Post by radha on Apr 13, 2020 13:07:28 GMT 5.5
Saanu Puthiran
23 小时 ·
பெரியவா சரணம்.
அனுஷ பூஜையிலே வீற்றிருக்கும் ஸ்ரீகுருபாதுகா தரிசனங்களைக் கண்டு "நமோ நமஹ ஸ்ரீகுருபாக்ஹுகாப்யாம்" என போற்றி ஆத்மார்த்தமாக நமஸ்கரிப்போமே!
இறைவனிடத்திலே பக்தி செய்ய ஒன்பது வழிகள் உள்ளன என நம் ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.
1. ஸ்ரவணம் - கேட்டல்,
2. கீர்த்தணம் - பாடுதல்,
3. ஸ்மரணம் - த்யானித்தல்,
4. பாதசேவனம் – சேவித்தல்,
5. அர்ச்சனம் – பூஜித்தல்,
6. வந்தனம் – நமஸ்கரித்தல்,
7. தாஸ்யம் – தொண்டு புரிதல்,
8. ஸக்யம் – சினேகபாவம்,
9. ஆத்ம நிவேதனம் – தன்னையே அர்ப்பணித்தல்
என்பனவாம்.
இங்கே குருமகிமையை அறிந்து, குருவை த்யானித்து, குருதுதியாலே புகழ்மாலை சாற்றி அர்ச்சித்து, பூஜித்து, நமஸ்கரிப்பதோடு, பிறரும் இதனைக் கேட்டு இன்புறும் வகையிலேயும் பக்தி பண்ணும் வகையிலேயும் நாமெல்லாம் முயற்சிக்கின்றோமானால், அது ஐயனாம் ஆதிகுரு வழிவந்த ஆதிரைப் பேரருளாலனாம், ஸ்ரீ காஞ்சி காமகோடி மூலாம்னாய சர்வக்ஞ பீடத்தின் 68-வது ஆச்சார்யராக, அகில உலகும் போற்றும்படியாக எல்லோரையும் சாதி மதம் இனம் மொழி பேதமில்லாமல் எல்லோருக்கும் அருள்வதற்காகவே அவதரித்த அந்தத் தாயுமானவனின் அவ்யாஜ கருணையால் தானே!
அவர் அருளாலே அவர் தாள் வணங்கிட, அவர் அனுக்ரஹித்த இந்த துதிமாலைகள் நமக்கு பேருதவிதனைப் புரியுமன்றோ. நம் ஆவலிலே தர்மம் நிலைக்குமானால் அதனை செவ்வன அவருடைய அருள் நடத்தித் தருமன்றோ!
எல்லோரும் எப்போதும் எங்கேயும் துதிக்கவல்லதொரு துதிமாலையாகவும், அனைவருக்கும் இருக்கும்படியான வேண்டுதல்களைக் கொண்டதுமாகவும் இந்த துதியானது அமைந்து இருப்பதே அவருடைய அருளால் தாமே! சங்கரம் போற்றி!
சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.
#ஸ்ரீகுருதுதி
#சங்கர_துதி_மாலை:
ஓமெனும் அட்சரத்துள்
ஒளிர்மேனி நீள்சடையன்
மெல்லயெனைக் காத்தருள
சசிசேகர சங்கரனாய்
என்னிதயத் தாமரையில்
ஏத்திநிதம் த்யானிக்க
வல்லதொரு செகத்குருவாய்
வந்தனையே! வந்தனமே!! (1)
பதியினிற் பலர்போற்றும்
அருளுமுரு கொண்டோனே
இருகரமும் கூப்பியுனை
உளமுருகித் தொழுதேத்தி
இங்குயான் கேட்கலுற்ற
இனியபல வரங்களெலாம்
சொந்தமென உலகுக்கீந்து
சுகமருள்வாய் சங்கரனே!! (2)
உன்னிலே எம்ஆன்மம்
ஒருநிலையில் சரண்புகவும்
உன்நினைவில் வாழ்ந்துநிதம்
உளமார செபித்திங்கு
உன்னருளு மெங்கள்வழி
காட்டிநலம் சேர்த்திடவும்
உலகாளும் அஞ்செழுத்தா!
வாழ்வுய்ய வந்தருளே! (3)
எத்துன்பம் வந்தாலும்
நோகுமுளம் இல்லாமல்
வஞ்சனைகள் சூழ்ந்தாலும்
சிங்கேறு போல்நின்று
தக்கபொழு தேவந்து
தஞ்சமென் றெனைக்காத்
சஞ்சலமு மில்லாது
சீர்வாழ்வும் காத்தருளே! (4)
நல்லதையுஞ் செய்வதுபோல்
தீமைதரும் புல்லர்கள்
மனமதனை அறிந்திடவும்
மாசின்றி வாழ்ந்திடவும்
வல்லதொரு நல்வினையும்
வாடாத மனங்கொண்ட
குணநலமும் அருள்கூடி
வாழ்நலமும் தந்தருளே! (5)
வேலைக் கடினமதில்
விரைந்துன்னை மறவா
நாளும் நினைந்திருக்க
நல்லறிவுத் திறம்ஈந்
போலிகள் மலிந்துள்ள
பொல்லாத உலகமிதில்
சங்கரம் பணிந்தோமே!
சங்கடமும் களைத்தருளே! (6)
என்றும் சிறுபிழையும்
யாருக்குச் செய்தாலும்
நன்றாம் எவர்மனமும்
நோகிடவும் நடந்தாலும்
என்பிழை பொறுத்தருளி
இனிபிழையும் புரியாமல்
நன்றாய் வாழ்ந்திடவே
செவ்வருளும் புரிந்தருளே! (7)
என்றோ அவர்வருவார்
என்றபடி வீட்டினிலே
எண்ணிக் காத்திருக்கும்
பெண்டிர்தம் வாழ்வினிக்க
இன்று வருவாளா
என்றுநிசி வேளையிலே
உருகும் காளையரின்
வாழ்வினிக்க வரமருளே! (8)
உழைக்கும் கரங்களுக்கு
வலிமைபல தந்துநலம்
பேணும் வளமோடே
மனமகிழ்வை பெற்றிடவும்
நோயின் கடுநீங்கி
நீள்சுகத்தைப் பெற்றுவளம்
காணும் வாழ்வுதனை
வரமெனவே தந்தருளே! (9)
நில்லா உலகிதனில்
நிலையது என்றுணரும்
புல்லறி வாண்மையினை
போக்கிஎமை காத்துநிதம்
ஆசையும் கோபமும்எம்
வாழ்வொழிக்க வகையுமின்றி
கோலங்கள் மாற்றிகுண
வாழ்வினையும் தந்தருளே! (10)
பெரியவா சரணம்!
பெரியவா சரணம்!
ஸ்ரீமஹாபெரியவா அபயம்!
ஞானம் பெறுவது என்றால் ஏதோ சன்னியாசம் ஆவது என்று அர்த்தமல்ல; ஒரு மனிதன் ஞானம் பெறுவதே அவன் மனிதத்தன்மையொடு மாண்புடையவனாக வாழ்வதற்குத் தான். ஞானம் பெறுவதற்கு குருவானவர் இன்றையமையாதவர் ஆவார். அஞ்ஞானம் எனும் இருளை அகற்றி ஞானம் என்ற ஒளியை நாம் பெற உதவுபவர் குரு. தனியாக ஒரு மனிதன் சிந்தித்து பரம்பொருளை உணர்ந்து ஞானம் அடைவது என்பது கடினம். குரு தான் பெற்ற அனுபவங்களிலிருந்து ஞானம் பெறுவதை எளிமையாக்கி நம்மை வழி நடத்தி அருள்கின்றார். குருவருள் இருப்பின் திருவருள் தானே வந்து சேரும் என்பர். அப்படியாக நம் குருவாகவும், திருவாகவும் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாஸ்வாமிகளை அனுதினமும் போற்றி அவர் கூறியபடியான தர்ம வழிகளை பின்பற்றி நல்ல வாழ்வு வாழ்ந்து பிறரையும் வாழ்விப்போமாக!
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM