WHAT ARE TWO EYES OF HINDUS ?1.RAMAYANAM 2. MAHA BHARATHAM
Apr 22, 2020 20:48:43 GMT 5.5
sudhan likes this
Post by radha on Apr 22, 2020 20:48:43 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
அத்யாத்ம ராமாயணம் உத்தர காண்டம் ஸர்கம் 3
ஹிந்துக்களின் இரு கண்கள் எது?
பட்டென்று பதில் சொல்வார்கள் நம் முன்னோர்கள் -- ராமாயணமும் மகாபாரதமும் என்று.
அன்றாட வேலை முடிந்து ஒவ்வொரு நாளும் சாயந்திரம் திண்ணையில் அரிக்கேன் விளக்கில், தெருவில் சுளுந்து, தீவட்டி வெளிச்சத்தில் கூட்டமாக அமர்ந்து ராமாயணம் மஹா பாரதம் நிகழ்ச்சிகள் பேசப்பட்டும், நடிக்கப்பட்டும் நாட்டியமாடப் பட்டும் வந்த பொற்காலம் அது. தெருக்கூத்து என்பது எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி அப்போது.
ராமாயணம் மஹா பாரதம் இரண்டுமே ஒன்றை ஒன்று மிஞ்சும் இரு அற்புத காவியங்கள். காலத்தால் அழியாதவை.
இறைவனை நம்மோடு பிணைப்பவை. கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க, அலுக்காத, சலிக்காத, என்றும் சுவை கூடிக் கொண்டே போகும் இனிய விருந்து.
''பார்வதி, இன்று மேலும் அகஸ்தியர் ராமருக்குச் சொன்னதை உனக்குக் கூறுகிறேன்'' என்று கைலாயத்தில் பரமேஸ்வரன் துவங்கினார்.
ராமர் ஒரு சாதாரணன் போலே அகஸ்தியரைப் பார்த்து ''ஏன் முனிவரே, சூரியனும் இந்திரனும் தான் வாலி சுக்ரீவனாக அவதரித்தவர்கள் என்பது உண்மையா?'' என கேட்கிறார்.
''ராமா, மேரு பர்வதத்தில் நூறு யோசனை அகலத்தில் பிரம்மாவின் சபா மண்டபம் உள்ளது. ஒரு முறை பிரம்மா அங்கு அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தபோது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி அதன் ஒரு துளி அவர் கையில் விழுந்து கீழேயும் சிதறியது..
அடுத்த கணமே அது ஒரு பெரிய வானரமானது. அவரை வணங்கியது. ரிக்ஷராஜன் என்று பெயர் பெற்றது.'' என்னுடனேயே சில காலம் இரு'' என்றார்.
ஒருநாள் அந்த பர்வதத்தில் கனி காய் கிழங்குகளைத் தேடி ரிக்ஷ ராஜன் அலையும்போது ஒரு தடாகம் அதன் கண்ணில் பட்டது.
தாகம் தீர்க்க அதன் அருகில் சென்றபோது தெளிந்த நீரில் தன் உருவம் தெரிந்ததை வேறு ஒரு வானரம் என்று கருதி நீரில் குதித்தது. என்ன ஆச்சர்யம்? நீரில் இப்போது மற்றொரு வானரம் தெரியவில்லை ஆனால் நீரை விட்டு வெளியேறிய ரிக்ஷ ராஜன் ஒரு அழகிய பெண்ணாக மாறியிருந்தது.
அந்த வழியாக இந்திரன் வழக்கம் போல் பிரம்மாவுக்கு பூஜை செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த வனை அந்தப் பெண் வணங்கி தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டி அவன் மூலம் பிறந்தவன் வாலி. இதே போல் சூரியனையும் வேண்டி சுக்ரீவன் அவள் மகனானான்.
இரண்டு புதல்வர்களுடன் ரிக்ஷராஜன் மீண்டும் பழைய வானர ரூபம் பெற்று பிரம்மாவை வணங்க அவர் விஸ்வ கர்மாவினால் படைக்கப்பட்ட கிஷ்கிந்தைக்கு அவர்களை அனுப்பினார். சப்த த்வீபங்களிலும் இருந்து வானரர்கள் அங்கே குடியேறுவார்கள்.
''உன் மகனை அந்த திவ்ய நகரத்தின் அரசனாக பட்டாபிஷேகம் செய். த்ரேதா யுகத்தில் ஸ்ரீ நாராயணன் அங்கு மானிட அவதாரம் கொண்டு பிரவேசம் செய்யும்போது வானரர்களின் சேவையை ஏற்றுக்கொள்வார்.'' என்றார் பிரம்மா.
''ஸ்ரீ ராமா, வாலி சுக்ரீவர்களின் விருத்தாந்தம் சொன்னதைத் தொடர்ந்து இன்னொரு கதையும் சொல்கிறேன் கேள்'' என்று அகஸ்தியர் ராமனுக்கு மேலும் சுவையான ஒரு சம்பவத்தை நினைவூட்டினார்.
''முன்னொரு காலத்தில், க்ருத யுகத்தில், பிரம்மாவின் மானச புத்ரர் சனத்குமாரர் தவத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கும்போது அவர் எதிரே ராவணன் வந்து நின்றான். அடக்கத்தோடு வணங்கி நின்றான்.
''ரிஷி ஸ்ரேஷ்டரே, உலகில் தேவர்களைக் காட்டிலும் யாருக்கு பலம் அதிகம்? எப்படி தேவர்கள் யுத்தத்தில் எதிரிகளை வெல்ல முடிகிறது? அந்தணர்கள் யாரை அனுதினமும் வணங்குகிறார்கள்? யோகிகள் யாரை தியானம் செய்கிறார்கள்?'' என்று விளக்கம் கேட்டான்.
அவன் மனதில் தோன்றியவைகளை ஞானதிருஷ்டியால் உணர்ந்துகொண்ட சனத் குமாரர், ''ராவணா, எக்காலத்திலுமே, சர்வ ரக்ஷகன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே சகலராலும் வணங்கப் படுபவர்.''
''முனிவரே, விஷ்ணு சர்வ வல்லமை பொருந்தியவர் என்கிறீர்களே, அவரால் கொல்லப்படும் அசுரர்கள், தானவர், ராக்ஷசர்கள் எந்த உலகம் அடைகிறார்கள்?''
''சாதாரண தேவதைகளால் மரணம் எய்துபவர் சுவர்க்கத்தை அடைவர். புண்ணிய பலன் குறைந்தபின் புண்ய பாவ பலன்களுக்கு ஏற்ப மீண்டும் மண்ணுலகில் பிறந்து மடிவார்கள். விஷ்ணுவால் மரணம் அடைபவர்கள் மறு பிரவியின்றி விஷ்ணுவின் பரம பதத்தையே அடைவார்கள் ''
எதிர்பார்த்த விஷயம் அறிந்துகொண்ட ராவணன் தனக்குள் ''விஷ்ணுவோடு யுத்தம் செய்வேன்'' என்று தீர்மானித்தான்.
அவன் மனம் அறிந்த சனத்குமாரர் ''ராவணா, உன் எண்ணம் விரைவில் நிறைவேறும், விஷ்ணு உருவற்றவர். அதே சமயம் மாயையால் நாம் காணும் வேறு வேறு வஸ்துக்கள், ஜீவராசிகளிலும் உள்ளிருப்பவர். காணும் யாவும், யாரும், அவரே. அவரை உணர்பவர்களால் மட்டுமே அறியப்படுபவர்.
எவர் உள்ளும் புறமும் அந்த நாராயணனுக்கே அர்ப்பணித்து சரணடைகிறார்களோ, மனதில் அவர் சிந்தனையை நிரப்பி மாசு நீங்கப் பெற்று, பக்தியுடன் அணுகுகிறார்களோ, அவரிடம் காண்பவர் தான் அந்த நாராயணன்.த்ரேதா யுகத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில் தசரத புத்ரனாக அவதரிப்பார்'' என்றார் முனிவர்.
++
அகஸ்தியர் ''ஸ்ரீ ராமா, உன்னோடு யுத்தம் பெரிய தீர்மானித்த ராவணன் தன்னை அதற்கு தக்கவாறு பலப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான். அந்த எண்ணத்தோடு தான் சீதையைக் கவர்ந்து சென்றான்''
++
''எதையுமே நீட்டி சொல்வதை பூலோகத்தில் ''என்ன பெரிய ராமாயணம் சொல்கிறாய் '' என்கிறார்கள். ஆனால் நீண்ட ராமாயணத்தையே நீங்கள் சுருக்கமாக அழகாக எதையும் விடாமல் சொல்வது மிக்க சந்தோஷத்தையும் மனதுக்கு பலத்தையும் தருகிறது என்பதும் அந்த ராமனின் அருளே என்பதில் சந்தேகமில்லை'' என்ற பர்வத வர்த்தனியின் பேச்சில் நியாயம் இருக்கிறதே.
என்னால் முடிந்த அளவு சுவை குன்றாமல் நானும் சுருக்கித்தானே தருகிறேன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
அத்யாத்ம ராமாயணம் உத்தர காண்டம் ஸர்கம் 3
ஹிந்துக்களின் இரு கண்கள் எது?
பட்டென்று பதில் சொல்வார்கள் நம் முன்னோர்கள் -- ராமாயணமும் மகாபாரதமும் என்று.
அன்றாட வேலை முடிந்து ஒவ்வொரு நாளும் சாயந்திரம் திண்ணையில் அரிக்கேன் விளக்கில், தெருவில் சுளுந்து, தீவட்டி வெளிச்சத்தில் கூட்டமாக அமர்ந்து ராமாயணம் மஹா பாரதம் நிகழ்ச்சிகள் பேசப்பட்டும், நடிக்கப்பட்டும் நாட்டியமாடப் பட்டும் வந்த பொற்காலம் அது. தெருக்கூத்து என்பது எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி அப்போது.
ராமாயணம் மஹா பாரதம் இரண்டுமே ஒன்றை ஒன்று மிஞ்சும் இரு அற்புத காவியங்கள். காலத்தால் அழியாதவை.
இறைவனை நம்மோடு பிணைப்பவை. கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க, அலுக்காத, சலிக்காத, என்றும் சுவை கூடிக் கொண்டே போகும் இனிய விருந்து.
''பார்வதி, இன்று மேலும் அகஸ்தியர் ராமருக்குச் சொன்னதை உனக்குக் கூறுகிறேன்'' என்று கைலாயத்தில் பரமேஸ்வரன் துவங்கினார்.
ராமர் ஒரு சாதாரணன் போலே அகஸ்தியரைப் பார்த்து ''ஏன் முனிவரே, சூரியனும் இந்திரனும் தான் வாலி சுக்ரீவனாக அவதரித்தவர்கள் என்பது உண்மையா?'' என கேட்கிறார்.
''ராமா, மேரு பர்வதத்தில் நூறு யோசனை அகலத்தில் பிரம்மாவின் சபா மண்டபம் உள்ளது. ஒரு முறை பிரம்மா அங்கு அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தபோது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி அதன் ஒரு துளி அவர் கையில் விழுந்து கீழேயும் சிதறியது..
அடுத்த கணமே அது ஒரு பெரிய வானரமானது. அவரை வணங்கியது. ரிக்ஷராஜன் என்று பெயர் பெற்றது.'' என்னுடனேயே சில காலம் இரு'' என்றார்.
ஒருநாள் அந்த பர்வதத்தில் கனி காய் கிழங்குகளைத் தேடி ரிக்ஷ ராஜன் அலையும்போது ஒரு தடாகம் அதன் கண்ணில் பட்டது.
தாகம் தீர்க்க அதன் அருகில் சென்றபோது தெளிந்த நீரில் தன் உருவம் தெரிந்ததை வேறு ஒரு வானரம் என்று கருதி நீரில் குதித்தது. என்ன ஆச்சர்யம்? நீரில் இப்போது மற்றொரு வானரம் தெரியவில்லை ஆனால் நீரை விட்டு வெளியேறிய ரிக்ஷ ராஜன் ஒரு அழகிய பெண்ணாக மாறியிருந்தது.
அந்த வழியாக இந்திரன் வழக்கம் போல் பிரம்மாவுக்கு பூஜை செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த வனை அந்தப் பெண் வணங்கி தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டி அவன் மூலம் பிறந்தவன் வாலி. இதே போல் சூரியனையும் வேண்டி சுக்ரீவன் அவள் மகனானான்.
இரண்டு புதல்வர்களுடன் ரிக்ஷராஜன் மீண்டும் பழைய வானர ரூபம் பெற்று பிரம்மாவை வணங்க அவர் விஸ்வ கர்மாவினால் படைக்கப்பட்ட கிஷ்கிந்தைக்கு அவர்களை அனுப்பினார். சப்த த்வீபங்களிலும் இருந்து வானரர்கள் அங்கே குடியேறுவார்கள்.
''உன் மகனை அந்த திவ்ய நகரத்தின் அரசனாக பட்டாபிஷேகம் செய். த்ரேதா யுகத்தில் ஸ்ரீ நாராயணன் அங்கு மானிட அவதாரம் கொண்டு பிரவேசம் செய்யும்போது வானரர்களின் சேவையை ஏற்றுக்கொள்வார்.'' என்றார் பிரம்மா.
''ஸ்ரீ ராமா, வாலி சுக்ரீவர்களின் விருத்தாந்தம் சொன்னதைத் தொடர்ந்து இன்னொரு கதையும் சொல்கிறேன் கேள்'' என்று அகஸ்தியர் ராமனுக்கு மேலும் சுவையான ஒரு சம்பவத்தை நினைவூட்டினார்.
''முன்னொரு காலத்தில், க்ருத யுகத்தில், பிரம்மாவின் மானச புத்ரர் சனத்குமாரர் தவத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கும்போது அவர் எதிரே ராவணன் வந்து நின்றான். அடக்கத்தோடு வணங்கி நின்றான்.
''ரிஷி ஸ்ரேஷ்டரே, உலகில் தேவர்களைக் காட்டிலும் யாருக்கு பலம் அதிகம்? எப்படி தேவர்கள் யுத்தத்தில் எதிரிகளை வெல்ல முடிகிறது? அந்தணர்கள் யாரை அனுதினமும் வணங்குகிறார்கள்? யோகிகள் யாரை தியானம் செய்கிறார்கள்?'' என்று விளக்கம் கேட்டான்.
அவன் மனதில் தோன்றியவைகளை ஞானதிருஷ்டியால் உணர்ந்துகொண்ட சனத் குமாரர், ''ராவணா, எக்காலத்திலுமே, சர்வ ரக்ஷகன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே சகலராலும் வணங்கப் படுபவர்.''
''முனிவரே, விஷ்ணு சர்வ வல்லமை பொருந்தியவர் என்கிறீர்களே, அவரால் கொல்லப்படும் அசுரர்கள், தானவர், ராக்ஷசர்கள் எந்த உலகம் அடைகிறார்கள்?''
''சாதாரண தேவதைகளால் மரணம் எய்துபவர் சுவர்க்கத்தை அடைவர். புண்ணிய பலன் குறைந்தபின் புண்ய பாவ பலன்களுக்கு ஏற்ப மீண்டும் மண்ணுலகில் பிறந்து மடிவார்கள். விஷ்ணுவால் மரணம் அடைபவர்கள் மறு பிரவியின்றி விஷ்ணுவின் பரம பதத்தையே அடைவார்கள் ''
எதிர்பார்த்த விஷயம் அறிந்துகொண்ட ராவணன் தனக்குள் ''விஷ்ணுவோடு யுத்தம் செய்வேன்'' என்று தீர்மானித்தான்.
அவன் மனம் அறிந்த சனத்குமாரர் ''ராவணா, உன் எண்ணம் விரைவில் நிறைவேறும், விஷ்ணு உருவற்றவர். அதே சமயம் மாயையால் நாம் காணும் வேறு வேறு வஸ்துக்கள், ஜீவராசிகளிலும் உள்ளிருப்பவர். காணும் யாவும், யாரும், அவரே. அவரை உணர்பவர்களால் மட்டுமே அறியப்படுபவர்.
எவர் உள்ளும் புறமும் அந்த நாராயணனுக்கே அர்ப்பணித்து சரணடைகிறார்களோ, மனதில் அவர் சிந்தனையை நிரப்பி மாசு நீங்கப் பெற்று, பக்தியுடன் அணுகுகிறார்களோ, அவரிடம் காண்பவர் தான் அந்த நாராயணன்.த்ரேதா யுகத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில் தசரத புத்ரனாக அவதரிப்பார்'' என்றார் முனிவர்.
++
அகஸ்தியர் ''ஸ்ரீ ராமா, உன்னோடு யுத்தம் பெரிய தீர்மானித்த ராவணன் தன்னை அதற்கு தக்கவாறு பலப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான். அந்த எண்ணத்தோடு தான் சீதையைக் கவர்ந்து சென்றான்''
++
''எதையுமே நீட்டி சொல்வதை பூலோகத்தில் ''என்ன பெரிய ராமாயணம் சொல்கிறாய் '' என்கிறார்கள். ஆனால் நீண்ட ராமாயணத்தையே நீங்கள் சுருக்கமாக அழகாக எதையும் விடாமல் சொல்வது மிக்க சந்தோஷத்தையும் மனதுக்கு பலத்தையும் தருகிறது என்பதும் அந்த ராமனின் அருளே என்பதில் சந்தேகமில்லை'' என்ற பர்வத வர்த்தனியின் பேச்சில் நியாயம் இருக்கிறதே.
என்னால் முடிந்த அளவு சுவை குன்றாமல் நானும் சுருக்கித்தானே தருகிறேன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM