Post by radha on Jun 9, 2020 9:06:24 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
ஜூன் 05,2020,08:56 IST
ஜூன் 5 - காஞ்சிப்பெரியவர் பிறந்ததினம்
* தாய் அன்பே மேலானது. பசு உள்ளிட்ட உயிர்கள் எல்லாம் 'அம்மா' என்றே அழைக்கின்றன.
* நாளை என்பது நம் கையில் இல்லை. பொம்மலாட்ட பொம்மை போல எல்லா உயிர்களையும் கடவுளே இயக்குகிறார்.
* பிறர் பொருளை அபகரிக்காமல், மற்றவர் உழைப்பைச் சுரண்டாமல் உழைத்து வாழ வேண்டும்.
* மக்கள் செய்யும் பாவம் அனைத்தும் நாடாளும் மன்னரையே சேரும்.
* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறு உலகில் நம்முடன் வருவது ஒருவர் செய்த தர்மம் மட்டுமே.
* எதிலும் அலட்சிய எண்ணம் கூடாது. அப்படி செயல்பட்டால் அது பேராபத்தில் முடியும்.
* கடவுளை நினைத்து செய்யும் எந்தச் செயலும் கண்டிப்பாக நிறைவேறும்.
* ஒருவன் எந்நிலையிலும் கடவுளின் திருநாமம் ஜபிப்பதை லட்சியமாக கொள்ள வேண்டும்.
* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டால் பேராசை என்னும் படுகுழியில் விழ நேரிடும்.
* மனம் இடைவிடாமல் எதை நினைக்கிறதோ அதை கண்டிப்பாக அடைந்தே தீரும்.
* எடுத்துச் சொல்வதை விட அதன்படி வாழ்ந்து காட்டுவது மிக சக்தி வாய்ந்தது.
* அதிகமான பொருட்கள் இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கைத்தரம் உயர்வதில்லை. உண்மையான வாழ்க்கைத்தரம் என்பது மனநிறைவுடன் வாழ்வதே.
* அவசியமில்லாமல் கூடுதலாக சம்பாதிப்பதும், ஆடம்பரமாகச் செலவழிப்பதும், பூதம் காப்பது போல் பணத்தை வங்கியில் சேமிப்பதும் தவறான செயல்.
* பாவ சிந்தனைகளை போக்கிட தர்ம சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறரிடம் உள்ள குற்றங்களை பார்க்காமல் நற்குணங்களை மட்டுமே பார்க்கப் பழக வேண்டும்.
* தினமும் அரை மணி நேரமாவது தியானம் செய்வது அவசியம்.
* ஒருவரைப் புகழ்ந்து பேசுவதற்கும் கட்டுப்பாடு அவசியம். ஒரேடியாகப் புகழ்ந்தால் அகங்காரம் உண்டாகி விடும்.
* நேரத்தை வீணாக்குவது பொழுது போக்கல்ல; பிறருக்கு சேவை செய்வதே பயனுள்ள பொழுதுபோக்கு.
* எண்ணத்தால் துாய்மை பெறவே வழிபாடு செய்கிறோம். நாம் செய்யும் பூஜையால் கடவுளுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.
* மனதால் தான் துன்பம் உண்டாகிறது. ஆசைப்படாதே என மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல.
* பாவத்திற்கான தண்டனை, புண்ணியத்திற்கான நன்மை அதற்குரியவனை வந்தடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உருகுகிறார் காஞ்சிப்பெரியவர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
ஜூன் 05,2020,08:56 IST
ஜூன் 5 - காஞ்சிப்பெரியவர் பிறந்ததினம்
* தாய் அன்பே மேலானது. பசு உள்ளிட்ட உயிர்கள் எல்லாம் 'அம்மா' என்றே அழைக்கின்றன.
* நாளை என்பது நம் கையில் இல்லை. பொம்மலாட்ட பொம்மை போல எல்லா உயிர்களையும் கடவுளே இயக்குகிறார்.
* பிறர் பொருளை அபகரிக்காமல், மற்றவர் உழைப்பைச் சுரண்டாமல் உழைத்து வாழ வேண்டும்.
* மக்கள் செய்யும் பாவம் அனைத்தும் நாடாளும் மன்னரையே சேரும்.
* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறு உலகில் நம்முடன் வருவது ஒருவர் செய்த தர்மம் மட்டுமே.
* எதிலும் அலட்சிய எண்ணம் கூடாது. அப்படி செயல்பட்டால் அது பேராபத்தில் முடியும்.
* கடவுளை நினைத்து செய்யும் எந்தச் செயலும் கண்டிப்பாக நிறைவேறும்.
* ஒருவன் எந்நிலையிலும் கடவுளின் திருநாமம் ஜபிப்பதை லட்சியமாக கொள்ள வேண்டும்.
* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டால் பேராசை என்னும் படுகுழியில் விழ நேரிடும்.
* மனம் இடைவிடாமல் எதை நினைக்கிறதோ அதை கண்டிப்பாக அடைந்தே தீரும்.
* எடுத்துச் சொல்வதை விட அதன்படி வாழ்ந்து காட்டுவது மிக சக்தி வாய்ந்தது.
* அதிகமான பொருட்கள் இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கைத்தரம் உயர்வதில்லை. உண்மையான வாழ்க்கைத்தரம் என்பது மனநிறைவுடன் வாழ்வதே.
* அவசியமில்லாமல் கூடுதலாக சம்பாதிப்பதும், ஆடம்பரமாகச் செலவழிப்பதும், பூதம் காப்பது போல் பணத்தை வங்கியில் சேமிப்பதும் தவறான செயல்.
* பாவ சிந்தனைகளை போக்கிட தர்ம சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறரிடம் உள்ள குற்றங்களை பார்க்காமல் நற்குணங்களை மட்டுமே பார்க்கப் பழக வேண்டும்.
* தினமும் அரை மணி நேரமாவது தியானம் செய்வது அவசியம்.
* ஒருவரைப் புகழ்ந்து பேசுவதற்கும் கட்டுப்பாடு அவசியம். ஒரேடியாகப் புகழ்ந்தால் அகங்காரம் உண்டாகி விடும்.
* நேரத்தை வீணாக்குவது பொழுது போக்கல்ல; பிறருக்கு சேவை செய்வதே பயனுள்ள பொழுதுபோக்கு.
* எண்ணத்தால் துாய்மை பெறவே வழிபாடு செய்கிறோம். நாம் செய்யும் பூஜையால் கடவுளுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.
* மனதால் தான் துன்பம் உண்டாகிறது. ஆசைப்படாதே என மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல.
* பாவத்திற்கான தண்டனை, புண்ணியத்திற்கான நன்மை அதற்குரியவனை வந்தடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உருகுகிறார் காஞ்சிப்பெரியவர்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM