Post by radha on May 9, 2020 19:02:33 GMT 5.5
OM SRI GURUPNAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Varagooran Narayanan
நேற்று, முற்பகல் 7:13
மகானுக்கு சமர்ப்பிக்க,அவல் பொரி கொடுத்தனுப்பிய பக்தர்.
தரிசனம் கொடுத்த இடம் வினாயகர் சன்னதியாக மாற்றியும்.
தானே விருப்பப்பட்டு,ஆனந்தமும் கொடுத்த பெரியவா.
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகா பெரியவாளின் பக்தரான, திரு.சுப்பிரமணி அய்யருக்கு ஏற்பட்ட மகத்தான அனுபவம் இது, அல்லும் பகலும் சர்வேஸ்வரராகிய மகானைத் தியானித்தே காலத்தை கழிப்பவர் அந்த உத்தமர்
ஒரு தடவை, அவரது மாப்பிள்ளையும்,இரண்டு பெண்களும் மகானின் தரிசனத்திற்காகப் புறப்பட்டனர்.
பகவானிடம் சேர்ப்பிக்க, தினமும் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்ய வைத்திருந்த, அவல் மற்றும் நெல் பொரியை ஒரு பொட்டலமாகக் கட்டி, அதை அவர்களிடம் கொடுத்தனுப்பினார்
அவர்கள், அந்தப் பொட்டலத்தை,பக்தி சிரத்தை இல்லாமல் கீழே வைத்துவிட,வீட்டில் இருந்த குழந்தைகள் அதைத் தட்டிவிட, பொரியும், அவலும் கீழே சிதறிவிட்டன. போகும் அவசரத்தில், இவர்களும் அவைகளைத் திரட்டி எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்று விட்டனர்.
அவர்கள் சென்றபின் சுப்ரமணிய அய்யருக்கு விபரமே தெரிந்தது. அவரது மனம் துடித்தது. பூமியில் சிதறியதை எடுத்து சமர்ப்பிக்கப் போய்விட்டார்களே என்று நிலைகொள்ளாமல் தவித்தார். தனக்கே தெரியாமல் நேர்ந்து விட்ட தவறுக்காக, மகானிடம் மனம் வருந்தி, மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சர்வ வியாபியான கருணை வள்ளலுக்கு இது தெரியாமலா போகும்?.
தேனம்பாக்கத்தில் மகானைத் தரிசிக்க பெரும் கூட்டம். இந்தக் கூட்டத்தை மாப்பிள்ளையும், பெண்களும் எதிர்பார்க்கவே இல்லை.கும்பலின் ஒரு கோடியில் இவர்கள் நின்று கொண்டு இருந்தனர்,
அதேசமயம் மகா பெரியவா அன்று தரிசனம் கொடுத்த இடம், அங்குள்ள வினாயகர் சன்னதிக்கு முன்பாக அமைந்துவிட்டதன் நோக்கம், இவர்களுக்குப் புலப்பட நியாயமே இல்லை.
எல்லா பக்தர்களும் மகானுக்கு பழங்களும், இதரப் பொருள்களையும் வரிசையாகச் சமர்ப்பித்தனர்.தாங்கள் கொண்டு வந்த அவல் பொரியை, எப்படி அவர்முன் சமர்ப்பிப்பது எனத் தெரியாமல் தூரத்தே நின்றிருந்தனர்.
இந்தச் சமயத்தில் மகான் யாரும் எதிர்பார்க்காத வகையில், "கைத்தல நிறைகனி அப்பமுடவல் பொரி" என்கின்ற பாடல் வரிகளைக் எடுத்துக் கூற ஆரம்பித்தவர்;,
"பிள்ளையாருக்கு இங்கே பழங்கள் நிறைய வந்திருக்கு. அவல் பொரியை யாராவது கொண்டு வந்திருக்காளா?" என்று அவராகக் கேட்க, இது தூரத்தில் நின்று கொண்டிருந்த மாப்பிள்ளையின் காதில் தேனாகப் பாய்ந்தது.
அதனால் இவர்கள் முன்னேறி, தாங்கள் கொண்டு வந்திருந்த அந்தச் சிறிய பொட்டலத்தில் இருந்த அவல் பொரியை பகவான் முன் சமர்ப்பித்தனர்
தானே விருப்பப்பட்டு, இந்த ஆனந்தத்தை. தன் பக்தருக்கு கொடுக்க முனைந்த மகானின் கருணை உள்ளத்தை, உண்மையில் விவரிக்க வார்த்தைகளே இல்லை.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Varagooran Narayanan
நேற்று, முற்பகல் 7:13
மகானுக்கு சமர்ப்பிக்க,அவல் பொரி கொடுத்தனுப்பிய பக்தர்.
தரிசனம் கொடுத்த இடம் வினாயகர் சன்னதியாக மாற்றியும்.
தானே விருப்பப்பட்டு,ஆனந்தமும் கொடுத்த பெரியவா.
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகா பெரியவாளின் பக்தரான, திரு.சுப்பிரமணி அய்யருக்கு ஏற்பட்ட மகத்தான அனுபவம் இது, அல்லும் பகலும் சர்வேஸ்வரராகிய மகானைத் தியானித்தே காலத்தை கழிப்பவர் அந்த உத்தமர்
ஒரு தடவை, அவரது மாப்பிள்ளையும்,இரண்டு பெண்களும் மகானின் தரிசனத்திற்காகப் புறப்பட்டனர்.
பகவானிடம் சேர்ப்பிக்க, தினமும் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்ய வைத்திருந்த, அவல் மற்றும் நெல் பொரியை ஒரு பொட்டலமாகக் கட்டி, அதை அவர்களிடம் கொடுத்தனுப்பினார்
அவர்கள், அந்தப் பொட்டலத்தை,பக்தி சிரத்தை இல்லாமல் கீழே வைத்துவிட,வீட்டில் இருந்த குழந்தைகள் அதைத் தட்டிவிட, பொரியும், அவலும் கீழே சிதறிவிட்டன. போகும் அவசரத்தில், இவர்களும் அவைகளைத் திரட்டி எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்று விட்டனர்.
அவர்கள் சென்றபின் சுப்ரமணிய அய்யருக்கு விபரமே தெரிந்தது. அவரது மனம் துடித்தது. பூமியில் சிதறியதை எடுத்து சமர்ப்பிக்கப் போய்விட்டார்களே என்று நிலைகொள்ளாமல் தவித்தார். தனக்கே தெரியாமல் நேர்ந்து விட்ட தவறுக்காக, மகானிடம் மனம் வருந்தி, மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சர்வ வியாபியான கருணை வள்ளலுக்கு இது தெரியாமலா போகும்?.
தேனம்பாக்கத்தில் மகானைத் தரிசிக்க பெரும் கூட்டம். இந்தக் கூட்டத்தை மாப்பிள்ளையும், பெண்களும் எதிர்பார்க்கவே இல்லை.கும்பலின் ஒரு கோடியில் இவர்கள் நின்று கொண்டு இருந்தனர்,
அதேசமயம் மகா பெரியவா அன்று தரிசனம் கொடுத்த இடம், அங்குள்ள வினாயகர் சன்னதிக்கு முன்பாக அமைந்துவிட்டதன் நோக்கம், இவர்களுக்குப் புலப்பட நியாயமே இல்லை.
எல்லா பக்தர்களும் மகானுக்கு பழங்களும், இதரப் பொருள்களையும் வரிசையாகச் சமர்ப்பித்தனர்.தாங்கள் கொண்டு வந்த அவல் பொரியை, எப்படி அவர்முன் சமர்ப்பிப்பது எனத் தெரியாமல் தூரத்தே நின்றிருந்தனர்.
இந்தச் சமயத்தில் மகான் யாரும் எதிர்பார்க்காத வகையில், "கைத்தல நிறைகனி அப்பமுடவல் பொரி" என்கின்ற பாடல் வரிகளைக் எடுத்துக் கூற ஆரம்பித்தவர்;,
"பிள்ளையாருக்கு இங்கே பழங்கள் நிறைய வந்திருக்கு. அவல் பொரியை யாராவது கொண்டு வந்திருக்காளா?" என்று அவராகக் கேட்க, இது தூரத்தில் நின்று கொண்டிருந்த மாப்பிள்ளையின் காதில் தேனாகப் பாய்ந்தது.
அதனால் இவர்கள் முன்னேறி, தாங்கள் கொண்டு வந்திருந்த அந்தச் சிறிய பொட்டலத்தில் இருந்த அவல் பொரியை பகவான் முன் சமர்ப்பித்தனர்
தானே விருப்பப்பட்டு, இந்த ஆனந்தத்தை. தன் பக்தருக்கு கொடுக்க முனைந்த மகானின் கருணை உள்ளத்தை, உண்மையில் விவரிக்க வார்த்தைகளே இல்லை.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM