Post by varagooran on Apr 21, 2020 15:13:31 GMT 5.5
"ஜாதிக்காய் தெரியும்!, ஜாதிப் பத்திரி தெரியுமா?"
'பாவாடைக்கு' விளக்கம் சொன்ன பெரியவா
பெரியவாளுடைய பொது அறிவின் எல்லைதான் என்ன? வானமா? அதற்கு மேலேயா?
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்- காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"எனக்குப் 'பாவாடை' போதும்!"---பெரியவா.
கத்தரிக்காய் என்ற கறிகாய் தள்ளுபடியானது இல்லைதான்.
சிலர் முள்ளுக் கத்தரிக்காய், வெள்ளைக் கத்தரிக்காய்களை உபயோகப் படுத்துவதில்லை. பெரியவாள் பிக்ஷைக்குச் சில சமயங்களில் பளீர் நிறத்துடன் கத்தரிக்காய் வரும். ஆனால்,அதை விருப்புடன் சாப்பிட மாட்டார்கள் பெரியவாள்.
ஒருநாள் பிற்பகலில் சற்று ஓய்வாக இருந்தபோது, கைங்கர்ய பரர்களிடம் தமாஷாகப் பேசி கொன்டிருந்தார்கள் பெரியவாள். சமையற்கட்டு ராமமூர்த்தி என்பவர் அங்கே இருந்தார்.
"ராமமூர்த்தி ! உன் பிக்ஷாபக்குவம் நன்னாயிருக்கு. கத்தரிக்காயை என்னமோ பண்ணியிருந்தியே.. தேவாமிர்தம் !.
ராமமூர்த்தி நெளிந்தார். அநேகமாகத் தன் பிக்ஷையின் ருசியைப் பற்றி, பெரியவாள் பேசவே மாட்டார்கள். அதனால், இது பாராட்டா? அல்லது தலையில் குட்டா? என்பது புரியவில்லை.
"இனிமே, கத்தரிக்காயை நீங்க வச்சுக்கோங்கோ...எனக்குப் பாவாடை போதும்..."
என்ன சொல்கிறார்கள் பெரியவா?
"கத்தரிக்காய்க்குக் காம்பில் ருசி, வெள்ளரிக்காய்க்கு விதையில் ருசின்னு கேள்விப்பட்டிருக்கியோ?"
'ஆமாம்' என்று தலையை ஆட்டினார் அவர்.
"கத்தரிக்காய் காம்பு, பாவாடை (சில விநாடி ஸஸ்பென்ஸ்)
"பாவாடைன்னா? காம்புக்குக் கீழே, காய் மேலே மூடி போட்டாற்போல சுற்றி வளைச்சிண்டு இருக்குமே? அது!. எனக்கு அது போறும்..."--பெரியவா
சிறிது நேரம் பேச்சில்லை.
"நீங்க யாராவது ஜாதிக்காய் பார்த்திருக்கேளா?"--பெரியவா
"பார்த்திருக்கேன்..நாட்டு மருந்துக்கடையிலே கிடைக்கும்"--ஒரு தொண்டர்
"இல்லை! நான் ஒரிஜினல் காயைக் கேட்டேன்.(கடையில் விக்கிறது வெறும் காய்ச்சல்) ஒரிஜினல் காய் மேலே இப்படி...பாவாடை மாதிரி. முழுக்க மூடிண்டு இருக்கும். அதைப் பார்த்திருக்கேளா?
ஒரே குரலில் 'இல்லை' என்றார்கள்.
பெரியவாள் முகத்தில் குறும்புச் சிரிப்பு.
"நீங்க எல்லாரும் பார்த்திருக்கேள்!"--பெரியவா
அதெப்படி?
"பெயர் சொன்னால் புரிஞ்சிடும்.."---பெரியவா.
மறுபடியும் சிறு சஸ்பென்ஸ்...
"அதன் பெயர், ஜாதிக்காய் பாவாடை இல்லே.. ஜாதிப் பத்திரி! வாசனை சாமான்.
அசந்து போய் விட்டார்கள் தொண்டர்கள்.
பெரியவாளுடைய பொது அறிவின் எல்லைதான் என்ன? வானமா? அதற்கு மேலாயா? நாம் சிட்டுக் குருவிகள், குடிசையின் கூரைதான் நம்முடைய 'உயரமான' எல்லை!
'பாவாடைக்கு' விளக்கம் சொன்ன பெரியவா
பெரியவாளுடைய பொது அறிவின் எல்லைதான் என்ன? வானமா? அதற்கு மேலேயா?
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்- காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"எனக்குப் 'பாவாடை' போதும்!"---பெரியவா.
கத்தரிக்காய் என்ற கறிகாய் தள்ளுபடியானது இல்லைதான்.
சிலர் முள்ளுக் கத்தரிக்காய், வெள்ளைக் கத்தரிக்காய்களை உபயோகப் படுத்துவதில்லை. பெரியவாள் பிக்ஷைக்குச் சில சமயங்களில் பளீர் நிறத்துடன் கத்தரிக்காய் வரும். ஆனால்,அதை விருப்புடன் சாப்பிட மாட்டார்கள் பெரியவாள்.
ஒருநாள் பிற்பகலில் சற்று ஓய்வாக இருந்தபோது, கைங்கர்ய பரர்களிடம் தமாஷாகப் பேசி கொன்டிருந்தார்கள் பெரியவாள். சமையற்கட்டு ராமமூர்த்தி என்பவர் அங்கே இருந்தார்.
"ராமமூர்த்தி ! உன் பிக்ஷாபக்குவம் நன்னாயிருக்கு. கத்தரிக்காயை என்னமோ பண்ணியிருந்தியே.. தேவாமிர்தம் !.
ராமமூர்த்தி நெளிந்தார். அநேகமாகத் தன் பிக்ஷையின் ருசியைப் பற்றி, பெரியவாள் பேசவே மாட்டார்கள். அதனால், இது பாராட்டா? அல்லது தலையில் குட்டா? என்பது புரியவில்லை.
"இனிமே, கத்தரிக்காயை நீங்க வச்சுக்கோங்கோ...எனக்குப் பாவாடை போதும்..."
என்ன சொல்கிறார்கள் பெரியவா?
"கத்தரிக்காய்க்குக் காம்பில் ருசி, வெள்ளரிக்காய்க்கு விதையில் ருசின்னு கேள்விப்பட்டிருக்கியோ?"
'ஆமாம்' என்று தலையை ஆட்டினார் அவர்.
"கத்தரிக்காய் காம்பு, பாவாடை (சில விநாடி ஸஸ்பென்ஸ்)
"பாவாடைன்னா? காம்புக்குக் கீழே, காய் மேலே மூடி போட்டாற்போல சுற்றி வளைச்சிண்டு இருக்குமே? அது!. எனக்கு அது போறும்..."--பெரியவா
சிறிது நேரம் பேச்சில்லை.
"நீங்க யாராவது ஜாதிக்காய் பார்த்திருக்கேளா?"--பெரியவா
"பார்த்திருக்கேன்..நாட்டு மருந்துக்கடையிலே கிடைக்கும்"--ஒரு தொண்டர்
"இல்லை! நான் ஒரிஜினல் காயைக் கேட்டேன்.(கடையில் விக்கிறது வெறும் காய்ச்சல்) ஒரிஜினல் காய் மேலே இப்படி...பாவாடை மாதிரி. முழுக்க மூடிண்டு இருக்கும். அதைப் பார்த்திருக்கேளா?
ஒரே குரலில் 'இல்லை' என்றார்கள்.
பெரியவாள் முகத்தில் குறும்புச் சிரிப்பு.
"நீங்க எல்லாரும் பார்த்திருக்கேள்!"--பெரியவா
அதெப்படி?
"பெயர் சொன்னால் புரிஞ்சிடும்.."---பெரியவா.
மறுபடியும் சிறு சஸ்பென்ஸ்...
"அதன் பெயர், ஜாதிக்காய் பாவாடை இல்லே.. ஜாதிப் பத்திரி! வாசனை சாமான்.
அசந்து போய் விட்டார்கள் தொண்டர்கள்.
பெரியவாளுடைய பொது அறிவின் எல்லைதான் என்ன? வானமா? அதற்கு மேலாயா? நாம் சிட்டுக் குருவிகள், குடிசையின் கூரைதான் நம்முடைய 'உயரமான' எல்லை!