Post by radha on Jun 27, 2020 12:09:39 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
பெரியவா திருவடியே
சரணம்.
திருப்பதி க்ஷேத்ரம் யுகயுகமாக பற்பல கோடி ஜீவன்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட பகவான்! எண்ணற்ற மஹான்கள் ஊனும், உயிரும் உருக பாடி, பக்தி பண்ணி ரசித்த பெருமாள்! அந்த திருப்பதி க்ஷேத்ரத்தையே காப்பாற்றியவர் நம்ம பெரியவா! கலியுகம் இல்லையா? க்ஷேத்ரத்துக்கே ஹானி வந்துவிடுமோ என்ற சூழ்நிலை!
சுமார் 50 வர்ஷங்களுக்கு முன் திருப்பதி அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எப்போதும் கோவிலில் ஏதாவது புதுசு புதுசாக மாற்றங்கள் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும். காரணம்? லக்ஷக்கணக்கான பக்தர்கள் தினமும் வரும் க்ஷேத்ரம். அவர்களுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற நல்லெண்ணமே! நாஸ்திக வாதம் அங்கங்கே ஒப்புக்கு முழக்கம் செய்தாலும், "இதோ பார்த்தாயா! என்னைத் தேடி வரும் என் குழந்தைகளை?" என்று பகவான் கோடிக் கணக்கில் காட்டும் பல க்ஷேத்ரங்களில், திருப்பதியும் ஒன்று.
ஒருமுறை அங்கிருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளும், அறநிலையத் துறை மந்திரியும் சேர்ந்து ஒரு முக்கியமான முடிவை செயலாக்கத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்றால்....பக்தர்கள் உள்ளே மூலஸ்தானத்துக்கு வந்து, பிறகு அதே வழியாகத்தான் திரும்பிப் போகிறார்கள். அப்போது அங்கே ஒரே நெருக்கடியாகி விடுகிறது. எனவே மூலஸ்தானத்தை அடுத்த அர்த்த மண்டபத்தின் இருபுறமும் இருக்கும் சுவற்றை இடித்து வழி பண்ணிவிட்டால், மக்கள் வலது, இடது பக்கம் போகலாம், வரலாம். நெருக்கடி, ஸ்ரமம் இல்லை; இன்னும் நிறைய கூட்டம் வந்தாலும் சமாளிக்கலாம். கீழ்மட்டத்தில் அதிகாரிகள் இதை விவரமாகப் பேசி, சுவரை கச்சிதமாக உடைக்க அமெரிக்காவில் இருந்து 40 லக்ஷத்துக்கு ஒரு cutting machine வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவைக் கேட்டுக் கொண்டு, நிம்மதி இழந்தவராக அமர்ந்திருந்தவர், கணபதி ஸ்தபதி.
"என்ன ஸ்தபதி ! நீங்க என்ன சொல்லறீங்க? இதுல உங்களுக்கு சம்மதந்தானே?.." அமைச்சர் கேட்டார்.
"என்னோட மனசுக்குப் பட்டதை நான் இங்க சொல்லலாமா?.." ஸ்தபதி கேட்டார்.
"தாராளமா....."
"எத்தனையோ ஆயிரம் வர்ஷங்களுக்கு முன்னால, ஆகம சாஸ்த்ரங்களை கரைச்சு குடிச்ச வல்லுனர்கள்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கா....மூலஸ்தானத்துக்கு அடுத்தபடியா இருக்கற அர்த்த மண்டபம் ரொம்ப பவித்ரமானது. அதோட ரெண்டுபக்க சுவரையும் இடிச்சு வழி பண்ணறது நல்லதில்லை. அப்பிடி ஏதாவது பண்ணினா, மூலவரோட சக்தியும், sanctity யும் போய்டும்... அதுனால இதையெல்லாம் மனசுல வெச்சுண்டு தயவு செய்து இந்த இடிக்கற வேலையை நிறுத்திடுங்கோ!..."
எந்த ஒரு குழுவிலும், ஒரு முடிவு எடுக்கும்போது, உண்மையில் எது நல்லது என்பதை உளமார உணர்ந்து செய்பவர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்? அதேபோல், ஸ்தபதியின் சொல் அங்கே எடுபடவில்லை. இடித்தே தீருவது! என்று தீர்மானம் பண்ணி, ஸ்தபதியிடமும் கட்டாயமாக கையெழுத்து வாங்கப் பட்டது. எப்போது கையெழுத்துப் போட்டாரோ, அந்தக்ஷணத்திலிருந்து அவருடைய நிம்மதி போய்விட்டது. தன் கண் முன்னால், கோவிலின் அர்த்த மண்டபம் இடிக்கப்படுவதை எப்படி சஹிக்க முடியும்? இந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. பயங்கரமாக குழம்பித் தவித்த அவர் உள்ளம் அப்போது ஒன்றே ஒன்றை பற்றிக் கொண்டது ! ஆம். பெரியவாளின் சரணத்தை!
அப்போது பெரியவா ஆந்த்ராவில்தான் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். பெரியவாளை எங்கிருந்தாலும் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கால் போன போக்கில் ஸ்தபதி கிளம்பிவிட்டார். அன்ன ஆகாரமில்லை; மனஸ் முழுக்க பாரம்; விடியற்காலை பெரியவா தங்கியிருந்த கார்வேட் நகருக்கு வந்து, பெரியவா முன் நின்றார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!
பெரியவா அவரைப் பார்த்ததும், நெற்றியில் நாமம் போட்டுக் காட்டி, "அங்கேர்ந்து வரயா?" என்றார்.
"ஆமா....பெரியவாகிட்ட முக்யமான விஷயம்....." அவர் பேச ஆரம்பிக்கும்முன் அவரை கையமர்த்தி,
"இப்போ நீ ஒண்ணும் சொல்ல வேணாம்...மொதல்ல போய் வயத்துக்கு ஏதாவது சாப்ட்டுட்டு வா! ..." ரெண்டு நாளாக எதுவும் சாப்பிடாமல் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கும் தன் குழந்தைக்கு முதலில் வயிற்றை நிரப்ப எண்ணினாள் அந்த மஹா மாதா! பாரிஷதரிடம், "இவரை எந்த ஹோட்டல் தொறந்திருந்தாலும் அழைச்சிண்டு போய், வயறு நெறைய ஆஹாரம் குடுக்கச் சொல்லு! பணத்தை நான் தரேன்...ன்னு சொல்லு.."
அன்னபூரணி சொன்னால் அப்பீல் உண்டா...ஒரு ஹோட்டல் திறந்திருந்தது. பெரியவாளுடைய உத்தரவைக் கேட்டதும் அந்த முதலாளி, "பெரியவா அனுப்பினவாகிட்ட நான் எப்பிடி பணம் கேப்பேன்? நன்னா வயிறார சாப்பிடட்டும்...என்னோட பாக்யம் " என்று சொல்லி, சுடச்சுட தயாராக இருந்த உணவைப் பரிமாறினார். இப்இப்போ சொல்லு...."
எல்லாவற்றையும் சொன்னார். பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.
"அப்பிடிபோது மறுபடியும் பெரியவா முன்னால் வந்து நின்றார் ஸ்தபதி.
"அர்த்த மண்டபத்ல கைவெச்சா.பெருமாளோட சக்தி பூரா போய்டும்...பெரியவா!.. திருப்பதில எந்த மாறுதல் பண்ணணும்...ன்னாலும் பெரியவாகிட்ட கேட்டுண்டுதான் பண்ணுவா...ஆனா, இந்த விஷயத்தை உங்ககிட்ட கேக்காம, வெறும் தகவல் மட்டுந்தான் சொல்லுவா...அதுனால பெரியவா அனுக்ரஹம் பண்ணி, இதை நிறுத்த ஏதாவது வழி சொல்லணும்.."
பெரியவாளின் திருவாக்கிலிருந்து மணிமணியாக அபயச்சொற்கள் வந்தன!
"ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!.." ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார். வீட்டுக்கு வந்து அசந்து படுத்த ஸ்தபதி நன்றாகத் தூங்கினார்! நிம்மதியாக! ஆனால், பின்னிரவு ரெண்டு மணிக்கு திடீரென்று யாரோ எழுப்பிவிட்ட மாதிரி, படக்கென்று எழுந்தார். மனஸில் ஏதோ தோன்ற, விடுவிடுவென்று முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டியின் வீட்டை நோக்கி நடந்தார்! அப்போது சரியாக மணி மூன்று! வாசலில் இருந்த செக்யுரிட்டி ஆபீசர் இவரை அடையாளம் கண்டுகொண்டு, "என்ன ஸ்தபதி ஐயா !...இவ்வளவு அதிகாலை முதலமைச்சரைப் பாக்க வந்திருக்கீங்க!.." என்றார்.
"ரொம்ப அவசரம்...நான் அவரைப் பாக்கணும்..."
"appointment இருக்கா?"
"இல்லையே.."
"அப்போ அவரைப் பாக்க முடியாதே ஐயா!.."
"ரொம்ப அவசரம்...நான் பாத்தே ஆகணுமே!.."
ஆபீசர் யோசித்தார்..ஸ்தபதி ரொம்ப மரியாதைக்குரியவர். நிச்சயம் ஏதோ அவசரமான காரியமாகத்தான் இருக்கும்...
"ஐயா...ஒண்ணு செய்யலாம்...சரியா 4.30 மணிக்கு முதலமைச்சர் காபி சாப்பிட மாடியிலேர்ந்து இறங்கி வருவார். அப்டி வந்து உள்ள நுழையும் போது ஒங்களைப் பாத்துட்டார்ன்னா, ப்ரச்சினை தீர்ந்தது! இல்லாட்டா.....காலேலதான்!.."
ஸ்தபதி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். சரியாக 4.30 மணிக்கு ரெட்டிகாரு மாடியிலிருந்து இறங்கியவர், வாசலில் நிற்கும் ஸ்தபதியைப் பார்த்துவிட்டார்! முகமெல்லாம் வியப்பாக....."என்ன கணபதி? இத்தனை காலைல?"
"உங்ககிட்ட முக்யமான விஷயம் பேசணும்...."
"என்னது? வாங்க..." என்று வாசலுக்கு வந்து, அவர் தோள் மேல் கையைப் போட்டு அணைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றார் முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டி!
"திருப்பதி கோவிலுக்கு ஆபத்து!" என்று எடுத்த எடுப்பில் "கண்டேன் சீதையை!" மாதிரி போட்டு உடைத்தார்.
"என்ன உளறறீங்க? திருப்பதிக்கு என்ன ஆபத்து! எப்படி வரும்?..." அதிர்ச்சியோடு கேட்டார் ரெட்டிகாரு. எல்லா விஷயத்தையும் சொல்லி, " பெருமாளோட சக்தி பூரா போய்டும்" என்று நிறுத்தினார்.
முதலமைச்சர் முகத்தில் கோபம் கொப்பளித்தது! கார்யஸ்தரை கூப்பிட்டு "ஒடனே அறநிலையத்துறை அமைச்சரை போனில் கூப்பிடு!.." அதிரடி உத்தரவு பறந்தது. அறநிலையம் லைனில் வந்தார்......
"முந்தாநேத்திக்கு திருப்பதில என்ன நடந்தது?..."
"அந்த விஷயமா பேசத்தான் file லோட உங்களைப் பாக்க இன்னிக்கி பொறப்பட்டு வந்திட்டு இருக்கேன்..." இழுத்தார்.
"திருப்பதியில் என்ன நடந்தது...ன்னுதான் கேட்டேன்!.." கத்தினார் முதமைச்சர்.
அறநிலையம் தாங்கள் எடுத்த முடிவை விவரித்தார்.
"மொதல்ல நான் சொல்றதை கேளுங்க! வெங்கண்ணா ஜோலிக்கு போகாண்டி!" என்று ஒரே போடாகப் போட்டார்!
"திருப்பதி வெங்கடாசலபதி விஷயத்தில் தலையிட வேண்டாம்...இது என் உத்தரவு!.." பட்டென்று போனை வைத்தார்.
"கணபதி! திருப்பதில எதுவும் நடக்காது! நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க.." வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர்.
வெளியே வந்தபின்தான், எந்த சக்தியால் தான் உந்தப்பட்டு இன்று இவ்வளவு அதிகாலையில் முதலமைச்சரைக் கண்டு விஷயத்தை சொல்ல முடிந்தது ! என்று ஸ்தபதி வியந்தபோது, உள்ளிருந்து பெரியவாளுடைய தெய்வீகமான வார்த்தைகள் ஒலித்தன.....
"ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!".....
பெருமாள் கோவிலின் அர்த்த மண்டபம் இடிபடாமல் காப்பாற்றியது யாரால்? ஸாக்ஷாத் ப்ரஹ்ம ஸ்வரூபமான பெரியவாளால்தான் ! திருப்பதி மட்டுமில்லை இன்னும் இந்தியாவில் உள்ள எண்ணற்ற கோவில்களை பழுது பார்த்து, ஒரு தீபத்துக்கூட வழியில்லாமல் இருந்த கோவில்களுக்கு தன்னுடைய ப்ரபாவத்தால் பூஜைகள் நடப்பது பெரியவா என்ற நடமாடும் தெய்வத்தால்தான்.
KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
பெரியவா திருவடியே
சரணம்.
திருப்பதி க்ஷேத்ரம் யுகயுகமாக பற்பல கோடி ஜீவன்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட பகவான்! எண்ணற்ற மஹான்கள் ஊனும், உயிரும் உருக பாடி, பக்தி பண்ணி ரசித்த பெருமாள்! அந்த திருப்பதி க்ஷேத்ரத்தையே காப்பாற்றியவர் நம்ம பெரியவா! கலியுகம் இல்லையா? க்ஷேத்ரத்துக்கே ஹானி வந்துவிடுமோ என்ற சூழ்நிலை!
சுமார் 50 வர்ஷங்களுக்கு முன் திருப்பதி அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எப்போதும் கோவிலில் ஏதாவது புதுசு புதுசாக மாற்றங்கள் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும். காரணம்? லக்ஷக்கணக்கான பக்தர்கள் தினமும் வரும் க்ஷேத்ரம். அவர்களுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற நல்லெண்ணமே! நாஸ்திக வாதம் அங்கங்கே ஒப்புக்கு முழக்கம் செய்தாலும், "இதோ பார்த்தாயா! என்னைத் தேடி வரும் என் குழந்தைகளை?" என்று பகவான் கோடிக் கணக்கில் காட்டும் பல க்ஷேத்ரங்களில், திருப்பதியும் ஒன்று.
ஒருமுறை அங்கிருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளும், அறநிலையத் துறை மந்திரியும் சேர்ந்து ஒரு முக்கியமான முடிவை செயலாக்கத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்றால்....பக்தர்கள் உள்ளே மூலஸ்தானத்துக்கு வந்து, பிறகு அதே வழியாகத்தான் திரும்பிப் போகிறார்கள். அப்போது அங்கே ஒரே நெருக்கடியாகி விடுகிறது. எனவே மூலஸ்தானத்தை அடுத்த அர்த்த மண்டபத்தின் இருபுறமும் இருக்கும் சுவற்றை இடித்து வழி பண்ணிவிட்டால், மக்கள் வலது, இடது பக்கம் போகலாம், வரலாம். நெருக்கடி, ஸ்ரமம் இல்லை; இன்னும் நிறைய கூட்டம் வந்தாலும் சமாளிக்கலாம். கீழ்மட்டத்தில் அதிகாரிகள் இதை விவரமாகப் பேசி, சுவரை கச்சிதமாக உடைக்க அமெரிக்காவில் இருந்து 40 லக்ஷத்துக்கு ஒரு cutting machine வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவைக் கேட்டுக் கொண்டு, நிம்மதி இழந்தவராக அமர்ந்திருந்தவர், கணபதி ஸ்தபதி.
"என்ன ஸ்தபதி ! நீங்க என்ன சொல்லறீங்க? இதுல உங்களுக்கு சம்மதந்தானே?.." அமைச்சர் கேட்டார்.
"என்னோட மனசுக்குப் பட்டதை நான் இங்க சொல்லலாமா?.." ஸ்தபதி கேட்டார்.
"தாராளமா....."
"எத்தனையோ ஆயிரம் வர்ஷங்களுக்கு முன்னால, ஆகம சாஸ்த்ரங்களை கரைச்சு குடிச்ச வல்லுனர்கள்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கா....மூலஸ்தானத்துக்கு அடுத்தபடியா இருக்கற அர்த்த மண்டபம் ரொம்ப பவித்ரமானது. அதோட ரெண்டுபக்க சுவரையும் இடிச்சு வழி பண்ணறது நல்லதில்லை. அப்பிடி ஏதாவது பண்ணினா, மூலவரோட சக்தியும், sanctity யும் போய்டும்... அதுனால இதையெல்லாம் மனசுல வெச்சுண்டு தயவு செய்து இந்த இடிக்கற வேலையை நிறுத்திடுங்கோ!..."
எந்த ஒரு குழுவிலும், ஒரு முடிவு எடுக்கும்போது, உண்மையில் எது நல்லது என்பதை உளமார உணர்ந்து செய்பவர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்? அதேபோல், ஸ்தபதியின் சொல் அங்கே எடுபடவில்லை. இடித்தே தீருவது! என்று தீர்மானம் பண்ணி, ஸ்தபதியிடமும் கட்டாயமாக கையெழுத்து வாங்கப் பட்டது. எப்போது கையெழுத்துப் போட்டாரோ, அந்தக்ஷணத்திலிருந்து அவருடைய நிம்மதி போய்விட்டது. தன் கண் முன்னால், கோவிலின் அர்த்த மண்டபம் இடிக்கப்படுவதை எப்படி சஹிக்க முடியும்? இந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. பயங்கரமாக குழம்பித் தவித்த அவர் உள்ளம் அப்போது ஒன்றே ஒன்றை பற்றிக் கொண்டது ! ஆம். பெரியவாளின் சரணத்தை!
அப்போது பெரியவா ஆந்த்ராவில்தான் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். பெரியவாளை எங்கிருந்தாலும் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கால் போன போக்கில் ஸ்தபதி கிளம்பிவிட்டார். அன்ன ஆகாரமில்லை; மனஸ் முழுக்க பாரம்; விடியற்காலை பெரியவா தங்கியிருந்த கார்வேட் நகருக்கு வந்து, பெரியவா முன் நின்றார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!
பெரியவா அவரைப் பார்த்ததும், நெற்றியில் நாமம் போட்டுக் காட்டி, "அங்கேர்ந்து வரயா?" என்றார்.
"ஆமா....பெரியவாகிட்ட முக்யமான விஷயம்....." அவர் பேச ஆரம்பிக்கும்முன் அவரை கையமர்த்தி,
"இப்போ நீ ஒண்ணும் சொல்ல வேணாம்...மொதல்ல போய் வயத்துக்கு ஏதாவது சாப்ட்டுட்டு வா! ..." ரெண்டு நாளாக எதுவும் சாப்பிடாமல் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கும் தன் குழந்தைக்கு முதலில் வயிற்றை நிரப்ப எண்ணினாள் அந்த மஹா மாதா! பாரிஷதரிடம், "இவரை எந்த ஹோட்டல் தொறந்திருந்தாலும் அழைச்சிண்டு போய், வயறு நெறைய ஆஹாரம் குடுக்கச் சொல்லு! பணத்தை நான் தரேன்...ன்னு சொல்லு.."
அன்னபூரணி சொன்னால் அப்பீல் உண்டா...ஒரு ஹோட்டல் திறந்திருந்தது. பெரியவாளுடைய உத்தரவைக் கேட்டதும் அந்த முதலாளி, "பெரியவா அனுப்பினவாகிட்ட நான் எப்பிடி பணம் கேப்பேன்? நன்னா வயிறார சாப்பிடட்டும்...என்னோட பாக்யம் " என்று சொல்லி, சுடச்சுட தயாராக இருந்த உணவைப் பரிமாறினார். இப்இப்போ சொல்லு...."
எல்லாவற்றையும் சொன்னார். பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.
"அப்பிடிபோது மறுபடியும் பெரியவா முன்னால் வந்து நின்றார் ஸ்தபதி.
"அர்த்த மண்டபத்ல கைவெச்சா.பெருமாளோட சக்தி பூரா போய்டும்...பெரியவா!.. திருப்பதில எந்த மாறுதல் பண்ணணும்...ன்னாலும் பெரியவாகிட்ட கேட்டுண்டுதான் பண்ணுவா...ஆனா, இந்த விஷயத்தை உங்ககிட்ட கேக்காம, வெறும் தகவல் மட்டுந்தான் சொல்லுவா...அதுனால பெரியவா அனுக்ரஹம் பண்ணி, இதை நிறுத்த ஏதாவது வழி சொல்லணும்.."
பெரியவாளின் திருவாக்கிலிருந்து மணிமணியாக அபயச்சொற்கள் வந்தன!
"ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!.." ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார். வீட்டுக்கு வந்து அசந்து படுத்த ஸ்தபதி நன்றாகத் தூங்கினார்! நிம்மதியாக! ஆனால், பின்னிரவு ரெண்டு மணிக்கு திடீரென்று யாரோ எழுப்பிவிட்ட மாதிரி, படக்கென்று எழுந்தார். மனஸில் ஏதோ தோன்ற, விடுவிடுவென்று முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டியின் வீட்டை நோக்கி நடந்தார்! அப்போது சரியாக மணி மூன்று! வாசலில் இருந்த செக்யுரிட்டி ஆபீசர் இவரை அடையாளம் கண்டுகொண்டு, "என்ன ஸ்தபதி ஐயா !...இவ்வளவு அதிகாலை முதலமைச்சரைப் பாக்க வந்திருக்கீங்க!.." என்றார்.
"ரொம்ப அவசரம்...நான் அவரைப் பாக்கணும்..."
"appointment இருக்கா?"
"இல்லையே.."
"அப்போ அவரைப் பாக்க முடியாதே ஐயா!.."
"ரொம்ப அவசரம்...நான் பாத்தே ஆகணுமே!.."
ஆபீசர் யோசித்தார்..ஸ்தபதி ரொம்ப மரியாதைக்குரியவர். நிச்சயம் ஏதோ அவசரமான காரியமாகத்தான் இருக்கும்...
"ஐயா...ஒண்ணு செய்யலாம்...சரியா 4.30 மணிக்கு முதலமைச்சர் காபி சாப்பிட மாடியிலேர்ந்து இறங்கி வருவார். அப்டி வந்து உள்ள நுழையும் போது ஒங்களைப் பாத்துட்டார்ன்னா, ப்ரச்சினை தீர்ந்தது! இல்லாட்டா.....காலேலதான்!.."
ஸ்தபதி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். சரியாக 4.30 மணிக்கு ரெட்டிகாரு மாடியிலிருந்து இறங்கியவர், வாசலில் நிற்கும் ஸ்தபதியைப் பார்த்துவிட்டார்! முகமெல்லாம் வியப்பாக....."என்ன கணபதி? இத்தனை காலைல?"
"உங்ககிட்ட முக்யமான விஷயம் பேசணும்...."
"என்னது? வாங்க..." என்று வாசலுக்கு வந்து, அவர் தோள் மேல் கையைப் போட்டு அணைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றார் முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டி!
"திருப்பதி கோவிலுக்கு ஆபத்து!" என்று எடுத்த எடுப்பில் "கண்டேன் சீதையை!" மாதிரி போட்டு உடைத்தார்.
"என்ன உளறறீங்க? திருப்பதிக்கு என்ன ஆபத்து! எப்படி வரும்?..." அதிர்ச்சியோடு கேட்டார் ரெட்டிகாரு. எல்லா விஷயத்தையும் சொல்லி, " பெருமாளோட சக்தி பூரா போய்டும்" என்று நிறுத்தினார்.
முதலமைச்சர் முகத்தில் கோபம் கொப்பளித்தது! கார்யஸ்தரை கூப்பிட்டு "ஒடனே அறநிலையத்துறை அமைச்சரை போனில் கூப்பிடு!.." அதிரடி உத்தரவு பறந்தது. அறநிலையம் லைனில் வந்தார்......
"முந்தாநேத்திக்கு திருப்பதில என்ன நடந்தது?..."
"அந்த விஷயமா பேசத்தான் file லோட உங்களைப் பாக்க இன்னிக்கி பொறப்பட்டு வந்திட்டு இருக்கேன்..." இழுத்தார்.
"திருப்பதியில் என்ன நடந்தது...ன்னுதான் கேட்டேன்!.." கத்தினார் முதமைச்சர்.
அறநிலையம் தாங்கள் எடுத்த முடிவை விவரித்தார்.
"மொதல்ல நான் சொல்றதை கேளுங்க! வெங்கண்ணா ஜோலிக்கு போகாண்டி!" என்று ஒரே போடாகப் போட்டார்!
"திருப்பதி வெங்கடாசலபதி விஷயத்தில் தலையிட வேண்டாம்...இது என் உத்தரவு!.." பட்டென்று போனை வைத்தார்.
"கணபதி! திருப்பதில எதுவும் நடக்காது! நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க.." வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர்.
வெளியே வந்தபின்தான், எந்த சக்தியால் தான் உந்தப்பட்டு இன்று இவ்வளவு அதிகாலையில் முதலமைச்சரைக் கண்டு விஷயத்தை சொல்ல முடிந்தது ! என்று ஸ்தபதி வியந்தபோது, உள்ளிருந்து பெரியவாளுடைய தெய்வீகமான வார்த்தைகள் ஒலித்தன.....
"ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!".....
பெருமாள் கோவிலின் அர்த்த மண்டபம் இடிபடாமல் காப்பாற்றியது யாரால்? ஸாக்ஷாத் ப்ரஹ்ம ஸ்வரூபமான பெரியவாளால்தான் ! திருப்பதி மட்டுமில்லை இன்னும் இந்தியாவில் உள்ள எண்ணற்ற கோவில்களை பழுது பார்த்து, ஒரு தீபத்துக்கூட வழியில்லாமல் இருந்த கோவில்களுக்கு தன்னுடைய ப்ரபாவத்தால் பூஜைகள் நடப்பது பெரியவா என்ற நடமாடும் தெய்வத்தால்தான்.
KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM