Post by radha on Apr 15, 2020 18:39:10 GMT 5.5
OM Sri GURUP NAMAHA respectful PRANAMS to Sri KANCHI MAHA PERIVA
பிரம்மத்தில் லயித்த மஹான்கள்
"ஒன்றே குலம் ஒருவனே தேவன் "-என்று யார் வேண்டுமானாலும் பேசலாம்- பேசுவார்கள். ஆனால் செயலில்-
வாழ்வில் நடைமுறைப்படுத்தத் துணிவதில்லை என்பதுதான் உண்மை.
மஹான்கள் எந்த மதத்தைச் சார்ந்தவரானாலும் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை இறைவன் என்று உணர்வார்கள். இதனை அனுபவத்தில் அறிந்தேன்.
1988 முதல் 1992வரை தொலைத்தொடர்பு துறையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் பணியாற்றி வாழ்ந்த காலம். மின்னணு தொலைத்தொடர்பு கருவிகள் தயார் செய்யும் தொழிற்சாலை (Indian Telephone Industries )உத்தரப் பிரதேசம் மங்காபுர் என்ற ஊரில் அமைந்திருந்தது. ஆகவே கருவிகள் விநியோகம் நிமித்தமாக வருடத்திற்கு இருமுறை மங்காபுர் செல்லவேண்டியிருந்தது. அங்கிருந்து 20கிலோமீட்டர் தொலைவில் தான் அயோத்யா நகரம் உள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் அயோத்யா செல்வதும் உண்டு.
ஒரு முறை அஹமதாபாத்திலிருந்து ரயில் மூலம் மங்காபுர் சென்றேன். அது கோரக்பூர் வரை செல்லும் சபர்மதி விரைவு வண்டி. முதல்நாள் இரவு புறப்பட்டு இரண்டாவது நாள் காலை மங்காபுர் சென்றடையும். முதல்வகுப்பு பெட்டியில் பயணம். அஹமதாபாத்தில் நான் இருந்த பெட்டியில் ஒருவர் ஏறினார், கிட்டத்தட்ட 60-65 வயது இருக்கும். நல்ல ஆஜானுபாகுவானவர். குர்தா அணிந்தவர். அவர் முகத்தில் ஒரு பிரகாசம். அவரை வழியனுப்ப ஒரு கூட்டமே வந்திருந்தது. சாமான்களோ ஏராளம். அங்கு வந்திருந்த கூட்டத்தை வைத்துப் பார்த்தபோது அவர் ஒரு இஸ்லாமிய பிரமுகர் என்பதாக என் மனதில் பட்டது. நாங்கள் அமர்ந்திருந்த அந்தப் பெட்டியில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். (நல்லவேளை வேறு ஒருவரும் வரவில்லை. வேறு ஒருவர் வந்தாலும் சாமான் வைக்க இடம் குறைவு தான் ). இரவு கழிந்து அடுத்த நாள் காலை முதல் இரயில் எங்கெல்லாம் நிற்கின்றதோ அந்த இரயில்நிலையங்களில் எல்லாம் கூட்டமாக மக்கள் அந்த மனிதரைப் பார்க்க வருவதும், மாலை அணிவிப்பதுவும் பலவிதமான பலகாரங்களையும் , நெய் டின்களையும் வண்டியில் கொண்டு வைத்து விட்டு அவரை வணங்கிச் செல்வதுமாயிருந்தனர் . அந்த கம்பார்ட்மெண்டில் அவரைப் பார்க்க வருபவரெல்லாம் கொண்டு வந்த பொருட்கள் பூரா இடத்தையும் அடைத்துவிட்டது. அதுவரை நான் ஒரு தயக்கம் காரணமாக அவரிடம் பேசவே இல்லை. நிச்சயமாக அவர் ஒரு பெரிய பிரபலமான தலைவராக இருக்கலாம் என்பது உறுதி. நான் பயணத்திற்காக வீட்டிலிருந்து கையில் கொண்டுவந்த உணவை நான்கு வேளையாக சாப்பிடுவதை அவர் பார்த்திருக்கக் கூடும். இரவு இரயிலில் ஏறியது முதல் மறுநாள் மதியம் வரை அவர் ஒன்றும் சாப்பிடவே இல்லை. தன் கையில் கொண்டுவந்திருந்த flask -ல் இருந்து ஏதோ குடிப்பதைப் பார்த்தேன். மற்றநேரம் வாய் எதையோ முனகிக் கொண்டிருந்தது. இவ்வாறாக மாலை நேரம் ஆயிற்று. எங்களிடை நிலவிய மௌனத்தைக் கலைக்கும் வண்ணம் அவர் என்னைப் பார்த்து "நீங்கள் மதராஸியா? "என்று ஹிந்தியில் கேட்டார். ""ஆம் !" என்றேன். அதன்பின் என்னைப்பற்றிய எல்லா விவரங்களைக் கேட்டறிந்தார். (குறிப்பாக -நான் ஒரு பிராஹ்மணன் என்பதுவரை ).
அதன்பின்பு அவராகவே தன்னைப்பற்றிக் கூறினார்.
அவர் கோரக்பூரைச்சார்ந்த ஒரு இஸ்லாமிய மதகுரு. பல ஏழைகளுக்காக ஒரு காப்பகம் வைத்துள்ளதாகவும் அவர் செய்யும் நற்பணிகள் பற்றியும் சொன்னார் . மாலை நேரம் ஏதோ ஒரு இரயில் நிலையத்தில் நான் தேநீர் வாங்கிப் பருகினேன். அப்போது அவர் அங்கே உள்ள பலவிதமான பலகாரங்களைக் (இனிப்பும் காரமும் ) காட்டி எனக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். நான் முதலில் சிறிது தயங்கியது கண்டு " தயங்க வேண்டாம், இது என் குழந்தைகளுடையது தான், விரும்பியதை எடுத்து உண்ணவும் "என்றார். நான் சற்று நேரம் அங்கே வைக்கப்பட்ட பலதரப்பட்ட பலகாரங்கள் அனைத்தையும் நோக்கிவிட்டு இறுதியில் இரண்டு லட்டுக்களை எடுத்துக்கொண்டேன் . அதைக் கண்டதும் "லட்டு தான் பிடிக்குமா? மற்ற இனிப்புகள் விருப்பமில்லையா? "என்றார். நான் உடனே, " இல்லை, இப்போது இதுபிடிக்கும் என்பதால் எடுத்துக்கொண்டேன். மற்ற பலகாரங்களும் எனக்கு விருப்பம் தான் " என்றேன். உடனே ஒரு புன் சிரிப்புடன் அவர்
"இதுதான் இந்துமதத்தின் சிறப்பம்சம் (speciality) " என்றார். அவருடைய இந்த வார்த்தைகள் புரியாவிட்டாலும் என்னை சிந்திக்க வைத்தன.
"உங்களுடைய மதம் பல கடவுள் ரூபங்களைக் கொண்டது. ஏன் தெரியுமா? எது விருப்பமோ எப்போது விருப்பமோ அதன்படி எந்த தெய்வத்தையும் வழிபடலாம் என்கிறது . ஏனென்றால் மனிதனின் மனம் நிலையானதில்லை. விருப்பமும் எண்ணமும் நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. எப்போதுவேண்டுமானாலும் யாரை விரும்புகிறோமோ அந்தக் கடவுளை வணங்கலாம், இல்லையா? அதோடு மட்டுமன்றி இறைவன் என்பவனை
உருவத்தில் தொடங்கி முடிவில் அருவத்தில் அவனை உணர்வது தான் அறுதி நிலை என்பதையும் அந்த மதம் அறிவுறுத்துகிறது . இப்போது லட்டு மேல் ஆசை சிறிது நேரம் கழித்து பேடா மேல் ஆவல் வரலாம். சிலநேரம் போதும், இனி வேண்டாம் என்றும் தோன்றும். "என்றார் சிரித்துக்கொண்டே. எனக்கு அன்று புரிதல் சற்றே கடினமாயிருந்தது. மீண்டும் சொன்னது புனிதமான வார்த்தைகளாயின. மேலும்
"இதைக் கேட்டதுண்டோ? -
ஸாமோஹம் சர்வ பூதேஷு. நான் சொன்னது கீதாவாக்கியம். இறைவன் அனைத்து ஜீவராசிகளிலும் ஜடப்பொருள்களிலும் இருக்கிறான், என்பதாகும். எங்கும் இறைவன் வியாபகம் தான். " என்றார், அந்த இஸ்லாம் மதத்தைச் சார்ந்த மஹான். அவர் வாயினின்று இதைக்கேட்டதும் வியந்து நின்றேன்.
அன்று கேட்டது முதல், இந்த அருமையான நிகழ்வு என் சிந்தையைப் புதுப்பித்தது என்றுதான் சொல்வேன்.
ஒரு சாதாரணமான நிகழ்ச்சியை ஆதாரமாக்கி மிகப்பெரிய தத்துவத்தை போதித்த அந்த மஹானை -இஸ்லாமிய ஞானியை எனக்கு சந்திக்கும் வாய்ப்பை நல்கியதற்கு நன்றியை அரனுக்குச் சொல்லவா? இல்லை அல்லாவுக்குச் சொல்லவா? இருவருக்கும் வேண்டாம், அந்த மஹான் கூறியதுபோல் அருவமான - பிரும்மம் - இறைவனுக்குச் சொல்லுவதே நன்று ! என்று புரிந்துகொண்டேன். புனிதமான பிறவியின் பயனை மனத்திலே பதிய வைத்த அவர் ஞானிதான் !மகான்களுக்கு ஏது மதம்? என்பதையும், ஞானிகள் கண்களுக்குத் தெரிவது பிரும்மம் ஒன்றே !என்பதையும்
எளிமையாக புரியவைத்து சிந்தையை தூய்மையாக்கிய மஹானை நான் இன்றும் மனதில் வைத்து போற்றுகிறேன். பல மதங்களைத் தழுவினாலும் பரமன் ஒன்றுதான் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டால் போதும் நம் பாரதம் புனிதமாகிவிடாதோ?
"ஆஹாஸாத் பதிதம் தோயம் யதாகச்சதி சாகரம். சர்வதேவ நமஸ்காரம் ஸ்ரீ கேசவம் பிரதிகச்சதி " என்று அன்றாடம் நாம் கூறும் பிரார்த்தனையும் இதையே தான் சொல்கிறது அல்லவா?
என் பயணத்தின் அடுத்த நாள் அயோத்தி சென்றேன்.
பிரும்மமாய் நின்ற புருஷோத்தமனிடம் "புல்லறிவு நீக்கி நல்லறிவு நல்குவாய் " என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன்.
கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழிந்துவிட்டன . இப்போது உள்ள கரோனா என்ற பேரிடர் நம்மை வாட்டும்போது இப்பழைய நிகழ்வு நினைவுக்கு வந்தது. இறைவன், மதத்தின் அடிப்படையில் வந்து நம்மைக் காப்பதில்லை. நாமெல்லோரும் அவன் படைத்த ஜீவராசிகள் -அனைத்து ஜீவன்களைக் காப்பது அவன் கடமையன்றோ ! பிரபஞ்சமே அவன் படைப்பு தானே!அவனை சரணடைவது ஒன்று தான் நன்மை பயக்கும்.
மதம்வேறானாலும் மனமொன்றாகட்டும்
பாரதம் புனிதமாகட்டும். இந்தியர்களின்
ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஓங்கட்டும்.
கடையம். V. பாலசுப்ரமணியன்
திருவனந்தபுரம்.
(ஓய்வு பெற்ற பொதுமேலாளர்
இந்தியத் தொலைத்தொடர்பு துறை )
Source
AMRITHAVAHINI
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
பிரம்மத்தில் லயித்த மஹான்கள்
"ஒன்றே குலம் ஒருவனே தேவன் "-என்று யார் வேண்டுமானாலும் பேசலாம்- பேசுவார்கள். ஆனால் செயலில்-
வாழ்வில் நடைமுறைப்படுத்தத் துணிவதில்லை என்பதுதான் உண்மை.
மஹான்கள் எந்த மதத்தைச் சார்ந்தவரானாலும் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை இறைவன் என்று உணர்வார்கள். இதனை அனுபவத்தில் அறிந்தேன்.
1988 முதல் 1992வரை தொலைத்தொடர்பு துறையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் பணியாற்றி வாழ்ந்த காலம். மின்னணு தொலைத்தொடர்பு கருவிகள் தயார் செய்யும் தொழிற்சாலை (Indian Telephone Industries )உத்தரப் பிரதேசம் மங்காபுர் என்ற ஊரில் அமைந்திருந்தது. ஆகவே கருவிகள் விநியோகம் நிமித்தமாக வருடத்திற்கு இருமுறை மங்காபுர் செல்லவேண்டியிருந்தது. அங்கிருந்து 20கிலோமீட்டர் தொலைவில் தான் அயோத்யா நகரம் உள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் அயோத்யா செல்வதும் உண்டு.
ஒரு முறை அஹமதாபாத்திலிருந்து ரயில் மூலம் மங்காபுர் சென்றேன். அது கோரக்பூர் வரை செல்லும் சபர்மதி விரைவு வண்டி. முதல்நாள் இரவு புறப்பட்டு இரண்டாவது நாள் காலை மங்காபுர் சென்றடையும். முதல்வகுப்பு பெட்டியில் பயணம். அஹமதாபாத்தில் நான் இருந்த பெட்டியில் ஒருவர் ஏறினார், கிட்டத்தட்ட 60-65 வயது இருக்கும். நல்ல ஆஜானுபாகுவானவர். குர்தா அணிந்தவர். அவர் முகத்தில் ஒரு பிரகாசம். அவரை வழியனுப்ப ஒரு கூட்டமே வந்திருந்தது. சாமான்களோ ஏராளம். அங்கு வந்திருந்த கூட்டத்தை வைத்துப் பார்த்தபோது அவர் ஒரு இஸ்லாமிய பிரமுகர் என்பதாக என் மனதில் பட்டது. நாங்கள் அமர்ந்திருந்த அந்தப் பெட்டியில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். (நல்லவேளை வேறு ஒருவரும் வரவில்லை. வேறு ஒருவர் வந்தாலும் சாமான் வைக்க இடம் குறைவு தான் ). இரவு கழிந்து அடுத்த நாள் காலை முதல் இரயில் எங்கெல்லாம் நிற்கின்றதோ அந்த இரயில்நிலையங்களில் எல்லாம் கூட்டமாக மக்கள் அந்த மனிதரைப் பார்க்க வருவதும், மாலை அணிவிப்பதுவும் பலவிதமான பலகாரங்களையும் , நெய் டின்களையும் வண்டியில் கொண்டு வைத்து விட்டு அவரை வணங்கிச் செல்வதுமாயிருந்தனர் . அந்த கம்பார்ட்மெண்டில் அவரைப் பார்க்க வருபவரெல்லாம் கொண்டு வந்த பொருட்கள் பூரா இடத்தையும் அடைத்துவிட்டது. அதுவரை நான் ஒரு தயக்கம் காரணமாக அவரிடம் பேசவே இல்லை. நிச்சயமாக அவர் ஒரு பெரிய பிரபலமான தலைவராக இருக்கலாம் என்பது உறுதி. நான் பயணத்திற்காக வீட்டிலிருந்து கையில் கொண்டுவந்த உணவை நான்கு வேளையாக சாப்பிடுவதை அவர் பார்த்திருக்கக் கூடும். இரவு இரயிலில் ஏறியது முதல் மறுநாள் மதியம் வரை அவர் ஒன்றும் சாப்பிடவே இல்லை. தன் கையில் கொண்டுவந்திருந்த flask -ல் இருந்து ஏதோ குடிப்பதைப் பார்த்தேன். மற்றநேரம் வாய் எதையோ முனகிக் கொண்டிருந்தது. இவ்வாறாக மாலை நேரம் ஆயிற்று. எங்களிடை நிலவிய மௌனத்தைக் கலைக்கும் வண்ணம் அவர் என்னைப் பார்த்து "நீங்கள் மதராஸியா? "என்று ஹிந்தியில் கேட்டார். ""ஆம் !" என்றேன். அதன்பின் என்னைப்பற்றிய எல்லா விவரங்களைக் கேட்டறிந்தார். (குறிப்பாக -நான் ஒரு பிராஹ்மணன் என்பதுவரை ).
அதன்பின்பு அவராகவே தன்னைப்பற்றிக் கூறினார்.
அவர் கோரக்பூரைச்சார்ந்த ஒரு இஸ்லாமிய மதகுரு. பல ஏழைகளுக்காக ஒரு காப்பகம் வைத்துள்ளதாகவும் அவர் செய்யும் நற்பணிகள் பற்றியும் சொன்னார் . மாலை நேரம் ஏதோ ஒரு இரயில் நிலையத்தில் நான் தேநீர் வாங்கிப் பருகினேன். அப்போது அவர் அங்கே உள்ள பலவிதமான பலகாரங்களைக் (இனிப்பும் காரமும் ) காட்டி எனக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். நான் முதலில் சிறிது தயங்கியது கண்டு " தயங்க வேண்டாம், இது என் குழந்தைகளுடையது தான், விரும்பியதை எடுத்து உண்ணவும் "என்றார். நான் சற்று நேரம் அங்கே வைக்கப்பட்ட பலதரப்பட்ட பலகாரங்கள் அனைத்தையும் நோக்கிவிட்டு இறுதியில் இரண்டு லட்டுக்களை எடுத்துக்கொண்டேன் . அதைக் கண்டதும் "லட்டு தான் பிடிக்குமா? மற்ற இனிப்புகள் விருப்பமில்லையா? "என்றார். நான் உடனே, " இல்லை, இப்போது இதுபிடிக்கும் என்பதால் எடுத்துக்கொண்டேன். மற்ற பலகாரங்களும் எனக்கு விருப்பம் தான் " என்றேன். உடனே ஒரு புன் சிரிப்புடன் அவர்
"இதுதான் இந்துமதத்தின் சிறப்பம்சம் (speciality) " என்றார். அவருடைய இந்த வார்த்தைகள் புரியாவிட்டாலும் என்னை சிந்திக்க வைத்தன.
"உங்களுடைய மதம் பல கடவுள் ரூபங்களைக் கொண்டது. ஏன் தெரியுமா? எது விருப்பமோ எப்போது விருப்பமோ அதன்படி எந்த தெய்வத்தையும் வழிபடலாம் என்கிறது . ஏனென்றால் மனிதனின் மனம் நிலையானதில்லை. விருப்பமும் எண்ணமும் நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. எப்போதுவேண்டுமானாலும் யாரை விரும்புகிறோமோ அந்தக் கடவுளை வணங்கலாம், இல்லையா? அதோடு மட்டுமன்றி இறைவன் என்பவனை
உருவத்தில் தொடங்கி முடிவில் அருவத்தில் அவனை உணர்வது தான் அறுதி நிலை என்பதையும் அந்த மதம் அறிவுறுத்துகிறது . இப்போது லட்டு மேல் ஆசை சிறிது நேரம் கழித்து பேடா மேல் ஆவல் வரலாம். சிலநேரம் போதும், இனி வேண்டாம் என்றும் தோன்றும். "என்றார் சிரித்துக்கொண்டே. எனக்கு அன்று புரிதல் சற்றே கடினமாயிருந்தது. மீண்டும் சொன்னது புனிதமான வார்த்தைகளாயின. மேலும்
"இதைக் கேட்டதுண்டோ? -
ஸாமோஹம் சர்வ பூதேஷு. நான் சொன்னது கீதாவாக்கியம். இறைவன் அனைத்து ஜீவராசிகளிலும் ஜடப்பொருள்களிலும் இருக்கிறான், என்பதாகும். எங்கும் இறைவன் வியாபகம் தான். " என்றார், அந்த இஸ்லாம் மதத்தைச் சார்ந்த மஹான். அவர் வாயினின்று இதைக்கேட்டதும் வியந்து நின்றேன்.
அன்று கேட்டது முதல், இந்த அருமையான நிகழ்வு என் சிந்தையைப் புதுப்பித்தது என்றுதான் சொல்வேன்.
ஒரு சாதாரணமான நிகழ்ச்சியை ஆதாரமாக்கி மிகப்பெரிய தத்துவத்தை போதித்த அந்த மஹானை -இஸ்லாமிய ஞானியை எனக்கு சந்திக்கும் வாய்ப்பை நல்கியதற்கு நன்றியை அரனுக்குச் சொல்லவா? இல்லை அல்லாவுக்குச் சொல்லவா? இருவருக்கும் வேண்டாம், அந்த மஹான் கூறியதுபோல் அருவமான - பிரும்மம் - இறைவனுக்குச் சொல்லுவதே நன்று ! என்று புரிந்துகொண்டேன். புனிதமான பிறவியின் பயனை மனத்திலே பதிய வைத்த அவர் ஞானிதான் !மகான்களுக்கு ஏது மதம்? என்பதையும், ஞானிகள் கண்களுக்குத் தெரிவது பிரும்மம் ஒன்றே !என்பதையும்
எளிமையாக புரியவைத்து சிந்தையை தூய்மையாக்கிய மஹானை நான் இன்றும் மனதில் வைத்து போற்றுகிறேன். பல மதங்களைத் தழுவினாலும் பரமன் ஒன்றுதான் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டால் போதும் நம் பாரதம் புனிதமாகிவிடாதோ?
"ஆஹாஸாத் பதிதம் தோயம் யதாகச்சதி சாகரம். சர்வதேவ நமஸ்காரம் ஸ்ரீ கேசவம் பிரதிகச்சதி " என்று அன்றாடம் நாம் கூறும் பிரார்த்தனையும் இதையே தான் சொல்கிறது அல்லவா?
என் பயணத்தின் அடுத்த நாள் அயோத்தி சென்றேன்.
பிரும்மமாய் நின்ற புருஷோத்தமனிடம் "புல்லறிவு நீக்கி நல்லறிவு நல்குவாய் " என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன்.
கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழிந்துவிட்டன . இப்போது உள்ள கரோனா என்ற பேரிடர் நம்மை வாட்டும்போது இப்பழைய நிகழ்வு நினைவுக்கு வந்தது. இறைவன், மதத்தின் அடிப்படையில் வந்து நம்மைக் காப்பதில்லை. நாமெல்லோரும் அவன் படைத்த ஜீவராசிகள் -அனைத்து ஜீவன்களைக் காப்பது அவன் கடமையன்றோ ! பிரபஞ்சமே அவன் படைப்பு தானே!அவனை சரணடைவது ஒன்று தான் நன்மை பயக்கும்.
மதம்வேறானாலும் மனமொன்றாகட்டும்
பாரதம் புனிதமாகட்டும். இந்தியர்களின்
ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஓங்கட்டும்.
கடையம். V. பாலசுப்ரமணியன்
திருவனந்தபுரம்.
(ஓய்வு பெற்ற பொதுமேலாளர்
இந்தியத் தொலைத்தொடர்பு துறை )
Source
AMRITHAVAHINI
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM