Post by varagooran on Mar 26, 2020 16:14:13 GMT 5.5
"சாமிகிட்ட ஒரு பிள்ளையார் சிலைதான் கேட்டோம்....இப்போ ஒரு கோயிலே கிடைச்சிருக்கு"
நெஞ்சம், குதூகலிக்க பெரியவாளிடம் விண்ணப்பித்த கிராம வாசிகள்.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு கிராமத்திலிருந்து, முக்யஸ்தர்கள் சிலர், தரிசனத்துக்கு வந்தார்கள்.
கிராமத்திலிருந்த விநாயகர் சிலை திருட்டுப்போய் விட்டது.'பெரியவாள் வேறொரு சிலை கொடுத்து உதவ வேண்டும்' என்று பிரார்த்தித்தார்கள்.
"உங்கள் கிராமத்தில் ஏரி இருக்கா?" என்று பெரியவாள் கேட்டார்கள்.
"இருக்குங்க.."
"ஜலம் இருக்கா"
கிராமத்தார்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"பஞ்சாயத்துல தூர் வாரலே, தண்ணி ரொம்பக் கொஞ்சமா இருக்குங்க.."
"ஏரியிலே நிறையத் தண்ணீர் இருந்தால், எல்லா ஜனங்களுக்கும் சௌகர்யம்; கன்று - காலிகளுக்கும் உபயோகப்படும் இல்லையா?
"ஆமாங்க.."
"முதல்லே ஏரியை ஆழப்படுத்துங்கோ.." என்று சொல்லிவிட்டுப் பிரசாதம் கொடுத்துவிட்டார்கள்.
அதாவது,'போய் வாருங்கள்' என்று அர்த்தம்.
வந்தவர்களுக்கு, ஒரே ஏமாற்றம். 'விநாயகர் சிலை,தற்சமயம் கைவசம் இல்லை' என்று சொல்லியிருந்தால் கூட, கொஞ்சம் சமாதானமாக இருந்திருக்கும்.
சிலையைப் பற்றிப் பேசவே இல்லையே?
ஏரியை, ஆழப்படுத்துவது கவர்ன்மெண்ட் வேலை. அதைப்போய் நாம் செய்வானேன்...?
ஆனால், கிராமத்தில் சில வயோதிகர்கள் இருந்தார்கள். "பெரியவங்க சொன்னபடி செய்யலேன்னா அது பெரிய குத்தம். நமக்குக் கஷ்டம் வரும்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.
வேறு வழியில்லை. விலை கொடுத்து வம்பை வாங்கிக்கொண்டு வந்தாகிவிட்டது!.
இனியும் தாமதப்படுத்துவதில் அர்த்தமில்லை.
குறிப்பிட்ட நாளில், வாட்டசாட்டமான பேர்கள் சிலர்,மண்வெட்டியும்-கூடையுமாக ஏரியில் இறங்கினார்கள்.
ஒரு மணி நேரத்துக்குப் பின் ஒரு "டங்"
அண்ணே...என்னமோ சத்தம்..."
ஜாக்கிரதையாகக் கையை விட்டுத் துழாவினார்கள்.
'பிள்ளையார்'! (திருட்டுப்போனவர் அல்ல, இவர் ரொம்பப் பழமையானவர்)
அடுத்து ஒரு "டங்" - சிவலிங்கம்!.
அடுத்து, நந்தி,அம்பாள்,முருகன்,பலிபீடம்,துர்கை...
ஓட்டோட்டமாகக் காஞ்சிபுரம் வந்தார்கள்.
நெஞ்சம் குதூகலிக்க.பெரியவாளிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள்.
"சாமிகிட்ட ஒரு பிள்ளையார் சிலைதான் கேட்டோம்...இப்போ ஒரு கோயிலே கிடைச்சிருக்கு..."
பெரியவாள், "ஏரிக்கரையில் ஒரு கீற்றுக் கொட்டகை போட்டு, சிலைகளை வைத்து, விளக்கு ஏற்றி,பழங்கள் நிவேதனம் செய்து வாருங்கள்" என்று உத்திரவிட்டார்கள்.
"கோயில்...."! என்று இழுத்தார்கள், கிராமவாசிகள்.
"பிள்ளையார் வந்துட்டாரே....அவர் பார்த்துப்பார்..."
ஏரியிலிருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார் பிள்ளையார். நாளடைவில் சிவலிங்கத்துக்கு ஓர் அரன்மனை (அரனுக்கு ஒரு மனை - சிவன் கோயில்) கட்டிக் கொடுக்கமாட்டாரா,என்ன?..
நெஞ்சம், குதூகலிக்க பெரியவாளிடம் விண்ணப்பித்த கிராம வாசிகள்.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு கிராமத்திலிருந்து, முக்யஸ்தர்கள் சிலர், தரிசனத்துக்கு வந்தார்கள்.
கிராமத்திலிருந்த விநாயகர் சிலை திருட்டுப்போய் விட்டது.'பெரியவாள் வேறொரு சிலை கொடுத்து உதவ வேண்டும்' என்று பிரார்த்தித்தார்கள்.
"உங்கள் கிராமத்தில் ஏரி இருக்கா?" என்று பெரியவாள் கேட்டார்கள்.
"இருக்குங்க.."
"ஜலம் இருக்கா"
கிராமத்தார்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"பஞ்சாயத்துல தூர் வாரலே, தண்ணி ரொம்பக் கொஞ்சமா இருக்குங்க.."
"ஏரியிலே நிறையத் தண்ணீர் இருந்தால், எல்லா ஜனங்களுக்கும் சௌகர்யம்; கன்று - காலிகளுக்கும் உபயோகப்படும் இல்லையா?
"ஆமாங்க.."
"முதல்லே ஏரியை ஆழப்படுத்துங்கோ.." என்று சொல்லிவிட்டுப் பிரசாதம் கொடுத்துவிட்டார்கள்.
அதாவது,'போய் வாருங்கள்' என்று அர்த்தம்.
வந்தவர்களுக்கு, ஒரே ஏமாற்றம். 'விநாயகர் சிலை,தற்சமயம் கைவசம் இல்லை' என்று சொல்லியிருந்தால் கூட, கொஞ்சம் சமாதானமாக இருந்திருக்கும்.
சிலையைப் பற்றிப் பேசவே இல்லையே?
ஏரியை, ஆழப்படுத்துவது கவர்ன்மெண்ட் வேலை. அதைப்போய் நாம் செய்வானேன்...?
ஆனால், கிராமத்தில் சில வயோதிகர்கள் இருந்தார்கள். "பெரியவங்க சொன்னபடி செய்யலேன்னா அது பெரிய குத்தம். நமக்குக் கஷ்டம் வரும்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.
வேறு வழியில்லை. விலை கொடுத்து வம்பை வாங்கிக்கொண்டு வந்தாகிவிட்டது!.
இனியும் தாமதப்படுத்துவதில் அர்த்தமில்லை.
குறிப்பிட்ட நாளில், வாட்டசாட்டமான பேர்கள் சிலர்,மண்வெட்டியும்-கூடையுமாக ஏரியில் இறங்கினார்கள்.
ஒரு மணி நேரத்துக்குப் பின் ஒரு "டங்"
அண்ணே...என்னமோ சத்தம்..."
ஜாக்கிரதையாகக் கையை விட்டுத் துழாவினார்கள்.
'பிள்ளையார்'! (திருட்டுப்போனவர் அல்ல, இவர் ரொம்பப் பழமையானவர்)
அடுத்து ஒரு "டங்" - சிவலிங்கம்!.
அடுத்து, நந்தி,அம்பாள்,முருகன்,பலிபீடம்,துர்கை...
ஓட்டோட்டமாகக் காஞ்சிபுரம் வந்தார்கள்.
நெஞ்சம் குதூகலிக்க.பெரியவாளிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள்.
"சாமிகிட்ட ஒரு பிள்ளையார் சிலைதான் கேட்டோம்...இப்போ ஒரு கோயிலே கிடைச்சிருக்கு..."
பெரியவாள், "ஏரிக்கரையில் ஒரு கீற்றுக் கொட்டகை போட்டு, சிலைகளை வைத்து, விளக்கு ஏற்றி,பழங்கள் நிவேதனம் செய்து வாருங்கள்" என்று உத்திரவிட்டார்கள்.
"கோயில்...."! என்று இழுத்தார்கள், கிராமவாசிகள்.
"பிள்ளையார் வந்துட்டாரே....அவர் பார்த்துப்பார்..."
ஏரியிலிருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார் பிள்ளையார். நாளடைவில் சிவலிங்கத்துக்கு ஓர் அரன்மனை (அரனுக்கு ஒரு மனை - சிவன் கோயில்) கட்டிக் கொடுக்கமாட்டாரா,என்ன?..