|
Post by varagooran on May 2, 2020 14:30:46 GMT 5.5
பெரியவா பாதுகாத்த 'அவமானம்'
சங்கிலியை திருடியவளுக்கும், பறி கொடுத்தவளுக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி
ஒரு சிறு பதிவு.
கட்டுரையாளர்-எஸ்.பஞ்சாபகேச சாஸ்திரிகள்
தொகுத்தவர்-டி.எஸ். கோதண்டராம சர்மா
தட்டச்சு- வரகூரான் நாராயணன்.
ஸ்ரீ பெரியவா ஒரு ஸமயம் சென்னை விஜயம் செய்தபொழுது, ஸ்ரீ பெரியவாளின் பூஜையை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
ஒரு பெண் தன் குழந்தையுடன் வந்திருந்தாள். அந்தக் குழந்தையின் கழுத்தில் இருந்த சங்கிலியை யாரோ திருடிவிட்டார்கள்.. எவ்வளவு முயற்சி செய்தும் சங்கிலி கிடைக்கவில்லை.அதை இழந்த பெண்ணிற்கு அதிக வருத்தம் ஏற்பட்டது.
பூஜை முடிந்து தீர்த்தம் வழங்கும் பொழுது, ஒவ்வொருவராக 'க்யூ'வில் வந்தனர்.சங்கிலியை இழந்த பெண்ணும் வந்தாள். அவளுக்கு முன்னதாக ஒரு பெண் தீர்த்தத்திற்காக கை நீட்டினாள்.
ஸ்ரீ பெரியவா அப்பெண்ணைப் பார்த்து, "உன் இடுப்பில் ஒளித்து வைத்துள்ள சங்கிலியை, பின்னால் வருபவளிடம் கொடு. பிறகு உனக்கு தீர்த்தம்" என்றார்.
திருடிய பெண்ணால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. சங்கிலியைக் கொடுத்து விட்டாள்.
இது சிலருக்குத்தான் தெரியும். இதனால் திருடியவளுக்கு ஏற்பட்ட அவமானம் பலருக்குத் தெரியாமல் போயிற்று.
தனக்கு நேர இருந்த பெரிய அவமானத்தில் இருந்து, "ஸ்ரீ பெரியவா பாதுகாத்தார்கள்" என்று திருடியவருக்கும் ஒரு நிம்மதி, சங்கிலியைப் பறிகொடுத்தவருக்கும், அது திரும்பக் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சி.
இருவரும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்றனர்.
|
|
|
Post by padhu on May 3, 2020 21:05:12 GMT 5.5
Mahaperiyavar evvalu easy karyaththai mudiththu vittar.
|
|
|
Post by padhu on May 3, 2020 21:05:38 GMT 5.5
Mahaperiyavar evvalu easy karyaththai mudiththu vittar.
|
|