|
Post by varagooran on Apr 18, 2020 14:28:28 GMT 5.5
"ஜட்ஜ்மெண்ட் வந்துடுத்துப் போலிருக்கே?"
விவாகரத்து, ரத்தான தம்பதியைப் பார்த்து பெரியவா.
"எழுதினது, பெரியவாதானே !" என்று அந்த இளம் தம்பதி நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா!
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்- காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
தஞ்சாவூர் மாவட்டம். பதினெட்டு கிராம வாத்திமா குடும்பம். செல்வச் செழிப்பு, ஈசுவர ஆராதனை, பெரியவாளிடம் பக்தி.
ஜாதகம் பார்த்து, பெண் பார்த்து, விமர்சையாக விவாஹம் நடந்தேறியது. மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கை.
சாதாரணமாகத் தோன்றிய கசப்பு, விவாகரத்து வரை வந்து விட்டது.
விசாரணைகள், ஆலோசனைகள், மறு ஆய்வுகள்.....
ஊஹூம்.
நாளைக்குத் தீர்ப்பு.
பெண்ணும், பெற்றோரும் பெரியவா தரிசனத்துக்கு வந்தார்கள்.
"காமாக்ஷி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ"--பெரியவா.
சிறிது நேரத்துக்குப் பின்னர், பையனும், பெற்றோரும் வந்தார்கள். பெரியவருக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டது.
"நாளைக்கு ஜட்ஜ்மெண்ட்...."
"காமாக்ஷி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ..."---பெரியவா.
கோயிலில் ஏராளமான கூட்டம். அத்துடன்,பக்தி பூர்வமாக தரிசனம் செய்யும் நிலையில் யாருமில்லை பெரியவா சொல்லிட்டா, அதனால் வந்தேன்.
ஸ்தானீகர் அர்ச்சனை செய்துவிட்டு, பிரசாதத் தட்டை கொண்டு வந்தார்;'சேர்ந்து வாங்கிக்கோங்கோ'
சேர்ந்து?
'நான்... தனியாத்தான் வந்தேன்"
சட்டென்று தலை நிமிர்ந்தபோது, அவர்...அவள்...
"சேர்ந்து வாங்கிக்கோங்கோ..." மறுபடியும் !
காமாக்ஷியின் ஆணையா?
கோயிலிருந்து வெளியே வந்தபோது, இரண்டு குடும்பத்துப் பெரியவர்களும், நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள். பேசிக் கொண்டார்கள்.
விவாகரத்து, ரத்தாகி விட்டது.
காமாக்ஷியல்லவா, ஜட்ஜ்மெண்ட் கொடுத்திருக்கிறாள்!
பெரியவா திருவடிகளில் விழுந்து எழுந்தார்கள்.
"ஜட்ஜ்மெண்ட் வந்துடுத்துப் போலிருக்கே?"----பெரியவா.
எவ்வளவு புஷ்டியான சொற்கள்!
"எழுதினது பெரியவாதானே!" என்று அந்த இளம் தம்பதி நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?
|
|
|
Post by padhu on Apr 20, 2020 11:47:41 GMT 5.5
Mahaperiyava Trikala gnani allava avar.
|
|