Post by radha on Mar 26, 2020 6:29:03 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Radha Krishnan
4 分钟 ·
Venkat Radhakrishnan,Venkat Radhakrishnan
Latha Amma 发帖到 THE MAHAN OF THIS MILLINEUM
2 小时
நச்சுனு ஒரு பேச்சு!
~~~~~~~~~~~~~
விஞ்ஞானத்தால் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் ஆபத்தும் வளர்ந்து கொண்டே போகிறது. மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர்ந்தால் தான் இந்த ஆபத்து மறையும். செய்யும் செயலை பற்றின்றிச் செய்தால் ஒழுக்கம் வளரும். உள்ளமும் தூய்மை பெறும். பற்றின்றிச் செய்ய பகவானின் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். எப்போது மனதில் ஆசை முளைக்கிறதோ அப்போதே துன்பத்திற்கும், அழுகைக்கும் அடித்தளம் உண்டாகி விட்டது என்று அர்த்தம்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவரை உணர வேண்டும் என்ற தாகத்துடன் பக்தி செய்பவர் மீது கருணை கொண்டு கடவுள் அருள்புரிவார். அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்யும் எந்த செயலும் அதற்குரிய பலனை தருவதில்லை. எனவே, உறங்கும் முன் அன்றைய நாளில் நடந்த நல்லது, கெட்டதை எண்ணிப் பார்ப்பது நம்மைத் திருத்திக் கொள்ள வழிவகுக்கும். மனதில் ஆயிரம் தீயஎண்ணங்களை வைத்துக் கொண்டு மற்றவருக்கு உபதேசம் செய்வதால் பயன் இல்லை..
பாவம், புண்ணியம் என்பது ஒரு செயலைப் பொறுத்தது அல்ல. செயலாற்றுபவரின் நோக்கத்தைப் பொறுத்தது. நற்செயலாக இருந்தாலும், நோக்கம் தவறானதாக இருந்தால் அது பாவமே. ஆசை, கோபம், துவேஷம், பயம் ஆகியவற்றை மனதை விட்டு அடியோடு அகல வேண்டும். விருப்பு வெறுப்புடன் செய்யும் எச்செயலும் பாவமானது தான். விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயலாற்றும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. "நான்' என்ற அகம்பாவம் இல்லாமல் கடமைகளைச் செய்ய வேண்டும்.
உடலால் செய்யும் நன்மையை மட்டுமே அகிம்சை என்று எண்ணுகிறோம். யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படக் கூடாது என்று மனதால் எண்ணுவது தான் அகிம்சை. பிறர் நமக்கு கெடுதல் செய்வதாகத் தோன்றினால், பதிலுக்கு பதில் இம்சை செய்யக்கூடாது. அகிம்சையைப் பின்பற்றுபவாிடம் அணுவளவும் கோபம் உண்டாகாது. மாறாக அன்பும் கருணையுமே ஏற்படும்.
மனதில் எப்போதும் அமைதி நிலைத்திருந்தால் செல்லும் இடத்தில் எல்லாம் சாந்தம் பரவத் தொடங்கி விடும். மனிதர்களிடத்தில் மட்டுமில்லாமல் பறவை, விலங்கு போன்ற உயிர்களிடமும் கூட அமைதியை உண்டாக்கும். எண்ணம், சொல், செயல் என்னும் மூன்றாலும் அகிம்சையைப் பின்பற்றுபவர்களால் கொடிய பகைவனிடம் கூட அன்பு செலுத்த முடியும். வாழ்க்கை முறை சாத்வீகமாக இருந்தால், நம்மைச் சுற்றிலும் அமைதி பரவும். குடும்பமும் சமுதாயமும் பயன்பெறும்.
இதமான அன்பு வணக்கம் 🦚
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Radha Krishnan
4 分钟 ·
Venkat Radhakrishnan,Venkat Radhakrishnan
Latha Amma 发帖到 THE MAHAN OF THIS MILLINEUM
2 小时
நச்சுனு ஒரு பேச்சு!
~~~~~~~~~~~~~
விஞ்ஞானத்தால் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் ஆபத்தும் வளர்ந்து கொண்டே போகிறது. மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர்ந்தால் தான் இந்த ஆபத்து மறையும். செய்யும் செயலை பற்றின்றிச் செய்தால் ஒழுக்கம் வளரும். உள்ளமும் தூய்மை பெறும். பற்றின்றிச் செய்ய பகவானின் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். எப்போது மனதில் ஆசை முளைக்கிறதோ அப்போதே துன்பத்திற்கும், அழுகைக்கும் அடித்தளம் உண்டாகி விட்டது என்று அர்த்தம்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவரை உணர வேண்டும் என்ற தாகத்துடன் பக்தி செய்பவர் மீது கருணை கொண்டு கடவுள் அருள்புரிவார். அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்யும் எந்த செயலும் அதற்குரிய பலனை தருவதில்லை. எனவே, உறங்கும் முன் அன்றைய நாளில் நடந்த நல்லது, கெட்டதை எண்ணிப் பார்ப்பது நம்மைத் திருத்திக் கொள்ள வழிவகுக்கும். மனதில் ஆயிரம் தீயஎண்ணங்களை வைத்துக் கொண்டு மற்றவருக்கு உபதேசம் செய்வதால் பயன் இல்லை..
பாவம், புண்ணியம் என்பது ஒரு செயலைப் பொறுத்தது அல்ல. செயலாற்றுபவரின் நோக்கத்தைப் பொறுத்தது. நற்செயலாக இருந்தாலும், நோக்கம் தவறானதாக இருந்தால் அது பாவமே. ஆசை, கோபம், துவேஷம், பயம் ஆகியவற்றை மனதை விட்டு அடியோடு அகல வேண்டும். விருப்பு வெறுப்புடன் செய்யும் எச்செயலும் பாவமானது தான். விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயலாற்றும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. "நான்' என்ற அகம்பாவம் இல்லாமல் கடமைகளைச் செய்ய வேண்டும்.
உடலால் செய்யும் நன்மையை மட்டுமே அகிம்சை என்று எண்ணுகிறோம். யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படக் கூடாது என்று மனதால் எண்ணுவது தான் அகிம்சை. பிறர் நமக்கு கெடுதல் செய்வதாகத் தோன்றினால், பதிலுக்கு பதில் இம்சை செய்யக்கூடாது. அகிம்சையைப் பின்பற்றுபவாிடம் அணுவளவும் கோபம் உண்டாகாது. மாறாக அன்பும் கருணையுமே ஏற்படும்.
மனதில் எப்போதும் அமைதி நிலைத்திருந்தால் செல்லும் இடத்தில் எல்லாம் சாந்தம் பரவத் தொடங்கி விடும். மனிதர்களிடத்தில் மட்டுமில்லாமல் பறவை, விலங்கு போன்ற உயிர்களிடமும் கூட அமைதியை உண்டாக்கும். எண்ணம், சொல், செயல் என்னும் மூன்றாலும் அகிம்சையைப் பின்பற்றுபவர்களால் கொடிய பகைவனிடம் கூட அன்பு செலுத்த முடியும். வாழ்க்கை முறை சாத்வீகமாக இருந்தால், நம்மைச் சுற்றிலும் அமைதி பரவும். குடும்பமும் சமுதாயமும் பயன்பெறும்.
இதமான அன்பு வணக்கம் 🦚
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM