Post by radha on Feb 5, 2020 5:55:29 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
தற்போதைய செய்தி
Next
பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்; தஞ்சையில் கோலாகலம்!
மாற்றம் செய்த நாள்: பிப் 05,2020 00:38
1 + 23
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், இன்று மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, பெரிய கோவில் விமானம் மற்றும் கோபுரங்களில், புனித நீர் ஊற்றப்படுகிறது. 10:00 மணிக்கு, மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் நடக்கிறது. ஐந்து லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தஞ்சை மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற, தஞ்சை பெரிய கோவிலின், மஹா கும்பாபிஷேக விழா, 23 ஆண்டுகளுக்கு பின், இன்று நடக்கிறது. இதற்காக, ஓராண்டுக்கும் மேலாக, இந்திய தொல்லியல் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத் துறை என, பல்வேறு தரப்பினரும், தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
யாகசாலை
கும்பாபிஷேகத்துக்காக, கடந்த மாதம், 27ம் தேதி பூர்வாங்க பூஜையும், 31ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் இருந்து, புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பிப்ரவரி, 1ல், புனித நீர் அடங்கிய குடங்கள், யாகசாலை மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, நேற்று காலை, ஆறாவது கால யாகசாலை பூஜையும், மாலை, ஏழாவது கால யாகசாலை பூஜையும் நடந்தன.
யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாள், 41 உற்சவ மூர்த்திகள், எட்டு பலி பீடங்கள், 10 நந்தி, 22 கோவில் கலசம் என, 405 சுவாமிகளுக்கும் உரிய, 705 குடங்களை, வேதிகையில் வைத்து, வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக நாளான, இன்று அதிகாலை, 4:30 மணிக்கு, எட்டாவது கால யாகசாலை பூஜையும், நாடி சந்தனமும், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானமும் நடக்கிறது.
அபிஷேகம்
காலை, 7:25 மணிக்கு, யாகசாலை மண்டபத்தில் இருந்து, புனித நீர் குடங்கள் புறப்படும். காலை, 9:30 மணிக்கு, பெரிய கோவில் விமான மற்றும் கோபுரங்களில், புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடக்கிறது. 10:00 மணிக்கு, மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும்; இரவு, பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவும் நடக்கின்றன.
'கும்பாபிஷேகத்திற்கு, ஐந்து லட்சம் பக்தர்கள் வருவர்' என, மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கும் நிலையில், பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு, மூன்று வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு வாயில் வழியாக, வி.ஐ.பி.,க்களும், பொது மக்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். வி.ஜ.பி.,க்களுக்கு, ஐந்து இடங்களும்; பொதுமக்களுக்கு, ஏழு இடங்களும் தேர்வு செய்யப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள், தரிசனம் முடிந்த பின், தெற்கு வாயிலின் மேற்கு பகுதியில், வெளியேற வேண்டும்.வி.வி.ஐ.பி.,க்கள் சிவகங்கை பூங்கா, யாகசாலை பந்தல் வழியாக உள்ளே வந்து, தரிசனம் முடிந்து, மேற்கு வாயில் வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும், 'மெட்டல் டிடெக்டர்' சோதனைக்கு பின், கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில், 4,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கும்பாபிஷேக விழாவின் அனைத்து நிகழ்வுகளையும், கோவிலுக்குள், ஒன்பது இடங்களில், கேமராக்கள் பொருத்தி, சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, விழாக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், 'யூ - டியூப்' வலைதளத்தில், 'தஞ்சை வீடியோஸ்' என்ற முகவரியிலும், கும்பாபிஷேக விழா, நேரலையில் ஒளிபரப்பாகிறது.
பெரிய கோவிலின், 216 அடி உயரத்தில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்ற, உச்சிக்கு செல்ல சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், 'வீடியோ, போட்டோ' எடுப்பவர்கள் என, ஏழு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் நேற்று, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் முழுவதும், விழாக்கோலம் கண்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் கூட்டம் அலைமோதுகிறது.
» தற்போதைய செய்தி முதல் பக்கம்
வாசகர் கருத்து (1 + 23)
mohandas - sydney,ஆஸ்திரேலியா
05-பிப்-2020 04:26
ராஜராஜன் சிலையை கோயிலுக்குள் வைத்து அதை வைத்தது கருணாநிதி என்று தன பெயரை கோயிலுக்குள் கண்டு வர கருணாநிதி திட்டமிட்டார் நல்ல வேலை தப்பித்தது
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: நகரெங்கும் பாரம்பரிய ஓவியங்கள் (5)
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
04-பிப்-2020 23:45
பனி கொட்டும் நள்ளிரவிலும், வெயில் சுட்டெரிக்கும் பகலிலும், ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் 170க்கும் அதிகமான ஓவியங்களை தீட்டி பிரமிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மகத்தான பணி. பாராட்டுக்கள். மக்களின் மனதில், தஞ்சையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு மாதமாக, கடும் உழைப்பை கொடுத்து, ஓவியங்கள் வரைந்திருக்கிறார்கள். சிவ தாண்டவ காட்சிகள், பொன்னியின் செல்வன் நாவல் ஓவியங்கள், பலரையும் கவர்ந்துள்ளது. வெளிநாட்டவர் உட்பட பலர், ஓவியங்களை பாராட்டுவது, மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் கும்பாபிஷேகத்திற்கு பிறகு இந்த ஓவியங்கள் பாதுகாக்கப்படவேண்டும். நம்ம அரசியல்வியாதிகளுக்கு அவுங்கள அண்டி பொழைக்குற அல்லக்கைகளுக்கு இதெல்லாம் புரியாதே. நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா சிவலிங்கம்னு தெரியுமா? சுவரை கண்டால் போதும் உடனே மூலம், பவுத்திரம், கக்குவான், அரிப்பு, இருமல், விரைவீக்கம், ஆண்மைக்குறைவு, கொரோனா குணமாக உடனடி சிகிச்சைக்கு அணுகுவீர் என்று நோட்டிஸை கொண்டு வந்து ஓட்டுவானுங்களே. அந்த அறிவுஜீவிகளிடம் இருந்து காப்பாற்றவேண்டுமே..
Aruna -
04-பிப்-2020 09:42
Good idea. Sunder.
Sampath Kumar - chennai,இந்தியா
04-பிப்-2020 09:25
பாராட்டுக்கள் மாணவர்களின் பணி மகத்தானது அந்த தென்னாடுடைழில்நுட்பத்தின் பெருமை மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை ப்ரஹதீஸ்வரர் கோவில்.
vns - Delhi,இந்தியா
தற்போதைய செய்தி
Next
பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்; தஞ்சையில் கோலாகலம்!
மாற்றம் செய்த நாள்: பிப் 05,2020 00:38
1 + 23
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், இன்று மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, பெரிய கோவில் விமானம் மற்றும் கோபுரங்களில், புனித நீர் ஊற்றப்படுகிறது. 10:00 மணிக்கு, மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் நடக்கிறது. ஐந்து லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தஞ்சை மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற, தஞ்சை பெரிய கோவிலின், மஹா கும்பாபிஷேக விழா, 23 ஆண்டுகளுக்கு பின், இன்று நடக்கிறது. இதற்காக, ஓராண்டுக்கும் மேலாக, இந்திய தொல்லியல் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத் துறை என, பல்வேறு தரப்பினரும், தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
யாகசாலை
கும்பாபிஷேகத்துக்காக, கடந்த மாதம், 27ம் தேதி பூர்வாங்க பூஜையும், 31ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் இருந்து, புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பிப்ரவரி, 1ல், புனித நீர் அடங்கிய குடங்கள், யாகசாலை மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, நேற்று காலை, ஆறாவது கால யாகசாலை பூஜையும், மாலை, ஏழாவது கால யாகசாலை பூஜையும் நடந்தன.
யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாள், 41 உற்சவ மூர்த்திகள், எட்டு பலி பீடங்கள், 10 நந்தி, 22 கோவில் கலசம் என, 405 சுவாமிகளுக்கும் உரிய, 705 குடங்களை, வேதிகையில் வைத்து, வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக நாளான, இன்று அதிகாலை, 4:30 மணிக்கு, எட்டாவது கால யாகசாலை பூஜையும், நாடி சந்தனமும், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானமும் நடக்கிறது.
அபிஷேகம்
காலை, 7:25 மணிக்கு, யாகசாலை மண்டபத்தில் இருந்து, புனித நீர் குடங்கள் புறப்படும். காலை, 9:30 மணிக்கு, பெரிய கோவில் விமான மற்றும் கோபுரங்களில், புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடக்கிறது. 10:00 மணிக்கு, மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும்; இரவு, பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவும் நடக்கின்றன.
'கும்பாபிஷேகத்திற்கு, ஐந்து லட்சம் பக்தர்கள் வருவர்' என, மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கும் நிலையில், பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு, மூன்று வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு வாயில் வழியாக, வி.ஐ.பி.,க்களும், பொது மக்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். வி.ஜ.பி.,க்களுக்கு, ஐந்து இடங்களும்; பொதுமக்களுக்கு, ஏழு இடங்களும் தேர்வு செய்யப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள், தரிசனம் முடிந்த பின், தெற்கு வாயிலின் மேற்கு பகுதியில், வெளியேற வேண்டும்.வி.வி.ஐ.பி.,க்கள் சிவகங்கை பூங்கா, யாகசாலை பந்தல் வழியாக உள்ளே வந்து, தரிசனம் முடிந்து, மேற்கு வாயில் வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும், 'மெட்டல் டிடெக்டர்' சோதனைக்கு பின், கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில், 4,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கும்பாபிஷேக விழாவின் அனைத்து நிகழ்வுகளையும், கோவிலுக்குள், ஒன்பது இடங்களில், கேமராக்கள் பொருத்தி, சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, விழாக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், 'யூ - டியூப்' வலைதளத்தில், 'தஞ்சை வீடியோஸ்' என்ற முகவரியிலும், கும்பாபிஷேக விழா, நேரலையில் ஒளிபரப்பாகிறது.
பெரிய கோவிலின், 216 அடி உயரத்தில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்ற, உச்சிக்கு செல்ல சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், 'வீடியோ, போட்டோ' எடுப்பவர்கள் என, ஏழு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் நேற்று, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் முழுவதும், விழாக்கோலம் கண்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் கூட்டம் அலைமோதுகிறது.
» தற்போதைய செய்தி முதல் பக்கம்
வாசகர் கருத்து (1 + 23)
mohandas - sydney,ஆஸ்திரேலியா
05-பிப்-2020 04:26
ராஜராஜன் சிலையை கோயிலுக்குள் வைத்து அதை வைத்தது கருணாநிதி என்று தன பெயரை கோயிலுக்குள் கண்டு வர கருணாநிதி திட்டமிட்டார் நல்ல வேலை தப்பித்தது
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: நகரெங்கும் பாரம்பரிய ஓவியங்கள் (5)
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
04-பிப்-2020 23:45
பனி கொட்டும் நள்ளிரவிலும், வெயில் சுட்டெரிக்கும் பகலிலும், ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் 170க்கும் அதிகமான ஓவியங்களை தீட்டி பிரமிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மகத்தான பணி. பாராட்டுக்கள். மக்களின் மனதில், தஞ்சையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு மாதமாக, கடும் உழைப்பை கொடுத்து, ஓவியங்கள் வரைந்திருக்கிறார்கள். சிவ தாண்டவ காட்சிகள், பொன்னியின் செல்வன் நாவல் ஓவியங்கள், பலரையும் கவர்ந்துள்ளது. வெளிநாட்டவர் உட்பட பலர், ஓவியங்களை பாராட்டுவது, மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் கும்பாபிஷேகத்திற்கு பிறகு இந்த ஓவியங்கள் பாதுகாக்கப்படவேண்டும். நம்ம அரசியல்வியாதிகளுக்கு அவுங்கள அண்டி பொழைக்குற அல்லக்கைகளுக்கு இதெல்லாம் புரியாதே. நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா சிவலிங்கம்னு தெரியுமா? சுவரை கண்டால் போதும் உடனே மூலம், பவுத்திரம், கக்குவான், அரிப்பு, இருமல், விரைவீக்கம், ஆண்மைக்குறைவு, கொரோனா குணமாக உடனடி சிகிச்சைக்கு அணுகுவீர் என்று நோட்டிஸை கொண்டு வந்து ஓட்டுவானுங்களே. அந்த அறிவுஜீவிகளிடம் இருந்து காப்பாற்றவேண்டுமே..
Aruna -
04-பிப்-2020 09:42
Good idea. Sunder.
Sampath Kumar - chennai,இந்தியா
04-பிப்-2020 09:25
பாராட்டுக்கள் மாணவர்களின் பணி மகத்தானது அந்த தென்னாடுடைழில்நுட்பத்தின் பெருமை மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை ப்ரஹதீஸ்வரர் கோவில்.
vns - Delhi,இந்தியா