Post by radha on Apr 27, 2020 19:47:19 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
சிவ பித்தன்
9 小时 ·
துளசி மஹிமை !
ஒரு கிராமத்து விவசாயி வனத்தில் மாட்டுக்குப் புல்லுக்காக செல்லும் போது சில துளசிச் செடிகளை கண்டான். அவைகளின் வாசனையில் மயங்கி சில செடிகளை அப்புல்லோடு சேர்த்துக் கட்டிதலையில் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பும் போது அவன் ஆயுள் முடியும் நேரம் நெருங்கிக் வந்தது.. ஒரு குட்டி சர்ப்பம் அவன் தலையில் இருந்த புற்கட்டில் ஒளிந்து கொல்லக் காத்து இருந்தது.. விவசாயிக்குத் அது தெரியாது. அவன் தலையில் துளசிச் செடி இருந்ததால் அந்தப் பாம்பு அவனைத் தீண்ட சக்தி அற்றதாகி விட்டது..
கிராமத்தில் சிறந்த தவ வலிமை உள்ள ஞானி ஒருவர் வசித்து வந்தார்.. அவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவைத் துளசி இலையினால் பக்தியுடன் தினம் பூஜித்து வந்தார். ஞான திருஷ்டியினால் புல்லுக் கட்டை சுமந்து செல்லும் விவசாயியின் பின்னால் யம தூதர்கள் தொடர்வதைக் கண்டு அவர்களிடம் காரணம் என்னவென்று கேட்டார்.. அவர் கண்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த யம தூதர்கள், 'ஹே .. முனிவரே.. விவசாயின் ஆயுட்காலம் முடிந்து விட்டது.. சர்ப்பத்தை விட்டு உயிரைப் பிடிக்க வந்து இருக்கிறோம்.. விவசாயியோ துளசியைத் தலையில் வைத்து இருக்கிறானே. அதைக் கீழே வைக்கும் வரைக் காத்திருப்போம்' .. என்றனர்..
துறவி விவசாயியைக் காப்பாற்ற என்ன செய்வதென்று யோசித்தார்.. யம தூதர்களிடமே எப்படி அவனைக் காப்பற்றலாம் என்று கேட்டார்.. அவர்கள், ' முனிவரே. நீங்கள் இதுவரைக்கும் துளசி தளங்களால் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ மகாவிஷ்ணுவை அர்ச்சித்துப் பூஜை செய்து பெற்ற புண்ணிய பலன்களை விவசாயிக்குக் கொடுத்தால் அவன் உயிரை எடுத்துச் செல்ல மாட்டோம்'.. என உறுதி மொழி பகன்றனர்.. முனிவர் மகிழ்வுடன் தான் பெற்ற புண்ணியங்கள் அனைத்தையும் அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். விவசாயி பிழைத்தான் என துளசி புராணம் கூறுகிறது..
துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள்.துளசியின் அடிப்பாகத்தில் சிவபெருமானும் மத்தியில் மகாவிஷ்ணுவும் நுனியில் பிரம்ம தேவரும் வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பன்னிரு ஆதித்யர்கள், ஏகாதச ருத்ரர்கள், அஷ்டவசுக்கள் மற்றும் அசுவினி தேவர்கள் ஆகியோர்களும் துளசியில் வாசம் செய்வதாக ஐதீகம்.
பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும் நலமுடன் வாழ தினமும் துளசிமாடத்திற்கு முன்போ அல்லது துளசிச் செடிக்கு முன்போ, கோலமிட்டு, விளக்கேற்றி சுத்தமான நீரை வேரில் ஊற்றி சந்தனம், குங்குமம் புஷ்பத்தால் அலங்கரித்து அர்ச்சித்து, தூபதீப, நிவேத்தியம் காட்டி கற்பூர ஆரத்தி எடுத்து மும்முறை வலம் வந்து வணங்கினால் சுகமான வாழ்வு கிட்டும்.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான , எல்லா வகையிலும் புனிதமான, துளசி தேவியை சாதாரணமாக தொடுவதாலும், பார்ப்பதாலும், உணரப்படுவதாலும், துளசியின் மண்ணை வணங்குவதாலும், துளசியைப் பற்றி கேட்டபதாலும், வளர்ப்பதாலும், நம் பாவங்கள் நீங்கப் பெற்று புனிதம் அடைவோம்..
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம் . !
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
சிவ பித்தன்
9 小时 ·
துளசி மஹிமை !
ஒரு கிராமத்து விவசாயி வனத்தில் மாட்டுக்குப் புல்லுக்காக செல்லும் போது சில துளசிச் செடிகளை கண்டான். அவைகளின் வாசனையில் மயங்கி சில செடிகளை அப்புல்லோடு சேர்த்துக் கட்டிதலையில் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பும் போது அவன் ஆயுள் முடியும் நேரம் நெருங்கிக் வந்தது.. ஒரு குட்டி சர்ப்பம் அவன் தலையில் இருந்த புற்கட்டில் ஒளிந்து கொல்லக் காத்து இருந்தது.. விவசாயிக்குத் அது தெரியாது. அவன் தலையில் துளசிச் செடி இருந்ததால் அந்தப் பாம்பு அவனைத் தீண்ட சக்தி அற்றதாகி விட்டது..
கிராமத்தில் சிறந்த தவ வலிமை உள்ள ஞானி ஒருவர் வசித்து வந்தார்.. அவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவைத் துளசி இலையினால் பக்தியுடன் தினம் பூஜித்து வந்தார். ஞான திருஷ்டியினால் புல்லுக் கட்டை சுமந்து செல்லும் விவசாயியின் பின்னால் யம தூதர்கள் தொடர்வதைக் கண்டு அவர்களிடம் காரணம் என்னவென்று கேட்டார்.. அவர் கண்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த யம தூதர்கள், 'ஹே .. முனிவரே.. விவசாயின் ஆயுட்காலம் முடிந்து விட்டது.. சர்ப்பத்தை விட்டு உயிரைப் பிடிக்க வந்து இருக்கிறோம்.. விவசாயியோ துளசியைத் தலையில் வைத்து இருக்கிறானே. அதைக் கீழே வைக்கும் வரைக் காத்திருப்போம்' .. என்றனர்..
துறவி விவசாயியைக் காப்பாற்ற என்ன செய்வதென்று யோசித்தார்.. யம தூதர்களிடமே எப்படி அவனைக் காப்பற்றலாம் என்று கேட்டார்.. அவர்கள், ' முனிவரே. நீங்கள் இதுவரைக்கும் துளசி தளங்களால் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ மகாவிஷ்ணுவை அர்ச்சித்துப் பூஜை செய்து பெற்ற புண்ணிய பலன்களை விவசாயிக்குக் கொடுத்தால் அவன் உயிரை எடுத்துச் செல்ல மாட்டோம்'.. என உறுதி மொழி பகன்றனர்.. முனிவர் மகிழ்வுடன் தான் பெற்ற புண்ணியங்கள் அனைத்தையும் அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். விவசாயி பிழைத்தான் என துளசி புராணம் கூறுகிறது..
துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள்.துளசியின் அடிப்பாகத்தில் சிவபெருமானும் மத்தியில் மகாவிஷ்ணுவும் நுனியில் பிரம்ம தேவரும் வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பன்னிரு ஆதித்யர்கள், ஏகாதச ருத்ரர்கள், அஷ்டவசுக்கள் மற்றும் அசுவினி தேவர்கள் ஆகியோர்களும் துளசியில் வாசம் செய்வதாக ஐதீகம்.
பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும் நலமுடன் வாழ தினமும் துளசிமாடத்திற்கு முன்போ அல்லது துளசிச் செடிக்கு முன்போ, கோலமிட்டு, விளக்கேற்றி சுத்தமான நீரை வேரில் ஊற்றி சந்தனம், குங்குமம் புஷ்பத்தால் அலங்கரித்து அர்ச்சித்து, தூபதீப, நிவேத்தியம் காட்டி கற்பூர ஆரத்தி எடுத்து மும்முறை வலம் வந்து வணங்கினால் சுகமான வாழ்வு கிட்டும்.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான , எல்லா வகையிலும் புனிதமான, துளசி தேவியை சாதாரணமாக தொடுவதாலும், பார்ப்பதாலும், உணரப்படுவதாலும், துளசியின் மண்ணை வணங்குவதாலும், துளசியைப் பற்றி கேட்டபதாலும், வளர்ப்பதாலும், நம் பாவங்கள் நீங்கப் பெற்று புனிதம் அடைவோம்..
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம் . !
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM