சுப்ரமண்ய சாமியின் கச்சத்தீவு வழக்கும், காஞ்சிப் பெரியவாளும்
Apr 21, 2020 15:16:30 GMT 5.5
sudhan likes this
Post by varagooran on Apr 21, 2020 15:16:30 GMT 5.5
சுப்ரமண்ய சாமியின் கச்சத்தீவு வழக்கும், காஞ்சிப் பெரியவாளும்
(ஆச்சரிய தீர்ப்பு கொடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி)
(பேரருள், சட்டத்தை மீறாத பேரருள், எதை வேண்டுமானாலும் சாதித்துக் காட்டும்)
கட்டுரையாளர்-டாக்டர் சுப்ரமணியன் சுவாமி
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
1987, கச்சத்தீவுக்குச் சென்று, இந்திய மீனவர்களின் உரிமையை நிலை நாட்டத் திட்டமிட்டேன்.
மதுரையிலேயே என்னைத் தடுத்து நிறுத்தி விட்டது,காவல்துறை."நீங்கள் சென்னைக்குத் திரும்பிப் போவதாக இருந்தால், விடுதலை செய்கிறோம். கச்சத் தீவுக்குத் தான் போவேன் என்று அடம் பிடித்தால் அரெஸ்டில் இருக்கவேண்டியது தான்!" என்று காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
வேறு வழி தெரியாமல், சென்னைக்குத் திரும்பிப் போக ஒப்புக்கொண்டேன்.
எனக்கு அவமானமாக இருந்தது; ஏக்கமாகவும் இருந்தது.
காஞ்சிபுரம் சென்று, ஏறக்குறைய அழுகுரலில் பெரியவாளிடம் முறையிட்டேன்.
என் அசட்டுத்தனத்தைக் கண்டு, பெரியவாளுக்கு இரக்கம் கலந்த புன்னகை வந்தது.
"நீ டில்லிக்குப் போய் சுப்ரீம் கோர்ட்டில், உன்னைக் கைது செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய். நீ கச்சத்தீவு போவதற்கு, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துதர வேண்டும் என்றும் கோரிக்கை கொடு.."
புதுடில்லி வந்தேன். என் மனைவியே,உச்சநீதி மன்ற வக்கீல்தான். நான் சொன்னதைக் கேட்டுவிட்டு என் அறியாமையின் மேல் பரிதாபம் கொண்டு, இடி இடியென்று சிரித்தாள்.
"முதலில், மதுரை மாஜிஸ்டிரேட் கோர்ட்; அடுத்தது, செஷன்ஸ்,உயர்நீதிமன்றம்..கடைசியாகத்தான் சுப்ரீம் கோர்ட்"--"உங்கள் மனுவை நான் தாக்கல் செய்யமாட்டேன்!. செய்தால், எல்லோரும் என்னைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிப்பார்கள்"---இது மனைவி.
"மனுவை எழுதிக் கொடு, உச்சநீதி மன்றத்தில் நானே நேரில் வாதாடிக் கொள்கிறேன்.."இது ஸ்வாமி.
உச்சநீதி மன்றத்தில் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல் எல்லோரும் பார்த்தார்கள்.சட்டத்தின் அடிப்படை கூடத்தெரியாத என்னை, உச்சநீதி மன்றம், உச்சந்தலையில் குட்டப்போகிறது என்று ஆருடம் சொன்னார்கள்.
என் வழக்கு விசாரணைக்கு வந்தது.
'இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தலைமை நீதிபதியிடமிருந்து தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு அரசின் வக்கீலாக இருந்த குல்தீப்சிங் அவர்களிடம்,
"மனுதாரரை, தமிழ்நாடு அரசு ஏன் கைது செய்தது?" என்ற கேள்விக் குண்டை தூக்கிப்போட்டார், தலைமை நீதிபதி வேங்கடராமையா!.
குல்தீப்சிங் தடுமாறிப் போய்விட்டார்."தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் சிலர்,மனுதாரரின் உயிரைக் குறி வைத்திருந்தார்கள். அதனால், மனுதாரருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், அவரைக் கைது செய்து மதுரையில் நிறுத்த வேண்டியதாயிற்று."--இது தமிழ்நாடு வக்கீல்.
தலைமை நீதிபதி பொரிந்து தள்ளினார்; "இங்கே நடப்பது ஜனநாயக அரசுதானா? மனுதாரரின் சுதந்திர நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த சில போக்கிரிகள் முற்பட்டால், அந்த வன்முறையாளர்களை அல்லவா, முதலில் கைது செய்யவேண்டும்? மனுதாரரைக் கைதுசெய்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?"--இது நீதிபதி.
சற்றுக் கூட எதிர்பாராத இந்தத் திருப்பத்தை, ஆச்சர்யத்துடன் ஏற்றுக்கொண்ட சக வழக்கறிஞர்கள், 'தலைமை நீதிபதி உனக்கு உறவுக்காரரா?' என்று கூடக் கேட்டார்கள்.
'பரமாசாரியாள் அனுக்ரஹம்' என்பது எனக்கு மட்டும் தானே தெரியும்!
பின்னர், வெகு வேகமாகச் சில சம்பவங்கள் நிகழ்ந்தேறின.
8-5-1988ல், இந்திய விமானப் படையும், கப்பற் படையும் எனக்குப் பாதுகாப்பு வளையம் அமைத்துப் பின் தொடர்ந்து வர, ஒரு மீன்பிடிப் படகில் கச்சத்தீவில் காலடி எடுத்து வைத்தேன்.
மதுரையில் கைதான எனக்கு, இப்போது கச்சத்தீவில் ரத்தினக்கம்பள வரவேற்பு.
பேரருள், சட்டத்தை மீறாத பேரருள், எதை வேண்டுமானாலும் சாதித்துக் காட்டும்.
(ஆச்சரிய தீர்ப்பு கொடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி)
(பேரருள், சட்டத்தை மீறாத பேரருள், எதை வேண்டுமானாலும் சாதித்துக் காட்டும்)
கட்டுரையாளர்-டாக்டர் சுப்ரமணியன் சுவாமி
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
1987, கச்சத்தீவுக்குச் சென்று, இந்திய மீனவர்களின் உரிமையை நிலை நாட்டத் திட்டமிட்டேன்.
மதுரையிலேயே என்னைத் தடுத்து நிறுத்தி விட்டது,காவல்துறை."நீங்கள் சென்னைக்குத் திரும்பிப் போவதாக இருந்தால், விடுதலை செய்கிறோம். கச்சத் தீவுக்குத் தான் போவேன் என்று அடம் பிடித்தால் அரெஸ்டில் இருக்கவேண்டியது தான்!" என்று காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
வேறு வழி தெரியாமல், சென்னைக்குத் திரும்பிப் போக ஒப்புக்கொண்டேன்.
எனக்கு அவமானமாக இருந்தது; ஏக்கமாகவும் இருந்தது.
காஞ்சிபுரம் சென்று, ஏறக்குறைய அழுகுரலில் பெரியவாளிடம் முறையிட்டேன்.
என் அசட்டுத்தனத்தைக் கண்டு, பெரியவாளுக்கு இரக்கம் கலந்த புன்னகை வந்தது.
"நீ டில்லிக்குப் போய் சுப்ரீம் கோர்ட்டில், உன்னைக் கைது செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய். நீ கச்சத்தீவு போவதற்கு, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துதர வேண்டும் என்றும் கோரிக்கை கொடு.."
புதுடில்லி வந்தேன். என் மனைவியே,உச்சநீதி மன்ற வக்கீல்தான். நான் சொன்னதைக் கேட்டுவிட்டு என் அறியாமையின் மேல் பரிதாபம் கொண்டு, இடி இடியென்று சிரித்தாள்.
"முதலில், மதுரை மாஜிஸ்டிரேட் கோர்ட்; அடுத்தது, செஷன்ஸ்,உயர்நீதிமன்றம்..கடைசியாகத்தான் சுப்ரீம் கோர்ட்"--"உங்கள் மனுவை நான் தாக்கல் செய்யமாட்டேன்!. செய்தால், எல்லோரும் என்னைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிப்பார்கள்"---இது மனைவி.
"மனுவை எழுதிக் கொடு, உச்சநீதி மன்றத்தில் நானே நேரில் வாதாடிக் கொள்கிறேன்.."இது ஸ்வாமி.
உச்சநீதி மன்றத்தில் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல் எல்லோரும் பார்த்தார்கள்.சட்டத்தின் அடிப்படை கூடத்தெரியாத என்னை, உச்சநீதி மன்றம், உச்சந்தலையில் குட்டப்போகிறது என்று ஆருடம் சொன்னார்கள்.
என் வழக்கு விசாரணைக்கு வந்தது.
'இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தலைமை நீதிபதியிடமிருந்து தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு அரசின் வக்கீலாக இருந்த குல்தீப்சிங் அவர்களிடம்,
"மனுதாரரை, தமிழ்நாடு அரசு ஏன் கைது செய்தது?" என்ற கேள்விக் குண்டை தூக்கிப்போட்டார், தலைமை நீதிபதி வேங்கடராமையா!.
குல்தீப்சிங் தடுமாறிப் போய்விட்டார்."தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் சிலர்,மனுதாரரின் உயிரைக் குறி வைத்திருந்தார்கள். அதனால், மனுதாரருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், அவரைக் கைது செய்து மதுரையில் நிறுத்த வேண்டியதாயிற்று."--இது தமிழ்நாடு வக்கீல்.
தலைமை நீதிபதி பொரிந்து தள்ளினார்; "இங்கே நடப்பது ஜனநாயக அரசுதானா? மனுதாரரின் சுதந்திர நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த சில போக்கிரிகள் முற்பட்டால், அந்த வன்முறையாளர்களை அல்லவா, முதலில் கைது செய்யவேண்டும்? மனுதாரரைக் கைதுசெய்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?"--இது நீதிபதி.
சற்றுக் கூட எதிர்பாராத இந்தத் திருப்பத்தை, ஆச்சர்யத்துடன் ஏற்றுக்கொண்ட சக வழக்கறிஞர்கள், 'தலைமை நீதிபதி உனக்கு உறவுக்காரரா?' என்று கூடக் கேட்டார்கள்.
'பரமாசாரியாள் அனுக்ரஹம்' என்பது எனக்கு மட்டும் தானே தெரியும்!
பின்னர், வெகு வேகமாகச் சில சம்பவங்கள் நிகழ்ந்தேறின.
8-5-1988ல், இந்திய விமானப் படையும், கப்பற் படையும் எனக்குப் பாதுகாப்பு வளையம் அமைத்துப் பின் தொடர்ந்து வர, ஒரு மீன்பிடிப் படகில் கச்சத்தீவில் காலடி எடுத்து வைத்தேன்.
மதுரையில் கைதான எனக்கு, இப்போது கச்சத்தீவில் ரத்தினக்கம்பள வரவேற்பு.
பேரருள், சட்டத்தை மீறாத பேரருள், எதை வேண்டுமானாலும் சாதித்துக் காட்டும்.