Post by radha on Jul 17, 2012 9:43:13 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,Respectful Pranams to Sri Kanchi Maha Periva.
யாருக்கு அலங்காரம் செய்வது
* பெரியவர்களிடம் வைக்கும் அன்பு மரியாதை. சின்னவர்களிடம் வைக்கும் அன்பை அருள். கஷ்டப்படுகிறவர்களிடம் வைக்கும் அன்பு கருணை என்று சொல்ல வேண்டும்.
* மவுனத்தைக் கடைபிடித்தால் சண்டை சச்சரவு இருக்காது. நல்ல விளைவுகளை ஏற்படுத்தி தரும் சக்தி இதற்கு உண்டு.
* பாவம் செய்தவர்களை வெறுப்பதாலோ கோபிப்பதாலோ பலனில்லை. அவர்கள் மனம் நல்ல வழியில் திரும்ப பிரார்த்திப்பதே நாம் செய்ய வேண்டிய பணி.
* அம்பாளுக்கு செய்கிற அலங்காரம் தான் நமக்கு அழகு. நமக்கு செய்து கொள்கிற அலங்காரம் அகங்காரத்திற்குத்தான் வழிகாட்டும்.
* இறைவனுக்கு கருணை இருப்பதால் கல், மண், செம்பு உட்பட எந்த உருவத்தில் வைத்துக் கொண்டு அழைத்தாலும் வருவான்.
* பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கு படிப்பு தான் மருந்து என்றால், அதோடு சேர்த்துக் கொள்ள வேண்டிய பத்தியம் பணிவு.
* ஒருவனுக்கு அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் போன்ற குணங்கள் வேண்டும் என்று அனைத்து மதங்களும் கூறுகின்றன.
- காஞ்சிப்பெரியவர்
மனதுக்கு "டெஸ்ட்' வையுங்கள்டிசம்பர் 31,2010,07:12 IST
*பொருள்களைத் தேடிப் போவதால்
வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மன
நிறைவோடு இருப்பது தான்.
*குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமூகப்பணிக்கு செல்ல வேண்டியதில்லை. அதையும்
விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு
சேர்த்துச் செய்ய வேண்டும்.
* நாம் நினை என்றால் தான் மனம் அதைப்பற்றி நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்க வேண்டும். இந்த தேர்வில் வென்றால் தான் அது
கட்டுப்பாட்டில் உள்ளதாக அர்த்தம்.
* கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும். சகல
விஷயங்களுக்கும் ஒழுக்கம் அடிப்படையாக இருக்க வேண்டும்.
*தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க
முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிக்க வேண்டும். இப்படிச் செலவழிப்பது தான் "தனக்கு மிஞ்சிய தர்மம்' என்பதாகும்.
-காஞ்சிப்பெரியவர்
Kanchi Maha Periva Thiruvadigal Saranam
யாருக்கு அலங்காரம் செய்வது
* பெரியவர்களிடம் வைக்கும் அன்பு மரியாதை. சின்னவர்களிடம் வைக்கும் அன்பை அருள். கஷ்டப்படுகிறவர்களிடம் வைக்கும் அன்பு கருணை என்று சொல்ல வேண்டும்.
* மவுனத்தைக் கடைபிடித்தால் சண்டை சச்சரவு இருக்காது. நல்ல விளைவுகளை ஏற்படுத்தி தரும் சக்தி இதற்கு உண்டு.
* பாவம் செய்தவர்களை வெறுப்பதாலோ கோபிப்பதாலோ பலனில்லை. அவர்கள் மனம் நல்ல வழியில் திரும்ப பிரார்த்திப்பதே நாம் செய்ய வேண்டிய பணி.
* அம்பாளுக்கு செய்கிற அலங்காரம் தான் நமக்கு அழகு. நமக்கு செய்து கொள்கிற அலங்காரம் அகங்காரத்திற்குத்தான் வழிகாட்டும்.
* இறைவனுக்கு கருணை இருப்பதால் கல், மண், செம்பு உட்பட எந்த உருவத்தில் வைத்துக் கொண்டு அழைத்தாலும் வருவான்.
* பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கு படிப்பு தான் மருந்து என்றால், அதோடு சேர்த்துக் கொள்ள வேண்டிய பத்தியம் பணிவு.
* ஒருவனுக்கு அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் போன்ற குணங்கள் வேண்டும் என்று அனைத்து மதங்களும் கூறுகின்றன.
- காஞ்சிப்பெரியவர்
மனதுக்கு "டெஸ்ட்' வையுங்கள்டிசம்பர் 31,2010,07:12 IST
*பொருள்களைத் தேடிப் போவதால்
வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மன
நிறைவோடு இருப்பது தான்.
*குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமூகப்பணிக்கு செல்ல வேண்டியதில்லை. அதையும்
விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு
சேர்த்துச் செய்ய வேண்டும்.
* நாம் நினை என்றால் தான் மனம் அதைப்பற்றி நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்க வேண்டும். இந்த தேர்வில் வென்றால் தான் அது
கட்டுப்பாட்டில் உள்ளதாக அர்த்தம்.
* கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும். சகல
விஷயங்களுக்கும் ஒழுக்கம் அடிப்படையாக இருக்க வேண்டும்.
*தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க
முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிக்க வேண்டும். இப்படிச் செலவழிப்பது தான் "தனக்கு மிஞ்சிய தர்மம்' என்பதாகும்.
-காஞ்சிப்பெரியவர்
Kanchi Maha Periva Thiruvadigal Saranam