்களோ?
என் பக்தர்களே என்னைக் காட்டிலும் மேலானவர்கள். .அவர்கள் மனத்திலேயே நான் ஒரு இடம் பிடித்து அதில் சௌகர்யமாக வசிக்கிறேன் தெரியுமா?. என் பக்தர்களிலேயே சிகரமாக நான் நாமதேவரை புரிந்து கொண்டதாலேயே அவரது அடிமையாக நான் மாறி விட்டேனே அதுவாவது புரிகிறதா? அவர் எனக்கு துணி தைப்பவராக தெரியவில்லையே என்ன செய்வேன்?
அவர் மீது எனக்கு உள்ள பரிபூர்ண அன்புக்கு ஈடு அவருக்கு என்மேல் உள்ள அன்பு தான். எனவே தான் அவர் உண்ட எச்சில் எனக்கு என் உணவாகவே தோன்றுகிறது? இது இன்னும் உங்களுக்கு தவறாகவே தோன்றினால் நீங்கள் கட்டளையிடும் பிராயச்சித்தத்தை உங்களை மகிழ்விக்கவே நான் நிறைவேற்றுகிறேன் பிறகு
பாண்டுரங்கன் சந்திர பாகையிலே மூல்கி பிராயச்சித்தம் செய்து பிராமணர்களை மகிழ்வித்தான் ஞனேஸ்வரர் அப்பிராமணர்களுக்கு உபதேசம் செய்து திருத்தி வைத்தார் இதனால் ஞானம் அடைந்த ப்ராமணர்கள் இன்றுவரை அதை கடைபிடித்து வாழ்கின்றனர் அந்த பிராமண உத்தமர்கள் சாதி ஏற்ற தாழ்வு வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் அங்கே
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM