Post by radha on Jul 3, 2020 11:38:14 GMT 5.5
OM Sri GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
எங்கே தேடுவேன் இந்த மாதிரி பெரியவாளை - sharing message
(thanks to மதுரம், மதுரம், மஹா பெரியவாள் - ரா. கணபதி)
1966 பிற்பகுதியிலோ 1969 முற்பகுதியிலோ அந்திரா தேசத்தின் தெற்கு மாவட்டங்களில் நமது ஆச்சார்ய ஸ்வாமி சஞ்சாரம் செய்து வந்தபோது ஓர் ஊரில் கண்ட நிகழ்ச்சி. பசுமரத்தாணியாய் பதிந்த நிகழ்ச்சி .
அன்று அல்ப த்வாதசி. அதாவது சூர்யோதயதிற்கு பின் சொற்ப காலமே த்வாதசி திதி.. அச்சொற்ப காலத்திற்குள்ளேயே, முன்னாள் ஏகாதசி விரதமிருந்தவர்கள் "பாரணை" என்பதாகப் பூஜை முடித்து பிரசாதமாக உணவும் அருந்திவிட வேண்டும். உலகுக்கு சகல தர்மங்களையும் இண்டு இணுக்கு விடாது அனுஷ்டித்துக் காட்டிய பெரியவாள் இவ்விதியையும் வழுவாது நடத்தியவர்.
வழக்கம் போல் அன்று பின்மாலை மூன்று மணிக்கே அவர் விழித்தெழுந்திருந்த போதிலும், காலை எட்டு மணியளவில் துவாதசி திதி முடிந்து விடுவதால் அவசரமாகவே ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜை செய்யப் போகவேண்டியிருந்தது.
அப்போது அனுக்ரஹம் பெறுவதற்காகப் பெரும் தவிப்புடன் ஒரு "காதர " பக்தர் - சற்று வயசான, ஏழையாகத் தோன்றிய ஒரு ஆந்திர பிராம்மணர் - ஓடோடி வந்து சேவித்தார். ஏதோ சொல்வதற்காக அவரி தவியாய்த் தவித்தது சர்வாங்கங்களிலும் பிரதிபலித்தது!
ஸ்ரீசரணாள் சற்று நின்றார்.
உடனிருந்த பாரிஷதர்களுக்குப் பரபரப்பு ! அவசர வேளையில் இந்த மனுஷன் இடைமறிக்கிரானே என்ற எரிச்சல் ! அவர்களிலொருவர் அவரிடம் பூஜைக்கப்புறம் தரிசிக்கலாம் என்று சற்று காட்டமாகவே கூறி , நகரச் சொன்னார்.
ஸ்ரீ சரணாள் அவர்களைக் கையமர்த்திவிட்டு, அருள் முட்டும் தமது பெரிய பெரிய காந்த - சாந்த நயனங்களால் - கண் புரைக்குப் பின் கண்ணாடி போட்டுக்கொண்ட அவரிடம் பிற்கால பக்தர்கள் காணக் கொடுத்து வைக்காத அந்த முழுமலர்ச்சி கொண்ட திவ்ய நேத்ரங்களால் -காதரப் பக்தரைத் தலையோடு கால் தடவிக் கொடுத்து , அவரது பிரச்னையை 'பஹு சம்ஷேபமாக' (வெகு சுர்க்கமாக)ச் சொல்லுமாறு சம்ஸ்க்ருதத்தில் கூறினார் . அவரி தேவவாணியில் மாத்திரமே உரையாடும் இடைக்காலம் அது .
நல்ல வேளையாக தனித் தெலுங்கு என்று சொல்லிக்கொண்டு தேவ பாஷையை அடித்துத் துரத்தாத ஆந்திர தேசத்தைச் சேர்ந்தவராக அவ்வடியார் இருந்ததால் அவர் 'பஹூ சம்ஷேப'த்தைப் புரிந்து கொண்டார்.
ஆனால், பாவம் , தம் பிரச்னையை அப்படிச் சுருக்கிச் சொல்ல அவருக்கு தெரியவில்லை !
ரொம்பவும் பணிவுக் குணத்தரெனத் தெரிந்தது! பெரியவாளை அதற்கு மேலே தொந்தரை செய்ய வேண்டாமென்றே இருக்க வேண்டும். அந்த நெருக்கடியில் தமக்கு என்ன சொல்ல வேண்டுமென்ற முறைப்படுத்திச் சொல்ல வரவில்லை என்றுமக், தாம் ஊருக்கு எவ்வளவு சீக்கிரம் திரும்ப முடியுமோ அவ்வளவில் திரும்ப வேண்டும் என்றும் மாத்திரம் கூறிவிட்டு, 'ஸ்ரீவாரு'வின் கிருபைதான் தம்மை ரட்சிக்க வேண்டும் என்று கண்ணும் கண்ணீருமாக விண்ணப்பித்துவிட்டு, நகந்துகொண்டு வழி விட்டு விட்டார்.
ஆனால் பெரியவாள் அவரை எந்த ஊர் என்று கேட்டுத் தெரிந்துகொண்டே மேலே நடந்தார்.
அதுதான் பிற்பாடு எப்படிக் கைகொடுத்து உதவியது ?
ஸ்ரீ சந்திரமௌலீச்வர பூஜை நடந்தது. அந்த இளங்காலையின் சாந்தத்திலும் குளுமையிலும் பூஜை அன்று அலாதியானதொரு தாப சமணத்தை அளித்தது.
பூஜை முத்த பின் ஸ்ரீசரணர் பிக்ஷா வந்தனத்திற்காக வந்து நின்றார்.
அப்படித்தானா ? பிக்ஷாவந்தனத்திற்காக அவர் வந்து நின்றதாகவா தோன்றிற்று ? இல்லவேயில்லை !
அன்று பிக்ஷை செய்ய இருந்து, அதைத் தெரிவித்து வந்தனம் செய்து கொள்ள வந்திருந்தோர் சென்னையைச் சேர்ந்த படே படேக்களான ஒரு பெரும் தொழிலக நிறுவனரும் அவர் குடும்பத்தினருமாவர். மண்டபம் கொள்ளாமல் பிக்ஷ வந்தனச் சரக்குகள் அவர்களைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தன.
ஆயின் ஸ்ரீசரணரின் விசால நேத்ரங்களிலோ அந்த வந்தனக்காரர்களோ , அவர்களது பெரும் காணிக்கைகளோ பட்டதாகவே தெரியவில்லை!
அவை நிலையில்லாமல் மண்டபம் முழுதிலும் தேடித் தேடி அலைந்தன. பெரியவாளின் சரீரம் நின்றவிடத்தில்தான் நின்றதேனினும் சித்தம் நிலை கொள்ளாமல் எதையோ நாடுவது நன்கு புரிந்தது.
பிரசாந்த பகவந்தனின் 'அனுக்ரஹ காதர்யம்' தான் !
த்வாதசி முடியமுன்பே தீர்த்த ப்ரசாதமளித்து பிக்ஷை கொள்ள அவசரமான அவசர சமயம்! அப்ப்போது ஏன் பிக்ஷா வந்தனத்தை ஏற்காது இப்படி நம் ஆசாரக்காவலரே காக்க வைக்கிறார்?
பூஜைக்கு வரும் வழியில் காதரராக வந்து பிரார்த்தித்தாரே அவரைக் காக்க வேண்டுமென்பதற்காகத் தான் ! இவருக்கு ஏற்பட்டுள்ள பக்தானுக்ரஹ காதர்யத்தினால்தான்!
அப்பக்தர் மடத்து முகாமுக்குள் எங்கேயிருந்தாலும் , அக்கம்பக்கம் போயிருந்தாலும் உடனே தேடிக் கண்டு பிடித்து அழை த்து வருமாறு ஸ்ரீசரணரின் ஆக்ஞை பிறக்கிறது.
ஆக்ஞை செய்தபின்னரே பிக்ஷா வந்தனத்தை ஏற்க வருகிறார். அதன்போது பண்பு மறவாது , பிக்ஷை செய்யும் பெரும் முக்யஸ்தர்களான அன்பர்களை மிக்க ஆதரவுடன் க்ஷேமலாபங்கள் விசாரிக்கத்தான் செய்கிறாரென்றாலும் அப்போதும் அந்த முக்யத்துவமில்லாத அனாமதேய ஆந்திர ப்ராம்மணரைப் பற்றிய விசாரமே அவர்பி சித்தத்தில் அதிகமாக இருந்து, அவரைத் தேடி வரத் தாம் அனுப்பியோரை எதிர்பார்த்து முகத்தைத் தூக்கித் தூக்கிப் பார்த்த வண்ணம்தான் இருக்கிறார்! நவ கண்டத்தில் யாரே காட்டுவார் அப்படியோர் அக்கறை !
அல்ப த்வாதசியை முன்னிட்டு எமெர்ஜென்சி ஸ்பீடில் நடந்து முடியவிருந்த அந்த பிக்ஷா வந்தனத்தின்போதே , நாலு மூளைக்கும்க் பறந்த பாரிஷதர்கள் வந்து சல்லடை போட்டுப் பார்த்ததில் அந்நபர் எங்கும் தென்படவில்லையென்று தெரிவிக்கின்றனர்.
அப்போது பெரியவாள் அவரது ஊரின் பெயர் கேட்டுத் தெரிந்துகொண்டதுதான் கை கொடுத்தது !
அவரி சொன்ன ஊரைப் பெரியவர் சொல்லி அந்த ஊருக்கு அப்போது மடம் முகாமிட்டிருந்த ஊரிலிருந்து எத்தனை மணிக்கு பஸ் என்று விசாரிக்கிறார் . அது ரயில் நிலையமில்லாத ஊர் என்று அவருக்குத தெரிந்திருக்கிறது .
அவருக்குக் கிடைத்த பதிலிலிருந்து சுமார் அரை மணியில் பஸ் என்று தெரிகிறது.
வெகு அவசர உணர்வுடன் ஸ்ரீசரணர் கட்டளை பிறப்பிக்கிறார், தெலுங்கு தெரிந்த காரிய சமர்த்தரான ஒரு சிஷ்யரிடம்! பிக்ஷா வந்தனக்காரர்கள் வந்திருக்கும் கார்களில் ஒன்றில் உடனே அவர் பஸ் நிலையத்திற்குப் போகவேண்டுமெனச் சொல்கிறார். "பிரசாதம் தரேன். எடுத்துண்டு போ. அந்த ப்ராம்மணரைக் கண்டுபிடிச்சு அதைக் குடு . நான் அம்பாளை அவருக்காக நன்னா பிரார்த்தனை பண்ணிண்டிருக்கேன். அவரும் பரிபூர்ண நம்பிக்கையோட ப்ரார்த்திச்சுண்டா கஷ்டமெல்லாம் தீர்ந்து சௌக்யமா இருப்பார்-னு அவருக்கு மனசு நன்னா ஆறுகிற மாதிரி சொல்லு. இல்லாட்டா, பஸ் டிரைவர், கண்டக்டரைக் கேட்டுக்கிண்டு அவா அஞ்சு பத்து நிமிஷம் அந்த பிராமணருக்காக காத்துண்டிருப்பா -ன்னா அவரையே இங்கே அழைச்சுண்டு வந்துடு. நானே பார்த்துப் பேசி அனுப்பி வைக்கிறேன்" என்கிறார் .
"அதுக்குள்ளே பெரியவ எப்படி தீர்த்தம் குடுத்துட்டு பிக்ஷை பண்ணமுடியும்? அவர் வந்துட்டு போன , அப்பறம் -னாலோ த்வாதசியே முடிந்து விட்டால் அப்புறம் அன்று போஜனம் கொள்ளக்கூடாது என வழக்கு. மறுதினமும் ஏதோ விரதமானதால் அன்றும் மாலை பூஜை முடிந்தபின்தான் மஹா பெரியவாள் பிக்ஷை கொள்வார் . அதாவது "ஏகாதசி'யே துவாதசியன்றும், அதற்கு மறு தினமும் பெரும்பாகத்திலும் கூட நீடித்துவிடும்! அதனால்தான் பணிவிடையாளர் அப்படிப் பதை பதைத்து கேட்டார். தீனர்களுக்காகவே வாழ்ந்த தியாக மூர்த்தியோ அப்படிப் பட்டினி கிடப்பதைப் பொருட்படுத்தவில்லை.
"அதை நான் பாத்துக்கறேன். நீ சொன்னதைப் பத்தி சந்தோஷம். இப்ப சட்னு நான் சொன்னதை செய்" என்று என்று கூறிய ஸ்ரீசரணர் விபூதி, குங்குகமம , அக்ஷதை , கற்கண்டு, திராக்ஷை பிரசாதத்தை, அக் குங்குமத்தில் அரை நிமிஷமே ஆயினும், கரை காணா ஆழியளவு கருணையுடன் பக்தருக்காகக் காரிய சமர்த்தரிடம் கொடுக்கிறார். அம்பாளுக்கு 'நன்னா' பிரார்த்தித்துக் கொண்டு கொடுக்கிற மஹா ப்ரசாதம் ! அவர் அப்படி வெளியிட்டுச் சொன்னதே அதிசயம்! அவரது 'காதர்யம்' தான் அவ்வதிசயத்தைச் செய்வித்தது.
அல்ப த்வாதசியில் அந்த அனாமதேய பிராமணரின் பாரணைக்காக, படே படேக்கள் கொண்டு வந்திருந்த கனிவர்க்கத்திலிருந்து ஒரு மூங்கில் தட்டு நிறைய ஸ்ரீசரணாளே வேகவேகமாக எடுத்துப் போட்டு அதையும் கொண்டு போய்க் கொடுக்கப் பணிக்கிறார். காரிய சமர்த்தருக்காகவும் அதே விரைவுடன் இன்னொரு தமுக்கைப் பழங்களால் நிரப்பித் தருகிறார்.
சமர்த்தர் கண்களில் நீர் முட்ட அவற்றை எடுத்துப் போகிறார். நீர் முட்டியதற்குக் காரணம், அவருக்கு நன்றாக உறுதிப்பட்டு விட்டது, அன்று ஸ்ரீசரணர் துளசிதள தீர்த்தம் அருந்தினாலே பாரணைப் போஜனம் செய்ததற்கு சமானம் என்ற சாஸ்திரப்படி அப்படித்தான் செய்யப் போகிறார் என்று!
'தாயினும் சாலப் பரிந்து' யாரோ பக்தருக்காகக் கனிந்து கனி வர்க்கங்கள் அனுப்புகிறார்!
தாமொருவர் வெறும் துளசி தீர்த்தத்துடனேயே போஜனத்தை முடித்துக்கொண்டு, அது அந்தரங்கமானவர் தவிர எவருக்கும் தெரியாமல் மறைத்து, மடத்தில் குழுமியுள்ள பக்தகோடிகள் அறுசுவை உணவு, அகத்திக்கீரை, சுண்டை, நெல்லி முள்ளி , பாயசத்துடன் உண்டு வயிறு நிறையச் செய்கிறார்!
'கார்ய சமர்த்தர்' பத்துப் பனிரெண்டு நிமிஷத்திலேயே நாம் கொடுத்த அப் பட்டத்திற்கேற்ப ஆந்திர பிராமணரை அழைத்தே வந்துவிட்டார்!
அப்போது அந்த அடியார் பெற்ற நிறைவு அதிகமா, இந்த ஆண்டவர் பெற்ற நிறையவு அதிகமா, யாரே எடை போட்டுச் சொல்ல முடியம்?
அருள் பெற வேண்டும், பெறவேண்டும் என்ற அவரது தவிப்பும் அடங்கிற்று. அருள் சுரக்கவேண்டும், சுரக்கவேண்டுமென்ற இவரது தவிப்பும் அடங்கிற்று என்பது மட்டும் நிதர்சனமாகத் தெரிந்தது!
எவரோ ஓர் அநாமாதேய நபருக்காக இப்படிஇதய ஆழத்திலிருந்து தவித்துத் துடித்து அருள் சொரியும் அப்படிப்பட்டதொரு காருண்ய வள்ளலை எங்கே காண ?
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
எங்கே தேடுவேன் இந்த மாதிரி பெரியவாளை - sharing message
(thanks to மதுரம், மதுரம், மஹா பெரியவாள் - ரா. கணபதி)
1966 பிற்பகுதியிலோ 1969 முற்பகுதியிலோ அந்திரா தேசத்தின் தெற்கு மாவட்டங்களில் நமது ஆச்சார்ய ஸ்வாமி சஞ்சாரம் செய்து வந்தபோது ஓர் ஊரில் கண்ட நிகழ்ச்சி. பசுமரத்தாணியாய் பதிந்த நிகழ்ச்சி .
அன்று அல்ப த்வாதசி. அதாவது சூர்யோதயதிற்கு பின் சொற்ப காலமே த்வாதசி திதி.. அச்சொற்ப காலத்திற்குள்ளேயே, முன்னாள் ஏகாதசி விரதமிருந்தவர்கள் "பாரணை" என்பதாகப் பூஜை முடித்து பிரசாதமாக உணவும் அருந்திவிட வேண்டும். உலகுக்கு சகல தர்மங்களையும் இண்டு இணுக்கு விடாது அனுஷ்டித்துக் காட்டிய பெரியவாள் இவ்விதியையும் வழுவாது நடத்தியவர்.
வழக்கம் போல் அன்று பின்மாலை மூன்று மணிக்கே அவர் விழித்தெழுந்திருந்த போதிலும், காலை எட்டு மணியளவில் துவாதசி திதி முடிந்து விடுவதால் அவசரமாகவே ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜை செய்யப் போகவேண்டியிருந்தது.
அப்போது அனுக்ரஹம் பெறுவதற்காகப் பெரும் தவிப்புடன் ஒரு "காதர " பக்தர் - சற்று வயசான, ஏழையாகத் தோன்றிய ஒரு ஆந்திர பிராம்மணர் - ஓடோடி வந்து சேவித்தார். ஏதோ சொல்வதற்காக அவரி தவியாய்த் தவித்தது சர்வாங்கங்களிலும் பிரதிபலித்தது!
ஸ்ரீசரணாள் சற்று நின்றார்.
உடனிருந்த பாரிஷதர்களுக்குப் பரபரப்பு ! அவசர வேளையில் இந்த மனுஷன் இடைமறிக்கிரானே என்ற எரிச்சல் ! அவர்களிலொருவர் அவரிடம் பூஜைக்கப்புறம் தரிசிக்கலாம் என்று சற்று காட்டமாகவே கூறி , நகரச் சொன்னார்.
ஸ்ரீ சரணாள் அவர்களைக் கையமர்த்திவிட்டு, அருள் முட்டும் தமது பெரிய பெரிய காந்த - சாந்த நயனங்களால் - கண் புரைக்குப் பின் கண்ணாடி போட்டுக்கொண்ட அவரிடம் பிற்கால பக்தர்கள் காணக் கொடுத்து வைக்காத அந்த முழுமலர்ச்சி கொண்ட திவ்ய நேத்ரங்களால் -காதரப் பக்தரைத் தலையோடு கால் தடவிக் கொடுத்து , அவரது பிரச்னையை 'பஹு சம்ஷேபமாக' (வெகு சுர்க்கமாக)ச் சொல்லுமாறு சம்ஸ்க்ருதத்தில் கூறினார் . அவரி தேவவாணியில் மாத்திரமே உரையாடும் இடைக்காலம் அது .
நல்ல வேளையாக தனித் தெலுங்கு என்று சொல்லிக்கொண்டு தேவ பாஷையை அடித்துத் துரத்தாத ஆந்திர தேசத்தைச் சேர்ந்தவராக அவ்வடியார் இருந்ததால் அவர் 'பஹூ சம்ஷேப'த்தைப் புரிந்து கொண்டார்.
ஆனால், பாவம் , தம் பிரச்னையை அப்படிச் சுருக்கிச் சொல்ல அவருக்கு தெரியவில்லை !
ரொம்பவும் பணிவுக் குணத்தரெனத் தெரிந்தது! பெரியவாளை அதற்கு மேலே தொந்தரை செய்ய வேண்டாமென்றே இருக்க வேண்டும். அந்த நெருக்கடியில் தமக்கு என்ன சொல்ல வேண்டுமென்ற முறைப்படுத்திச் சொல்ல வரவில்லை என்றுமக், தாம் ஊருக்கு எவ்வளவு சீக்கிரம் திரும்ப முடியுமோ அவ்வளவில் திரும்ப வேண்டும் என்றும் மாத்திரம் கூறிவிட்டு, 'ஸ்ரீவாரு'வின் கிருபைதான் தம்மை ரட்சிக்க வேண்டும் என்று கண்ணும் கண்ணீருமாக விண்ணப்பித்துவிட்டு, நகந்துகொண்டு வழி விட்டு விட்டார்.
ஆனால் பெரியவாள் அவரை எந்த ஊர் என்று கேட்டுத் தெரிந்துகொண்டே மேலே நடந்தார்.
அதுதான் பிற்பாடு எப்படிக் கைகொடுத்து உதவியது ?
ஸ்ரீ சந்திரமௌலீச்வர பூஜை நடந்தது. அந்த இளங்காலையின் சாந்தத்திலும் குளுமையிலும் பூஜை அன்று அலாதியானதொரு தாப சமணத்தை அளித்தது.
பூஜை முத்த பின் ஸ்ரீசரணர் பிக்ஷா வந்தனத்திற்காக வந்து நின்றார்.
அப்படித்தானா ? பிக்ஷாவந்தனத்திற்காக அவர் வந்து நின்றதாகவா தோன்றிற்று ? இல்லவேயில்லை !
அன்று பிக்ஷை செய்ய இருந்து, அதைத் தெரிவித்து வந்தனம் செய்து கொள்ள வந்திருந்தோர் சென்னையைச் சேர்ந்த படே படேக்களான ஒரு பெரும் தொழிலக நிறுவனரும் அவர் குடும்பத்தினருமாவர். மண்டபம் கொள்ளாமல் பிக்ஷ வந்தனச் சரக்குகள் அவர்களைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தன.
ஆயின் ஸ்ரீசரணரின் விசால நேத்ரங்களிலோ அந்த வந்தனக்காரர்களோ , அவர்களது பெரும் காணிக்கைகளோ பட்டதாகவே தெரியவில்லை!
அவை நிலையில்லாமல் மண்டபம் முழுதிலும் தேடித் தேடி அலைந்தன. பெரியவாளின் சரீரம் நின்றவிடத்தில்தான் நின்றதேனினும் சித்தம் நிலை கொள்ளாமல் எதையோ நாடுவது நன்கு புரிந்தது.
பிரசாந்த பகவந்தனின் 'அனுக்ரஹ காதர்யம்' தான் !
த்வாதசி முடியமுன்பே தீர்த்த ப்ரசாதமளித்து பிக்ஷை கொள்ள அவசரமான அவசர சமயம்! அப்ப்போது ஏன் பிக்ஷா வந்தனத்தை ஏற்காது இப்படி நம் ஆசாரக்காவலரே காக்க வைக்கிறார்?
பூஜைக்கு வரும் வழியில் காதரராக வந்து பிரார்த்தித்தாரே அவரைக் காக்க வேண்டுமென்பதற்காகத் தான் ! இவருக்கு ஏற்பட்டுள்ள பக்தானுக்ரஹ காதர்யத்தினால்தான்!
அப்பக்தர் மடத்து முகாமுக்குள் எங்கேயிருந்தாலும் , அக்கம்பக்கம் போயிருந்தாலும் உடனே தேடிக் கண்டு பிடித்து அழை த்து வருமாறு ஸ்ரீசரணரின் ஆக்ஞை பிறக்கிறது.
ஆக்ஞை செய்தபின்னரே பிக்ஷா வந்தனத்தை ஏற்க வருகிறார். அதன்போது பண்பு மறவாது , பிக்ஷை செய்யும் பெரும் முக்யஸ்தர்களான அன்பர்களை மிக்க ஆதரவுடன் க்ஷேமலாபங்கள் விசாரிக்கத்தான் செய்கிறாரென்றாலும் அப்போதும் அந்த முக்யத்துவமில்லாத அனாமதேய ஆந்திர ப்ராம்மணரைப் பற்றிய விசாரமே அவர்பி சித்தத்தில் அதிகமாக இருந்து, அவரைத் தேடி வரத் தாம் அனுப்பியோரை எதிர்பார்த்து முகத்தைத் தூக்கித் தூக்கிப் பார்த்த வண்ணம்தான் இருக்கிறார்! நவ கண்டத்தில் யாரே காட்டுவார் அப்படியோர் அக்கறை !
அல்ப த்வாதசியை முன்னிட்டு எமெர்ஜென்சி ஸ்பீடில் நடந்து முடியவிருந்த அந்த பிக்ஷா வந்தனத்தின்போதே , நாலு மூளைக்கும்க் பறந்த பாரிஷதர்கள் வந்து சல்லடை போட்டுப் பார்த்ததில் அந்நபர் எங்கும் தென்படவில்லையென்று தெரிவிக்கின்றனர்.
அப்போது பெரியவாள் அவரது ஊரின் பெயர் கேட்டுத் தெரிந்துகொண்டதுதான் கை கொடுத்தது !
அவரி சொன்ன ஊரைப் பெரியவர் சொல்லி அந்த ஊருக்கு அப்போது மடம் முகாமிட்டிருந்த ஊரிலிருந்து எத்தனை மணிக்கு பஸ் என்று விசாரிக்கிறார் . அது ரயில் நிலையமில்லாத ஊர் என்று அவருக்குத தெரிந்திருக்கிறது .
அவருக்குக் கிடைத்த பதிலிலிருந்து சுமார் அரை மணியில் பஸ் என்று தெரிகிறது.
வெகு அவசர உணர்வுடன் ஸ்ரீசரணர் கட்டளை பிறப்பிக்கிறார், தெலுங்கு தெரிந்த காரிய சமர்த்தரான ஒரு சிஷ்யரிடம்! பிக்ஷா வந்தனக்காரர்கள் வந்திருக்கும் கார்களில் ஒன்றில் உடனே அவர் பஸ் நிலையத்திற்குப் போகவேண்டுமெனச் சொல்கிறார். "பிரசாதம் தரேன். எடுத்துண்டு போ. அந்த ப்ராம்மணரைக் கண்டுபிடிச்சு அதைக் குடு . நான் அம்பாளை அவருக்காக நன்னா பிரார்த்தனை பண்ணிண்டிருக்கேன். அவரும் பரிபூர்ண நம்பிக்கையோட ப்ரார்த்திச்சுண்டா கஷ்டமெல்லாம் தீர்ந்து சௌக்யமா இருப்பார்-னு அவருக்கு மனசு நன்னா ஆறுகிற மாதிரி சொல்லு. இல்லாட்டா, பஸ் டிரைவர், கண்டக்டரைக் கேட்டுக்கிண்டு அவா அஞ்சு பத்து நிமிஷம் அந்த பிராமணருக்காக காத்துண்டிருப்பா -ன்னா அவரையே இங்கே அழைச்சுண்டு வந்துடு. நானே பார்த்துப் பேசி அனுப்பி வைக்கிறேன்" என்கிறார் .
"அதுக்குள்ளே பெரியவ எப்படி தீர்த்தம் குடுத்துட்டு பிக்ஷை பண்ணமுடியும்? அவர் வந்துட்டு போன , அப்பறம் -னாலோ த்வாதசியே முடிந்து விட்டால் அப்புறம் அன்று போஜனம் கொள்ளக்கூடாது என வழக்கு. மறுதினமும் ஏதோ விரதமானதால் அன்றும் மாலை பூஜை முடிந்தபின்தான் மஹா பெரியவாள் பிக்ஷை கொள்வார் . அதாவது "ஏகாதசி'யே துவாதசியன்றும், அதற்கு மறு தினமும் பெரும்பாகத்திலும் கூட நீடித்துவிடும்! அதனால்தான் பணிவிடையாளர் அப்படிப் பதை பதைத்து கேட்டார். தீனர்களுக்காகவே வாழ்ந்த தியாக மூர்த்தியோ அப்படிப் பட்டினி கிடப்பதைப் பொருட்படுத்தவில்லை.
"அதை நான் பாத்துக்கறேன். நீ சொன்னதைப் பத்தி சந்தோஷம். இப்ப சட்னு நான் சொன்னதை செய்" என்று என்று கூறிய ஸ்ரீசரணர் விபூதி, குங்குகமம , அக்ஷதை , கற்கண்டு, திராக்ஷை பிரசாதத்தை, அக் குங்குமத்தில் அரை நிமிஷமே ஆயினும், கரை காணா ஆழியளவு கருணையுடன் பக்தருக்காகக் காரிய சமர்த்தரிடம் கொடுக்கிறார். அம்பாளுக்கு 'நன்னா' பிரார்த்தித்துக் கொண்டு கொடுக்கிற மஹா ப்ரசாதம் ! அவர் அப்படி வெளியிட்டுச் சொன்னதே அதிசயம்! அவரது 'காதர்யம்' தான் அவ்வதிசயத்தைச் செய்வித்தது.
அல்ப த்வாதசியில் அந்த அனாமதேய பிராமணரின் பாரணைக்காக, படே படேக்கள் கொண்டு வந்திருந்த கனிவர்க்கத்திலிருந்து ஒரு மூங்கில் தட்டு நிறைய ஸ்ரீசரணாளே வேகவேகமாக எடுத்துப் போட்டு அதையும் கொண்டு போய்க் கொடுக்கப் பணிக்கிறார். காரிய சமர்த்தருக்காகவும் அதே விரைவுடன் இன்னொரு தமுக்கைப் பழங்களால் நிரப்பித் தருகிறார்.
சமர்த்தர் கண்களில் நீர் முட்ட அவற்றை எடுத்துப் போகிறார். நீர் முட்டியதற்குக் காரணம், அவருக்கு நன்றாக உறுதிப்பட்டு விட்டது, அன்று ஸ்ரீசரணர் துளசிதள தீர்த்தம் அருந்தினாலே பாரணைப் போஜனம் செய்ததற்கு சமானம் என்ற சாஸ்திரப்படி அப்படித்தான் செய்யப் போகிறார் என்று!
'தாயினும் சாலப் பரிந்து' யாரோ பக்தருக்காகக் கனிந்து கனி வர்க்கங்கள் அனுப்புகிறார்!
தாமொருவர் வெறும் துளசி தீர்த்தத்துடனேயே போஜனத்தை முடித்துக்கொண்டு, அது அந்தரங்கமானவர் தவிர எவருக்கும் தெரியாமல் மறைத்து, மடத்தில் குழுமியுள்ள பக்தகோடிகள் அறுசுவை உணவு, அகத்திக்கீரை, சுண்டை, நெல்லி முள்ளி , பாயசத்துடன் உண்டு வயிறு நிறையச் செய்கிறார்!
'கார்ய சமர்த்தர்' பத்துப் பனிரெண்டு நிமிஷத்திலேயே நாம் கொடுத்த அப் பட்டத்திற்கேற்ப ஆந்திர பிராமணரை அழைத்தே வந்துவிட்டார்!
அப்போது அந்த அடியார் பெற்ற நிறைவு அதிகமா, இந்த ஆண்டவர் பெற்ற நிறையவு அதிகமா, யாரே எடை போட்டுச் சொல்ல முடியம்?
அருள் பெற வேண்டும், பெறவேண்டும் என்ற அவரது தவிப்பும் அடங்கிற்று. அருள் சுரக்கவேண்டும், சுரக்கவேண்டுமென்ற இவரது தவிப்பும் அடங்கிற்று என்பது மட்டும் நிதர்சனமாகத் தெரிந்தது!
எவரோ ஓர் அநாமாதேய நபருக்காக இப்படிஇதய ஆழத்திலிருந்து தவித்துத் துடித்து அருள் சொரியும் அப்படிப்பட்டதொரு காருண்ய வள்ளலை எங்கே காண ?
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM