Post by radha on Feb 14, 2020 6:39:32 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Madambakkam Shankar
23小时 ·
தினம் ஒரு ஸ்லோகம் 13.02.2020.
மாசி 1.
தொகுப்பு : தேனுபுரீஸ்வர தாசன்
இல. சங்கர்.
ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்.
வேதஸாரசிவ ஸ்தோத்திரம்
11.த்வத்தோ ஜகத்பவதி தேவ பவ ஸ்மராரே !
த்வய்யேவ திஷ்டதி ஜகத் ம்ருட விச்வநாத !
த்வய்யேவ கச்சதிலயம் ஜகதேதத் ஈச
லிங்காத்மகே ஹர சராசர விச்வரூபின் !!
தேவனே!பவனே!மன்மதனே வென்றவனே!உம்மிடமிருந்தே இந்த உலகம் தோன்றியது. ஹேவிச்வநாத!உம்மிடமே நிலை பெறுகிறது இந்த உலகம். பின் உம்மிடமே லயமும் அடைகிறது. சராசரங்களின் வடிவினன் அன்றோ நீர்!
தெய்வத்தின் குரல்.
உத்தம துதிகள் மூன்று
க்ரோத பட்டாரகரான துர்வாஸர்தான் முதன் முதலில் அம்பாளை ஸ்துதித்த பூலோகவாஸி. அவர் ‘த்விசதி’ பாடினதோடு ‘சக்தி மஹிம்ந ஸ்தோத்ரம்’ என்றும் அம்பாள் மஹிமை பற்றி ஒரு உத்தமமான ஸ்துதி செய்திருக்கிறார். இவற்றுக்கு அப்புறந்தான் மற்றக் கவிகளின் வாக்குகள் உண்டாயின. அவர் வாக்கிலேயே அம்பிகை ஆவிர்பவித்திருப்பது ‘த்விசதி’யை அநுபவித்துப் படிப்பவர்களுக்குத் தெரியும்.
ஒரு மையப் புள்ளியைச் சுற்றி அடுக்கடுக்காக நாற்பத்து மூன்று கோணங்கள் கூம்பாக — cone shapeல் — எழும்பி அமைந்த ஸ்ரீசக்ரம் என்ற யந்த்ரத்தில், ‘ஆவரண’ங்கள் என்னும் சுற்றுக்களில் (மூல ஸ்தானத்தைச் சுற்றி பஞ்ச ப்ராகாரம், ஸப்த ப்ராகாரம் என்றெல்லாம் இருப்பதுபோல ஸ்ரீசக்ரத்தில் உள்ள சுற்றுகளில்) அநேக தேவதைகள் சூழ்ந்திருக்க, அதன் உச்சியாக உள்ள மையப் புள்ளியான பிந்து ஸ்தானத்தில் காமேச்வரனுடைய வாம பாகத்தில் எழுந்தருளியிருக்கிற காமேச்வரியான ராஜராஜேச்வரியை அந்த எல்லா முக்கோணங்களையும், ஆவரண தேவதைகளையும் விவரமாகச் சொல்லி துர்வாஸர் ஸ்தோத்திரித்திருக்கிறார். இந்த உத்கிருஷ்டமான கிரந்தத்தைப் பாராயணம் பண்ணினால் நல்ல அநுக்ரஹம் உண்டாகும்; குறிப்பாக நல்ல வாக்கு, கவித்வ சக்தி உண்டாகும்.
அம்பிகை பண்ணுகிற பெரிய அநுக்ரஹம் அவளை வர்ணித்து வர்ணித்து துதிக்கிற ஆனந்தத்தைத் தரும் உயர்ந்த வாக்கு விசேஷம்தான். இந்த வாக்குதானே ஒரு பக்தர் பெற்ற அநுபவத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்து, அவர்களும் அதைப் பகிர்ந்து கொள்ளும்படிச் செய்கிறது? அதுதான் வாங் சக்தி அருள்வதன் விசேஷம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Madambakkam Shankar
23小时 ·
தினம் ஒரு ஸ்லோகம் 13.02.2020.
மாசி 1.
தொகுப்பு : தேனுபுரீஸ்வர தாசன்
இல. சங்கர்.
ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்.
வேதஸாரசிவ ஸ்தோத்திரம்
11.த்வத்தோ ஜகத்பவதி தேவ பவ ஸ்மராரே !
த்வய்யேவ திஷ்டதி ஜகத் ம்ருட விச்வநாத !
த்வய்யேவ கச்சதிலயம் ஜகதேதத் ஈச
லிங்காத்மகே ஹர சராசர விச்வரூபின் !!
தேவனே!பவனே!மன்மதனே வென்றவனே!உம்மிடமிருந்தே இந்த உலகம் தோன்றியது. ஹேவிச்வநாத!உம்மிடமே நிலை பெறுகிறது இந்த உலகம். பின் உம்மிடமே லயமும் அடைகிறது. சராசரங்களின் வடிவினன் அன்றோ நீர்!
தெய்வத்தின் குரல்.
உத்தம துதிகள் மூன்று
க்ரோத பட்டாரகரான துர்வாஸர்தான் முதன் முதலில் அம்பாளை ஸ்துதித்த பூலோகவாஸி. அவர் ‘த்விசதி’ பாடினதோடு ‘சக்தி மஹிம்ந ஸ்தோத்ரம்’ என்றும் அம்பாள் மஹிமை பற்றி ஒரு உத்தமமான ஸ்துதி செய்திருக்கிறார். இவற்றுக்கு அப்புறந்தான் மற்றக் கவிகளின் வாக்குகள் உண்டாயின. அவர் வாக்கிலேயே அம்பிகை ஆவிர்பவித்திருப்பது ‘த்விசதி’யை அநுபவித்துப் படிப்பவர்களுக்குத் தெரியும்.
ஒரு மையப் புள்ளியைச் சுற்றி அடுக்கடுக்காக நாற்பத்து மூன்று கோணங்கள் கூம்பாக — cone shapeல் — எழும்பி அமைந்த ஸ்ரீசக்ரம் என்ற யந்த்ரத்தில், ‘ஆவரண’ங்கள் என்னும் சுற்றுக்களில் (மூல ஸ்தானத்தைச் சுற்றி பஞ்ச ப்ராகாரம், ஸப்த ப்ராகாரம் என்றெல்லாம் இருப்பதுபோல ஸ்ரீசக்ரத்தில் உள்ள சுற்றுகளில்) அநேக தேவதைகள் சூழ்ந்திருக்க, அதன் உச்சியாக உள்ள மையப் புள்ளியான பிந்து ஸ்தானத்தில் காமேச்வரனுடைய வாம பாகத்தில் எழுந்தருளியிருக்கிற காமேச்வரியான ராஜராஜேச்வரியை அந்த எல்லா முக்கோணங்களையும், ஆவரண தேவதைகளையும் விவரமாகச் சொல்லி துர்வாஸர் ஸ்தோத்திரித்திருக்கிறார். இந்த உத்கிருஷ்டமான கிரந்தத்தைப் பாராயணம் பண்ணினால் நல்ல அநுக்ரஹம் உண்டாகும்; குறிப்பாக நல்ல வாக்கு, கவித்வ சக்தி உண்டாகும்.
அம்பிகை பண்ணுகிற பெரிய அநுக்ரஹம் அவளை வர்ணித்து வர்ணித்து துதிக்கிற ஆனந்தத்தைத் தரும் உயர்ந்த வாக்கு விசேஷம்தான். இந்த வாக்குதானே ஒரு பக்தர் பெற்ற அநுபவத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்து, அவர்களும் அதைப் பகிர்ந்து கொள்ளும்படிச் செய்கிறது? அதுதான் வாங் சக்தி அருள்வதன் விசேஷம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM