Post by radha on Jun 20, 2020 8:05:26 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
மஹா பெரியவா போற்றி
மகா பெரியவாவின் ஒரு சின்ன Miracle சொல்றேன் கேளுங்கோ. -
பண்டரிபுரத்தில் நடந்த ஒரு அதிசயம்.
தாத்தா சார், சில விஷயங்களை நம்பமுடியாமல் இருக்கே அது ஏன்? என்று ஆரம்பித்தார் முகுந்தன்.
நம்பறதும் நம்பாததும் ஒருவனுடைய மனசுலே எந்த அளவிலே பக்தி இருக்கு என்கிறதை பொறுத்து இருக்கிறது. சில விஷயங்களை ஒப்புக்கொள்ள முடியலேன்னா அதை அதிசயம் என்று சொல்லிவிடுகிறோம். சிலதை நமக்கு தெரியவில்லை என்பதால் அடாஸ் , புருடா, என்று ஒதுக்கி விடுறோம். ஆனா எங்கேயோ ஏதோ நடந்திருக்க வேண்டும். அதனாலே தான் பராபரியா ஏதோ ஒரு செய்தி அதைப் பத்தி பரவலா நம்ம காது வரையும் கூட எட்டியிருக்கு. கொஞ்சம் இல்லே நிறையவே கூட செய்தி உரு மாறி இருக்கலாம். அதனால் என்ன. எடுத்துக்கறதும் எடுத்துக் காத்தும் அவரவர் இஷ்டம். நம்பிக்கை. அவ்வளவு தான்.
ஒரு விஷயம் சொல்லுங்களேன் இந்த மாதிரி.
நானா சொல்லலே இதை. யாரோ கேள்விப் பட்டு எங்கேயோ பத்திரிகையிலே போட்டு அதை நாலு படிச்சு அவா நிறையப்பேர் கிட்ட சொல்லி இப்படியே பலபேர் கிட்ட வந்து எங்கிட்டயும் வந்த ஒரு மகா பெரியவா விஷயம் சொல்றேன் கேளுங்கோ முகுந்தன்.
முகுந்தனோடு நாமும் காதைத் தீட்டிக் கொள்வோம்:
மெட்ராஸை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இப்போது மூன்றாவதாக கரு
.
எட்டாவது மாசம். இந்தக் குழந்தையாவது ஆணாகப் பிறக்க வேண்டும் என்று ஆசை. ரெண்டு பேரும் பெரியவாளுடைய தர்சனத்துக்கு போனார்கள். அப்போ பெரியவா பண்டரீபுரத்தில் தங்கியிருந்தார். கூட அவளுடைய மாமாவும் போனார்.
“பெரியவா……இவ என் மருமாள். மொத ரெண்டும் பொண் கொழந்தேள்……இந்தத் தடவையாவது பிள்ளைக் கொழந்தை பொறக்க அனுக்ரகம் பண்ணணும்”
“ஏன்? ரெண்டு பொண்ணோட மூணாவது பொண்ணு பொறந்தா…ஜாஸ்தின்னா சொல்றே?” சிரித்துக் கொண்டே பெரியவா.. .” இது எத்தனாவது மாசம்?”
“எட்டு நடக்கறது”
“ஏழு மாசம் கழிச்சு எங்கிட்ட வந்து பிள்ளை பொறக்கணும்…ன்னா…நான் என்ன பண்ணுவேன்? நீயே சொல்லு”!
மருமாளின் கண்களில் கண்ணீர்
.
பெரியவா அவளை பார்த்துக் கொண்டே, மாமாவிடம் “அவ ஏண்டா அழறா?”
.
எதிரில் தட்டில் வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களில் ஒன்றை எடுத்து தன் வலது தொடையில் தேய்த்துக் கொண்டே இருந்தார். பிறகு அப்பழத்தை அவளிடம் குடுத்து, ” இந்தா…….இதை சாப்டு! போயி பாண்டுரங்கனை தர்சனம் பண்ணிட்டு வா…….போக முடியு
மோல்லியோ?”
பாண்டுரங்கனை தர்சனம் பண்ணிவிட்டு வந்தார்கள். மடத்தில் நான்கு நாட்கள் தங்கிவிட்டு போகச்சொல்லி உத்தரவானது. நான்காம் நாள் கிளம்பும்போது அவளிடம் “இப்டி வா! ஒனக்கு புள்ளைக் கொழந்தை பொறந்தா…….சந்திரமௌலி ன்னு பேர் வெக்கறையா?”
“பெரியவா என்ன சொல்றேளோ……அப்டியே
பெரியவா” நமஸ்காரம் பண்ணிவிட்டு கிளம்பினார்கள். அழகான பிள்ளைக் குழந்தை பிறந்தது. ஏழுமாசம் கழிச்சு குழந்தையை பெரியவாளிடம் அழைத்து வந்தனர். அப்போ பெரியவா காஞ்சிபுரத்தில் இருந்தார்.
“சந்த்ரமௌளிதானே?……..” ஞாபகமாக கேட்டார்.
“பெரியவா சொன்னபடி சந்திரமௌலி தான்.
.ஆனா, கொழந்தையோட தலைல முன் நெத்திலேர்ந்து பின் கழுத்து வரைக்கும் நீளமா ஒரு பள்ளம் இருக்கு” என்று சொன்னாள்.
“கொழந்தைய நல்ல வெளிச்சத்ல கீழ துணிய விரிச்சு போடு! தலைல பள்ளம் இருக்கா
? எங்கே ….பாக்கலாம்” என்று சொன்னபடி வாழைபழம், மாம்பழம், அன்னாசிப்பழம் எல்லாவற்றையும் எடுத்து கீழே கிடந்த குழந்தையின் முன்னால் வைத்தார்.
“இந்த பழம் எல்லாம் நோக்கு வேணுமா?
.ஒன்னால இதெல்லாத்தையும் சாப்ட முடியுமா?” விளையாட்டு தாத்தாவாக குழந்தையிடம் கேட்டார்.
அதுபாட்டுக்கு கையை காலை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது.
அப்புறம் அம்மாவிடம் “இதெல்லாத்தையும் இவனுக்கு குடுக்கலாமா?” என்றார்.
“கொழந்தை பால்தான் சாப்டுவான்.” அம்மாக்காரி சொன்னாள்.
“எல்லாத்தையும் நன்னா மாவாட்டம் பெசைஞ்சு ஜலம் ஊத்தி கரைச்சு கஞ்சியாட்டம் பண்ணிக் குடு” என்று சொல்லி எல்லாப் பழங்களையும் அம்மாவிடம் குடுத்தார்.
“உத்தரவு பெரியவா…….ஆனா, இந்த தலைல பள்ளம்….” இழுத்தாள் அம்மாக்காரி.
“இவ…..எங்கிட்ட பிள்ளைக் கொழந்தை வேணும்…ன்னு எந்த ஊர்ல இருக்கறச்சே கேட்டா?” கணவரிடம் கேட்டார்.
“பண்டரீபுரத்ல”
“அங்க….பாண்டுரங்கனை தர்சனம் பண்ணினாளோ?”
“பண்ணினோம் பெரியவா”
“வெறும் தர்சனம் இல்லே…அஞ்சு ரூவா குடுத்தா, ஸ்வாமியோட தலைல இருக்கற தலைப்பாகையை எடுத்துட்டு காட்டுவா………அந்த பாண்டுரங்கனுக்கும் தலைல இப்டித்தான் பள்ளமா இருக்கும்…..வடக்கே, பக்தாள்ளாம் ஸ்வாமியை கையால தொட்டு கும்படற பழக்கம் உண்டு. அதே மாதிரி பாண்டுரங்கன் தலைல எல்லாரும் கையை வெச்சு வெச்சு, ஸ்வாமிக்கு தலைல பள்ளமே விழுந்துடுத்து! இவ, பிள்ளை வேணும்…ன்னு பாண்டுரங்கன்கிட்ட கேட்டாளோல்லியோ?…..அதான், கொழந்தையோட தலைலையும் பள்ளம் இருக்கு….செரியாப் போய்டும்”
தெய்வத்தின் அனுக்ரகத்தால் தெய்வத்திடம் பிள்ளைவரம் வேண்டி அத்தெய்வத்தின் சாயலாகவே பிறக்க அந்த குழந்தை என்ன பாக்யம் பண்ணியிருக்க வேண்டும்! அதை கருவில் சுமந்த தாய் எத்தனை பாக்யசாலி!
பெரியவா சொன்னபடி அந்த பழங்களை கஞ்சி மாதிரி பண்ணி, நாலு நாள் குடுத்ததும் ஊர் திரும்ப உத்தரவானது. ரயிலில் குழந்தையோடு கிளம்பி வரும்போது, குழந்தைக்கு உடை மாற்றும் போது, அதிசயமாக தலையில் இருந்த பள்ளம் மாயமாக மறைந்துவிட்டிருந்தது!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
மஹா பெரியவா போற்றி
மகா பெரியவாவின் ஒரு சின்ன Miracle சொல்றேன் கேளுங்கோ. -
பண்டரிபுரத்தில் நடந்த ஒரு அதிசயம்.
தாத்தா சார், சில விஷயங்களை நம்பமுடியாமல் இருக்கே அது ஏன்? என்று ஆரம்பித்தார் முகுந்தன்.
நம்பறதும் நம்பாததும் ஒருவனுடைய மனசுலே எந்த அளவிலே பக்தி இருக்கு என்கிறதை பொறுத்து இருக்கிறது. சில விஷயங்களை ஒப்புக்கொள்ள முடியலேன்னா அதை அதிசயம் என்று சொல்லிவிடுகிறோம். சிலதை நமக்கு தெரியவில்லை என்பதால் அடாஸ் , புருடா, என்று ஒதுக்கி விடுறோம். ஆனா எங்கேயோ ஏதோ நடந்திருக்க வேண்டும். அதனாலே தான் பராபரியா ஏதோ ஒரு செய்தி அதைப் பத்தி பரவலா நம்ம காது வரையும் கூட எட்டியிருக்கு. கொஞ்சம் இல்லே நிறையவே கூட செய்தி உரு மாறி இருக்கலாம். அதனால் என்ன. எடுத்துக்கறதும் எடுத்துக் காத்தும் அவரவர் இஷ்டம். நம்பிக்கை. அவ்வளவு தான்.
ஒரு விஷயம் சொல்லுங்களேன் இந்த மாதிரி.
நானா சொல்லலே இதை. யாரோ கேள்விப் பட்டு எங்கேயோ பத்திரிகையிலே போட்டு அதை நாலு படிச்சு அவா நிறையப்பேர் கிட்ட சொல்லி இப்படியே பலபேர் கிட்ட வந்து எங்கிட்டயும் வந்த ஒரு மகா பெரியவா விஷயம் சொல்றேன் கேளுங்கோ முகுந்தன்.
முகுந்தனோடு நாமும் காதைத் தீட்டிக் கொள்வோம்:
மெட்ராஸை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இப்போது மூன்றாவதாக கரு
.
எட்டாவது மாசம். இந்தக் குழந்தையாவது ஆணாகப் பிறக்க வேண்டும் என்று ஆசை. ரெண்டு பேரும் பெரியவாளுடைய தர்சனத்துக்கு போனார்கள். அப்போ பெரியவா பண்டரீபுரத்தில் தங்கியிருந்தார். கூட அவளுடைய மாமாவும் போனார்.
“பெரியவா……இவ என் மருமாள். மொத ரெண்டும் பொண் கொழந்தேள்……இந்தத் தடவையாவது பிள்ளைக் கொழந்தை பொறக்க அனுக்ரகம் பண்ணணும்”
“ஏன்? ரெண்டு பொண்ணோட மூணாவது பொண்ணு பொறந்தா…ஜாஸ்தின்னா சொல்றே?” சிரித்துக் கொண்டே பெரியவா.. .” இது எத்தனாவது மாசம்?”
“எட்டு நடக்கறது”
“ஏழு மாசம் கழிச்சு எங்கிட்ட வந்து பிள்ளை பொறக்கணும்…ன்னா…நான் என்ன பண்ணுவேன்? நீயே சொல்லு”!
மருமாளின் கண்களில் கண்ணீர்
.
பெரியவா அவளை பார்த்துக் கொண்டே, மாமாவிடம் “அவ ஏண்டா அழறா?”
.
எதிரில் தட்டில் வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களில் ஒன்றை எடுத்து தன் வலது தொடையில் தேய்த்துக் கொண்டே இருந்தார். பிறகு அப்பழத்தை அவளிடம் குடுத்து, ” இந்தா…….இதை சாப்டு! போயி பாண்டுரங்கனை தர்சனம் பண்ணிட்டு வா…….போக முடியு
மோல்லியோ?”
பாண்டுரங்கனை தர்சனம் பண்ணிவிட்டு வந்தார்கள். மடத்தில் நான்கு நாட்கள் தங்கிவிட்டு போகச்சொல்லி உத்தரவானது. நான்காம் நாள் கிளம்பும்போது அவளிடம் “இப்டி வா! ஒனக்கு புள்ளைக் கொழந்தை பொறந்தா…….சந்திரமௌலி ன்னு பேர் வெக்கறையா?”
“பெரியவா என்ன சொல்றேளோ……அப்டியே
பெரியவா” நமஸ்காரம் பண்ணிவிட்டு கிளம்பினார்கள். அழகான பிள்ளைக் குழந்தை பிறந்தது. ஏழுமாசம் கழிச்சு குழந்தையை பெரியவாளிடம் அழைத்து வந்தனர். அப்போ பெரியவா காஞ்சிபுரத்தில் இருந்தார்.
“சந்த்ரமௌளிதானே?……..” ஞாபகமாக கேட்டார்.
“பெரியவா சொன்னபடி சந்திரமௌலி தான்.
.ஆனா, கொழந்தையோட தலைல முன் நெத்திலேர்ந்து பின் கழுத்து வரைக்கும் நீளமா ஒரு பள்ளம் இருக்கு” என்று சொன்னாள்.
“கொழந்தைய நல்ல வெளிச்சத்ல கீழ துணிய விரிச்சு போடு! தலைல பள்ளம் இருக்கா
? எங்கே ….பாக்கலாம்” என்று சொன்னபடி வாழைபழம், மாம்பழம், அன்னாசிப்பழம் எல்லாவற்றையும் எடுத்து கீழே கிடந்த குழந்தையின் முன்னால் வைத்தார்.
“இந்த பழம் எல்லாம் நோக்கு வேணுமா?
.ஒன்னால இதெல்லாத்தையும் சாப்ட முடியுமா?” விளையாட்டு தாத்தாவாக குழந்தையிடம் கேட்டார்.
அதுபாட்டுக்கு கையை காலை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது.
அப்புறம் அம்மாவிடம் “இதெல்லாத்தையும் இவனுக்கு குடுக்கலாமா?” என்றார்.
“கொழந்தை பால்தான் சாப்டுவான்.” அம்மாக்காரி சொன்னாள்.
“எல்லாத்தையும் நன்னா மாவாட்டம் பெசைஞ்சு ஜலம் ஊத்தி கரைச்சு கஞ்சியாட்டம் பண்ணிக் குடு” என்று சொல்லி எல்லாப் பழங்களையும் அம்மாவிடம் குடுத்தார்.
“உத்தரவு பெரியவா…….ஆனா, இந்த தலைல பள்ளம்….” இழுத்தாள் அம்மாக்காரி.
“இவ…..எங்கிட்ட பிள்ளைக் கொழந்தை வேணும்…ன்னு எந்த ஊர்ல இருக்கறச்சே கேட்டா?” கணவரிடம் கேட்டார்.
“பண்டரீபுரத்ல”
“அங்க….பாண்டுரங்கனை தர்சனம் பண்ணினாளோ?”
“பண்ணினோம் பெரியவா”
“வெறும் தர்சனம் இல்லே…அஞ்சு ரூவா குடுத்தா, ஸ்வாமியோட தலைல இருக்கற தலைப்பாகையை எடுத்துட்டு காட்டுவா………அந்த பாண்டுரங்கனுக்கும் தலைல இப்டித்தான் பள்ளமா இருக்கும்…..வடக்கே, பக்தாள்ளாம் ஸ்வாமியை கையால தொட்டு கும்படற பழக்கம் உண்டு. அதே மாதிரி பாண்டுரங்கன் தலைல எல்லாரும் கையை வெச்சு வெச்சு, ஸ்வாமிக்கு தலைல பள்ளமே விழுந்துடுத்து! இவ, பிள்ளை வேணும்…ன்னு பாண்டுரங்கன்கிட்ட கேட்டாளோல்லியோ?…..அதான், கொழந்தையோட தலைலையும் பள்ளம் இருக்கு….செரியாப் போய்டும்”
தெய்வத்தின் அனுக்ரகத்தால் தெய்வத்திடம் பிள்ளைவரம் வேண்டி அத்தெய்வத்தின் சாயலாகவே பிறக்க அந்த குழந்தை என்ன பாக்யம் பண்ணியிருக்க வேண்டும்! அதை கருவில் சுமந்த தாய் எத்தனை பாக்யசாலி!
பெரியவா சொன்னபடி அந்த பழங்களை கஞ்சி மாதிரி பண்ணி, நாலு நாள் குடுத்ததும் ஊர் திரும்ப உத்தரவானது. ரயிலில் குழந்தையோடு கிளம்பி வரும்போது, குழந்தைக்கு உடை மாற்றும் போது, அதிசயமாக தலையில் இருந்த பள்ளம் மாயமாக மறைந்துவிட்டிருந்தது!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM